privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்சரசம், சாடிஸம், சாரு நிவேதிதா!

சரசம், சாடிஸம், சாரு நிவேதிதா!

-

நடந்தது என்ன? – ஒரு சுருக்கமான அறிமுகம்!

படிப்பு முடித்த ஒரு இளம்பெண்.  வேலை பார்க்க வெளியே செல்ல முடியாத சூழ்நிலை, இணையம் மூலமாக சிறிய அளவில் டி.டி.பி போன்றதொரு வேலை  எடுத்து செய்பவள். கட்டுப்பெட்டியான குடும்ப வாழ்க்கையில் வெளியே தொடர்பு கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது இணையம். கணினிப் பெட்டியில் அந்தப்பெண் நேரம் செலவிடுவதை குடும்பத்தினரும் தடை செய்யவில்லை. கணினியில் பொழுதை செலவிடுவது வீட்டுச் சிறையை மீறுவதாக இல்லாததுதான் அந்த அனுமதிக்கு காரணம்.  இப்படித்தான் அவளது இணைய வாழ்க்கை தொடங்குகிறது.

ஆரம்பத்தில் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டும், பின்னர் முக நூலில் – பேஸ்புக்கில் – தனி கணக்கு ஒன்று ஆரம்பிக்கிறாள். சிறு கவிதைகளையும், தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறாள். நட்பு வட்டம் விரிகிறது. பேஸ்புக்கில் சாருவின் வாசகர் வட்டம் அறிமுகமாகிறது , அதில் இணைந்து அங்கே கருத்துகளை எழுதுகிறாள். பெண் அதுவும் இளம்பெண் என்பதினாலேயே தான் இத்தனை சீக்கிரம் முகநூலில் பிரபலமாகியிருக்கிறோம் என்பதை அந்த பேதைப் பெண் உணர்ந்திருக்கவில்லை.

இதனால் அந்த பெண்ணோடு நட்புக் கொண்டவர்கள் அனைவரும் ஜொள்ளர்கள் என்று பொருளல்ல. ஆனால் பொது வெளியில் செயல்படும் ஒரு பெண் இந்த சமூக யதார்த்தத்தை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய அனுபவமோ, முதிர்ச்சியோ, வழிகாட்டலோ இல்லாததால் அந்தப்பெண் இதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறாள். அவள் ஒரு இளம்பெண் என்று வாசகருக்கு உணர்த்துப் பொருட்டே அர் விகுதி போடாமல் அள் விகுதி போட்டு எழுதுகிறோம்.

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா

சாரு ஒரு பிரபலமான எழுத்தாளர் என்பது மட்டும் அதுவும் இணையத்தின் மூலம்தான் அந்தப் பெண்ணுக்குத் தெரியும். அவர் எழுதிய எதையும் அந்தப் பெண் படித்ததில்லை. பின்னர் சாரு அந்தப் பெண்ணின் ஒரு கவிதையைப் பாராட்டி தனது தளத்தில் வெளியிடுகிறார். மெல்ல மெல்ல உரையாடவும் செய்கிறார். அவர் என்ன மாதிரியான வக்கிரமான ஆபாசமான உரையாடல் நடத்தினார் என்பதை தமிழச்சியின் பதிவுகளும், ஆதாரங்களும் தெரிவிக்கின்றன. இங்கும் அதன் ஸ்கீரீன் ஷாட் போட்டிருக்கிறோம். இந்த உரையாடல்கள் சாரு செய்தபவைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை ஊட்டி இந்த விசயத்தை வெளிவர முயற்சி செய்த தோழர் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்! இது குறித்து முன்னரே தெரிந்திருந்தாலும் வேலை காரணமாக உடன் வினவில் எழுதவில்லை.

அந்தப் பெண்ணோடு வக்கிர உணர்வுடன் சாரு நடத்திய பொறுக்கித்தனத்தை யாரும் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது மட்டுமே இங்கு விசயமல்ல. இந்தப் பொறுக்கித்தனம் என்ன மாதிரி ஆரம்பித்து எங்கே சென்றது என்பதை பருண்மையாக ஆய்வு செய்தால்தான் அதன் விகாரத்தை உணர முடியும்.

இடையில் இந்த இலக்கியப் பொறுக்கிக்கு அடியாள் வேலை செய்யும் சில ஜென்மங்கள் அப்படி ஒரு பெண்ணே இல்லை என்று ஒரு பிரச்சாரத்தை கிளப்பி சாருவை காப்பாற்ற முனைகிறார்கள். இதில் துளியும் உண்மை இல்லை. தமிழச்சி உதவியுடன் நாம் அந்தப் பெண்ணுடன் பேசினோம். அவளது பேஸ்புக் கணக்கிற்குள் சென்று அனைத்தையும் பார்வையிட்டோம். இங்கும் சில ஆதாரங்கள் இணைத்திருக்கிறோம். (படங்களை பெரியதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

மேலும் சிலர் அந்தப் பெண்தான் சாருவை மாட்டிவிட வேண்டும் என்று வலை விரித்ததாக அவதூறு செய்கிறார்கள். அதுவும் உண்மையல்ல. வலை விரித்தது அதாவது வக்கிரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முனைந்தது சாருதான்.

சாரு நிவேதிதாஅந்தப் பெண்ணின் கவிதையை சாரு ஏன் பாராட்டி எழுத வேண்டும்? இது வழக்கமாக ஒரு பிரபலம் ஒரு புதிய எழுத்தாளரை அல்லது எழுத விரும்பும் ஒரு வாசகியை ஊக்குவிக்கும் செயல் அல்ல. சாருவின் மனதில் ஏதும் தெரியாத இந்தப் பெண்ணை ‘பயன்படுத்திக்’ கொள்ளவேண்டும் என்ற திட்டத்தோடு, வெகு சாமர்த்தியமாக அந்தப் பாராட்டை உள்நோக்கத்தோடு எழுதும் நோக்கம் இருக்கிறது. இத்தனைக்கும் அந்தப் பெண் உலகப் புகழ்பெற்ற கவிதை எதையும் எழுதியிருக்கவில்லை.

அதிகாரத்தில் இருக்கும் ஆண்களின் பொறுக்கித்தனங்கள்!

ஆண்கள் அனைவரும் பொறுக்கியல்ல. ஆனால் உழைத்துப் பிழைக்கும் ஆண்களை விட அதிகாரத்தில் அதுவும் முறைகேடான வழியில் அதிகாரத்தையும், அந்தஸ்தையும், பணத்தையும் வைத்திருப்பவர்களிடத்தில் இந்தப் பொறுக்கித்தனம் ஊற்றெடுப்பதற்கு எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன. சாரு அத்தகையவர்களில் ஒருவர்.

மோனிகா லிவின்ஸ்கி விவகாரத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். வெள்ளை மாளிகையில் பகுதி நேரமாக பணியாற்றி வந்த அந்த இளம் பெண்ணிடம், அவளுக்கென்று நல்ல நிரந்தர வேலை கிடைக்க ஏற்பாடு செய்திருப்பதாக ஆசைகாட்டித்தான் பில் கிளிண்டன் பாலியல் வன்முறை செய்கிறார். அமெரிக்க அதிபர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் செய்த அந்த பொறுக்கித்தனம் பின்னர் விசாரணை கமிஷன் வரைக்கும் சென்றாலும் ஊடகங்களைப் பொறுத்த வரை அது ஒரு சென்சேஷனாக மாற்றப்பட்டு நீர்த்துப் போனது. இங்கு நாம் பார்க்க வேண்டியது வெள்ளை மாளிகையில் பணியாற்றும் பெண்கள் கூட இந்த அதிகாரப் பொறுக்கிகளை எதிர்கொண்டே பணியாற்ற முடியும் என்பதே.

நமது பல்கலைக்கழங்களில் முனைவர் படிப்புக்கு ஆய்வு செய்யும் பெண்களின் கையறு நிலை குறித்து நீங்கள் அறிவீர்களா? அவர்களில் சிலர் கைடுகளை ‘திருப்தி’ படுத்தினால்தான் முனைவர் பட்டத்தை பெற முடியும். பெண் போலீசாக இருந்தாலும் கூட அதிகார ஆண் போலீசின் வக்கிரங்களை எதிர்கொண்டே வாழ முடியும். கட்டிடம் கட்டும் மேஸ்திரி கூட தன்னிடம் வேலை செய்யும் சித்தாள் பெண்களை வேலை வாய்ப்பை காட்டியே பணிய வைப்பது சாதாரணமில்லையா? தனியாக 24 மணிநேர கிளினிக் நடத்தும் பணக்கார மருத்துவர்களும், பெரிய மருத்துவமனையின் பணியாற்றும் மருத்துவர்களும் தங்களது செவிலியர்களை இப்படி நடத்துவதற்கு தடையில்லாத வாய்ப்பு இருக்கிறதே? திரையுலகிலோ வாய்ப்பு தேடும் பெண்கள் அனைவரும் இப்படி ‘ஒத்துழைத்தால்தான்’ ஒரு நடிகையாக மாற முடியும்.

இந்தப் பெண்கள் தங்களது வாழ்க்கை, குடும்ப நிலை, வேலையில் தொடரவேண்டிய கட்டாயம் காரணமாக இந்தப் பொறுக்கித்தனங்களை சகித்துக் கொண்டு குமுறலோடு கடந்து செல்கிறார்கள். அந்தக் குமுறல் வெடிக்கும் போது மட்டுமே நாம் இந்தப் பொறுக்கிகளை அறிய முடியும். அப்படித்தான் சாரு இப்போது பிடிபட்டிருக்கிறார்.

ஆக இணையம் துவங்கி வெள்ளை மாளிகை வரை அதிகாரத்தில் உள்ள சில பொறுக்கிகள் தங்களது அதிகாரம் வழங்கியிருக்கும் வாய்ப்புகளை வைத்து தம்மிடம் பணியாற்றும் பெண்களை கொத்திச் சென்றுவிடலாம் என்றுதான் அலைகிறார்கள். அது தவறல்ல, தவறு என்று பிடிபட்டாலும் அதிகார வசதி கொண்டு சுலபமாக வெளியேறி விடலாம் என்பதுதான் அந்தப் பெண்கள் மிகவும் சுலபமாக வன்முறைக்குள்ளாக்கப்படும் சாத்தியத்தை வழங்குகிறது.

சாருவின் பாராட்டும், விமரிசனங்களும் பச்சையான சுயநலத்திற்கே!

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு தனது பிரபலத்தை வைத்து ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடக்க வேண்டுமென்ற திட்டத்தோடு அப்படி பாராட்டி எழுதுகிறார். அந்தப் பாரட்டை பெரிய அங்கீகாரமாக கருதி அந்தப் பெண்ணும் தனது பக்கத்தில் பகிர்கிறாள். வாழ்த்துக்கள் குவிகின்றன. உண்மையில் அந்தப் பிரபலமான எழுத்தாளரது பாராட்டிற்கு இவ்வளவு வலிமை இருக்கிறதா என்று அந்தப் பெண் குழந்தைத்தனமாக எண்ணியிருக்கிறார். அடிமைகளின் உலகத்தில் அடிமைகளோடு அடிமையாக வாழும் எந்தப் பெண்ணுக்கும் இத்தகைய பாராட்டுகள் நிச்சயம் பெரிய விசயமாகத்தான் இருக்கின்றது.

ஆனால் இந்த பிரச்சினை என்று அல்ல சாரு பாராட்டும், அல்லது விமரிசிக்கும் அத்தனைக்கும் உள்நோக்கங்கள் உண்டு. அவை எதுவும் கொண்ட கொள்கையின்பால் நெறிபிறழாத சத்திய ஆவேசங்களிலிருந்து தோன்றுவதில்லை. திராவிட இயக்கம், தி.மு.க இரண்டையும் வசைபாடுவதில் தொடங்கி கோமியத்தின் சிறப்புக்களை வியந்தோதி பார்ப்பனியத்திற்கு பாராட்டு வாசிப்பது வரை பல்லிளிக்கும் சாருவின் துக்ளக் கட்டுரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். துக்ளக் என்ற வலதுசாரி பிற்போக்கு பார்ப்பனியப் பத்திரிகையில் பணம் வாங்கிக் கொண்டு எழுதும் சாரு, சோ ராமசாமியின் ஆசனவாய் போன்று பேசுவதில் என்ன கொள்கை வெங்காயம் இருக்க முடியும்?

பூக்காரி கதையில் சந்தனமுல்லையை வன்மத்தோடு தூற்றிய நர்சிமை அப்போது சாரு கண்டிக்க வில்லை. ஏனெனில் நர்சிம்மிடம் சரக்கு பார்ட்டியில் கலந்து கொண்ட சில அல்பங்கள் – அவைகள் சாருவுக்கும் அல்பங்கள் – அப்போது நர்சிமை கைவிடவில்லை என்பதால் சாருவும் கண்டு கொள்ளவில்லை. இப்போது அந்த அல்பங்கள் ஏதோ பிசினஸ் தகராறு வந்த உடன் நர்சிமை கைழுவியதும் சாருவும் கை கழுவுகிறார்.

தனது சரோஜாதேவி புத்தகங்களை வெளியிடுவதற்கு கனிமொழியும், அந்த நூல்களை லைப்ரடி ஆர்டரில் மனுஷ்ய புத்திரன் மூலம் உள்ளே தள்ளுவதற்கு கனிமொழியின் கட்சியும் தேவை என்றால் பாராட்டுவார். ஆனால் இன்று ஊரே கனிமொழி கைதை காறித் துப்பும் போது தானும் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு துப்புவார். புரட்சித் தலைவி போன்ற ஒரு திறமையான முதலமைச்சரை தமிழகம் கண்டதில்லை என்று சோ வகையறாக்களோடு பாராட்டுவார். சரக்கடிப்பதற்கு தவிர வீட்டை விட்டு இறங்காத இந்த நபர் கேராளவில் ஏதோ பெரிய சமூகப் போராளி போன்று திட்டமிட்டு ஏமாற்றி வருகிறார்.

நித்தியானந்தா கம்பீரமாக உலா வந்த போது தனது தளத்தில் படம் போட்டு பூசை செய்தவர், ரஞ்சிதா வீடியோ வந்ததும் நல்ல பிள்ளையாக படத்தை எடுத்து விட்டு கூட்டத்தோடு கூட்டமாக கும்முவதில் என்ன நேர்மை இருக்கிறது? பொறுக்கி நித்தியானந்தாவை பொறுக்கி சாரு நிவேதிதா பாராட்டிய போது பணம், அழகான ஆசிரமப் பெண்கள், ஆசிரமத்திற்கு வரும் பெரிய குடும்பத்தின் நட்பு என்ற லவுகீக சமாச்சாரங்கள் காரணமாக இருக்கின்றன. பின்னர் ஊர் முன் அந்த சாமியார் அம்பலப்பட்ட போது அதை சரசம் சல்லாபம் சாமியார் என்று எழுதி காசு பார்க்கும் சந்தர்ப்பவாதம் யாருக்கு வரும்?

இதனால்தான் மீண்டும் சொல்கிறோம். சாரு பாராட்டி எழுதுபவைகளும், திட்டி எழுதுபவைகளும் அனைத்தும் பச்சையான சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட, குறிப்பான ஆதாயம் எதிர்பார்க்கும் சந்தர்ப்பவாதங்கள் என்கிறோம். அப்படித்தான் அந்தப் பெண்ணின் கவிதைக்கு சாரு பாராட்டு தெரிவித்த விசயம். தென் அமெரிக்க கவிதைகளில் திளைத்திருப்பதாக கூறும் சாருவின் கண்ணுக்கு இங்கே அந்தப் பெண்ணின் கவிதை தெரியவில்லை, அவளது இளம் வயதுதான் தெரிகிறது. எதுவும் தெரியாத அந்த இளம் வயதை வளைக்கலாம் என்ற பொறுக்கித்தனம்தான் நெஞ்சுக்குள் ரீங்காரமிடுகிறது.

தனது பிரபலத்தை முன்வைத்து சாரு விரித்த ஆபாச வலை!

( குறிப்பு: படங்களை பெரியதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும். சாருவுக்கும் அப்பெண்ணுக்கும்  நடந்த உரையாடலில் சில பகுதிகளை மட்டும் வெளியிடுகிறோம். பெண்ணின் அடையாளத்தை காக்கும் பொருட்டு தோழர் தமிழச்சியின் படம் பேஸ்புக்  புரொபைலில் தோன்றும் படி மாற்றப்பட்டுள்ளது, பெயரும் தமிழ் பொண்ணு என்று மாற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பேஸ்புக்கிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கீரின்ஷாட்டுகளே. இவை போலியானவை என்று புரளி பரப்புவர்கள் தாராளமாக எமது மீது வழக்கு தொடுக்கலாம், உரிய முறையில் அதை எதிர்கொள்வோம் )

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்

ஆரம்பத்தில் மரியாதையாக பேசும் சாரு முதல் தூண்டிலாக தனது எழுத்தை அந்தப் பெண் படித்திருக்கிறாளா என்று கேட்கிறார். அவள் படிக்க ஆசை என்று சொன்னதும் புத்தகம் அனுப்பி வைக்கவா என்று கேட்கிறார். வழக்கமாக சாருவின் தளத்தில் இரண்டு விசயங்கள் இருக்கும். ஒன்று கிசுகிசு அக்கப் போர்கள், இரண்டு எழுத்துக்காக தன்னை ‘அர்ப்பணித்திருக்கும்’ சாருவின் சுய சொறிதல்கள். அதிலும் தன் எழுத்தை படிக்காமலேயே யாரும் பேசக்கூடாது என்று சாரு பல முறை சத்திய ஆவேசம் துடிக்க ஆடியிருக்கிறார். ஒரு சரோஜா தேவி எழுத்தாளனுக்கு இருக்கும் இத்தகைய சத்திய ஆவேசத்தை உலகில் எங்கும் காணமுடியாது. இங்கு கவனிக்க வேண்டியது மற்றவர்கள் படிக்கவில்லை என்று விசுவாமித்திர கோபம் காண்பித்த சாரு அந்தப் பெண் எதுவும் படிக்கவில்லை என்றதும் அதிர்ச்சி கொள்ளவில்லை. ஆனால் அதில் வேறு ஒரு நோக்கம் இருந்திருக்கிறது.

சாருவின் புனைவுகளுக்குள் இருக்கும் பொறுக்கித்தனம் அவரது நடத்தையிலும் இருக்கிறது, இரண்டும் வேறல்ல!

அந்த பெண்ணை எப்படியும் வளைக்க வேண்டும் என்ற கங்கணத்தோடு வலையை விரித்த சாரு, எதற்காக தனது நாவலை அந்த பெண் படிக்க வேண்டும் என்று விரும்ப வேண்டும்? இங்குதான் படைப்பாளி வேறு படைப்பு வேறு அல்ல என்பது நிரூபணமாகிறது. இது தெரியாத இலக்கிய குருஜிக்கள் சாருவின் நாவல்களை ரசிப்பது வேறு, அவரது பொறுக்கித்தனத்தை கண்டிப்பது வேறு என்று தத்தளிக்கிறார்கள்.

சீரோ டிகிரி, ராசா லீலா, தேகம், எக்சிஸ்டென்சியிலிசமும் ஃபேன்சி பனியனும் என்ற சாருவின் அத்தனை நாவல்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் பாலியல் வக்கிரங்கள், அதிலும் பிரபலங்களின் கிசுகிசு கதைகளாகவே நிறைந்திருக்கும். சாருவின் நெருங்கிய நண்பர் அந்துமணி இரமேஷின் வாரமலரில் துணுக்கு மூட்டையாக வரும் கிசுகிசுத் துணுக்குகள் இங்கு குறுங் காவியமாக நீண்டிருப்பது சரோஜா தேவி இரசிகர்களுக்கு நிச்சயம் வரப்பிரசாதம்தான். இணையத்தில் இருக்கும் எந்த படிப்பும், அக்கறையும் இல்லாத நடுத்தர வர்க்க, மேட்டுக்குடி லும்பன் பிரிவினருக்கு சாருவின் கிசுகிசு கிளுகிளுப்பு கதைகள் ஒருபெரிய வடிகாலாக இருக்கிறது. இவர்கள்தான் சாருவின் இரசிகர்கள்.

அந்த பெண்ணை நிச்சயம் வளைக்க வேண்டும் என்று விரும்பிய சாருவுக்கு அவரது நாவலே கைகொடுக்கிறது. ஆம். ஸீரோ டிகிரியை அந்தப் பெண் படிக்கும் போது, விடலைப்பருவத்தை தாண்டாத அந்த வயது நிச்சயம் கிளர்ச்சி அடையும் என்பது சாருவின் கணிப்பு. அதனாலேயே வலிந்து போய் தனது புத்தகம் அனுப்பி வைக்கட்டுமா என்று கேட்கிறார். தனது நாவல் ஒரு உண்மையான இலக்கிய ரசனையையோ, வாழ்க்கையின் விரிந்த களத்தை அடையாளம் காட்டும் பேரிலக்கியமோ இல்லை, அது ஒரு இளம் பெண்ணின் மனதை வெகுவாக கிளர்ச்சியூட்டும் சமாச்சாரம்தான் என்பதும் சாருவுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் இந்த எளிமையான விசயம் உலக இலக்கியத்தை கற்றுத் கரை தேர்ந்ததாக பிலிம் காட்டும் இலக்கிய குருஜிகளுக்கு தெரியவில்லை என்பது அனுதாபத்திற்குரியது.

மேலும் ஒரு படைப்பாளியின் அடிப்படையான தத்துவ நோக்கிற்கு முரணாக எந்தப் படைப்பும் தன்னிச்சையாக, சுயேச்சையாக தோன்றி விடுவதில்லை. ஒரு பாத்திரத்தையோ, கதையையோ புனையும் இலக்கியவாதி அந்த பாத்திரம் கோரும் யதார்த்தத்திற்கு உண்மையாகவே புனைவை பின்னுகிறான் என்றாலும் அது அவனது அடிப்படையான அறநெறிகளுக்கு பொருத்தமாகவே தோன்றும். மேலும் இந்த கலை இயங்கு விதி சாருவின் புனைவகளுக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒன்று. சாருவின் புனைவுலகத்தில் கூடா உறவுகளையும், பாலியல் இச்சைக்காக கட்டற்று அலையும் மனிதர்களும் சாருவின் ஆழ்மன அஸ்திவாரத்தின் பலத்திலேயே எழுகிறார்கள்.

அதனால் இன்றைய சாருவின் பொறுக்கித்தனமும், அவரது நாவல்களும் வேறு வேறு அல்ல. ஆகவேதான் தனது வக்கிரத்திற்கு நிச்சயம் தனது நாவல் துணை புரியும் என்று தெரிந்தேதான் நாவலை அனுப்புவதாக கூறுகிறார். அது தெரியாமல் ஒரு பிரபலமான எழுத்தாளர் தன் மீது கொண்ட அன்பினால் தனது நாவலை அனுப்புவதாக பேசுகிறாரே என்று அந்தப் பெண் மகிழ்கிறாள். இந்த உலகில் பாராட்டு, அன்பு, பரிசு அத்தனைக்கும் பின்னே இத்தனை வக்கிரமான உணர்ச்சிகள் இருக்குமென்று அந்தப் பேதைப் பெண்ணுக்கு எப்படித் தெரியும்?

ஆபாச வக்கிரத்தால் அப்பாவிப் பெண்ணை மிரட்டிய கதை!

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்

சாருவே பாராட்டி விட்டாரே என்று அவரது லும்பன் கூட்டமும்  அந்தப் பெண்ணுக்கு பாராட்டைக் குவிக்கின்றது. இதன் பிறகு தான்தான் அந்தப் பெண்ணை பாராட்டி பிரபலமாக்கினேன் என்ற உரிமையோடு சாரு மெல்ல மெல்ல அநாகரிகமாக பேச ஆரம்பிக்கிறார்.

மேலும் தனது செல்பேசி எண், மின்னஞ்சல், பேஸ்புக் பாஸ்வோர்டு அனைத்தையும் அளிக்கிறார். அந்த அளவுக்கு அவள் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று காட்டுவதற்காக அத்தனை பிரயத்தனங்களையும் செய்கிறார். பைனான்ஸ் கம்பெனி நடத்தும் ஏமாற்றுக்காரன் ஆரம்பகால மாதங்களில் டபுள் வட்டி கொடுத்தெல்லாம் பில்டப் கொடுப்பது போல சாருவும் அதே வழிமுறைகளை கையாள்கிறார்.

பிரபலம் ஒருவரால் பாரட்டப்பட்டிருக்கிறோம் என்ற செய்நன்றிக்காக அந்தப் பெண் ஆரம்பத்தில் அதை எப்படி எதிர்கொள்வது என்று தவித்திருக்கிறாள். பின்பு அதை திசை திருப்பும் விதமாக சாருவின் மகன், மனைவி என்று பேச்சை மாற்றப் பார்க்கிறாள். நாம் நண்பர்கள் இல்லையா, இதுபோல பேசக்கூடாதே என்று கெஞ்சுகிறாள், அதுவும் பலிக்காத போது தனக்கு காதலன் இருக்கிறான் என்றொரு பொய்யைப் சொல்கிறாள்.

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்அப்போதும் கூட சாரு தனது பொறுக்கித்தனத்தை மறைக்கும் விதமாக “அந்த சாட்டுகளை எல்லாம் அழித்துவிடு” என்கிறார். இதற்கு மேலும் இவரை ஒன்றும் செய்ய முடியாது என்று அந்தப்பெண் அவரிடமிருந்து நீங்குகிறாள். உரையாடலை துண்டிக்கிறாள். இப்படி ஒரு இளம்பெண் தன்னிடம் படியவில்லையே என்று வெறியேறிய அந்த பொறுக்கி அந்தப் பெண்ணை வெளிப்படையாக திட்டி ஒரு பதிவு எழுதுகிறார். அதில் பேஸ்புக்கில் பெண் படத்தை போட்டுவிட்டு பிரபலமாகிறாள், செக்சுவல் ஸ்டார்வேஷன் உள்ள தமிழ்நாட்டில் அனைவரும் நாக்கைத் தொங்கப் போட்டு அலைகிறார்கள் என்று அந்த பெண்ணுக்குள்ள பிரபலத்தை கேலி செய்து, இங்கு அறிவார்ந்த உரையாடலுக்குத்தான் அனுமதி என்று அந்தப் பெண்ணை துண்டிக்கிறார். மேலும் இந்த மாதிரி பெண்களெல்லாம் விரைவில் கல்யாணம் ஆகி சென்று விடுவார்கள் என்று வேறு பிலாக்கணம் வைக்கிறார்.

பாலியல் வக்கிரத்துக்காக அலையும் ஒரு இலக்கியப் பொறுக்கி தன்னிடமுள்ள கயமைத்தனத்தை மறைத்து விட்டு முழுத் தமிழகத்தையும் பாலியல் வறட்சி உள்ள பிரதேசமாக ஏன் வைய வேண்டும்? அந்தப் பெண்ணுடன் கடலை போட்டு வக்கிரத்தை கொட்டிய போது தெரியாத அந்தப் பெண்ணின் மொக்கை எழுத்துக்கள் இப்போது மட்டும் தெரியும் மர்மம் என்ன? வேறு ஒன்றுமில்லை. தனது அந்தப்புர ராஜ்ஜியத்தில் ஒரு சேவைப்  பெண்ணாக வரவேண்டியவள் மறுக்கிறாள் என்றதுமே அவளைப் பற்றி திட்டி அவளது பெயரை டாமேஜ் செய்யுமாறு எழுதுவது இன்றென்ன புதிதாகவா நடக்கிறது? சமூகத்தில் இப்படி பெண்கள் இப்படி பணிந்து போகவில்லை என்றால் பஜாரி என்று  தூற்றப்படுவார்கள். இணையமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

அந்தப் பெண்ணின் கையறு நிலை!

இவையெல்லாம் வெறும் ஏழு நாட்களுக்குள் நடந்த சம்பவம். ஏப்ரல் 22 அப்பெண் சாருவுக்கு தன்னை வாசகியாக அறிமுகம் செய்துகொண்டு சாட் மெசேஜ் அனுப்புகிறாள், மே 30 அன்று அதற்கு சாரு பதில் எழுதுகிறார். பின்னர் இரண்டு நாட்கள் பொதுவாக பேசிவிட்டு இதில் ஜூன் 6,7,8 நாட்களில்தான் படிப்படியாக பாலியல் வக்கிரங்களை சாரு அரங்கேற்றுகிறார்.  ஜூன் 8 சாருவின் வக்கிரம் உச்சத்தை அடையவும் சாட் நிறுத்தப்படுகிறது.  பின்னர் தனக்கு நெருக்கமாக உள்ளூர் தோழிகளிடம் அந்தப் பெண் இந்த பொறுக்கித்தனத்தை பகிர்ந்து கொள்கிறாள். அவர்களோ அந்தப் பொறுக்கியை மறந்து விட்டு வேறு வேலையைப் பார்க்குமாறு சமாதானப்படுத்துகிறார்கள். சமாதானமாகாத அப்பெண் பேஸ்புக் மூலமாக தமிழச்சியை  தொடர்பு கொண்டு நடந்ததை விவரிக்கிறாள். தமிழச்சியும் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பேசி உறுதியாக நின்று இதை எதிர்க்குமாறு அறிவுறுத்துகிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழச்சி இந்த பொறுக்கியை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார். இவை அனைத்தும் எங்களது கவனத்திற்கும் வந்தது. நாங்களும் அனைத்தையும் பருண்மையாக பரிசீலித்து விட்டே இந்தப் பொறுக்கியின் கயமைத்தனத்தை வினவில் அம்பலப்படுத்துகிறோம்.

இந்த அளவிற்காவது அந்தப் பெண் இந்தப் பொறுக்கியை பொதுவெளியில் அம்பலப்படுத்துவதை பாராட்ட வேண்டிய நேரத்தில் வேலை வெட்டி இல்லாத ஜென்மங்கள் அந்தப் பெண்ணை  குற்றவாளியாக தூற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது சாரு அந்த வக்கிரத்தை காட்டிய போதே இந்தப் பெண் கடுமையாக எதிர்க்கவில்லையாம். அதனால் அவளுக்கும் இதில் விருப்பம் இருந்திருக்கிறது என்று சப்பைக்கட்டு கட்டும் இந்த அல்பங்கள் இதன் மூலம் சாருவை குற்றவாளி இல்லை என்று விடுவிக்கின்றது.

பொது வெளியில் பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் அதை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதன் அரிச்சுவடி கூட இந்த அறிவற்ற ஆனால் திமிர் கொண்ட மொக்கைகளுக்கு தெரியவில்லை. மேட்டுக்குடிப் பெண்ணோ, இல்லை உழைக்கும் வர்க்கத்து பெண்ணோ தனது வாழ்நாளில் ஆயிரக்கணக்கான முறை பாலின வன்முறைகளின் யதார்த்தங்களை சந்திக்கிறார்கள். மார்பை மறைத்துக் கொள்வதற்காக துப்பாட்டாவையும், சேலையையும் இழுத்து விடுவதையே அவர்களது கைகள் அனிச்சை செயலாக அன்றாடம் செய்கின்றன.

பேருந்திலோ, கூட்டத்திலோ ஒரு கயவன் மார்பையோ, இடுப்பையோ கசக்கிவிட்டு சடுதியில் மறைந்து விடுவான். நடந்த வக்கிரத்தை எண்ணி அதிர்ச்சியுறும் அந்தப் பெண்கள் அதை வெளியே தெரிவிக்க முடியாமல் தங்களுக்குள்ளேயே குமைந்து கொண்டு குமுறுகிறார்கள். இதற்கு என்ன எதிர்ப்பு தெரிவிக்க முடியும் என்று வழிதெரியமால் தங்களுக்குள்ளேயே புதைத்துக் கொண்டு மறந்து போக முயற்சிக்கிறார்கள். இதை வீட்டிலோ, நட்பு வட்டத்திலோ தெரிவித்தால் “நாம்தான் இத்தகைய கயவர்களை புறக்கணிக்க வேண்டும், துஷ்டனைக் கண்டால் தூரவிலகு ” போன்ற உபதேசங்கள்தான் நிச்சயம் வரும்.

சாருவிடம் சிக்கிக் கொண்ட அந்த பெண் ஏன் ஒரு சோக முத்திரை மட்டும் போட்டாள், எதிர்த்துக் கேட்கவில்லை என்று ஆண்குறித்திமிருடன் கேட்கும் அந்த ஜன்மங்கள் அந்த வாதத்தை நீட்டித்தால் என்ன வரும்? ” உன்னால் எதிர்ப்புக் காட்ட முடியவில்லையா, அந்த இடங்களுக்ககுள் போகாதே, இணையத்திற்குள் வராதே, வந்தாலும் யாருடனும் பேசாதே, செல்பேசி எண்ணை யாருக்கும் கொடுக்காதே, யாருடனும் சாட் பண்ணாதே,” இவற்றைத்தான் அவர்கள் சொல்ல முடியும்.

இதன் நீட்சிதான் எந்தப் பெண்ணுக்கும் இணையம், செல்பேசி எதுவும் தேவையில்லை, வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்ற அடக்குமுறைச் சிந்தனை. மிகவும் கட்டுப்பெட்டியான குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண் இதை வைத்து தனது அடையாளத்துடன், ஆதாரங்களுடன் போலீசிடம் புகார் கொடுத்திருந்தால் இந்நேரம் சாரு சிறையில் இருப்பது உறுதி. செக்சுவல் ஹராஸ்மெண்ட் சட்டப்படி சாருவின் இந்த பொறுக்கித்தனத்தை நிச்சயம் தண்டிக்க முடியும்.

ஆனால் எந்தப் பெண் அப்படி முன்வருவாள்? இது அவளது தனிப்பட்ட கோழைத்தனமில்லை. சமூகம் அப்படித்தான் எல்லாப் பெண்களையும் நடத்துகிறது. பொதுவெளியில் அப்படி ஒரு பெண் அடையாளங்களுடன் புகார் கொடுத்தால் அவள் ஏதோ ‘கற்பி’ழந்து விட்டதாகவே பல ஆண்கள் கருதுகிறார்கள். இதற்கு அஞ்சியே எந்தப் பெண்ணும் தனக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி குறித்து வெளியே பேசுவதில்லை. அப்படி அவள் வெளியே பேசினால் ஆதரிக்க வேண்டிய சமூகம் தூற்றும் போது எந்தப் பெண்தான் என்ன செய்ய முடியும்? இதுதான் சாரு போன்ற பொறுக்கிகளுக்குப் பலம். சாருவை ஆதரிக்கின்ற அல்பங்களுக்கும் இதுவேதான் பலம். அதனால்தான் அந்த பெண்ணை குற்றவாளியாக்கி சாருவை தப்ப வைக்க நினைக்கிறார்கள்.

பொறுக்கித்தனத்திற்கு பதில் அடிமைத்தனமா?

மிகவும் ஆபாசமாக பேசி அந்தப் பெண்ணை இணையத் தொடர்பில் வைத்துக் கொண்டே மாஸ்டர்பேஷன் – சுய இன்பம் – செய்திருக்கும் அந்த பொறுக்கியின் ஆணித்தரமான நம்பிக்கை என்னவாக இருந்திருக்கும்? எப்படியும் இந்த இளம் பெண் எதுவும் தெரியாத அப்பாவிப் பெண், இதை யாரிடமும் தெரிவிக்க மாட்டாள், அதனால் நமது இமேஜை காப்பாற்றிக் கொண்டே இத்தகைய கீழ்த்தரமான காரியங்களில் ஜாலியாக ஈடுபடலாம் என்பதுதான் சாரு போன்ற பொறுக்கிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அந்த நம்பிக்கைக்கு தமிழச்சி மூலம் வேட்டு வைத்திருக்கும் அந்தப் பெண்ணின் தைரியத்தை பாராட்ட மனமில்லாமல் அவளையே குற்றவாளியாக்குவது என்ன நியாயம்? இந்த அநியாயத்தை செய்யும் பதிவர்கள் யாரும் தமது மனைவிமார்களையோ, சகோதரிகளையோ இணையத்தில் அனுமதிப்பவர்கள் இல்லை. முக்கியமாக எந்த பதிவர் சந்திப்புக்கும் அவர்களது வீட்டு பெண்களை அழைத்து வருவதில்லை. குறைந்த பட்சம் அவர்கள் தமது மனைவிமார்களை பொறுக்கி சாருவுக்கு அறிமுகம் கூட செய்து வைக்கமாட்டார்கள். இல்லையென்பவர்கள் தமது மனைவிமார்களின் செல்பேசி எண்களை சாருவுக்கு கொடுத்து பேசச்சொல்லி உற்சாகப்படுத்தலாமே? செய்வார்களா?

இவர்களின் மனதில் ஓடும் கருத்து பெண்கள் அடிமைகளாக இருக்க வேண்டுமென்பதுதான். போராடுவதற்கு வழியில்லாமல் அஞ்சி வாடும் பெண்களை தைரியமூட்டி போராடவைப்பதற்கு பதில் அவள் இன்னும் அஞ்சி அடிமையாக வாழ்வதைத்தான் இந்த யோக்கிய சிகாமணிகள் விரும்புகிறார்கள். ஒரு வேளை அந்தப்பெண் இந்த பிரச்சினையை போலீசுக்கு கொண்டு சென்று அதன்மூலம் புதிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறாள் என்றால் அப்போது இதெல்லாம் தேவையா என்று வகுப்பும் எடுப்பார்கள். பாதிக்கப்பட்ட பெண் பொதுவெளிக்கு வந்து கஷ்டப்படக்கூடாது என்பதும் இவர்களது மறு பக்கக் கருத்து. ஆக, சாரமாக சொல்வது என்னவென்றால் பெண்கள் அடிமைகளாக இருக்க மட்டுமே விதிக்கப்பட்டவர்கள் என்பது இவர்களது ஏகோபித்த கருத்து. பாலியல் வன்முறையை எதிர்த்து ஒரு பெண் வாயைத் திறந்தாலும் தப்பு, வாயை மூடி உள்ளுக்குள்ளேயே குமுறினாலும் தப்பு.

கனிமொழியையே ‘மடக்கிய’ சாரு முன் அந்தப்பெண் எம்மாத்திரம்?

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்கனிமொழியின் அரசியல் தவறுகளை விமரிசிப்பது வேறு, அவர் பெண் என்பதினால் அவரை ராசாவுடன் தொடர்பு படுத்தி பேசுவது வேறு. இரண்டாவது பச்சையான வக்கிரம். ஆனால் இந்த வக்கிரத்தை உருவாக்கி ஒரு அரசியல் கலாச்சாரமாக மாற்றியது தி.மு.கதான் என்பதால் இப்போது அவர்களே அவர்கள் உருவாக்கிய சீரழிவுக்கு பலியாகியிருக்கிறார்கள். ஆனால் பொறுக்கி சாரு தான் கனிமொழியுடன் ஆழமான காதல் கொண்டிருந்தேன் என்று சொன்னதை என்னவென்று சொல்ல? இவ்வளவிற்கும் ஒரு கூட்டத்தில் கனிமொழி, சாரு தனது இலக்கிய தந்தை போல என்று வேறு பேசியிருக்கிறார். கனிமொழியின் அரசியல் பிரபலத்தை பயன்படுத்திக் கொண்ட சாரு தனது பொறுக்கித்தனத்தை நிலைநாட்ட கனிமொழி என்ற பெண்ணையும் பயன்படுத்தியிருக்கிறார்.

வலையுலகில் தி.மு.கவிற்காக வெக்க மானம் ரோசம் இல்லாமல் வேலை பார்க்கும் சிலதுகள் இதற்காகக் கூட சாருவை கண்டிக்கவில்லை என்றால் இவர்களுக்கு கட்சி விசுவாசத்தை விட பொறுக்கி விசுவாசம் அதிகம் என்று தோன்றுகிறது. இப்படி கனிமொழியையே வளைத்துப் போட்டவர் எனும் போது அந்த இளம் பெண் நிறைய பயந்திருக்கிறாள். இத்தகைய வலுவான மேலிட தொடர்பு கொண்ட பிரபலமான எழுத்தாளரை துண்டித்து விட்டு எப்படி வெளியேறுவது என்று அவள் யோசித்திருக்கிறாள்.

திருநங்கைகளை உணர்ச்சியற்ற அலிகள் என்று பேசிய சாருவின் பின்நவீனத்துவ தரம்!

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஒரு ஊனமுற்றவர் என்பதால் கால்களைப் பற்றி நிறைய கவிதை எழுதியிருக்கிறார் என்பது போல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியது உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். ஜெயமோகன் நூல் ஒன்றை வெளியிட்ட உயிர்மை கூட்டம் ஒன்றின் மேடையில் இருந்த சாரு அந்த புத்தகத்தை கிழித்து விட்டு ஜெயமோகனை திட்டி பேசியதும் பின்னர் தனது தளத்தில் எழுதியதையும் நீங்கள் அறிந்திருக்க கூடும். மாற்றுத்திறனாளி என்ற பிச்சைக்கார மனிதாபிமானத்திற்காக மனுஷ்ய புத்திரனின் கவிதையை ஆராதிக்கத் தேவையில்லை என்று அறம் பொங்க சாமியாடிய சாருவைக் கொண்டு பலருக்கும் தங்களது மனிதாபிமானம் குறித்து ஒரு குற்ற உணர்வு வந்திருக்கும்.

இது போக விளிம்பு நிலை மக்களின் பரிவுக்காக சாரு எழுதியவை ஏராளம். தனது சொந்த பின்னணி கூட அத்தகைய விளிம்பு நிலை வாழ்க்கையால் ஆனது என்று கூட அவர் நிறைய புளுகியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் சில வருடங்கள் தான் ஆண் விபச்சாரியாகக் இருந்திருப்பதாகவும் சொல்லியருக்கிறார். இத்தகைய புரூடாக்களில் உண்மை கொஞ்சமாகவும், பொய்கள் அதிகமாகவும் இருக்குமென்பது சாருவை கொஞ்சம் அறிவோடு படிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளும் விசயங்கள்தான். ஆனால் இங்கே சுட்டிக்காட்டுவது சாரு நிறைய பொய்கள் சொல்லுகிறார் என்று அந்த விவரப்பிழைகளை காட்டுவது அல்ல. மாறாக சாருவுக்கு பின்நவீனத்துவம் ‘பரிதாப்படும்’ விளிம்பு நிலை மக்களின் அவலம் குறித்து  மயிரளவுக்கு கூட தெரியாது என்பதோடு, கிஞ்சித்தும் அனுதாபமும் இல்லை என்பதுதான்.

அதனால்தான் “ஏண்டி நீ அலியாடி , உனக்கும் பீலிங்ஸ் இருக்கும் இல்ல ” என்று தனது வக்கிர சாட்டுக்களில் அவர் பேசியிருக்கிறார். திருநங்கைகள் குறித்து சாதாரண வாசகர்களே மரியாதையுடன் உணரும் காலத்தில் ஒரு எழுத்தாளன், அதுவும் தன்னை தமிழின் ஒரே ஒரு ஒரிஜனல் பின்நவீனத்துவத் தமிழன் என்று அடிக்கடி சுயப்பெருமை பேசும் ஒருவர் இப்படி பேசியிருக்கிறார் என்றால் என்ன பொருள்? சாரு பேசும் விழுமியங்கள், கலகங்கள் எதுவும் உண்மையல்ல. அவர்  பெண் பொறுக்கித்தனத்திற்காக எழுதும் ஒரு சரோஜா தேவி எழுத்தாளர். அதனால்தான் திருநங்கைகளைப் பற்றி இப்படி ஒரு மட்டமான வருணணையை போட முடிகிறது. நிறைவேறாத காமும்  தீர்த்துக் கொள்ள முடியாத கோபமும் உச்சத்தில் இருக்கும் போதுதான் ஒரு மனிதனின் உண்மையான சுபாவத்தை நாம் அறிய முடிகிறது. அந்த வகையில் பொறுக்கி சாருவையும் நாம் அறிந்து கொள்கிறோம்.

சாருவின் வக்கிரம் அவரது தனிப்பட்ட படுக்கையறை சமாச்சாரமா?

சாரு இத்தனை ஆதாரங்களுடன் பிடிபட்டாலும் ஒரு சிலர் கூச்சநாச்சமே இல்லாமல் அவருக்கு இமேஜ் பில்டப் வேலை செய்கிறார்கள். இவர்கள் பொறுக்கி சாருவே நினைத்திராத கருத்துக்களையெல்லாம் சோறு தண்ணி இல்லாமல் கண்டு பிடித்து எழுதுகிறார்கள். அதில் ஒன்று இது சாருவின் படுக்கையறை சம்பந்தப்பட்ட விசயமாம். அதில் யாரும் எட்டிப் பார்க்க கூடாதாம். நல்லது, இந்த சலுகையை நாம் சாருவுக்கு மட்டும்தான் வழங்க வேண்டுமா? கருவறையை காம பூஜை அறையாக்கிய தேவநாதன், காமகோடி மடத்தில் பக்தைகளை நுகர்ந்த காஞ்சி ஜெயேந்திரன், ரஞ்சிதாவுடன் ஆட்டம் போட்ட நித்தியானந்தன் எல்லா பொறுக்கிகளுக்கும் அது அவர்களது படுக்கையறை சம்பந்தப்பட்டதுதானே, பின் ஏன் அவர்களை திட்டுகிறீர்கள்?

கணவனே ஆனாலும் மனைவி விரும்பாமல் அவளை தொட முடியாது. அவளை எப்போதும் அடிக்கவும் முடியாது. இவையெல்லாம் பேமிலி ஹராஸ்மெண்ட், செக்சுவல் ஹராஸ்மண்ட் சட்டப்படியே குற்றங்கள்தான். என் மனைவியை நான் வன்புணர்வேன், அடிப்பேன் என்று சொல்வதற்கு கூட எந்தக் கணவனுக்கும் உரிமை இல்லை. மேலும் சாரு இங்கே தனது மனைவியிடனோ, இல்லை காதலிகளுடனோ பேசவில்லை. அதிலும் இந்த உரையாடல்கள் எதுவும் காதலின் பாற்பட்டது இல்லை. இவை அப்பட்டமான பாலியல் வெறியைக் கொண்ட பொறுக்கித்தனங்கள்.  அதிலும் தனக்கு அறிமுகமாகும் புதிய வாசகியிடம்தான் சாரு இந்த பொறுக்கித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

இந்த வக்கிரத்தை தனிப்பட்ட உரிமை என்று நாம் சலுகை வழங்கினால் அதை பெண் போலீசை வேட்டையாடும் ஆண் போலீசு அதிகாரிகளுக்கும், வெள்ளை மாளிகையில் வலை விரிக்கும் அமெரிக்க அதிபர்களுக்கும், சித்தாள்களை வைத்து வேலை செய்யும் ஒரு மேஸ்திரிக்கும் கொடுக்க முடியும். ஊர் மேயும் ஆண்களது பொறுக்கித்தனங்கள் அவன்களது தனிப்பட்ட படுக்கையறை விசயம் என்றால் இந்த உலகில் நாம் எந்த வன்புணர்ச்சிக்கும் யாரையும் குற்றம் சாட்ட முடியாது. சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி பழங்குடி பெண்கள், அந்தியூர் விஜயா, விழுப்புரம் ரீட்டாமேரி அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் மீதான காரக்டர் அசாசினேஷன்!

அடுத்து பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்களை காரக்டர் அசாசினேஷன் செய்வது உலகமெங்கும் உள்ள வழிமுறையாக இருக்கிறது. ஐ.எம்.எஃப் எனப்படும் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த ஸ்ட்ராஸ் கான், அமெரிக்க ஓட்டல் ஒன்றில் ஒரு ஹவுஸ்கீப்பிங் பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்ய முயன்றார். இப்போது அந்த வழக்கை எதிர்கொள்ள ஸ்ட்ராஸ் கான் சட்ட ஏற்பாடுகளை செய்திருப்தோடு  ஒரு கருத்து பரப்பும் நிறுவனத்தை (PR) பணம் கொடுத்து அமர்த்தியிருக்கிறார். அந்த நிறுவனத்தின் வேலை என்ன? அந்த ஹவுஸ்கீப்பிங் பெண்ணை காரக்டர் அசாசினேஷன் செய்வதுதான். அந்தப் பெண்ணுக்கு எப்படி ஐந்து மொழிகள் தெரியும், உலக நிறுவன தலைமை நிர்வாகி அறைக்கு அவள் ஏன் வந்தாள், அவளது பழைய உறவுகள் என்ன என்று மொத்தமாக அவளை ஒரு விபச்சாரி/கைகாரி போல சித்தரிப்பதற்கு முயன்று வருகிறார்கள். இவை அனைத்தும் ஊடகங்களிலும் வருகின்றன.

அங்கே காசு வாங்கிக் கொண்டு செய்யும் வேலையை இங்கே காசு வாங்காமல் சில அல்பங்கள் செய்கின்றனர். அவர்களில் ஒரு சில பெண்களும் உண்டு. இதை நர்சிம் விவகாரத்திலேயே பார்த்திருக்கிறோம். அன்று நர்சிமிடம் தண்ணி அடித்தவர்கள், நர்சிம் ஒரு அகமதாபாத் ஐ.ஐ.எம், ஃபோர்டு கம்பெனி வி.பி, வெள்ளையாக இருக்கும் பார்ப்பனர் என்று மேட்டுக்குடி விசுவாசத்தால் நட்பு கொண்டவர்கள் சிலர் முல்லை மீதான கிசுகிசுக்கள் அவதறூகளை கிளப்பி விட்டார்கள் அல்லது நர்சிமை பொதுவெளியில் கண்டிக்காமல் அமைதி காத்தார்கள். அதே போல சாந்தி மீதான புனைவு பிரச்சினையிலும்  சாந்தியை தொடர்ந்து தரக்குறைவாக சித்தரித்து வருகிறார்கள். இத்தகைய சுலபமான ஆயுதம் இப்போதும் இவர்களிடத்தில் இருக்கிறது. மெல்ல மெல்ல அப்படி கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண் ஒரு ஒழுக்கங்கெட்டவள் என்று இவர்கள் சுலபமாக பழி சுமத்துவதோடு சம்பந்தப்பட்ட ஆண் பொறுக்கிகளை காப்பாற்றவும் நினைக்கிறார்கள். அதன் மூலம் ஊர் மேயும் ஆண்கள் எல்லாம் தப்பு செய்தவர்கள் அல்ல, அதற்கு பலியாகும் பெண்கள்தான் தவறானவர்கள் என்பது இவர்களது வாதம். இதை சமூகத்தில் பரவலாக பார்க்கிறோம். கிராமப்புறத்தில் இருக்கும் ஒரு இளம் விதவை மறுமணம் செய்வதை கிராம சமூகம் எதிர்க்கும். அப்படி செய்தால் அவள் உடம்பு சூட்டிற்காக விபச்சாரியாக மாறிவிட்டாள் என்றும் பேசுவார்கள். மாறாக அந்தப் பெண் அந்த கிராமத்தின் ஒரு ஆதிக்க சாதி ஆணுக்கு வைப்பாட்டியாக இருந்தால் அதை அனுமதிப்பார்கள். இத்தகைய பிற்போக்குத்தனத்தின் தொடர்ச்சிதான் பாதிக்கப்பட்ட பெண்ணை விபச்சாரி என்று சித்தரிப்பது. இது இணையத்திலும் தொடர்கிறது.

இந்த வக்கிரம் சாருவின் ஆட்டோ பிக்ஷனாம்! அட்றா செருப்பால!

பொறுக்கி சாருவின் கூஜாக்கள் அடுத்து வைக்கும் அல்லது வைக்கப் போகும் வாதம் என்னவென்றால் சாரு தனது புனைவுகளில் சொந்த அனுபவங்களை ஒளிவு மறைவு இன்றி முன்வைக்கிறார், இந்த தைரியம் எந்த எழுத்தாளனுக்கும் இல்லை என்றும் இதன் மூலம் அந்த அப்பாவிப் பெண்ணை அப்படி ஒரு சோதனைக்கு உட்படுத்திருக்கிறார் என்றும் இவர்கள் விளக்கமளிப்பார்கள். கேட்டால் இதுதான் ஆட்டோ பிக்ஷன் என்கிறார்கள். சரி, இந்த ஆட்டோ பிக்ஷனுக்கு யார் அனுமதி கொடுப்பது?

நான் ஒரு நாவல் எழுதும் திட்டத்தில் இருக்கிறேன். அதற்கு ஒரு பரிசோதனை செய்து பார்க்க விரும்புகிறேன். அதன்படி சாரு நிவேதிதாவின் வலது கையை வெட்டிவிட்டு அவர் ஒரு மாற்றுத் திறனாளியாக எப்படி படைப்பாளி வாழ்க்கையை நடத்துகிறார் என்று அறிய விரும்புகிறேன், சம்மதிப்பார்களா? அல்லது சாருவே ஒரு இளம் பெண் ஒருத்தியை நேரடியாக வன்புணர்ச்சி செய்து அந்த அனுபவத்தை எழுத நினைக்கிறார் என்று வைப்போம். இதற்கு சாருவின் கூஜாக்கள் ஏற்பாடு செய்வார்களா? இல்லை தங்களையே சோதனைக்கு உட்படுத்த சம்மதிப்பார்களா?

ஒரு பொறுக்கி பட்டவர்த்தனமாக இப்படி ஒரு இளம்பெண்ணிடம் வக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறான். அதைக் கண்டிக்க துப்பில்லாத ஜன்மங்கள் என்னவெல்லாம் யோசித்து நியாயப்படுத்துகிறார்கள்? இத்தகைய கூட்டம் இருப்பதுதான் சாருவின் பலம். அவர் என்ன அயோக்கியத்தனத்திற்கும் தயாராக இருப்பதற்கு இந்த பொறுக்கி வாசகர் கூட்டம்தான் காரணம். சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்ய முடியவில்லை என்று கொதித்த சில பொறுக்கிகள் அந்தப் பெண்ணின் கண்ணை குருடாக்கிவிட்டு செல்கிறார்கள். இணையத்திலும் இதுதான் கருத்தளவில் நடக்கிறது.

சாருவின் குற்றம் சபலமா இல்லை திட்டமிடப்பட்ட பொறுக்கித்தனமா?

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு ஏதோ கொஞ்சம் சபலப்பட்டு தப்பு பண்ணிவிட்டார், எனவே இதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுங்கள் என்று சில மனிதாபிமானிகள் கூறலாம். ஆனால் நடந்திருப்பது சபலமல்ல, திட்டமிட்ட பாலியல் வன்புணர்ச்சிக்கான முயற்சி. சபலப்படுவது என்பது எல்லா ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் நடக்கும் விசயம்தான். கண நேரத்தில் அந்த தவறுகள் நடந்து பின்னர் வாழ்க்கை முழுவதற்கும் தொடருகின்ற குற்ற உணர்ச்சியாக அவர்களிடத்தில் நீடிக்கிறது. இதைக்கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் சாரு ஏதோ சபலப்பட்டு இதை ஒரு விபத்து போன்று செய்ய வில்லை. திட்டம்போட்டு பொறி வைத்து பிடித்து தனது வக்கிரத்தை காட்ட முயன்றிருக்கிறார். அதனால்தான் இன்னும் திமிராக இது ஒரு அவதூறு என்று சுலபமாக மறுத்துவிட்டு போகிறார். ஆகவே சபலம் வேறு, வக்கிரம் வேறு. சபலத்திற்க்கு ஆட்படுபவர்களை நாம் மன்னிக்கலாம். பொறுக்கிகளுக்கு தண்டனைதான் கொடுக்க வேண்டும். மன்னிப்பு அல்ல.

கேரளாவில் புகழ்பெற்ற கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. அவர் வீட்டில் இருக்கும் போது ஊறுகாய் விற்கும் ஒரு இளம்பெண் வருகிறாள். அவளிடம் சபலப்படும் சுள்ளிக்காடு தவறாக நடக்க முயற்சிக்கிறார். அந்தப் பெண்ணோ அவரை அடித்து விட்டு திட்டுகிறாள். “தான் உடலை விற்றுத்தான் வாழ வேண்டுமென்றால் ஊறுகாய் விற்க வந்திருக்க வேண்டியதில்லை” என்று சீறுகிறாள். பிறகு அவர் புகழ்பெற்ற எழுத்தாளரான சுள்ளிக்காடு என்று அடையாளம் காண்கிறாள். அவளது கல்லூரி காலங்களில் இதே எழுத்தாளரின் மனைவியோடு பேசுவதற்கு சென்றிருக்கிறார்.

தவறு செய்த சுள்ளிக்காடு பின்னர் கூனிக்குறுகி இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறார். அந்தப் பெண்ணும் ஆத்திரத்தில் அடித்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறாள். யாரிடமும் இதை சொல்ல மாட்டேன் என்றும் கூறுகிறாள். பின்னர் அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு கூட சுள்ளிக்காடு செல்கிறார். முக்கியமாக “சிதம்பர நினைவுகள்” எனும் அவரது சுயசரிதை நூலில் இந்த சம்பவத்தை விவரிக்கிறார். இத்தகைய தைரியம் எத்தனை பேருக்கு வரும்? சபலப்படுபவர் அடையும் குற்ற உணர்வும், அதை எப்படித் தீர்ப்பது என்ற வழிமுறையும் சுள்ளிக்காடு விசயத்தில் காண்கிறோம். மேலும் பொதுவெளியில் அனைவர் முன்னும் அதை உரக்கச் சொல்லியிருக்கும் அவரது நேர்மையை புரிந்து கொள்ள முடியும்.

சபலப்படுவன் யாரும் வன்புணர்ச்சி செய்வதில்லை. ஒருவேளை அந்த சபலம் வன்புணர்ச்சி என்று மாறும் போது அது திட்டமிட்ட குற்றமாக மாறுகிறது. அதற்கு மேலும் அது ஒரு பாலியல் விபத்தாக இருக்காது. ஆனால் பொறுக்கி சாரு சபலப்படும் டைப் அல்ல. மற்ற நேரங்களில் வேறு சிந்தினையில் இருப்பவர்கள் எப்போதாவது பாலியல் வேட்கை குறித்து நினைக்க முடியும். ஆனால் 24மணிநேரமும் அதே சிந்தனையில் இருக்கும் சாரு இங்கே சபலப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. இது திட்டமிட்ட பாலியல் வக்கிரம் என்பதை மீண்டும் வலியுறுத்தி கூறுகிறோம்.

இப்போது என்று அல்ல, இதற்கு முன்னரே கூட சாரு ஒரு சந்தர்ப்பவாத பொறுக்கிதான்!

“சாரு நிவேதிதா ஒரு மலிவான பத்தி எழுத்தாளர், புனைவுகள் எழுதும் படைப்பாளி அல்ல” என்பதுதான் சாரு குறித்த ஜெயமோகனது சாரமான விமரிசனம். அதனால்தானோ என்னமோ ஜெயமோகனது தளபதிகள் சிலர் கூட இப்போது சாருவுக்கு சொம்பு தூக்குகிறார்கள். இந்தியாவில் பெப்சி கோக் இடையே பெரும் வணிகச் சண்டை இருந்தாலும், தரக்குறைவு காரணமாக கோக் கம்பெனி திண்டாடிய போது பெப்சி அதை தீர்க்க ஆலோசனை சொல்லியிருப்பது இங்கு நினைவுக்கு வருகிறது.

நம்மைப் பொறுத்தவரை சாரு என்பவர் ஒரு இலக்கிய பொறுக்கி. ஜெசிகா லாலைக் கொன்ற மனுசர்மா, மாநகரங்களில் குடித்து விட்டு பி.எம்.டபிள்யு காரை ஓட்டி  சிலரைக் கொன்ற மேட்டுக்குடி குலக்கொழுந்துகளுக்கும் சாருவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. மேலும் தற்போது இந்த இளம்பெண்ணுடன் சாரு நிகழ்த்திய வக்கிரத்திற்காக மட்டும் அவரை நாம் பொறுக்கி என்று விளிக்கவில்லை. அவரது சாரமே பொறுக்கித்தனம்தான். அதை நித்தியானந்தா விவகாரத்திலேயே பார்த்துவிட்டோம்.

பணத்திற்காகவும், மேல்மட்ட தொடர்பிக்காகவும் நித்தியானந்தாவின் ஊடக மாமாவாக வேலை பார்த்த சாரு அதற்காக எந்த அளவுக்கு கீழே இறங்கி படு பிற்போக்குத்தனமாக  எழுதியிருக்கிறார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். பின்னர் வீடியோ வந்த உடன் நல்ல பிள்ளை போல கட்சி மாறியதையும் பார்த்து விட்டோம். இவையெல்லாம் வெறுமனே சந்தர்ப்பவாதம் என்று அழைத்தால் அந்த வார்த்தையே வெட்கம் கொள்ளும். இதற்கு சரியான பெயர் பொறுக்கித்தனம்தான். மேட்டுக்குடி லும்பன்கள் தமது அதிகாரம், அந்தஸ்து, பிரபலம் காரணமாக இந்த உலகமே நாம் தின்று முடிக்க படைக்கப்பட்டிருக்கிறது என்ற திமிரான மனோபாவம் கொண்டவர்கள். எளியோரை அவர்கள் அணுகும் விதமே இல்லை மிரட்டும் தோரணையே இவர்களது சுபாவத்தை எளிமையாக புரியவைத்து விடும். சாரு அப்படி இப்போது புரிய வைத்திருக்கிறார்.

சாருவின் சொந்த வாழ்க்கையில் உண்மையான காதல் இருக்க முடியுமா?

புத்தக கண்காட்சிக்கு தன் மனைவி அவந்திகாவை அழைத்து வந்தால், ஆண்கள் கண்களாலேயே துகில் உரித்து விடுகிறார்கள்… கூட்டத்தில் கண்ட இடத்தில் உரசி அவமதிக்கிறார்கள்… தமிழ்நாடு செக்ஸ் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது… என்று அறச்சீற்றத்துடன் ஆசனவாய் வெடிக்க குரல் எழுப்பிய சாரு, அதே பொறுக்கித்தனத்தை செய்திருக்கிறார். தன் மனைவிக்கு வக்கிரம் பிடித்த ஆண்களால் ஆபத்து வருகிறது என ஒட்டுமொத்த தமிழ்ச்சூழலையே குறை சொன்ன அதே சாருதான் தமிழக பொறுக்கிகளின் தலைவனாக, ரோல் மாடலாக, செக்ஸ் வறட்சியின் பிதாமகனாக இருக்கிறார்.

தனது மனைவியை பக்தி, கோவில், சாமியார் என்று அடக்க ஒடுக்கமாக நடத்தும் இந்த பொறுக்கியின் சொந்த வாழ்க்கை எப்படி இருக்கும்? அறுபது வயதில் ஒரு இளம்பெண்ணை இப்படி படுத்தியிருக்கும் இந்த நபர் தனது சொந்த மனைவையை எப்படி அணுகியிருக்க முடியும்? கணவன் மனைவி உறவில் எந்த அளவுக்கு உண்மையான காதல் இருக்குமோ அந்த அளவுக்கு இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் அங்கே உண்மை இல்லாமல் ஆண் தரப்பில் பொறுக்கித்தனம் இருந்தால்? இங்கே நாம் சாருவின் தனிப்பட்ட வாழ்க்கை இழுத்திருப்பதாக சில அசட்டு அம்பிகள் ஆவேசப்படலாம். இல்லை. நன்கு கவனித்துப்பாருங்கள், ஆபாச சாட் அனுப்பி தனது தனிப்பட்ட வாழ்க்கையை கேலிக்குள்ளாக்கியிருப்பது நிச்சயம் சாருதான், நாமல்ல.

சாரு எப்போதும் எதிலும் வெளிப்படையாக பேசுவதாக சில இரசிக குஞ்சுகள் அவ்வப்போது விசில் அடிப்பார்கள். யோனிப்பருப்பை ‘வலிக்காமல்’ கடிக்க நினைக்கும் இந்த விகாரத்திற்கு பின்னர் அவரது மனைவி கருத்தை உண்மையாக சாரு எழுதுவாரா? தில்லிருப்பவர்கள் பதில் சொல்லட்டும். இல்லையேல் வாயை மூடிக் கொண்டு போகட்டும்.

சாருவின் குடும்ப வாழ்க்கை மட்டுமல்ல, அவரது நட்பு வட்டாரத்தையும் கொண்டு இதை விளங்கிக் கொள்ளலாம். சாருவின் ஆத்மார்த்த நண்பன் தினமலர் அந்துமணி இரமேஷ், ஆன்மீக குருவான நித்தியானந்தா, நிரந்தர புரவலரான நல்லி குப்புசாமி ஆகியோரும் பொறுக்கித்தனத்திற்கு பெயர் பெற்றவர்கள்தான். அவர்களெல்லாம் பணபலத்தை வைத்து அந்த பொறுக்கிதனத்தை அனுபவிக்கும் போது சாரு தனது இலக்கிய பலத்தை வைத்து அனுபவிக்க நினைக்கிறார். ஒரு வேளை சாரு மட்டும் தி.மு.க அல்லது அ.தி.மு.க மந்திரியாக இருக்கும் பட்சத்தில் தெருவுக்கு ஒரு பெண் பாதிக்கப்படுவது நிச்சயம். அந்த வகையில் சாரு அரசியலுக்கு செல்லவில்லை என்பதால் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

இணையத்தில் சாரு போன்ற பொறுக்கிகளை கண்டித்தால்தான் இங்கே உண்மையான நட்பும், உறவும் சாத்தியம்!

ஆணும் பெண்ணும் பார்க்கக் கூடாது, நேரில் பேசக்கூடாது என்பதில் தொடங்கி ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் இந்த சமூக அமைப்பில் அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமல் பழகவும்,பேசவும், ஏன் காதலிக்கவும், திருமணம் செய்யவும் கூட இந்த இணைய ஊடகம் வாய்ப்பளிக்கிறது. சாருவைப் போன்ற பொறுக்கிகள் அதிகரித்தால் இந்த முற்போக்கான அம்சங்கள் மறைந்து பழைய கட்டுப்பெட்டித்தனங்கள் எழுந்து ஆக்கிரமிக்கும். இப்போது  கூட பல இணையப்புலிகள் தமது மனைவிமார்களுக்கு தெரியாமல், தெரிவிக்காமல்தான் இணையத்தில் புழங்குகின்றனர். மனைவிகள் இங்கே வரக்கூடாது என்று தடையும் செய்திருக்கின்றனர்.

சாருவின் பொறுக்கித்தனத்தை தவிர்க்க வேண்டுமானால் பெண்கள் இந்த ஊடகத்திற்கு வரக்கூடாது என்பதுதான் ஆணாதிக்க கூஜாக்கள் விரும்புவது. சாருவின் பொறுக்கித்தனமே கூட அந்த நிலையைத்தான் தோற்றுவிக்கும். எனவே சாருவின் குற்றத்தை பொதுவெளியில் கண்டித்து இத்தகைய பொறுக்கிகள் மறக்க முடியாதபடி பாடம் புகட்டும்போதுதான் இணையத்தில்  கண்ணியமான நட்புக்களை நாம் வளர்க்க முடியும். இல்லையேல் இங்கே ஒரு ஆணும் பெண்ணும் இயல்பாக பேச முடியாது என்ற சூழலே நிலவும்.

இப்போது இந்தப் பிரச்சினை தெரியவந்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவளைக் கண்டித்திருக்க வேண்டும். ஒருவேளை இணைய வாய்ப்பு கூட பறிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இத்தகைய பிரச்சினைகளை நேரில் எதிர் கொண்டு போராடமல் இருப்பது இது போன்று மேலும் பல குற்றங்கள் நடப்பதற்கு காரணமாகுமென்பதை அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம். அந்த வகையில் அந்தப் பெண்ணும், அந்தக் குடும்பமும் இதனால் வேதனை அடையத் தேவையில்லை. இதை எதிர்த்து போராடமல் இருந்திருந்தால்தான் வாழ்க்கை  முழுவதும் வேதனை கலந்த  குற்ற உணர்வு பின்தொடரும்.

பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் பொறுக்கி சாருவை கண்டிக்க வேண்டும். இணையவெளியை பெண்கள் சுதந்திரமாக செயல்படும் வெளியாக மாற்ற முன்வர வேண்டும்.

சாருவுக்கு என்ன தண்டனை என்பதை அவரே கூறுகிறார்!

சென்ற ஆண்டு காமராசர் அரங்கில் நடந்த சாரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கினை திட்டி சாரு நிறைய பதிவுகள் எழுதியிருக்கிறார். அதில் மிஷ்கினது பேச்சைக் கேட்ட குழந்தைகள் அதிர்ச்சி அடைந்ததாம். இப்படி தப்பான விசயங்கள் பேசிய மிஷ்கின் செக்ஸ் பற்றி ஏதுமறியாத அந்தக் குழந்தைகளை மென்டல் ரேப் செய்துவிட்டாராம். இதற்கு ஆயுள்தண்டனை கொடுத்தால் கூடதவறில்லை என்றும் சாரு எழுதியிருக்கிறார். எனில் புதிதாக அறிமுகமாக ஒரு இளம் வாசகிக்கு சாரு செய்திருக்கும் பொறுக்கித்தனத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? சாருவோ அவரது கூஜாக்களோ கூறுவார்களா?

காத்திருக்கிறோம். இல்லையேல் முடிவு செய்வோம்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்