மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய அண்ணாமலைக்கு தமிழ்நாடு பதிலடி கொடுக்கும்!

மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

31.03.2024

சில நாட்களுக்கு முன்பு திருப்பெரும்புதூரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட பாசிச பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, ‘மக்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருத்தர் சம்பந்தமே இல்லாமல் 1980-இல் பேசிய அதையே இப்போதும் பேசுகிறார். இந்தி, சமஸ்கிருதம் இது அது என்கிறார். இன்னும் இந்த பிஞ்சு போன சப்பலை அவர்கள் தூக்கி எறியவில்லை’’ என்று கூறி தமிழ்நாட்டில் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இழிவுபடுத்தியுள்ளார்.

1965 ஆம் ஆண்டு இந்தி தேசிய மொழியாகும் என்று ஒன்றை அரசு அறிவித்ததற்கு எதிராக நஞ்சருந்தியும் தீக்குளித்தும் போலீசாலும் இராணுவத்தாலும் குண்டடி பட்டும் உயிர் நீத்தவர்கள் நூற்றுக்கணக்கானோர். தொடர்ந்து பல மாதங்களாக நடைபெற்ற அந்த மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாகத்தான், இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை இந்தி தேசிய மொழியாக இருக்காது என்ற அறிவிப்பை வெளியிட்டது ஒன்றிய அரசு.

மதுரையில் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு வீடுகளிலும் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த நெருப்பில் தான் ஒன்றிய அரசின் ஆணவம் பொசுங்கியது.


படிக்க: ரவுடிசம் செய்த அண்ணாமலை | தோழர் மருது


இந்தியை பல்வேறு வழிகளில் திணித்து வரும் மோடி – அமித்ஷா கும்பல், தமிழ் மீது பாசம் இருப்பது போல பல இடங்களில் பேசினாலும் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடவில்லை. எனக்கு தமிழ் தெரியவில்லை என்று நீலிக் கண்ணீரை வடிக்கும் மோடியும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை செருப்பு என்று வர்ணிக்கும் அண்ணாமலையும் பாசிச பாஜகவின் முகங்கள் தான் என்பதை அறியாதது அல்ல தமிழ்நாடு.

மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய அண்ணாமலை உடனடியாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அதற்கான உரிய பதிலை, உரிய முறையில் தமிழ்நாடு அளிக்கும், அளிக்க வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க