ஸ்ரீ நகரில் ஜூலை 15 மொஹரம் ஊர்வலத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியவர்கள் மீது ஊபா (UAPA) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 15 மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் ஸ்ரீநகரின் குரு பஜாரில் ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது.
ஆனால் இந்த ஆண்டு, தனித்துவமான ஒன்று நடந்தது. மத வசனங்கள் பொறிக்கப்பட்ட வழக்கமான கொடிகளுடன், ஒரு தனித்துவமான கொடி வெளிப்பட்டது. அதுதான் பாலஸ்தீனக் கொடி.
“தேசிய அரசுகள் செய்யும் அட்டூழியங்கள் பெரும்பான்மையினரால் உற்சாகப்படுத்தப்படும் ஒரு உலகில், பாலஸ்தீனத்தில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுக்கு எங்கள் ஆதரவைக் காட்ட நாங்கள் இங்கு நிற்கிறோம்” என்று ஊர்வலத்தில் துக்கம் அனுசரித்த இம்தியாஸ் ஹுசைன் கூறினார்.
“பல குழந்தைகளின் முகங்களில் பாலஸ்தீன கொடிகள் வரையப்பட்டிருந்தன. எங்கள் குழந்தைகளை அவர்களின் முகங்களில் கொடிகளை வரைவதில் பங்கேற்க நாங்கள் வற்புறுத்த வேண்டியதில்லை; பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அப்படித்தான் நாங்கள் இந்த யோசனையை கொண்டு வந்தோம்” என்று ஊர்வலத்தில் பங்கேற்ற குழந்தை ஒருவரின் தாயான சையத் சகீனா கூறினார்.
இளம் பெண்கள் குழுக்களாக ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் கொடிகளை ஏந்தியிருந்தனர். சிலர் பாலஸ்தீனிய சின்னத்துடன் அலங்கரிக்கப்பட்ட பேட்ஜ்களை அணிந்திருந்தனர். இது பாலஸ்தீனத்திற்கான அவர்களின் இதயப்பூர்வமான ஒற்றுமை மற்றும் ஆதரவின் வெளிப்பாடாகும்.
ஊர்வலத்தில் பங்கேற்ற 14 வயது முஹம்மது ஹாதி “மொஹரம் தொடங்கியதிலிருந்து, நானும் எனது குடும்பத்தினரும் பாலஸ்தீனத்துடனான எங்கள் ஒற்றுமையைக் காட்டும் வகையில் இந்த பேட்ஜ்களை எங்கள் ஆடைகளுடன் அணிந்து வருகிறோம்” என்று கூறினார்.
ஊர்வலத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், போலீசு நிர்வாகம் அதிகாலை நேரங்களில் ஒரு சிறிய ஊர்வலத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே நடத்த அனுமதித்தது. ஷியா தலைவர்களின் வேண்டுகோள் விடுத்திருந்தபோதிலும், ஸ்ரீநகரில் பாரம்பரியமான ஒரு பெரிய மொஹரம் ஊர்வலம் நடத்துவதற்கான தடை தொடர்கிறது.
ராஜேஷ்
நன்றி: தி குயிண்ட்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp , X (Twitter) , Facebook , YouTube
Related