Description
நாடார் இன மக்களின் கடந்த காலம் கருப்பாகத்தான் இருந்தது என்று நிறுவுகிற இந்த புத்தகத்தை, உண்மையில் நாடார் மக்கள் விரும்புகிறார்களா? அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா? என்றால் அதை அம்மக்களுக்கு மட்டுமல்ல சூத்திர பஞ்சம சாதி மக்கள் அனைவருக்கும் இவ்வரலாற்றை கொண்டு செல்ல வேண்டும்.
ஏனெனில் இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
பொருளடக்கம் :
- நாடார்கள் – சமூகத்தின் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி
- நாடார்கள் பற்றிய ஆய்வுகள்
- நாடார்களின் கமுதி ஆலய நுழைவு முயற்சி
- கழுகுமலை கலவரமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு
- சிவகாசி வன்கொடுமை நிகழ்வு
- பெரியார் ஈ.வெ.ரா.வும் வைக்கம் போராட்டமும்
- சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்டம்
- சாணார்கள், நாடார்களாக மாறிய நிகழ்வு
- தோள்சீலைப் போராட்டம்
- அய்யா வைகுண்டர் அல்லது அய்யா முத்துகுட்டிசாமி
- நாடார்கள் தொடர்பான மத்திய பாடத்திட்ட வழக்கு
- சாதி மேலாதிக்கத்தை உடைத்த யேசு சபையினர்
- காமராஜர் மீதான இந்து தீவிரவாதிகளின் தாக்குதல்
- ஈ.வெ.ரா. பெரியாரும் பட்டிவீரன்பட்டி டபிள்யூ. பி.ஏ. சௌந்தரபாண்டியனாரும்
- நீதிபதி வேணுகோபால் ஆணைய அறிக்கையும் காவிமயமாகும், கன்னியாகுமரி நாடார்களும்
- நாடார் வரலாறு கறுப்பா…? காவியா…?