கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!
இப்போராட்டத்தால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், கண்ணம்பாளையம், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1.25 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.