ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை!
பாசிச இஸ்ரேல் அரசு ஒழிக!

02.08.2024

கண்டன அறிக்கை

ரானின் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே, டெஹ்ரானில் பாசிச இஸ்ரேல் அரசால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

1963-ஆம் ஆண்டு பாலஸ்தீன அகதி முகாமில் பிறந்த ஹனியேவின் மனைவி, மகன்கள், மகள்கள் சகோதரிகள் அவரது குழந்தைகள் என குடும்பம் முழுவதையும் பாசிச இஸ்ரேல் அரசு திட்டமிட்டு கொன்றொழித்தது. அதற்குப் பின்னரும் கூட ஹமாஸ் இயக்கத்தின் உறுதியான தலைவராக இருந்தார்.

அமெரிக்க உள்ளிட்ட பல ஏகாதிபத்திய நாடுகளின் உதவியோடு பாசிச இசுரேல் அரசு செயல்பட்ட போதும் கூட இதுவரையும் முழுமையான வெற்றியை காண முடியவில்லை.

பாசிச இஸ்ரேலின் அதிபர் நெதன்யாகுவுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டங்கள் இஸ்ரேலில் வெடித்துக் கொண்டிருக்கும் சூழலில் தான் பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்த குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது. காசாமுனைப் பகுதியில் ஏறத்தாழ 86 சதவீதம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

பாலஸ்தீன மக்களும் இஸ்ரேல் மக்களும் ஏன் உலக மக்கள் அனைவரும் போரை நிறுத்து என்று ஒற்றைக் குரலில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தினம் தோறும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

எத்தனை பேர் இறந்தாலும் விடுதலை உணர்வு ஒருபோதும் அடங்கப் போவதில்லை. இஸ்மாயில் ஹனியே, ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் ஒருபோதும் பாலஸ்தீன விடுதலை உணர்வு மடிந்து விடாது. பாலஸ்தீன மக்கள் மட்டுமல்ல; உலக மக்கள் அனைவரும் இணைந்து விரைவில் பாசிச இஸ்ரேல் அரசை புதைகுழியில் வீழ்த்துவார்கள் என்பது நிச்சயம்!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க