Wednesday, June 7, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!

-

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!சிக்ஸ் பேக்ஸ் மற்போர் வீரனின் கட்டுடலுக்கு ஊத்தை உடம்பு இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் தலையைப் பொருத்தி ஓவியம் வரைந்து வைத்துக் கொள்வதாக ஒரு காட்சி அத்திரைப்படத்தில் வருகிறது.

அதைப் போல உல்லாச, ஊதாரி, சொகுசு வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கும் இம்சை அரசி 24ஆம் புலிகேசியான செல்வி ஜெயலலிதாவை சிறந்த அறிவாளி, துணிச்சல்காரி, நிர்வாகத் திறமைசாலி என்ற பொய்யான சித்திரம் வரையப்படுகிறது.

ஆனால், இவரது ஆட்சியில் மின் பற்றாக்குறையில் தமிழகமே இருளில் மூழ்கிக் கிடக்கின்றது. தொழிலகங்களின் இயந்திரங்கள் துருப்பிடிக்கின்றன; அலுவலகங்களில் ஒட்டடைகள் படிகின்றன; கோப்புகள் தூசு மண்டிப் போயுள்ளன; சாலைகள் குண்டும் குழியுமாக சிதிலமடைந்து போயுள்ளன; சாலைகளில் சாக்கடைகள் ஆறாக ஓடுகின்றன; குப்பைக் கூளங்கள் மலைகளாகக் குவிகின்றன.

போலீசு அதிகாரிகள் சசிகலா கும்பல் பதுக்கிய சொத்துக்களை மீட்பதிலும், எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பொய் வழக்குகள் புனைவதிலும், அம்மா பரிவாரங்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அணிவகுத்து நிற்பதிலும் குவிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் கொலை, கொள்ளை, வழிப்பறிப்புகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொழில்முறை குற்றக்கும்பல்களுக்குத் திறந்து விடப்பட்டிருக்கின்றன. இந்த வகைக் குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குப் பதில் போலீசு நிலையக் கொட்டடிக் கொலைகளும், போலி மோதல்களும் (என்கவுண்டர்) அரங்கேற்றப்பட்டு பீதி உருவாக்கப்படுகின்றது. ஒருவேளை இதுதான் நிர்வாக திறமைசாலி என்பதைக் குறிக்கிறதோ!

ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை குறித்து மூத்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் அரியானா மாநில முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.ஜி.தேவசாகாயம் (இவர் தி.மு.க.காரர் அல்ல) கூறுகிறார், “தமிழகத்தின் கடந்த 6 மாத ஆட்சி நிர்வாகச் சீரழிவு தவிர வேறொன்றுமில்லை. ஒரு தனிநபர் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதுகெலும்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலைமை இல்லை. இது இப்படியே போனால் தமிழகம் அதல பாதாளத்திற்குப் போகும்”. இந்தக் கணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயா ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

நிர்வாகப் பொறுப்பில் எந்தவொரு அமைச்சரும் அதிகாரியும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் கூட நீடிக்க முடியாது; கோப்புகளையும், பொறுப்புகளையும், தம்முடன் பணிபுரியும் அதிகாரிகளும் ஊழியர்களும்ம் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் பந்தாடுவதுதான் ஜெயலலிதாவின் இன்னொரு நிர்வாகத்திறமை! முதலமைச்சர் பதவிக்குத் தகுதியானவர் தானா என்று மதிப்பீடு செய்யாமலேயே ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுத்ததைப் போலவே  தகுதி, திறமைகளை மதிப்பீடு செய்து அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஜெயலலிதா நியமிக்கவில்லை.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!வேறு எந்த அடிப்படையில் பொறுப்புகளைத் தருகிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். கடந்த அமைச்சரவை மாற்றத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு செங்கோட்டையனை போயசு தோட்டத்துக்கு அழைத்த ஜெயலலிதா, “அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப் போறேன். இதுநாள் வரைக்கும் நான் உங்களுக்கு எதுவும் செய்ய முடியலை. என் சூழ்நிலை உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். கேளுங்க… உங்களுக்கு எந்த இலாக்கா வேணும்” என்று கேட்டார். “நீங்க நல்லா இருந்தா போதும்மா… நீங்க எது கொடுத்தாலும் சரிங்கம்மா” என்றார், செங்கோட்டையன். “இப்போதைக்கு வருவாய்த்துறை உங்ககிட்ட இருக்கட்டும். இன்னும் சில நாட்களில் வேறு சில துறைகளும் உங்களுக்கு வரும் சரியா” என்று கேட்ட ஜெயாவிடம் குனிந்தபடியே தலையாட்டினார் செங்கோட்டையன்.

அமைச்சர் சிவபதியை முன்பு நீக்கியதற்கும் மீண்டும் சேர்த்ததற்கும் ஜெயலலிதா காரணம் சொல்கிறார்: “ஒரு விழாவுல ராவணன் வந்தபோது, அதைக் கவனிக்காம அவர் செல்போன்ல பேசிட்டு இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக, எங்கிட்ட தவறான தகவல்களைச் சொல்லி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்காங்க. எனக்கு இப்போதுதான் அது தெரிய வந்தது. தப்பு செய்யாத யாரும் தண்டனை அனுபவிக்கக் கூடாது இல்லையா?” என்று சொன்ன ஜெயலலிதா, சிவபதியை மீண்டும் அமைச்சராக்கினார்.

எந்த தகுதி அடிப்படையில் அமைச்சர்கள் சேர்க்கப்படுகிறார்கள், நீக்கப்படுகிறார்கள் பாருங்கள்! ஜெயாவின் விசுவாசிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக வருவாய் துறை உட்பட முக்கியத்துறைகளின் அமைச்சராக்கப்படுகிறார்; முன்னாள் பங்காளி (ராவணன்)யை “மதிக்கவில்லை” என்பதற்காக ஒரு அமைச்சர் பதவி நீக்கப்படுகிறார். (யார் நீக்கியது? ஜெயாவுக்கு என்று சொந்த மூளை இல்லையா? யாராவது கோள் மூட்டினால் நம்பிவிடுவாரா? தவறுக்குரிய பொறுப்பு இல்லையா?) பின்னர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். ஆக, தகுதி, மதிப்பீடு அடிப்படையில் பொறுப்புகள் ஒதுக்கப்படுவதும் நீக்கப்படுவதும் இல்லை. விசுவாசம், அடிமைத்தனம், திமிர்த்தனமே அடிப்படை.

கொலை, கொள்ளை, வழிப்பறியில் நாட்டிலேயே முதன்மை இடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், இவைகளைச் செய்யும் குற்றவாளிகள் தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு ஓடிப்போய் விட்டார்கள் என்று ஜெயா புளுகினார். கொடூரமான துப்பாக்கிச் சூடு நடத்தி தலித் மக்களைச் கொன்ற சம்பவத்தை சாதித் தகராறு என்று சித்தரித்தார். இப்படியெல்லாம் பச்சையாகப் புளுகும் ஜெயா உண்மையில் துணிச்சல்காரர்தான்!

அப்புறம் மரியம் பிச்சை, பரஞ்ஜோதி விவகாரம்; மூன்று பெண்டாட்டிக்காரர் மரியம் பிச்சை ஜெயாவுக்குத் தன் விசுவாசத்தைக் காட்ட, மின்னல் வேகத்தில் காரை ஓட்டச் செய்து, விபத்து ஏற்படுத்தி, மாண்டு போனார். அவருக்கு மாற்றாக பெண் மருத்துவரிடம் மோசடித் திருமணம், சொத்துப் பறிப்பு செய்த கிரிமினல் பேர்வழி பரஞ்ஜோதியை இடைத்தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து, அறநிலையத்துறை அமைச்சரும் ஆக்கி, இரண்டே மாதத்தில் அதே வழக்கில் சிக்கியதால் பதவி நீக்கமும் செய்யப்படுகிறார். விவகாரத்துக்குரியவர் என்று தெரிந்தே நியமனம், நீக்கம் என்று செயல்படும் ஜெயலலிதா தனக்குத் தெரியாமல் நடந்து விட்டதென்று எத்தனை தடவைதான் மழுப்புவார்? ஏதாவது போதையில் மூழ்கிக் கிடப்பவருக்கு எதுவும் தெரியாமல், எதுவும் செய்யலாம் என்றவாறுதானே அரசு நடக்கிறது.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!அடுத்து, ஜெயலலிதா துணிச்சல்மிக்கவர் என்ற கருத்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து, நிலைநாட்டப்பட்டிருக்கிறது. தான் எதைச் செய்தாலும் அதிரடியாகவும் அடாவடியாகவும், திமிர்த்தனமாக செய்வது; எதைச் சொன்னாலும் அண்டபுளுகு ஆகாசப்புளுகாக சொல்வது; மக்கள் எதிர்க்க மாட்டார்கள், ஏமாந்து போவார்கள் எதிர்க்கட்சிகளுக்கும் கேள்வி கேட்கும் திராணியில்லை என்ற எண்ணத்தில் விளைவதுதான் ஜெயலலிதாவின் துணிச்சல்.

கோவில் பிரசாதத்தில் நஞ்சு வைத்தும், லாரியை மோதவிட்டும் தன்னைக் கொல்ல முயன்றதாகப் புளுகியது; சட்டப்பேரவையில் தன்னை மானபங்கப்படுத்தினார்கள், ஆளுநர் சென்னாரெட்டியே தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று புளுகியது; பணத்துக்காகத்தான் காவல்நிலையக் கற்பழிப்புப் புகார்கள் செய்வதாக பழிபோட்டது; தன் ஆட்சியில் சட்டம்ஒழுங்கு கெட்டு விட்டதாகக் காட்டுவதற்கு தி.மு.க.வினரே திருட்டு, கொள்ளை வழிப்பறியில் ஈடுபடுகின்றனர் என்றும் ராஜீவ் காந்தியையும் கொன்றனர் என்றும் குற்றஞ்சாட்டியது; வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாச்சாரம் தீவிரவாதம், பிரிவினைவாதம் பெருகிவிட்டதாகக் கூறி போலீசாருடன் போலி மோதல்கள், கொட்டடிக் கொலைகளை நியாயப்படுத்தியது; லட்சக்கணக்கான அரசு ஊழியரை வீடு புகுந்து தாக்கியதோடு ஒரே கையெழுத்தில் பணிநீக்கம் செய்தது  இப்படி ஜெயலலிதாவின் துணிச்சலுக்கான பழங்கதைகளைக் கூட விட்டு விடுவோம்.

1.76 இலட்சம் கோடி ரூபாய் ஊழலை தி.மு.க. செய்து விட்டதாக (அப்படி ஒரு குற்றச்சாட்டை ஜெயாவும் அவரது பங்காளிகளும் தவிர யாருமே கூறவில்லை) ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்ததும் கடந்த பத்து மாதங்களில் ஜெயலலிதா சொன்னவையும் செய்தவையுமே அவரது துணிச்சல் எத்தகையவை என்பதற்கு சான்றாக உள்ளன. தேர்தல்களில் வெற்றி பெற்றவுடன் , இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவேன்; தமிழர்கள் தெருக்களில் பாதுகாப்பாக நடமாடலாம்; சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் என் ஆட்சியின் முதற்பணி; ஒரு சில மாதங்களில் மின்பற்றாக்குறை அடியோடு முடிவுக்கு வரும், மின்வெட்டே இருக்காது என்று அறிவித்தார் ஜெயலலிதா.

ஒரு அரசியல் கட்சியின் தலைவி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில் திட்டங்களை அறிவிப்பதும், வாக்குறுதிகள் வழங்குவதும் தவறில்லை. ஆனால், இப்படியெல்லாம் சொல்லிவிட்டு தனது அரசு எந்திரத்தை  அதிகாரிகளையும் போலீசையும்  முதன்மையாக எந்தெந்த வேலைகளில் அவர் ஏவி விடுகிறார்? சமச்சீர் கல்வியும், பாடப்புத்தகங்களும் கேட்டுப் போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்துவது; நீண்டநாள் ஆகியும் திறக்காமல் இருக்கும் தனிச்சிறப்பான வசதி கொண்ட மருத்துவமனையைத் திறக்கக் கோரும் மாணவர்இளைஞர் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவது; மின்வெட்டுக்கு எதிராகவும், புயல் நிவாரணமும் கோரிப் போராடும் மக்கள் மீது தடியடி நடத்துவது; பழங்குடிப் பெண்களைக் கடத்திக் கொண்டு போய் பாலியல் வன்முறை செய்வது; குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களைச் சித்திரவதை செய்து கொட்டடிக் கொலைகள் புரிவது; அமைதியாகப் போராடும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் திட்டமிட்டு போலீசைக் குவித்து, சுட்டுக் கொல்வது; வழக்கறிஞர்களைத் தாக்குவது; இரகசியப் படுகொலைகள் செய்வது; தனது பங்காளி சசிகலாவையும் அவரது உறவினர்களையும், எதிர்க்கட்சியினர் மற்றும் தம் கட்சியினரையும் உளவுவேலை செய்து கண்காணித்து வழக்குகள் சோடித்து சிறையிலடைப்பது.

இவை மட்டுமல்ல; ஜெயா ஆட்சியில் போலீசு  உளவுத் துறையின் வேலையைப் பாருங்கள். அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அவரது உதவியாளர் ஆறுமுகத்தின் மனைவிக்கும் தவறான உறவு இருப்பதாக செங்கோட்டையன் மகன் ‘அம்மா’விடம் கோள் மூட்டுகிறார் அல்லது முறையிடுகிறார். உடனடியாக உளவுத் துறையை அனுப்பி அம்மா விசாரிக்கிறார். ஆறுமுகத்தின் மனைவியை மிரட்டுகிறார். ஆறுமுகம் கைது செய்யப்படுகிறார்.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!ஜெயா ஆட்சியில் அமைச்சர்களின் வேலையைப் பாருங்கள். சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா விடுபட வேண்டி காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தமிழக அமைச்சர்கள் பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். கூடவே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்கிறார்கள். அம்மாவுக்காக ”வர்ணாபிஷேகம் நடத்துகிறார்கள். கோவில்சார்பிலே அமைச்சர்களுக்கு ரோஜா மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. கோவிலுக்கு கோபுரம் கட்டி கொடுக்குமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. அதையும் அமைச்சர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சி என்றால் இவைதான் வாடிக்கை என்று பல ஆண்டுகளாகத் தொடரும் அதிரடி, அடாவடி, திமிர்த்தனம் தான் அவரது துணிச்சலா? அதேபோல உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றத் தீர்ப்புகளால் திரும்பத் திரும்ப கன்னத்தில் கரிபூசப்பட்டும், சட்டத்துக்கு புறம்பான முடிவுகள் எடுக்கிறார் ஜெயலலிதா. இவைதான் ஜெயலலிதாவின் அறிவுத்திறமைக்கு சான்றுகளா? இல்லை, தன்மீது தொடுக்கப்பட்ட 42 லஞ்ச ஊழல்அதிகார முறைகேடு வழக்குகளைச் சமாளித்து, கடந்த பதினைந்து ஆண்டுகளாக, நீதித்துறைக்கு தண்ணி காட்டுகிறாரே, இதுதான் அவரது அரசியல் சட்ட ஞானத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

______________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

    • தமிழகமே இருளில் மூழ்கிக் கிடக்கின்றது. தொழிலகங்களின் இயந்திரங்கள் துருப்பிடிக்கின்றன; அலுவலகங்களில் ஒட்டடைகள் படிகின்றன; கோப்புகள் தூசு மண்டிப் போயுள்ளன; சாலைகள் குண்டும் குழியுமாக சிதிலமடைந்து போயுள்ளன; சாலைகளில் சாக்கடைகள் ஆறாக ஓடுகின்றன; குப்பைக் கூளங்கள் மலைகளாகக் குவிகின்றன.

      கவிதை ப்ரமாதம். என்ன ஒரு சிந்தனை. ஆ. ஆ. ஓ.ஓ வலிக்க்குது. அழுதுருவென்…

    • இந்தக் கட்டுரை எதைப்பற்றியது? ஜெயலலிதாவின் நிர்வாக சீர்கேடு பற்றியது. அவர் ஆட்சியல் தமிழகம் நாசாமாக போய்கொண்டிருப்பது பற்றியது.

      விவாதம் அதைப்பற்றியா நடக்கிறது?

      இதுவே கருணாநிதி ஆட்சியாக இருந்தால் இன்னேரம் ஒவ்வொருத்தனும் தமிழ்நாட்டை முன்னேத்த ஆலோசனை எழுதியிருப்பாங்க. இல்லை கருணாநிதியின் குடும்ப அரசியல், பிழைப்புவாதம் பற்றி மைல்கணக்காக எழுதியிருப்பாங்க, இல்லையெனில் திராவிட அரசியலால் எப்படி தமிழகம் சீரழிந்து போனது என்று வகுப்பு எடுத்திருப்பாங்க, கடைசியாக இட ஒதுக்கீடு அநியாயத்துனாலதான் இது போல நடந்துவிட்டதுன்னு முடிச்சிருப்பாங்க

      ஆனால் நடப்பது அவா ஆட்சியாச்சே, போயஸ் தோட்டத்துலேருந்து தமிழக அதிகார/நிர்வாக தலைமை வரைக்கும் இருப்பது அவாளாச்சே

      அதனால நைசாக ஜெயலலிதாவையும் மற்றவாளையும் பற்றி பேசுவதை கவனமா தவிர்த்துவிட்டு பார்ப்பனர்களை இழிவு செய்துவிட்டதைப்போல ஒரு பொய்த்தோற்றதை திட்டமிட்டு உருவாக்கி அந்த வழியில் மொத்த விவாதமும் ஹைஜேக் செய்யப்பட்டுவிட்டது.

      இதுதாண்டா பார்ப்பன பம்மாத்து….!

      • if vinavu specified only the deterioration of Ruling party,then no one will not argue about the paarpaniyam etc.He only started and at all time he is linking the issues with Paarpaniyam.

        So don’t tell this is paarpana pammaathu,this is stupid and idiotic approach of the people like Vinavu and you.

        • கட்டுரையில் பார்பானை பற்றி வந்த ஒன்றை எடுத்துப்போட்டு அதற்கும் பார்ப்பன பம்மாத்துக்கும் தொடர்பில்லை என்று நீங்கள் விவாதம் செய்யவேண்டியதுதானே யார் தடுத்தது?

          செய்தீர்களா?

          செய்யமாட்டீர்கள், அதற்கு பதலாக பார்ப்பானை இழிவு படுத்துவதாக பொய் பிரச்சாரம் செய்து விவாதத்தை திசை திருப்புவீர்கள், அதுதான் பார்ப்பன பம்மாத்து.

          மைலாப்பூர் மாபியா கையில் போயஸ் தோட்டம் முதல் ஆட்சியதிகாரம் வரை உள்ள நிலையில் பார்ப்பன பம்மாத்து என்று தலைப்பிட்டால் என்ன தவறு? காலங்காலமாக மன்னார்குடி மாபியா என்று சசிகலா கூட்டத்தை அனைத்து ஊடகங்களும் எழுதிவந்த போது அதை யாரும் மறுக்கக் காணுமே? இப்போ மட்டும் ஏன் இந்த பம்மாத்து?

  1. எதற்கு எடுத்தாளும் பார்பனர் என்ரு சொல்வது ஒரு வாடிக்கை ஆகிவிட்டது.ஜெயலலிதா பார்ப்பனர் என்ரு தெரிந்தும்,மோசமானநிர்வாகத்திறமை உடையவர் என்ரு தெரிந்தும் பெரியார் பிறந்த மண்ணில் வாழும் நாம் ஏன் ஓட்டு போட்டோம்? தாத்தா குடும்ப ஆட்சி தானே?
    வினவுக்கு ஒரு கேள்வி? எத்தனயோ கோடி மக்களில் மிக மிக சிறிய % இருக்கும் பார்ப்பனர்களை எதிர்க்கும் உன்னை போன்றவர்கள் சிந்திக்க வேண்டியது- என்னதான் பொய் பிரச்சாரம் செய்தாலும் அவர்களின் முன்னேற்றத்தை சிறிதும் தடுக்க முடியாதது ஏன்?
    பார்ப்பனர் ஆட்சி என்று கூறும் நீ வாழும் தமிழ்நாட்டில் ஏன் தமிழன் அவர்களின் காலடியில் மனண்டியிட்டு கிடக்கிறார்கள்?

    • வினவிற்க்கு சரியான செருப்படிக்கேள்வி….இந்த மாதி டப்பான கேள்விகளுக்கு வினவு என்றுமே பதில் சொல்வதில்லை…பார்பனர் பாலிடிக்ஸ் என்பது இத்துப்போன கருனானிதி ஸ்டெய்ல்..இது காலத்திற்க்கு ஒவ்வாது…

      • ///“ஒரு விழாவுல ராவணன் வந்தபோது, அதைக் கவனிக்காம அவர் செல்போன்ல பேசிட்டு இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக, எங்கிட்ட தவறான தகவல்களைச் சொல்லி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்காங்க.//

        இதுவரையிலும் ஜெயாவுடைய ஆட்சி எப்படி நடந்து வந்திருக்கின்றது என்பதற்கு இந்த உதாரணமே போதும். ஏற்கெனவே துக்ளக் ஆட்சி நடத்தும் அம்மாவிற்கு பக்கத்தில் இப்போது இன்னுமொரு துக்ளக், இனி என்னவகையான கூத்தையெல்லாம் காணவேண்டி வருமோ.

    • //எதற்கு எடுத்தாளும் பார்பனர் என்ரு சொல்வது ஒரு வாடிக்கை ஆகிவிட்டது//

      தான் ஒரு பாப்பாத்தி என்று தன் சாதியை சட்டமன்றத்தில் வைத்து திமிராக அறிவித்துகொண்டது வினவு அல்ல.

      • ஒரு தாழ்ந்த ஜாதிக்காரணை தீண்டாமை வெறியுடன் பள்ளன், பறையன் என்று விழித்து வேதனைப்படுத்துவது எவ்வளவு அனாகறீகமானதோ..அதேபோன்று பார்ப்பன் என்று விழிப்பதும் அனாகரீகமானது…ஒரு வாரத்துக்கு முன்னாடி தீடீர்ன்னு “பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்” என்று தாத்தா ஒரு அறிக்கை விட்டார்..அது யார சந்தோஸப்படுத்த என எனக்கு இன்னும் விளங்கள..

        • //அதேபோன்று பார்ப்பன் என்று விழிப்பதும் அனாகரீகமானது//
          பேருக்குப் பின்னாடி ‘ஐயர்’ ‘ஐயங்கார்’ -னு போட்டுக்குறது உங்க அநாகரிக லிஸ்டுல உண்டுங்களா?

          • //பேருக்குப் பின்னாடி ‘ஐயர்’ ‘ஐயங்கார்’ -னு போட்டுக்குறது உங்க அநாகரிக லிஸ்டுல உண்டுங்களா?//

            ஜாதிப்பேர் சேர்த்து விளிப்பதெல்லாமே அனாகரீகம் தான்….

            ஆந்திராவா ரெட்டி, கர்னாடகாவா கவுடா…முதல்வர்களின் பெயருடன் வரும் இந்த ஜாதிப்பெயர் அந்த மானிலத்தில் எந்த ஒரு பிரச்சனையென்றாலும் ஒரு சாராரின் ஆராஜகம் தொடர்கிறது

        • அப்ப தாழ்ந்த ஜாதின்னு ஒரு ஜாதி இருக்குன்னு சொல்கிறாயாடா…………….பையா

        • ஏன் சேம் சைடு கோல் போடுறீங்க பையா?
          //ஒரு தாழ்ந்த ஜாதிக்காரணை தீண்டாமை வெறியுடன் பள்ளன், பறையன் என்று விழித்து வேதனைப்படுத்துவது எவ்வளவு அனாகறீகமானதோ..அதேபோன்று பார்ப்பன் என்று விழிப்பதும் அனாகரீகமானது//…….. என்று சொல்லும் நீங்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்?
          1. எதற்கு சோ ‘எங்கே பிராமணன்’ என்ற தொடரை ஒளிபரப்புகிறார்? உங்கள் கூற்றுப்படி அந்த தொடரை எடுப்பதும்,அதை பார்ப்பது அநாகரிகம் இல்லையா?
          2. எதற்கு ஜெயலலித்தா தன்னை ஒரு ‘பாப்பாத்தி’ என்று அறிவித்துகொண்டார்? இந்த அநாகரிகத்துக்கு உங்கள் பதில் என்ன?
          3. ‘தான் பிராமணனாக பிறந்ததற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ என்று புளங்காகிதம் அடையும் எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்கு உங்கள் பதில் என்ன?
          4. பார்ப்பான் என்று விளிப்பது தவறு என்றால் ‘பிராமணன்’ என்று அழைப்பது சரியா? அப்படியானால் ‘பிராமணன்’ என்பதன் அர்த்தத்தை நீங்களே எல்லோருக்கும் சொல்லலாமெ?

          (குறிப்பு: இந்த மூவர் மட்டும் தான் பிராமணர்களா என்ற சப்பை கட்டு கட்டி எஸ்கேப் ஆக வேண்டாம்)

          • //1. எதற்கு சோ ‘எங்கே பிராமணன்’ என்ற தொடரை ஒளிபரப்புகிறார்? உங்கள் கூற்றுப்படி அந்த தொடரை எடுப்பதும்,அதை பார்ப்பது அநாகரிகம் இல்லையா?//

            அது ஜாதி வெறி பரப்பும் நாடகமா?

            //2. எதற்கு ஜெயலலித்தா தன்னை ஒரு ‘பாப்பாத்தி’ என்று அறிவித்துகொண்டார்? இந்த அநாகரிகத்துக்கு உங்கள் பதில் என்ன?//
            அவர் ஆமாம்…நான் பப்பாத்தி தான் என்று அறிவித்தார்…ஆனால் என்ன கேள்விக்குன்டான பதில் அது? எதனால் அப்படி அறிவித்தார்?

            //3. ‘தான் பிராமணனாக பிறந்ததற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ என்று புளங்காகிதம் அடையும் எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்கு உங்கள் பதில் என்ன?//

            அவர் இதனால் அரசியல் ஆதாயம் கிடைக்குமா என்று பார்க்கிறார்….சினிமாவில்நடித்து பனம் பார்த்த பொழுது காட்டாத பூனூலை இப்பொழுது வெளியில் தெரியும்படி அனிந்து சீன் போடுகிறார்…அவர் லட்சியம் மைலாப்பூர் மட்டும் தான்…

            //4. பார்ப்பான் என்று விளிப்பது தவறு என்றால் ‘பிராமணன்’ என்று அழைப்பது சரியா? அப்படியானால் ‘பிராமணன்’ என்பதன் அர்த்தத்தை நீங்களே எல்லோருக்கும் சொல்லலாமெ?//
            ஜாதி பெயர் உபயோகிப்பது நல்லதல்ல….அதுவும் ‘ஜாதி மறுப்பாளர்’ என்று என்னுபவர்கள் உபயோகிக்காமல் இருக்கவேண்டும்…இல்லை என்றால் அது முரன்பாடு…பொய் வேஷம்…

            • நீங்களும் கான்டெக்ஸ்டை விட்டு பேசுறீங்க. ‘பிராமணன்’ என்று தம்மை அழைத்து கொள்ளும் போதும், அதற்காக வெற்று பெருமைஅடைவதாக காட்டிகொள்ளும் போதும் வெகுண்டு எழுந்து வந்து “இது அநாகரீகம்” என்று ஏன் குமுறவில்லை? இப்போது குமுறலாமே? யார் தடுத்தா? என்னுடைய கேள்வி எல்லாம் ‘தன்னை பிராமணனாக வெளியில் காட்டிகொள்வதில் உள்ள அற்ப சுகம்’ என்பதன் பின்னால் உளவியல் பற்றியது. இதற்கு பதில் தெரிந்தால் ஏன் ஒரு தேவர்,நாடார்,தலித் போன்றோர் தனது பேரின் பின்னால் சாதியை சேர்த்துகொள்கிறார்கள் என்று விளங்கும்.

              • பிராமண மேட்டிமை எண்ணம் மற்ற சாதிகளின் மேட்டிமைக்கு முன்னுதாரணம் என்று சொல்ல வருகிறீர்கள், இல்லையா?

                தேவன்டா, கவுண்டன்டா, நாயக்கன்டா என்று மீசை முறுக்கும் சாதி மேட்டிமையெல்லாம் பார்ப்பான் சிலம்பு சுற்ற வந்தால் அவனிடமும் காட்டப்படும். இது போன்ற மேட்டிமை எண்ணங்கள் இந்தியாவிற்கு வெகு தொலைவில் உள்ள, பார்ப்பானுக்குத் தெரியாத தேசங்களில் உள்ள இனக்குழுக்களிடையேயும் உண்டு.

                • //பிராமண மேட்டிமை எண்ணம் மற்ற சாதிகளின் மேட்டிமைக்கு முன்னுதாரணம் என்று சொல்ல வருகிறீர்கள், இல்லையா?//

                  முன்னுதாரணம் அல்ல. அடிப்படையை அமைத்ததே அவர்தான் என்று சொல்லவருகிறேன்.

          • ponnarasu,

            let them think whatever they want.why this pagutharivu veri?

            But thank you nonetheless,what muslims did to hindus,brahmin bashers do to brahmins,bring unity amongst brahmins.Thank you very much.

          • தாங்கள் மேற்கூறிய அனைத்தும் தன்னுடைய சாதி மட்டும் தான் உயர்ந்தது என்பதன் வெளிப்பாடு தான்…சோ அவருடைய சந்தோசத்துக்காக எங்கே பிராமணன் எடுத்தார்….(அவர் ஜாதிப்பெருமை பேசுவதில் அவருக்கு ஒரு சந்தோஸம்..ஏன் இது தேவரிடத்திலோ,நாடாரிடத்திலோ அல்ல்து செட்டியாரித்திலோ இல்லை எங்கிறீர்களா? …..அதற்கென்று இவர்கள் அனைவரையும் ஒரு பட்டப்பெயர் வைத்து அழைத்தால் அது முறையாகிவிடுமா???

            பொன்ராஜ் சார், பிராமணர்கள் அனைவரையும் தாழ்வானவ்ர்கள், தாம் மட்டுமே உயர்ந்தவர் என்ற நினைப்புடையவரே…ஏன்னா அந்தக்காலத்தில் அவா மட்டும் தான் படித்திருந்தர்…ஆனால் இப்ப நிலைமை என்ன…எல்லாரும் படித்து பெரிய வேலையில் உள்ளனர்…

            3. ‘தான் பிராமணனாக பிறந்ததற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ என்று புளங்காகிதம் அடையும் எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்கு உங்கள் பதில் என்ன?

            சார் அவன்லாம் காமிடி பீஸு சார்…ஒரு ஜாதியில பிறந்ததுக்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று சொன்னால் அவன் எந்த அளவிற்க்கு அறிவாளியாக இறுப்பான் என்று தெரிகிறதல்லவா…

            • பையா சார், நீங்கள் இதை கவனிக்கவில்லை போலும்.
              //(குறிப்பு: இந்த மூவர் மட்டும் தான் பிராமணர்களா என்ற சப்பை கட்டு கட்டி எஸ்கேப் ஆக வேண்டாம்)//

              சரி போகட்டும். சோவையும்,சேகரையும் விடுங்கள். தான் ஒரு பாப்பாத்தி என்ற சாதி மமதையுடன் ஆட்சி செய்யும் ந்பர் எப்படி நடுநிலையான ஆட்சியை வழங்குவார்?

              மேலும், “இட்லர் உலகாள்வான்” என்று அவசரம் அவசரமாக இரண்டம் உலகப் போரின்போது ஜெர்மன் மொழி படிக்க தொடங்கியது முதல், இட ஒதுக்கீடு உள்ள இன்றை வரை நீங்கள் சொல்லும் அதே பார்ப்பனர்கள் ‘அதிகாரம் செலுத்தும் இடங்களை’ எப்படி எல்லாம் தகிடுதித்தம் செய்து தக்கவைக்கின்றனர் என்பதை இதில் படித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். (http://dharumi.blogspot.com/2010/05/blog-post.html). இந்த இடத்தில் நீங்கள் சொன்ன //ஏன்னா அந்தக்காலத்தில் அவா மட்டும் தான் படித்திருந்தர்…ஆனால் இப்ப நிலைமை என்ன…எல்லாரும் படித்து பெரிய வேலையில் உள்ளனர்…// என்ற வார்த்தைகள் பணால் ஆகின்றன. இப்போ மீண்டும் உங்களிடம் அதே கேள்வியை கேட்கிறேன். தகிடுதித்தம் செய்தாவது தன்னை மற்றவரிடம் இருந்து உயர்ந்தவன் என்று காட்டிகொள்ளவும், ஆளும் வர்கத்தின் குடுமி தன்னிடம் இருக்கவும் ‘பார்ப்பனர்களை’ தவறு செய்ய தூண்டியது எது?

              • பையா சார், நீங்கள் இதை கவனிக்கவில்லை போலும்.
                //(குறிப்பு: இந்த மூவர் மட்டும் தான் பிராமணர்களா என்ற சப்பை கட்டு கட்டி எஸ்கேப் ஆக வேண்டாம்)//

                ஆமா பொன்ராஜ், இந்த மூவர் மட்டுமே பிராமணர் அல்லர், தமிழ்த்தாத்தா என்றழைக்கப்பட்ட் உ வே சாம்னாதய்யரும், தேசியக் கவி எனறழைக்கப்பட்ட பாரதியாரும் பார்ப்பணன் தான்..

                //சரி போகட்டும். சோவையும்,சேகரையும் விடுங்கள். தான் ஒரு பாப்பாத்தி என்ற சாதி மமதையுடன் ஆட்சி செய்யும் ந்பர் எப்படி நடுநிலையான ஆட்சியை வழங்குவார்?//
                அந்தம்மா செய்யும் தவறுக்கு அந்த ஜாதியெய் இழிவுபடுத்திப்பேசுவதன் மூலம் என்ன பலன் கிட்டும்

                • //அந்தம்மா செய்யும் தவறுக்கு அந்த ஜாதியெய் இழிவுபடுத்திப்பேசுவதன் மூலம் என்ன பலன் கிட்டும்//

                  அந்தம்மா செய்வது தவறு என்று தெரிந்திருந்தும் அவருக்கு ஒளிவட்டம் கொடுக்க அவரை ஜாக்கி வச்சு தூக்கி விடும் வேலையை ஏன் பா.பத்திரிக்கைகள் செய்கின்றன.?

                  • Andhamma iyengar,adhuvum karnataka iyengar.infact in our community the tussle between iyer and iyengar is so high that nobody hates anyone else seriously.

                    I dont know about paarpana patrikai,there are all kinds of newspapers run by brahmins,Hindu,Indian express,many tamil dailies-there are all kinds of opinion about all of them.I know many of my family who support DMK,hate jayalalitha,hated rajaji in the past and supported kamaraj,many young guys who liked Stalin for all the flyovers he built and hating jayalalitha at the same time due to her sons wedding/open corruption etc etc.

                    Only consistent thing is people hate DK/Periyar/Mu.Ka because their propoganda is negative,uncouth,hateful and biased.

                    They basically would choose anyone over DMK,they just dont like DMK.Any other party is okay for them.I even know people who canvassed for DMK over Congress in 1968 for MGR and hate for Rajaji.

                    So,there is nothing called paarpana pathrikai,there is one or two newspapers who support Jayalalitha,cho and subramanian swamy are clear pro-hindutva people and many people like them but i also know many who dont as they feel if you get combative towards these guys and things get worse,people have to suffer on the street.

                • //ஆமா பொன்ராஜ், இந்த மூவர் மட்டுமே பிராமணர் அல்லர், தமிழ்த்தாத்தா என்றழைக்கப்பட்ட் உ வே சாம்னாதய்யரும், தேசியக் கவி எனறழைக்கப்பட்ட பாரதியாரும் பார்ப்பணன் தான்..//

                  இந்த லிஸ்டில் நீங்கள் மறைமலை அடிகள் போன்றோரை விட்டுவிட்டீர்கள். ஆனால் பார்ப்பனர் அல்லாதவர்களை விட, இவர்கள் தான் சக பார்ப்பானர்களின் அட்டூழியங்களை துகிலுரித்து வெளிப்படுத்தியவர்கள்.

                  • மன்னிக்கவும்: அது மறைமலை அடிகள் அல்ல. பரிதிமாற் கலைங்கர்.

              • // மேலும், “இட்லர் உலகாள்வான்” என்று அவசரம் அவசரமாக இரண்டம் உலகப் போரின்போது ஜெர்மன் மொழி படிக்க தொடங்கியது முதல், இட ஒதுக்கீடு உள்ள இன்றை வரை நீங்கள் சொல்லும் அதே பார்ப்பனர்கள் ‘அதிகாரம் செலுத்தும் இடங்களை’ எப்படி எல்லாம் தகிடுதித்தம் செய்து தக்கவைக்கின்றனர் என்பதை இதில் படித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். //

                இட்லரின் முழுப் பரிமாணமும் வெளித்தெரியவராத காலகட்டத்தில் உலகமுழுதும் உள்ள பிரித்தானியப் பேரரசின் அடிமை நாடுகளில், இட்லர் ஜெர்மனிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய் எழுந்தவனாகத்தான் தெரிந்தான், அவன் தலைமையில் ஜெர்மானியரின் எழுச்சியும், வெற்றிகளும் புது நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. மேலும் பல மொழிகளைப் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள், எதற்கும் படித்து வை இந்த ஜெர்மனியையும் என்று படிப்பதும் நடந்தது. எல்லா மேல்சாதியினரையும் போல அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்பு பார்ப்பனர்களுக்கும் இருந்தது.

                இந்த விளையாட்டில் பார்ப்பனர்கள் மட்டும் வில்லன்களாகவேத் தோன்றக் காரணம் பார்ப்பனத் துவேசம்.!

                • ambi hitler advocated aryan supremacy hence brahmins in a a great enthusiasm found themselves closer to him.openly terming aryaa nammavaa,maamis thronged moor market for german teaching books.many centres for linguistic programmes in german were opened in colleges and institutions dominated by brahmins.i witnessed one in annamalai university.

                  • Sir, your account of activities by some brahmins during that period had a mixed back ground. The ‘heroism’ attached with Hitler (in the rising of Germany against the oppressing & hostile eurpoean powers) in the early years of 2nd world war and prior to that had admirers worldwide. There was a trend to find brotherhood, with rising germans, among a section of elite including some brahmins. At the same time the aryan racial theory was opposed by many scholars and educated including many brahmins, as a colonial creation.

                    In Tamil land, the opposition to aryan race theory by brahmins was more acute due to the onslaught of dravidian racism that was in full swing. The society was a divided one on this issue. One group opposed the arayan race theory, another one, was pushed by the dravidian movement, to find a solace in ‘heoric’ exploits of the ‘aryan’ germans, ‘welcomed’ the victory of their ‘saviour’ Hitler. By the end of the war, Hitler’s true face was exposed and that shocked & enlightened everyone.

                    • how can one go close with a invader,this is ridiculous.i think even if kenyans invade india there will be a lot of elite indians with fluency in kenyan language to greet them and betray their brethren.previously the same elite people were the chief courtesans in moghul durbar later they switched their loyalty to british invaders in the same way….and before that…..

                    • abbi, british did not invade india with their military might.. they came as traders and captured the country with the help of one king against another. Why indians needed to be loyal to british when germans tried to attack them..?

                • //இந்த விளையாட்டில் பார்ப்பனர்கள் மட்டும் வில்லன்களாகவேத் தோன்றக் காரணம் பார்ப்பனத் துவேசம்.!//

                  அதெப்படி, பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணக்கமாக பல உயர்பதவிகளை அனுபவித்துகொண்டே, இட்லருக்கு பார்ப்பனர்களால் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடிந்தது? இது போல செய்த மற்ற ஆதிக்க சாதிகளை பட்டியலிடுமாறும் அம்பியை வேண்டுகிறேன். மேலும் எமக்கு கிடைத்த ஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

                  1. கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு முன்பு சென்னை மாகாணத்த்தில் பார்ப்பனர்கள் பெருவாரியானோர் கலந்துகொண்டு தம்மை அனைவரையும் ‘ஆரியர்கள்’ என்று அறிவித்துகொண்டனர். (தேவைப் பட்டால் ஆதாரம் தருகிறேன்).
                  2. ஜெர்மனியில் போர் துவக்கி நடத்தி வெகுவேகமாக முன்னேறிய ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ஃப் இட்லர், தான் ஜெர்மானியன் என்பதைவிட ஆரிய இனத்தின் பெருமைமிக்க பிரதிநிதி என்று பிரகடனப்படுத்தியதோடு, ஆரிய இனத்தின் மேன்மைக்குப் பாடுபட்ட அவர்களை உலகின் முதல் நம்பர் குடிமக்களாக்குவதே தமது நாடு பிடிக்கும் நோக்கம் என்று ஆணவத்துடன் பிரகடனப்படுத்தினார். ஜெர்மனியில் சமஸ்கிருதத்தினை கட்டாயப் பாடமாக்கி அரசு ஆணைகள் பிறப்பித்தார் இட்லர். நாசிசத்தின் உயிர்நிலையே அதில்தான் உள்ளதாகப் பிரகடனம் செய்தார் இட்லர்! ஆரிய இனம் கலப்பின்றி பாதுகாக்கப்பட்டாக வேண்டும். ஆகவே, வேறு இனக் கலப்புள்ள திருமணங்கள் நடைபெறவே கூடாது என்ற அவைகளுக்குத் தடை விதித்தார். (அவரது சுவஸ்திக் சின்னம்தான் இன்றைய இனவெறி ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் சின்னம் ஆரிய வர்த்தம், சமஸ்கிருத கலாச்சாரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி இவைகளுடைய லட்சியமும்கூட)

                  இத்தகைய கருத்துகளின் மூலம் எதிரியாக இருந்தாலும் சரி, நண்பனாக இருந்தாலும் சரி ‘ஆட்சிப் பீடத்தில் தாம் மட்டுமே’ என்ற எண்ணம் பார்ப்பனர்களிடம் புறையோடிப் போய் இருப்பதை அறியலாம்.

                  • // அதெப்படி, பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணக்கமாக பல உயர்பதவிகளை அனுபவித்துகொண்டே, இட்லருக்கு பார்ப்பனர்களால் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடிந்தது? //

                    அப்படி இருக்க வாய்ப்பில்லை. தன் அரசில் பணிபுரிந்து கொண்டே தன் எதிரிக்கு ஆதரவு தெரிவித்தால் ‘ராஜத்துரோக’ குற்றச் சாட்டில் சிறைக்குள் தள்ளியிருக்கும் பிரிட்டிஷ் அரசு. பிரிட்டிஷ் அரசை எதிர்த்தவர்கள் ஜெர்மானியர்களை ஆதரிப்பது இயல்பான ஒன்று, நாசிசத்தைப் பற்றி தெரியும்வரை.

                    // 1. கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு முன்பு சென்னை மாகாணத்த்தில் பார்ப்பனர்கள் பெருவாரியானோர் கலந்துகொண்டு தம்மை அனைவரையும் ‘ஆரியர்கள்’ என்று அறிவித்துகொண்டனர். (தேவைப் பட்டால் ஆதாரம் தருகிறேன்). //

                    தாருங்கள். முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

                    மேலும், ஸ்வதிக் சின்னத்தை நாஜிகளின் சின்னமாக்கி கேவலப்படுத்தி விட்டான் என்பதால் அச் சின்னத்தை ஹிந்துக்களும்/பவுத்தர்களும் பயன்படுத்துவதை நிறுத்தக் கூடாது என்பதில்லை. நமது அறு கோண வடிவ சக்கரம், யூதர்களின் ‘Star of David’ போல் இருப்பதால் நம்மை சியோனிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்ளமுடியாது.

                  • // ஜெர்மனியில் சமஸ்கிருதத்தினை கட்டாயப் பாடமாக்கி அரசு ஆணைகள் பிறப்பித்தார் இட்லர். நாசிசத்தின் உயிர்நிலையே அதில்தான் உள்ளதாகப் பிரகடனம் செய்தார் இட்லர்! ஆரிய இனம் கலப்பின்றி பாதுகாக்கப்பட்டாக வேண்டும். ஆகவே, வேறு இனக் கலப்புள்ள திருமணங்கள் நடைபெறவே கூடாது என்ற அவைகளுக்குத் தடை விதித்தார். //

                    ஹிட்லர் ஒரு நட்டுக் கேசு. யூதர்களே இயேசுக் கிறிஸ்துவின் சாவுக்குக் காரணம் என்று யூதர்களுக்கு எதிராக நடத்தவிருக்கும் இனப் படுகொலைக்கு நியாயம் கற்பித்து கத்தோலிக்க உலகையும் ஏமாற்றியவர் ஹிட்லர்.

                • //இட்லரின் முழுப் பரிமாணமும் வெளித்தெரியவராத காலகட்டத்தில் உலகமுழுதும் உள்ள பிரித்தானியப் பேரரசின் அடிமை நாடுகளில், இட்லர் ஜெர்மனிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய் எழுந்தவனாகத்தான் தெரிந்தான்,//

                  பாஸ்.. செம காமெடி பண்றீங்க நீங்க…!!! அறிவியல் தொழில்நுட்பம் தழைத்தோங்கும் இந்த காலத்தில் உலகமே ராஜபக்சேவை போர்குற்றவாளி என்று காறித் துப்பிகொண்டிருக்கும் போது, அவரை இன்னமும் உச்சி மோந்து பாராட்டும் பார்ப்பனர்கள் (மற்றும் ஊடகங்கள்), இட்லரின் முழுப்பரிமாணமும் வெளியில் தெரிந்திருந்தாலும் கூட அவனுக்கே ஆதரவு அளித்திருப்பீர்கள் என்பதே உண்மை. அப்புறம் ஏன் இந்த பூசி மெழுகும் வார்த்தை ஜாலம் எல்லாம்?

                  • பார்ப்பன ஊடகங்களை வைத்து பார்ப்பன சமூகத்தை எடைபோடுவது போல் ஜெர்மனி படித்த, ஹிட்லரை ஆதரித்த பார்ப்பனர்களை வைத்து பார்ப்பனர்களை பழிப்பதும், நாட்டுக்காக போராடிய பார்ப்பனர்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாததும் பார்ப்பனத் துவேசமே. இனப்படுகொலையின் பின் நின்ற நாராயணன், மேனன், நம்பியார் போன்ற திராவிட அதிகாரிகளின் சோனியா விசுவாசம் கண்ணுக்குத் தெரியாத காரணம் பார்ப்பனத்துவேசத்தோடு, திராவிடப் பம்மாத்தும் சேர்ந்து கொண்டதால்…

    • 25, 30 வருடங்களுக்கு முன்பு ஆட்டிக் கொண்டு வந்த நிர்வாண சாமியார்களுக்கு தன் குடும்ப சகிதமாய் பூசை செய்த மானம், ரோஷம் உள்ள நம் தமிழ் மக்கள், சினிமாவில் அரைகுறை ஆடையுடன் ஆடிப்பாடி புரட்சி செய்த ஜெயாவையா ஏமாற்றிவிடுவார்கள்? இந்த விஷயத்தில் (கவர்ச்சி விஷயத்தில்) பார்ப்பானாவது, கீர்ப்பானாவது.

    • ரமேஷ், கண்ணதாசன் சொன்னது போல் நாம் எல்லாம் சிந்தித்துப் பிறந்தவர்கள் இல்லை, சிந்திப் பிறந்தவர்கள். ஆகவே நாம் எங்கே சிந்திக்கப்போகிறோம்? சிந்திக்கும் திறன் அதிகம் உள்ள நீங்கள் சொல்லுங்களேன் – பெரியார் பிறந்த மண்ணில் ஒரு பாப்பாத்தி (பார்ப்பான் அல்ல்) எப்படி முதல்வராய் வர முடிந்தது? காற்றடித்தால் எச்சில் இலை கோபுரக்கலசத்தில் போய் ஒட்டிக் கொள்ளும் என்பதற்கு நாங்கள் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. அதற்கு அதிகம் அறிவும் வேண்டியதில்லை.
      பார்ப்பனர்களின் முன்னேற்றத்தை நாங்கள் எங்கே தடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் உயர்வுக்குத்தான் நாங்கள் முட்டி மோதிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உழைக்கத் தெரியும். ஏமாறத் தெரியும். எதையும் சாதிக்க போராடத் தெரியும். மற்றவர்களைப் போல் எங்களுக்கு நாட்டை கூட்டிக் கொடுக்கத் தெரியாது.

      • when did brahmins come in the way of your development? Nothing in TN today ahs any brahmin influence in it,power,money whatever?Even J is a CM but what does she do for brahmins.What does a brahmin have in TN? What can he do?

        No govt job,no reservation in education,no land ownership,no family support,nothing.You do all these things and then u say how are we stopping the advancement of brahmins?

        Brahmins are advancing despite all these blockades and your claiming that you are not advancing inspite of others having blockades? Then whose fault is it?

  2. ஜெயா பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் மட்டுமே தமிழக மக்கள் அவருக்கு ஓட்டு போட்டு இப்படி ஆகி இருந்தால் நீங்கள் கூறுவதை ஏற்கலாம். அப்படி இல்லாத போது ஏன் அவரின் ஜாதி இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது?

    ஐ.ஐ.டி யில் ஆசிரியர் மாணவரின் திறமையைக் குறிப்பிடும்போது அவரின் தலித் ஜாதியை குறிப்பிட்டதைக் கண்டித்த வினவு இங்கே பிராமணர்களைக் குறி வைப்பதேன்? இதே ஜெயா ஒரு தலித் இனத்தவராக இருந்தால் “கலைகிறது தலித் பம்மாத்து” என போடுவீர்களா?

    • மாட்டுக்கறி சாப்பிடுவா மாமின்னு எம்ஜிஆர் சொன்னதா எழுதிய நக்கிரனும், அவர் பத்திரிகை அலுவலகமும் பட்ட பாடு மறந்து விட்டதா? எடுத்துக்காட்டுக்கு அம்மாவெ தலித்துன்னு செல்லிட்டல்ல அ.தி.மு.க. தொண்டர்கள் கட்டம் கட்டிடுவாங்க. உசாரு, உசாரு,உசாரு…..

      • Asingama pesuna ippadi thaan seivaanga.veerapana pottapave indha brokerayum sethu pottrukkanum.Ivaru camerava thookittu povaram,pechu vaarthai naduthuvaram,enna oru kattu kadhai?

        nakeeranukku ellam vadaada oru kuroopu vera?

  3. யெப்பா பையாவிசய்ரமேசு அறிவாளிகளா,

    ஜெயா நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர், நல்லாட்சி புரிஞ்சவர் என அள்ளிவிடுவது தினமலர், தினமணி, இந்தியா டுடே, துக்ளக் போன்ற பார்ப்பன ஊடகங்கள்தானே, அவர்கள் காட்டிய பம்மாத்து இப்படி நாற் நாறாய் கிழிந்து தொங்குகிறதே, அதைத்தானே கட்டுரை குறிப்பிடுகிறது. இது குறித்து மேலும் பதிவுகள் வினவிலேயே வந்துள்ளதே, அது தொடர்புடைய பதிவுகள் பட்டியலிலும் உள்ளதே

    இந்த சின்ன விசயத்தை விளங்கிக் கொள்ளும் அளவுக்கு கூட அரசியல் புரிதல் இல்லாத உங்களைப் போன்ற மொண்ணையான கூழங்கற்கள் படிக்க வேண்டியது வினவு அல்ல, நமது எம்ஜிஆர்.

    வாழ்த்துக்கள்

    • //இந்த சின்ன விசயத்தை விளங்கிக் கொள்ளும் அளவுக்கு கூட அரசியல் புரிதல் இல்லாத உங்களைப் போன்ற மொண்ணையான கூழங்கற்கள் படிக்க வேண்டியது வினவு அல்ல, நமது எம்ஜிஆர்.//

      அது வேற ஒண்ணும் இல்ல சார். இவங்க இந்த மாதிரி கேள்வி கேட்பதற்கு முன்பு கொஞ்சம் வினவு தளம் உட்பட ‘பார்ப்பன அரசியலை’ புரிஞசுகிட்டு வந்து கருத்து சொன்னா தேவலை. அதை விட்டுவிட்டு ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு மற்றவர்களை “அரைச்ச மாவையே அரைக்க சொல்லி” கடுப்பேத்துகிறார்கள் மை லார்ட்…!!!