privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!

-

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!சிக்ஸ் பேக்ஸ் மற்போர் வீரனின் கட்டுடலுக்கு ஊத்தை உடம்பு இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் தலையைப் பொருத்தி ஓவியம் வரைந்து வைத்துக் கொள்வதாக ஒரு காட்சி அத்திரைப்படத்தில் வருகிறது.

அதைப் போல உல்லாச, ஊதாரி, சொகுசு வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கும் இம்சை அரசி 24ஆம் புலிகேசியான செல்வி ஜெயலலிதாவை சிறந்த அறிவாளி, துணிச்சல்காரி, நிர்வாகத் திறமைசாலி என்ற பொய்யான சித்திரம் வரையப்படுகிறது.

ஆனால், இவரது ஆட்சியில் மின் பற்றாக்குறையில் தமிழகமே இருளில் மூழ்கிக் கிடக்கின்றது. தொழிலகங்களின் இயந்திரங்கள் துருப்பிடிக்கின்றன; அலுவலகங்களில் ஒட்டடைகள் படிகின்றன; கோப்புகள் தூசு மண்டிப் போயுள்ளன; சாலைகள் குண்டும் குழியுமாக சிதிலமடைந்து போயுள்ளன; சாலைகளில் சாக்கடைகள் ஆறாக ஓடுகின்றன; குப்பைக் கூளங்கள் மலைகளாகக் குவிகின்றன.

போலீசு அதிகாரிகள் சசிகலா கும்பல் பதுக்கிய சொத்துக்களை மீட்பதிலும், எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பொய் வழக்குகள் புனைவதிலும், அம்மா பரிவாரங்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அணிவகுத்து நிற்பதிலும் குவிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் கொலை, கொள்ளை, வழிப்பறிப்புகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொழில்முறை குற்றக்கும்பல்களுக்குத் திறந்து விடப்பட்டிருக்கின்றன. இந்த வகைக் குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குப் பதில் போலீசு நிலையக் கொட்டடிக் கொலைகளும், போலி மோதல்களும் (என்கவுண்டர்) அரங்கேற்றப்பட்டு பீதி உருவாக்கப்படுகின்றது. ஒருவேளை இதுதான் நிர்வாக திறமைசாலி என்பதைக் குறிக்கிறதோ!

ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை குறித்து மூத்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் அரியானா மாநில முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.ஜி.தேவசாகாயம் (இவர் தி.மு.க.காரர் அல்ல) கூறுகிறார், “தமிழகத்தின் கடந்த 6 மாத ஆட்சி நிர்வாகச் சீரழிவு தவிர வேறொன்றுமில்லை. ஒரு தனிநபர் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதுகெலும்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலைமை இல்லை. இது இப்படியே போனால் தமிழகம் அதல பாதாளத்திற்குப் போகும்”. இந்தக் கணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயா ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

நிர்வாகப் பொறுப்பில் எந்தவொரு அமைச்சரும் அதிகாரியும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் கூட நீடிக்க முடியாது; கோப்புகளையும், பொறுப்புகளையும், தம்முடன் பணிபுரியும் அதிகாரிகளும் ஊழியர்களும்ம் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் பந்தாடுவதுதான் ஜெயலலிதாவின் இன்னொரு நிர்வாகத்திறமை! முதலமைச்சர் பதவிக்குத் தகுதியானவர் தானா என்று மதிப்பீடு செய்யாமலேயே ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுத்ததைப் போலவே  தகுதி, திறமைகளை மதிப்பீடு செய்து அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஜெயலலிதா நியமிக்கவில்லை.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!வேறு எந்த அடிப்படையில் பொறுப்புகளைத் தருகிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். கடந்த அமைச்சரவை மாற்றத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு செங்கோட்டையனை போயசு தோட்டத்துக்கு அழைத்த ஜெயலலிதா, “அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப் போறேன். இதுநாள் வரைக்கும் நான் உங்களுக்கு எதுவும் செய்ய முடியலை. என் சூழ்நிலை உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். கேளுங்க… உங்களுக்கு எந்த இலாக்கா வேணும்” என்று கேட்டார். “நீங்க நல்லா இருந்தா போதும்மா… நீங்க எது கொடுத்தாலும் சரிங்கம்மா” என்றார், செங்கோட்டையன். “இப்போதைக்கு வருவாய்த்துறை உங்ககிட்ட இருக்கட்டும். இன்னும் சில நாட்களில் வேறு சில துறைகளும் உங்களுக்கு வரும் சரியா” என்று கேட்ட ஜெயாவிடம் குனிந்தபடியே தலையாட்டினார் செங்கோட்டையன்.

அமைச்சர் சிவபதியை முன்பு நீக்கியதற்கும் மீண்டும் சேர்த்ததற்கும் ஜெயலலிதா காரணம் சொல்கிறார்: “ஒரு விழாவுல ராவணன் வந்தபோது, அதைக் கவனிக்காம அவர் செல்போன்ல பேசிட்டு இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக, எங்கிட்ட தவறான தகவல்களைச் சொல்லி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்காங்க. எனக்கு இப்போதுதான் அது தெரிய வந்தது. தப்பு செய்யாத யாரும் தண்டனை அனுபவிக்கக் கூடாது இல்லையா?” என்று சொன்ன ஜெயலலிதா, சிவபதியை மீண்டும் அமைச்சராக்கினார்.

எந்த தகுதி அடிப்படையில் அமைச்சர்கள் சேர்க்கப்படுகிறார்கள், நீக்கப்படுகிறார்கள் பாருங்கள்! ஜெயாவின் விசுவாசிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக வருவாய் துறை உட்பட முக்கியத்துறைகளின் அமைச்சராக்கப்படுகிறார்; முன்னாள் பங்காளி (ராவணன்)யை “மதிக்கவில்லை” என்பதற்காக ஒரு அமைச்சர் பதவி நீக்கப்படுகிறார். (யார் நீக்கியது? ஜெயாவுக்கு என்று சொந்த மூளை இல்லையா? யாராவது கோள் மூட்டினால் நம்பிவிடுவாரா? தவறுக்குரிய பொறுப்பு இல்லையா?) பின்னர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். ஆக, தகுதி, மதிப்பீடு அடிப்படையில் பொறுப்புகள் ஒதுக்கப்படுவதும் நீக்கப்படுவதும் இல்லை. விசுவாசம், அடிமைத்தனம், திமிர்த்தனமே அடிப்படை.

கொலை, கொள்ளை, வழிப்பறியில் நாட்டிலேயே முதன்மை இடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், இவைகளைச் செய்யும் குற்றவாளிகள் தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு ஓடிப்போய் விட்டார்கள் என்று ஜெயா புளுகினார். கொடூரமான துப்பாக்கிச் சூடு நடத்தி தலித் மக்களைச் கொன்ற சம்பவத்தை சாதித் தகராறு என்று சித்தரித்தார். இப்படியெல்லாம் பச்சையாகப் புளுகும் ஜெயா உண்மையில் துணிச்சல்காரர்தான்!

அப்புறம் மரியம் பிச்சை, பரஞ்ஜோதி விவகாரம்; மூன்று பெண்டாட்டிக்காரர் மரியம் பிச்சை ஜெயாவுக்குத் தன் விசுவாசத்தைக் காட்ட, மின்னல் வேகத்தில் காரை ஓட்டச் செய்து, விபத்து ஏற்படுத்தி, மாண்டு போனார். அவருக்கு மாற்றாக பெண் மருத்துவரிடம் மோசடித் திருமணம், சொத்துப் பறிப்பு செய்த கிரிமினல் பேர்வழி பரஞ்ஜோதியை இடைத்தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து, அறநிலையத்துறை அமைச்சரும் ஆக்கி, இரண்டே மாதத்தில் அதே வழக்கில் சிக்கியதால் பதவி நீக்கமும் செய்யப்படுகிறார். விவகாரத்துக்குரியவர் என்று தெரிந்தே நியமனம், நீக்கம் என்று செயல்படும் ஜெயலலிதா தனக்குத் தெரியாமல் நடந்து விட்டதென்று எத்தனை தடவைதான் மழுப்புவார்? ஏதாவது போதையில் மூழ்கிக் கிடப்பவருக்கு எதுவும் தெரியாமல், எதுவும் செய்யலாம் என்றவாறுதானே அரசு நடக்கிறது.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!அடுத்து, ஜெயலலிதா துணிச்சல்மிக்கவர் என்ற கருத்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து, நிலைநாட்டப்பட்டிருக்கிறது. தான் எதைச் செய்தாலும் அதிரடியாகவும் அடாவடியாகவும், திமிர்த்தனமாக செய்வது; எதைச் சொன்னாலும் அண்டபுளுகு ஆகாசப்புளுகாக சொல்வது; மக்கள் எதிர்க்க மாட்டார்கள், ஏமாந்து போவார்கள் எதிர்க்கட்சிகளுக்கும் கேள்வி கேட்கும் திராணியில்லை என்ற எண்ணத்தில் விளைவதுதான் ஜெயலலிதாவின் துணிச்சல்.

கோவில் பிரசாதத்தில் நஞ்சு வைத்தும், லாரியை மோதவிட்டும் தன்னைக் கொல்ல முயன்றதாகப் புளுகியது; சட்டப்பேரவையில் தன்னை மானபங்கப்படுத்தினார்கள், ஆளுநர் சென்னாரெட்டியே தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று புளுகியது; பணத்துக்காகத்தான் காவல்நிலையக் கற்பழிப்புப் புகார்கள் செய்வதாக பழிபோட்டது; தன் ஆட்சியில் சட்டம்ஒழுங்கு கெட்டு விட்டதாகக் காட்டுவதற்கு தி.மு.க.வினரே திருட்டு, கொள்ளை வழிப்பறியில் ஈடுபடுகின்றனர் என்றும் ராஜீவ் காந்தியையும் கொன்றனர் என்றும் குற்றஞ்சாட்டியது; வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாச்சாரம் தீவிரவாதம், பிரிவினைவாதம் பெருகிவிட்டதாகக் கூறி போலீசாருடன் போலி மோதல்கள், கொட்டடிக் கொலைகளை நியாயப்படுத்தியது; லட்சக்கணக்கான அரசு ஊழியரை வீடு புகுந்து தாக்கியதோடு ஒரே கையெழுத்தில் பணிநீக்கம் செய்தது  இப்படி ஜெயலலிதாவின் துணிச்சலுக்கான பழங்கதைகளைக் கூட விட்டு விடுவோம்.

1.76 இலட்சம் கோடி ரூபாய் ஊழலை தி.மு.க. செய்து விட்டதாக (அப்படி ஒரு குற்றச்சாட்டை ஜெயாவும் அவரது பங்காளிகளும் தவிர யாருமே கூறவில்லை) ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்ததும் கடந்த பத்து மாதங்களில் ஜெயலலிதா சொன்னவையும் செய்தவையுமே அவரது துணிச்சல் எத்தகையவை என்பதற்கு சான்றாக உள்ளன. தேர்தல்களில் வெற்றி பெற்றவுடன் , இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவேன்; தமிழர்கள் தெருக்களில் பாதுகாப்பாக நடமாடலாம்; சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் என் ஆட்சியின் முதற்பணி; ஒரு சில மாதங்களில் மின்பற்றாக்குறை அடியோடு முடிவுக்கு வரும், மின்வெட்டே இருக்காது என்று அறிவித்தார் ஜெயலலிதா.

ஒரு அரசியல் கட்சியின் தலைவி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில் திட்டங்களை அறிவிப்பதும், வாக்குறுதிகள் வழங்குவதும் தவறில்லை. ஆனால், இப்படியெல்லாம் சொல்லிவிட்டு தனது அரசு எந்திரத்தை  அதிகாரிகளையும் போலீசையும்  முதன்மையாக எந்தெந்த வேலைகளில் அவர் ஏவி விடுகிறார்? சமச்சீர் கல்வியும், பாடப்புத்தகங்களும் கேட்டுப் போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்துவது; நீண்டநாள் ஆகியும் திறக்காமல் இருக்கும் தனிச்சிறப்பான வசதி கொண்ட மருத்துவமனையைத் திறக்கக் கோரும் மாணவர்இளைஞர் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவது; மின்வெட்டுக்கு எதிராகவும், புயல் நிவாரணமும் கோரிப் போராடும் மக்கள் மீது தடியடி நடத்துவது; பழங்குடிப் பெண்களைக் கடத்திக் கொண்டு போய் பாலியல் வன்முறை செய்வது; குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களைச் சித்திரவதை செய்து கொட்டடிக் கொலைகள் புரிவது; அமைதியாகப் போராடும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் திட்டமிட்டு போலீசைக் குவித்து, சுட்டுக் கொல்வது; வழக்கறிஞர்களைத் தாக்குவது; இரகசியப் படுகொலைகள் செய்வது; தனது பங்காளி சசிகலாவையும் அவரது உறவினர்களையும், எதிர்க்கட்சியினர் மற்றும் தம் கட்சியினரையும் உளவுவேலை செய்து கண்காணித்து வழக்குகள் சோடித்து சிறையிலடைப்பது.

இவை மட்டுமல்ல; ஜெயா ஆட்சியில் போலீசு  உளவுத் துறையின் வேலையைப் பாருங்கள். அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அவரது உதவியாளர் ஆறுமுகத்தின் மனைவிக்கும் தவறான உறவு இருப்பதாக செங்கோட்டையன் மகன் ‘அம்மா’விடம் கோள் மூட்டுகிறார் அல்லது முறையிடுகிறார். உடனடியாக உளவுத் துறையை அனுப்பி அம்மா விசாரிக்கிறார். ஆறுமுகத்தின் மனைவியை மிரட்டுகிறார். ஆறுமுகம் கைது செய்யப்படுகிறார்.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!ஜெயா ஆட்சியில் அமைச்சர்களின் வேலையைப் பாருங்கள். சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா விடுபட வேண்டி காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தமிழக அமைச்சர்கள் பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். கூடவே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்கிறார்கள். அம்மாவுக்காக ”வர்ணாபிஷேகம் நடத்துகிறார்கள். கோவில்சார்பிலே அமைச்சர்களுக்கு ரோஜா மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. கோவிலுக்கு கோபுரம் கட்டி கொடுக்குமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. அதையும் அமைச்சர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சி என்றால் இவைதான் வாடிக்கை என்று பல ஆண்டுகளாகத் தொடரும் அதிரடி, அடாவடி, திமிர்த்தனம் தான் அவரது துணிச்சலா? அதேபோல உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றத் தீர்ப்புகளால் திரும்பத் திரும்ப கன்னத்தில் கரிபூசப்பட்டும், சட்டத்துக்கு புறம்பான முடிவுகள் எடுக்கிறார் ஜெயலலிதா. இவைதான் ஜெயலலிதாவின் அறிவுத்திறமைக்கு சான்றுகளா? இல்லை, தன்மீது தொடுக்கப்பட்ட 42 லஞ்ச ஊழல்அதிகார முறைகேடு வழக்குகளைச் சமாளித்து, கடந்த பதினைந்து ஆண்டுகளாக, நீதித்துறைக்கு தண்ணி காட்டுகிறாரே, இதுதான் அவரது அரசியல் சட்ட ஞானத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

______________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

    • தமிழகமே இருளில் மூழ்கிக் கிடக்கின்றது. தொழிலகங்களின் இயந்திரங்கள் துருப்பிடிக்கின்றன; அலுவலகங்களில் ஒட்டடைகள் படிகின்றன; கோப்புகள் தூசு மண்டிப் போயுள்ளன; சாலைகள் குண்டும் குழியுமாக சிதிலமடைந்து போயுள்ளன; சாலைகளில் சாக்கடைகள் ஆறாக ஓடுகின்றன; குப்பைக் கூளங்கள் மலைகளாகக் குவிகின்றன.

      கவிதை ப்ரமாதம். என்ன ஒரு சிந்தனை. ஆ. ஆ. ஓ.ஓ வலிக்க்குது. அழுதுருவென்…

    • இந்தக் கட்டுரை எதைப்பற்றியது? ஜெயலலிதாவின் நிர்வாக சீர்கேடு பற்றியது. அவர் ஆட்சியல் தமிழகம் நாசாமாக போய்கொண்டிருப்பது பற்றியது.

      விவாதம் அதைப்பற்றியா நடக்கிறது?

      இதுவே கருணாநிதி ஆட்சியாக இருந்தால் இன்னேரம் ஒவ்வொருத்தனும் தமிழ்நாட்டை முன்னேத்த ஆலோசனை எழுதியிருப்பாங்க. இல்லை கருணாநிதியின் குடும்ப அரசியல், பிழைப்புவாதம் பற்றி மைல்கணக்காக எழுதியிருப்பாங்க, இல்லையெனில் திராவிட அரசியலால் எப்படி தமிழகம் சீரழிந்து போனது என்று வகுப்பு எடுத்திருப்பாங்க, கடைசியாக இட ஒதுக்கீடு அநியாயத்துனாலதான் இது போல நடந்துவிட்டதுன்னு முடிச்சிருப்பாங்க

      ஆனால் நடப்பது அவா ஆட்சியாச்சே, போயஸ் தோட்டத்துலேருந்து தமிழக அதிகார/நிர்வாக தலைமை வரைக்கும் இருப்பது அவாளாச்சே

      அதனால நைசாக ஜெயலலிதாவையும் மற்றவாளையும் பற்றி பேசுவதை கவனமா தவிர்த்துவிட்டு பார்ப்பனர்களை இழிவு செய்துவிட்டதைப்போல ஒரு பொய்த்தோற்றதை திட்டமிட்டு உருவாக்கி அந்த வழியில் மொத்த விவாதமும் ஹைஜேக் செய்யப்பட்டுவிட்டது.

      இதுதாண்டா பார்ப்பன பம்மாத்து….!

      • if vinavu specified only the deterioration of Ruling party,then no one will not argue about the paarpaniyam etc.He only started and at all time he is linking the issues with Paarpaniyam.

        So don’t tell this is paarpana pammaathu,this is stupid and idiotic approach of the people like Vinavu and you.

        • கட்டுரையில் பார்பானை பற்றி வந்த ஒன்றை எடுத்துப்போட்டு அதற்கும் பார்ப்பன பம்மாத்துக்கும் தொடர்பில்லை என்று நீங்கள் விவாதம் செய்யவேண்டியதுதானே யார் தடுத்தது?

          செய்தீர்களா?

          செய்யமாட்டீர்கள், அதற்கு பதலாக பார்ப்பானை இழிவு படுத்துவதாக பொய் பிரச்சாரம் செய்து விவாதத்தை திசை திருப்புவீர்கள், அதுதான் பார்ப்பன பம்மாத்து.

          மைலாப்பூர் மாபியா கையில் போயஸ் தோட்டம் முதல் ஆட்சியதிகாரம் வரை உள்ள நிலையில் பார்ப்பன பம்மாத்து என்று தலைப்பிட்டால் என்ன தவறு? காலங்காலமாக மன்னார்குடி மாபியா என்று சசிகலா கூட்டத்தை அனைத்து ஊடகங்களும் எழுதிவந்த போது அதை யாரும் மறுக்கக் காணுமே? இப்போ மட்டும் ஏன் இந்த பம்மாத்து?

  1. எதற்கு எடுத்தாளும் பார்பனர் என்ரு சொல்வது ஒரு வாடிக்கை ஆகிவிட்டது.ஜெயலலிதா பார்ப்பனர் என்ரு தெரிந்தும்,மோசமானநிர்வாகத்திறமை உடையவர் என்ரு தெரிந்தும் பெரியார் பிறந்த மண்ணில் வாழும் நாம் ஏன் ஓட்டு போட்டோம்? தாத்தா குடும்ப ஆட்சி தானே?
    வினவுக்கு ஒரு கேள்வி? எத்தனயோ கோடி மக்களில் மிக மிக சிறிய % இருக்கும் பார்ப்பனர்களை எதிர்க்கும் உன்னை போன்றவர்கள் சிந்திக்க வேண்டியது- என்னதான் பொய் பிரச்சாரம் செய்தாலும் அவர்களின் முன்னேற்றத்தை சிறிதும் தடுக்க முடியாதது ஏன்?
    பார்ப்பனர் ஆட்சி என்று கூறும் நீ வாழும் தமிழ்நாட்டில் ஏன் தமிழன் அவர்களின் காலடியில் மனண்டியிட்டு கிடக்கிறார்கள்?

    • வினவிற்க்கு சரியான செருப்படிக்கேள்வி….இந்த மாதி டப்பான கேள்விகளுக்கு வினவு என்றுமே பதில் சொல்வதில்லை…பார்பனர் பாலிடிக்ஸ் என்பது இத்துப்போன கருனானிதி ஸ்டெய்ல்..இது காலத்திற்க்கு ஒவ்வாது…

      • ///“ஒரு விழாவுல ராவணன் வந்தபோது, அதைக் கவனிக்காம அவர் செல்போன்ல பேசிட்டு இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக, எங்கிட்ட தவறான தகவல்களைச் சொல்லி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்காங்க.//

        இதுவரையிலும் ஜெயாவுடைய ஆட்சி எப்படி நடந்து வந்திருக்கின்றது என்பதற்கு இந்த உதாரணமே போதும். ஏற்கெனவே துக்ளக் ஆட்சி நடத்தும் அம்மாவிற்கு பக்கத்தில் இப்போது இன்னுமொரு துக்ளக், இனி என்னவகையான கூத்தையெல்லாம் காணவேண்டி வருமோ.

    • //எதற்கு எடுத்தாளும் பார்பனர் என்ரு சொல்வது ஒரு வாடிக்கை ஆகிவிட்டது//

      தான் ஒரு பாப்பாத்தி என்று தன் சாதியை சட்டமன்றத்தில் வைத்து திமிராக அறிவித்துகொண்டது வினவு அல்ல.

      • ஒரு தாழ்ந்த ஜாதிக்காரணை தீண்டாமை வெறியுடன் பள்ளன், பறையன் என்று விழித்து வேதனைப்படுத்துவது எவ்வளவு அனாகறீகமானதோ..அதேபோன்று பார்ப்பன் என்று விழிப்பதும் அனாகரீகமானது…ஒரு வாரத்துக்கு முன்னாடி தீடீர்ன்னு “பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்” என்று தாத்தா ஒரு அறிக்கை விட்டார்..அது யார சந்தோஸப்படுத்த என எனக்கு இன்னும் விளங்கள..

        • //அதேபோன்று பார்ப்பன் என்று விழிப்பதும் அனாகரீகமானது//
          பேருக்குப் பின்னாடி ‘ஐயர்’ ‘ஐயங்கார்’ -னு போட்டுக்குறது உங்க அநாகரிக லிஸ்டுல உண்டுங்களா?

          • //பேருக்குப் பின்னாடி ‘ஐயர்’ ‘ஐயங்கார்’ -னு போட்டுக்குறது உங்க அநாகரிக லிஸ்டுல உண்டுங்களா?//

            ஜாதிப்பேர் சேர்த்து விளிப்பதெல்லாமே அனாகரீகம் தான்….

            ஆந்திராவா ரெட்டி, கர்னாடகாவா கவுடா…முதல்வர்களின் பெயருடன் வரும் இந்த ஜாதிப்பெயர் அந்த மானிலத்தில் எந்த ஒரு பிரச்சனையென்றாலும் ஒரு சாராரின் ஆராஜகம் தொடர்கிறது

        • அப்ப தாழ்ந்த ஜாதின்னு ஒரு ஜாதி இருக்குன்னு சொல்கிறாயாடா…………….பையா

        • ஏன் சேம் சைடு கோல் போடுறீங்க பையா?
          //ஒரு தாழ்ந்த ஜாதிக்காரணை தீண்டாமை வெறியுடன் பள்ளன், பறையன் என்று விழித்து வேதனைப்படுத்துவது எவ்வளவு அனாகறீகமானதோ..அதேபோன்று பார்ப்பன் என்று விழிப்பதும் அனாகரீகமானது//…….. என்று சொல்லும் நீங்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்?
          1. எதற்கு சோ ‘எங்கே பிராமணன்’ என்ற தொடரை ஒளிபரப்புகிறார்? உங்கள் கூற்றுப்படி அந்த தொடரை எடுப்பதும்,அதை பார்ப்பது அநாகரிகம் இல்லையா?
          2. எதற்கு ஜெயலலித்தா தன்னை ஒரு ‘பாப்பாத்தி’ என்று அறிவித்துகொண்டார்? இந்த அநாகரிகத்துக்கு உங்கள் பதில் என்ன?
          3. ‘தான் பிராமணனாக பிறந்ததற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ என்று புளங்காகிதம் அடையும் எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்கு உங்கள் பதில் என்ன?
          4. பார்ப்பான் என்று விளிப்பது தவறு என்றால் ‘பிராமணன்’ என்று அழைப்பது சரியா? அப்படியானால் ‘பிராமணன்’ என்பதன் அர்த்தத்தை நீங்களே எல்லோருக்கும் சொல்லலாமெ?

          (குறிப்பு: இந்த மூவர் மட்டும் தான் பிராமணர்களா என்ற சப்பை கட்டு கட்டி எஸ்கேப் ஆக வேண்டாம்)

          • //1. எதற்கு சோ ‘எங்கே பிராமணன்’ என்ற தொடரை ஒளிபரப்புகிறார்? உங்கள் கூற்றுப்படி அந்த தொடரை எடுப்பதும்,அதை பார்ப்பது அநாகரிகம் இல்லையா?//

            அது ஜாதி வெறி பரப்பும் நாடகமா?

            //2. எதற்கு ஜெயலலித்தா தன்னை ஒரு ‘பாப்பாத்தி’ என்று அறிவித்துகொண்டார்? இந்த அநாகரிகத்துக்கு உங்கள் பதில் என்ன?//
            அவர் ஆமாம்…நான் பப்பாத்தி தான் என்று அறிவித்தார்…ஆனால் என்ன கேள்விக்குன்டான பதில் அது? எதனால் அப்படி அறிவித்தார்?

            //3. ‘தான் பிராமணனாக பிறந்ததற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ என்று புளங்காகிதம் அடையும் எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்கு உங்கள் பதில் என்ன?//

            அவர் இதனால் அரசியல் ஆதாயம் கிடைக்குமா என்று பார்க்கிறார்….சினிமாவில்நடித்து பனம் பார்த்த பொழுது காட்டாத பூனூலை இப்பொழுது வெளியில் தெரியும்படி அனிந்து சீன் போடுகிறார்…அவர் லட்சியம் மைலாப்பூர் மட்டும் தான்…

            //4. பார்ப்பான் என்று விளிப்பது தவறு என்றால் ‘பிராமணன்’ என்று அழைப்பது சரியா? அப்படியானால் ‘பிராமணன்’ என்பதன் அர்த்தத்தை நீங்களே எல்லோருக்கும் சொல்லலாமெ?//
            ஜாதி பெயர் உபயோகிப்பது நல்லதல்ல….அதுவும் ‘ஜாதி மறுப்பாளர்’ என்று என்னுபவர்கள் உபயோகிக்காமல் இருக்கவேண்டும்…இல்லை என்றால் அது முரன்பாடு…பொய் வேஷம்…

            • நீங்களும் கான்டெக்ஸ்டை விட்டு பேசுறீங்க. ‘பிராமணன்’ என்று தம்மை அழைத்து கொள்ளும் போதும், அதற்காக வெற்று பெருமைஅடைவதாக காட்டிகொள்ளும் போதும் வெகுண்டு எழுந்து வந்து “இது அநாகரீகம்” என்று ஏன் குமுறவில்லை? இப்போது குமுறலாமே? யார் தடுத்தா? என்னுடைய கேள்வி எல்லாம் ‘தன்னை பிராமணனாக வெளியில் காட்டிகொள்வதில் உள்ள அற்ப சுகம்’ என்பதன் பின்னால் உளவியல் பற்றியது. இதற்கு பதில் தெரிந்தால் ஏன் ஒரு தேவர்,நாடார்,தலித் போன்றோர் தனது பேரின் பின்னால் சாதியை சேர்த்துகொள்கிறார்கள் என்று விளங்கும்.

              • பிராமண மேட்டிமை எண்ணம் மற்ற சாதிகளின் மேட்டிமைக்கு முன்னுதாரணம் என்று சொல்ல வருகிறீர்கள், இல்லையா?

                தேவன்டா, கவுண்டன்டா, நாயக்கன்டா என்று மீசை முறுக்கும் சாதி மேட்டிமையெல்லாம் பார்ப்பான் சிலம்பு சுற்ற வந்தால் அவனிடமும் காட்டப்படும். இது போன்ற மேட்டிமை எண்ணங்கள் இந்தியாவிற்கு வெகு தொலைவில் உள்ள, பார்ப்பானுக்குத் தெரியாத தேசங்களில் உள்ள இனக்குழுக்களிடையேயும் உண்டு.

                • //பிராமண மேட்டிமை எண்ணம் மற்ற சாதிகளின் மேட்டிமைக்கு முன்னுதாரணம் என்று சொல்ல வருகிறீர்கள், இல்லையா?//

                  முன்னுதாரணம் அல்ல. அடிப்படையை அமைத்ததே அவர்தான் என்று சொல்லவருகிறேன்.

          • ponnarasu,

            let them think whatever they want.why this pagutharivu veri?

            But thank you nonetheless,what muslims did to hindus,brahmin bashers do to brahmins,bring unity amongst brahmins.Thank you very much.

          • தாங்கள் மேற்கூறிய அனைத்தும் தன்னுடைய சாதி மட்டும் தான் உயர்ந்தது என்பதன் வெளிப்பாடு தான்…சோ அவருடைய சந்தோசத்துக்காக எங்கே பிராமணன் எடுத்தார்….(அவர் ஜாதிப்பெருமை பேசுவதில் அவருக்கு ஒரு சந்தோஸம்..ஏன் இது தேவரிடத்திலோ,நாடாரிடத்திலோ அல்ல்து செட்டியாரித்திலோ இல்லை எங்கிறீர்களா? …..அதற்கென்று இவர்கள் அனைவரையும் ஒரு பட்டப்பெயர் வைத்து அழைத்தால் அது முறையாகிவிடுமா???

            பொன்ராஜ் சார், பிராமணர்கள் அனைவரையும் தாழ்வானவ்ர்கள், தாம் மட்டுமே உயர்ந்தவர் என்ற நினைப்புடையவரே…ஏன்னா அந்தக்காலத்தில் அவா மட்டும் தான் படித்திருந்தர்…ஆனால் இப்ப நிலைமை என்ன…எல்லாரும் படித்து பெரிய வேலையில் உள்ளனர்…

            3. ‘தான் பிராமணனாக பிறந்ததற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ என்று புளங்காகிதம் அடையும் எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்கு உங்கள் பதில் என்ன?

            சார் அவன்லாம் காமிடி பீஸு சார்…ஒரு ஜாதியில பிறந்ததுக்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று சொன்னால் அவன் எந்த அளவிற்க்கு அறிவாளியாக இறுப்பான் என்று தெரிகிறதல்லவா…

            • பையா சார், நீங்கள் இதை கவனிக்கவில்லை போலும்.
              //(குறிப்பு: இந்த மூவர் மட்டும் தான் பிராமணர்களா என்ற சப்பை கட்டு கட்டி எஸ்கேப் ஆக வேண்டாம்)//

              சரி போகட்டும். சோவையும்,சேகரையும் விடுங்கள். தான் ஒரு பாப்பாத்தி என்ற சாதி மமதையுடன் ஆட்சி செய்யும் ந்பர் எப்படி நடுநிலையான ஆட்சியை வழங்குவார்?

              மேலும், “இட்லர் உலகாள்வான்” என்று அவசரம் அவசரமாக இரண்டம் உலகப் போரின்போது ஜெர்மன் மொழி படிக்க தொடங்கியது முதல், இட ஒதுக்கீடு உள்ள இன்றை வரை நீங்கள் சொல்லும் அதே பார்ப்பனர்கள் ‘அதிகாரம் செலுத்தும் இடங்களை’ எப்படி எல்லாம் தகிடுதித்தம் செய்து தக்கவைக்கின்றனர் என்பதை இதில் படித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். (http://dharumi.blogspot.com/2010/05/blog-post.html). இந்த இடத்தில் நீங்கள் சொன்ன //ஏன்னா அந்தக்காலத்தில் அவா மட்டும் தான் படித்திருந்தர்…ஆனால் இப்ப நிலைமை என்ன…எல்லாரும் படித்து பெரிய வேலையில் உள்ளனர்…// என்ற வார்த்தைகள் பணால் ஆகின்றன. இப்போ மீண்டும் உங்களிடம் அதே கேள்வியை கேட்கிறேன். தகிடுதித்தம் செய்தாவது தன்னை மற்றவரிடம் இருந்து உயர்ந்தவன் என்று காட்டிகொள்ளவும், ஆளும் வர்கத்தின் குடுமி தன்னிடம் இருக்கவும் ‘பார்ப்பனர்களை’ தவறு செய்ய தூண்டியது எது?

              • பையா சார், நீங்கள் இதை கவனிக்கவில்லை போலும்.
                //(குறிப்பு: இந்த மூவர் மட்டும் தான் பிராமணர்களா என்ற சப்பை கட்டு கட்டி எஸ்கேப் ஆக வேண்டாம்)//

                ஆமா பொன்ராஜ், இந்த மூவர் மட்டுமே பிராமணர் அல்லர், தமிழ்த்தாத்தா என்றழைக்கப்பட்ட் உ வே சாம்னாதய்யரும், தேசியக் கவி எனறழைக்கப்பட்ட பாரதியாரும் பார்ப்பணன் தான்..

                //சரி போகட்டும். சோவையும்,சேகரையும் விடுங்கள். தான் ஒரு பாப்பாத்தி என்ற சாதி மமதையுடன் ஆட்சி செய்யும் ந்பர் எப்படி நடுநிலையான ஆட்சியை வழங்குவார்?//
                அந்தம்மா செய்யும் தவறுக்கு அந்த ஜாதியெய் இழிவுபடுத்திப்பேசுவதன் மூலம் என்ன பலன் கிட்டும்

                • //அந்தம்மா செய்யும் தவறுக்கு அந்த ஜாதியெய் இழிவுபடுத்திப்பேசுவதன் மூலம் என்ன பலன் கிட்டும்//

                  அந்தம்மா செய்வது தவறு என்று தெரிந்திருந்தும் அவருக்கு ஒளிவட்டம் கொடுக்க அவரை ஜாக்கி வச்சு தூக்கி விடும் வேலையை ஏன் பா.பத்திரிக்கைகள் செய்கின்றன.?

                  • Andhamma iyengar,adhuvum karnataka iyengar.infact in our community the tussle between iyer and iyengar is so high that nobody hates anyone else seriously.

                    I dont know about paarpana patrikai,there are all kinds of newspapers run by brahmins,Hindu,Indian express,many tamil dailies-there are all kinds of opinion about all of them.I know many of my family who support DMK,hate jayalalitha,hated rajaji in the past and supported kamaraj,many young guys who liked Stalin for all the flyovers he built and hating jayalalitha at the same time due to her sons wedding/open corruption etc etc.

                    Only consistent thing is people hate DK/Periyar/Mu.Ka because their propoganda is negative,uncouth,hateful and biased.

                    They basically would choose anyone over DMK,they just dont like DMK.Any other party is okay for them.I even know people who canvassed for DMK over Congress in 1968 for MGR and hate for Rajaji.

                    So,there is nothing called paarpana pathrikai,there is one or two newspapers who support Jayalalitha,cho and subramanian swamy are clear pro-hindutva people and many people like them but i also know many who dont as they feel if you get combative towards these guys and things get worse,people have to suffer on the street.

                • //ஆமா பொன்ராஜ், இந்த மூவர் மட்டுமே பிராமணர் அல்லர், தமிழ்த்தாத்தா என்றழைக்கப்பட்ட் உ வே சாம்னாதய்யரும், தேசியக் கவி எனறழைக்கப்பட்ட பாரதியாரும் பார்ப்பணன் தான்..//

                  இந்த லிஸ்டில் நீங்கள் மறைமலை அடிகள் போன்றோரை விட்டுவிட்டீர்கள். ஆனால் பார்ப்பனர் அல்லாதவர்களை விட, இவர்கள் தான் சக பார்ப்பானர்களின் அட்டூழியங்களை துகிலுரித்து வெளிப்படுத்தியவர்கள்.

                  • மன்னிக்கவும்: அது மறைமலை அடிகள் அல்ல. பரிதிமாற் கலைங்கர்.

              • // மேலும், “இட்லர் உலகாள்வான்” என்று அவசரம் அவசரமாக இரண்டம் உலகப் போரின்போது ஜெர்மன் மொழி படிக்க தொடங்கியது முதல், இட ஒதுக்கீடு உள்ள இன்றை வரை நீங்கள் சொல்லும் அதே பார்ப்பனர்கள் ‘அதிகாரம் செலுத்தும் இடங்களை’ எப்படி எல்லாம் தகிடுதித்தம் செய்து தக்கவைக்கின்றனர் என்பதை இதில் படித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். //

                இட்லரின் முழுப் பரிமாணமும் வெளித்தெரியவராத காலகட்டத்தில் உலகமுழுதும் உள்ள பிரித்தானியப் பேரரசின் அடிமை நாடுகளில், இட்லர் ஜெர்மனிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய் எழுந்தவனாகத்தான் தெரிந்தான், அவன் தலைமையில் ஜெர்மானியரின் எழுச்சியும், வெற்றிகளும் புது நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. மேலும் பல மொழிகளைப் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள், எதற்கும் படித்து வை இந்த ஜெர்மனியையும் என்று படிப்பதும் நடந்தது. எல்லா மேல்சாதியினரையும் போல அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்பு பார்ப்பனர்களுக்கும் இருந்தது.

                இந்த விளையாட்டில் பார்ப்பனர்கள் மட்டும் வில்லன்களாகவேத் தோன்றக் காரணம் பார்ப்பனத் துவேசம்.!

                • ambi hitler advocated aryan supremacy hence brahmins in a a great enthusiasm found themselves closer to him.openly terming aryaa nammavaa,maamis thronged moor market for german teaching books.many centres for linguistic programmes in german were opened in colleges and institutions dominated by brahmins.i witnessed one in annamalai university.

                  • Sir, your account of activities by some brahmins during that period had a mixed back ground. The ‘heroism’ attached with Hitler (in the rising of Germany against the oppressing & hostile eurpoean powers) in the early years of 2nd world war and prior to that had admirers worldwide. There was a trend to find brotherhood, with rising germans, among a section of elite including some brahmins. At the same time the aryan racial theory was opposed by many scholars and educated including many brahmins, as a colonial creation.

                    In Tamil land, the opposition to aryan race theory by brahmins was more acute due to the onslaught of dravidian racism that was in full swing. The society was a divided one on this issue. One group opposed the arayan race theory, another one, was pushed by the dravidian movement, to find a solace in ‘heoric’ exploits of the ‘aryan’ germans, ‘welcomed’ the victory of their ‘saviour’ Hitler. By the end of the war, Hitler’s true face was exposed and that shocked & enlightened everyone.

                    • how can one go close with a invader,this is ridiculous.i think even if kenyans invade india there will be a lot of elite indians with fluency in kenyan language to greet them and betray their brethren.previously the same elite people were the chief courtesans in moghul durbar later they switched their loyalty to british invaders in the same way….and before that…..

                    • abbi, british did not invade india with their military might.. they came as traders and captured the country with the help of one king against another. Why indians needed to be loyal to british when germans tried to attack them..?

                • //இந்த விளையாட்டில் பார்ப்பனர்கள் மட்டும் வில்லன்களாகவேத் தோன்றக் காரணம் பார்ப்பனத் துவேசம்.!//

                  அதெப்படி, பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணக்கமாக பல உயர்பதவிகளை அனுபவித்துகொண்டே, இட்லருக்கு பார்ப்பனர்களால் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடிந்தது? இது போல செய்த மற்ற ஆதிக்க சாதிகளை பட்டியலிடுமாறும் அம்பியை வேண்டுகிறேன். மேலும் எமக்கு கிடைத்த ஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

                  1. கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு முன்பு சென்னை மாகாணத்த்தில் பார்ப்பனர்கள் பெருவாரியானோர் கலந்துகொண்டு தம்மை அனைவரையும் ‘ஆரியர்கள்’ என்று அறிவித்துகொண்டனர். (தேவைப் பட்டால் ஆதாரம் தருகிறேன்).
                  2. ஜெர்மனியில் போர் துவக்கி நடத்தி வெகுவேகமாக முன்னேறிய ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ஃப் இட்லர், தான் ஜெர்மானியன் என்பதைவிட ஆரிய இனத்தின் பெருமைமிக்க பிரதிநிதி என்று பிரகடனப்படுத்தியதோடு, ஆரிய இனத்தின் மேன்மைக்குப் பாடுபட்ட அவர்களை உலகின் முதல் நம்பர் குடிமக்களாக்குவதே தமது நாடு பிடிக்கும் நோக்கம் என்று ஆணவத்துடன் பிரகடனப்படுத்தினார். ஜெர்மனியில் சமஸ்கிருதத்தினை கட்டாயப் பாடமாக்கி அரசு ஆணைகள் பிறப்பித்தார் இட்லர். நாசிசத்தின் உயிர்நிலையே அதில்தான் உள்ளதாகப் பிரகடனம் செய்தார் இட்லர்! ஆரிய இனம் கலப்பின்றி பாதுகாக்கப்பட்டாக வேண்டும். ஆகவே, வேறு இனக் கலப்புள்ள திருமணங்கள் நடைபெறவே கூடாது என்ற அவைகளுக்குத் தடை விதித்தார். (அவரது சுவஸ்திக் சின்னம்தான் இன்றைய இனவெறி ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் சின்னம் ஆரிய வர்த்தம், சமஸ்கிருத கலாச்சாரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி இவைகளுடைய லட்சியமும்கூட)

                  இத்தகைய கருத்துகளின் மூலம் எதிரியாக இருந்தாலும் சரி, நண்பனாக இருந்தாலும் சரி ‘ஆட்சிப் பீடத்தில் தாம் மட்டுமே’ என்ற எண்ணம் பார்ப்பனர்களிடம் புறையோடிப் போய் இருப்பதை அறியலாம்.

                  • // அதெப்படி, பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணக்கமாக பல உயர்பதவிகளை அனுபவித்துகொண்டே, இட்லருக்கு பார்ப்பனர்களால் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடிந்தது? //

                    அப்படி இருக்க வாய்ப்பில்லை. தன் அரசில் பணிபுரிந்து கொண்டே தன் எதிரிக்கு ஆதரவு தெரிவித்தால் ‘ராஜத்துரோக’ குற்றச் சாட்டில் சிறைக்குள் தள்ளியிருக்கும் பிரிட்டிஷ் அரசு. பிரிட்டிஷ் அரசை எதிர்த்தவர்கள் ஜெர்மானியர்களை ஆதரிப்பது இயல்பான ஒன்று, நாசிசத்தைப் பற்றி தெரியும்வரை.

                    // 1. கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு முன்பு சென்னை மாகாணத்த்தில் பார்ப்பனர்கள் பெருவாரியானோர் கலந்துகொண்டு தம்மை அனைவரையும் ‘ஆரியர்கள்’ என்று அறிவித்துகொண்டனர். (தேவைப் பட்டால் ஆதாரம் தருகிறேன்). //

                    தாருங்கள். முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

                    மேலும், ஸ்வதிக் சின்னத்தை நாஜிகளின் சின்னமாக்கி கேவலப்படுத்தி விட்டான் என்பதால் அச் சின்னத்தை ஹிந்துக்களும்/பவுத்தர்களும் பயன்படுத்துவதை நிறுத்தக் கூடாது என்பதில்லை. நமது அறு கோண வடிவ சக்கரம், யூதர்களின் ‘Star of David’ போல் இருப்பதால் நம்மை சியோனிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்ளமுடியாது.

                  • // ஜெர்மனியில் சமஸ்கிருதத்தினை கட்டாயப் பாடமாக்கி அரசு ஆணைகள் பிறப்பித்தார் இட்லர். நாசிசத்தின் உயிர்நிலையே அதில்தான் உள்ளதாகப் பிரகடனம் செய்தார் இட்லர்! ஆரிய இனம் கலப்பின்றி பாதுகாக்கப்பட்டாக வேண்டும். ஆகவே, வேறு இனக் கலப்புள்ள திருமணங்கள் நடைபெறவே கூடாது என்ற அவைகளுக்குத் தடை விதித்தார். //

                    ஹிட்லர் ஒரு நட்டுக் கேசு. யூதர்களே இயேசுக் கிறிஸ்துவின் சாவுக்குக் காரணம் என்று யூதர்களுக்கு எதிராக நடத்தவிருக்கும் இனப் படுகொலைக்கு நியாயம் கற்பித்து கத்தோலிக்க உலகையும் ஏமாற்றியவர் ஹிட்லர்.

                • //இட்லரின் முழுப் பரிமாணமும் வெளித்தெரியவராத காலகட்டத்தில் உலகமுழுதும் உள்ள பிரித்தானியப் பேரரசின் அடிமை நாடுகளில், இட்லர் ஜெர்மனிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய் எழுந்தவனாகத்தான் தெரிந்தான்,//

                  பாஸ்.. செம காமெடி பண்றீங்க நீங்க…!!! அறிவியல் தொழில்நுட்பம் தழைத்தோங்கும் இந்த காலத்தில் உலகமே ராஜபக்சேவை போர்குற்றவாளி என்று காறித் துப்பிகொண்டிருக்கும் போது, அவரை இன்னமும் உச்சி மோந்து பாராட்டும் பார்ப்பனர்கள் (மற்றும் ஊடகங்கள்), இட்லரின் முழுப்பரிமாணமும் வெளியில் தெரிந்திருந்தாலும் கூட அவனுக்கே ஆதரவு அளித்திருப்பீர்கள் என்பதே உண்மை. அப்புறம் ஏன் இந்த பூசி மெழுகும் வார்த்தை ஜாலம் எல்லாம்?

                  • பார்ப்பன ஊடகங்களை வைத்து பார்ப்பன சமூகத்தை எடைபோடுவது போல் ஜெர்மனி படித்த, ஹிட்லரை ஆதரித்த பார்ப்பனர்களை வைத்து பார்ப்பனர்களை பழிப்பதும், நாட்டுக்காக போராடிய பார்ப்பனர்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாததும் பார்ப்பனத் துவேசமே. இனப்படுகொலையின் பின் நின்ற நாராயணன், மேனன், நம்பியார் போன்ற திராவிட அதிகாரிகளின் சோனியா விசுவாசம் கண்ணுக்குத் தெரியாத காரணம் பார்ப்பனத்துவேசத்தோடு, திராவிடப் பம்மாத்தும் சேர்ந்து கொண்டதால்…

    • 25, 30 வருடங்களுக்கு முன்பு ஆட்டிக் கொண்டு வந்த நிர்வாண சாமியார்களுக்கு தன் குடும்ப சகிதமாய் பூசை செய்த மானம், ரோஷம் உள்ள நம் தமிழ் மக்கள், சினிமாவில் அரைகுறை ஆடையுடன் ஆடிப்பாடி புரட்சி செய்த ஜெயாவையா ஏமாற்றிவிடுவார்கள்? இந்த விஷயத்தில் (கவர்ச்சி விஷயத்தில்) பார்ப்பானாவது, கீர்ப்பானாவது.

    • ரமேஷ், கண்ணதாசன் சொன்னது போல் நாம் எல்லாம் சிந்தித்துப் பிறந்தவர்கள் இல்லை, சிந்திப் பிறந்தவர்கள். ஆகவே நாம் எங்கே சிந்திக்கப்போகிறோம்? சிந்திக்கும் திறன் அதிகம் உள்ள நீங்கள் சொல்லுங்களேன் – பெரியார் பிறந்த மண்ணில் ஒரு பாப்பாத்தி (பார்ப்பான் அல்ல்) எப்படி முதல்வராய் வர முடிந்தது? காற்றடித்தால் எச்சில் இலை கோபுரக்கலசத்தில் போய் ஒட்டிக் கொள்ளும் என்பதற்கு நாங்கள் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. அதற்கு அதிகம் அறிவும் வேண்டியதில்லை.
      பார்ப்பனர்களின் முன்னேற்றத்தை நாங்கள் எங்கே தடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் உயர்வுக்குத்தான் நாங்கள் முட்டி மோதிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உழைக்கத் தெரியும். ஏமாறத் தெரியும். எதையும் சாதிக்க போராடத் தெரியும். மற்றவர்களைப் போல் எங்களுக்கு நாட்டை கூட்டிக் கொடுக்கத் தெரியாது.

      • when did brahmins come in the way of your development? Nothing in TN today ahs any brahmin influence in it,power,money whatever?Even J is a CM but what does she do for brahmins.What does a brahmin have in TN? What can he do?

        No govt job,no reservation in education,no land ownership,no family support,nothing.You do all these things and then u say how are we stopping the advancement of brahmins?

        Brahmins are advancing despite all these blockades and your claiming that you are not advancing inspite of others having blockades? Then whose fault is it?

  2. ஜெயா பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் மட்டுமே தமிழக மக்கள் அவருக்கு ஓட்டு போட்டு இப்படி ஆகி இருந்தால் நீங்கள் கூறுவதை ஏற்கலாம். அப்படி இல்லாத போது ஏன் அவரின் ஜாதி இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது?

    ஐ.ஐ.டி யில் ஆசிரியர் மாணவரின் திறமையைக் குறிப்பிடும்போது அவரின் தலித் ஜாதியை குறிப்பிட்டதைக் கண்டித்த வினவு இங்கே பிராமணர்களைக் குறி வைப்பதேன்? இதே ஜெயா ஒரு தலித் இனத்தவராக இருந்தால் “கலைகிறது தலித் பம்மாத்து” என போடுவீர்களா?

    • மாட்டுக்கறி சாப்பிடுவா மாமின்னு எம்ஜிஆர் சொன்னதா எழுதிய நக்கிரனும், அவர் பத்திரிகை அலுவலகமும் பட்ட பாடு மறந்து விட்டதா? எடுத்துக்காட்டுக்கு அம்மாவெ தலித்துன்னு செல்லிட்டல்ல அ.தி.மு.க. தொண்டர்கள் கட்டம் கட்டிடுவாங்க. உசாரு, உசாரு,உசாரு…..

      • Asingama pesuna ippadi thaan seivaanga.veerapana pottapave indha brokerayum sethu pottrukkanum.Ivaru camerava thookittu povaram,pechu vaarthai naduthuvaram,enna oru kattu kadhai?

        nakeeranukku ellam vadaada oru kuroopu vera?

  3. யெப்பா பையாவிசய்ரமேசு அறிவாளிகளா,

    ஜெயா நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர், நல்லாட்சி புரிஞ்சவர் என அள்ளிவிடுவது தினமலர், தினமணி, இந்தியா டுடே, துக்ளக் போன்ற பார்ப்பன ஊடகங்கள்தானே, அவர்கள் காட்டிய பம்மாத்து இப்படி நாற் நாறாய் கிழிந்து தொங்குகிறதே, அதைத்தானே கட்டுரை குறிப்பிடுகிறது. இது குறித்து மேலும் பதிவுகள் வினவிலேயே வந்துள்ளதே, அது தொடர்புடைய பதிவுகள் பட்டியலிலும் உள்ளதே

    இந்த சின்ன விசயத்தை விளங்கிக் கொள்ளும் அளவுக்கு கூட அரசியல் புரிதல் இல்லாத உங்களைப் போன்ற மொண்ணையான கூழங்கற்கள் படிக்க வேண்டியது வினவு அல்ல, நமது எம்ஜிஆர்.

    வாழ்த்துக்கள்

    • //இந்த சின்ன விசயத்தை விளங்கிக் கொள்ளும் அளவுக்கு கூட அரசியல் புரிதல் இல்லாத உங்களைப் போன்ற மொண்ணையான கூழங்கற்கள் படிக்க வேண்டியது வினவு அல்ல, நமது எம்ஜிஆர்.//

      அது வேற ஒண்ணும் இல்ல சார். இவங்க இந்த மாதிரி கேள்வி கேட்பதற்கு முன்பு கொஞ்சம் வினவு தளம் உட்பட ‘பார்ப்பன அரசியலை’ புரிஞசுகிட்டு வந்து கருத்து சொன்னா தேவலை. அதை விட்டுவிட்டு ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு மற்றவர்களை “அரைச்ச மாவையே அரைக்க சொல்லி” கடுப்பேத்துகிறார்கள் மை லார்ட்…!!!

      • yes VINAVU doing the same“அரைச்ச மாவையே அரைக்க சொல்லி” கடுப்பேத்துகிறார்கள்

        • கரெக்டா தப்பா புரிஞசுண்டேள். “அரைச்ச மாவை அரைக்கிறது” என்பதன் அர்த்தாம் ‘ஒரே மாதிரி கேள்வியையே (எதோ முதல் முறைகேக்குற மாதிரி) பலமுறை உம்மவாள் கேட்டுண்டே இருக்கா. உமக்கு திரும்ப திரும்ப அதே பதில்களை சொல்லிண்டு (அரைச்ச அதே பதிலை அரைக்க) முடியாது” என்று சொல்ல வந்தேண்ணா.

          (குறிப்பு: இதை தான் நான் சொல்லவந்தேன் என்பதுநோக்கும் தெரியும்.ஆனால் வேணும்னே போட்டு வாங்குறீர்)

        • சுப்புனி ! பார்ப்பன அரசியல் என்பது நுண்கலை அரசியல் வெளியில் தெரியாத மாதிரி அடிப்பது மற்றும் நடிப்பது. ம்ம்ம்ம்ம்ம்ம்.. இதெல்லாம் நீயே செய்யும் போது, உன் கிட்ட சொல்லி என்னத்த செய்ய !

          • appo vera edhavadhu arasiyal irukka? eppadi thee kaa madhiri kozhappi kozhappi pesuradha? patni kedakkuravana ukkathivechu night moonu mani varaikkum mokkai poduratha?

            ungaloda veruppu,thaazvu manappanmaikku ellam neengale peru vechukureenga,avlo thaan.

        • //paarpana arasiyal puridhal,onnume illadha onna ungalala mattum thaan purinchikka mudiyum//

          If this suppuni sees somthing as “parpana” in the posts he immediately gets up from his ” thinnai” tightens his “underwar” and ” upperwar” and types tamingish…. without understanding what is in the post…

    • vinavu and some other medias which is against the brahmins also in the race.the same people who is reading the dinamalar,dinamani etc also reading vinavu(like me). Then why Vinavu not succeed his points against those people,media.

      There may be 2 reasons
      1.Vinavu not able to exploid his points in a correct way

      2.Otherwise people read his article as an entertainment and not taking in to their mind.

      Thats why what ever the points they want to exploid, not giving any big impacts.

      I request VINAVU should change his approach to reach all the level of people.

      Best Of Luck Vinavu.

        • c I am not doing JAALRA. I am trying to say that please exploit the correct reason and trying to reach the lower people.Then only the change will happen.Don’t blame any particular religion or cast.Be a specific and explain specific.Don’t try to link the problem with another reason or a problem,if it is really contribute the issue.As a media request you to be common man.

          I am not believe the Dinamalar,dinamani etc.

          Hope you understood.

          • The word JALRA i used for Dinamalar and other newspapers, not for u.
            At the same time it will be difficult for a common man or a middle class man to accept the hard truths and the viwes of Vinavu, as these people are being misguided for decades by anti socio economic groups.

          • நண்பர் ரமேசு. ஆங்கிலம் உங்களுக்கு என்ன பாவம் செய்தது. ஏன் இப்படி அதை அமெரிக்காவிடம் சிக்கிய அப்கனிஸ்தான் போல கொடுமை படுத்துகிறீர்கள். உங்கள் இஸ்கூலில் “miss, miss, you saiding talking only in englies. but this boy was talked on tamil, miss. you beating him miss?”, என்றுதானே ஆங்கிலம் கற்றுத் தெளிந்தீர்.

          • உங்க அண்ட்ராயர கிழிச்சு தொங்க விட்டோமே.. அப்பவே தெரியலயா..நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கடிமை யாரும்மில்லை…னு

            • en andrayara yaruppa thongavuttadhu? enga nilatha kaiparunna kootamellam ippo freeya currentu venumnu thunda virichikittu illa irukkanga,adhu yen enga andrayara kizhukkanum unakku,komanam vaanga kaasu illaya?

    • அட ஒன்னத்துக்கும் ஆகாத ஊசியே….அவனவன் ஜாதிக்காரனோட சேந்துகிட்டு ஆடுரது என்ன புதுசா…அதுக்குன்னு ஒரு ஜாதிய மட்டமா ஒரு பேரு வச்சுக்கூப்புடனுமா…னாளைக்கே ஒரு தலித் தமிழ்னாட்டு முதல்வராயி தவறு செய்தால்…அவரை ஜாதிப்பேர் வைத்டு தரக்குறைவாக விமர்சிப்பத்து தான் நாகரீகமா..

      • கரிக்டு ஆனால் நீங்கள் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டியது பார்பனர், பார்பனியம் இதை இந்த கட்டுரையில் எந்த கன்டக்ஸ்டில் எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தான் அனைத்தையும் ப்ளாக் அன்ட் வையிட்டாக புரிந்துக்கொண்டு திட்டிக்கொன்டிருக்கிறீகள்..மேலும் பையா சொல்வது போல் நாளையே தலித் ஒருவர் இப்பொழுது ஜெயா செய்வது போல் ஆட்சி செய்தால் அதை பார்பனீயம் என்று விமர்சிப்பார்கள். மற்ற எல்லா தில்லங்கடிகளுக்கும் இதே பதில் தான்

        • oru punnakku contextum illa,mokkai podrathukku context vera.The only consistent thing in Vinavu and Dravidian politics is Brahmin bashing,infact all your identities can be referred to brahmin bashing.it is as if,u all woke up only after this,before that u were all sucking upto whoever was around.

    • வாங்க சார் மிகப்பெரிய அரசியல் ஞானி சார் நீங்க… ஜெயா ஆட்சியை பாராட்டி இந்த பார்ப்பன ஊடகங்கள் எழுதுவதால் ஜெயா ஆட்சி பார்ப்பன ஆட்சி ஆகிவிட்டதா? சில வருடங்களுக்கு முன்பு இதே ஊடகங்கள் கருணாநிதி ஆட்சியை கொண்டாடின, அப்போது கருணா ஆட்சி கூட பார்ப்பன ஆட்சி ஆகியிருந்ததோ? பகிரங்கமாக மக்கள் மத்தியில் தினமலர் உள்ளிட்ட பத்திரிக்கைகளை படிக்காதீர்கள் என்று தொண்டர்களுக்கு ஜெயலலிதா கட்டளை இட்டாரே, அத்தருணங்களில் அவர் பார்ப்பனீய எதிர்க்கட்சியாக இல்லை என்பீர்களா?

      ஒரு கட்சி பார்ப்பனிய கட்சியா? வன்னிய கட்சியா? தலித்திய கட்சியா, பொதுவுடைமை கட்சியா எனபது அதை பாராட்டும் ஊடகங்களை பொறுத்து தீர்மானிக்கப்படுவது முறையல்ல…

      ஜெயா அரசின் இன்றைய தலையாய பிரச்னைகளான மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற விடயங்களை பார்ப்பனியத்தை இழுக்கமால் கண்டிக்க உங்களுக்கு வலு இல்லையா? கலைஞ்சர் டிவி நடப்பது என்ன நிகழ்ச்சி பாருங்கள், பார்ப்பனீயத்தை பொது இடத்தில் பகிரங்கமாக திட்டும் தலைவரின் டிவி கூட எவ்வுளவு இலாவகமாக சாதி சாயம் இன்றி விமர்சனங்களை வைக்கிறார்கள் என்று…

      இனியாவது சாதி பேசிசதிராடி சகாயம் அடைய நினைக்கமால், எடுத்த பொருளை சாதி சாயம் பூசாமல் நேரிடையாக விளக்கி உண்மையை மக்கள் மனதில் விதைக்க முயற்சிக்கவும்… அனைத்து சாதியினரும் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பர்…

    • oru varusham thana aachu,adhukkulla reactiona? neenga ellam thathavukku kuninje pazhapatta aalunga.Thatha vandhu oru meetingla moikkaya pottarna kai thattura groupu thana neenga.

  4. அம்மாவோட நிர்வாகத்திறமை எல்லாம் காமடி திறமையாதான் இருக்கு. நிர்வாகத்துல ஆட்டைய போடுரதுல கில்லாடியா இருக்கு.

  5. ஒண்ணு பார்ப்பன பம்மாத்து, இல்ல தவ்ஹீது ஜமாத்து, மாத்தி மாத்தி சாத்து..

    இதைப் புரட்சியென்று நம்பினால் அது சுய ஏமாத்து, அதாலே வினவே சிந்தனையை மாத்து..!

      • Brahmin bashing is ALWAYS unwarranted. What is the need to bash Brahmins in a state like TN where all other castes have made great strides and Brahmins have been persecuted and victimized at every possible opportunity? It only reflects a lack of ideology and a diabolical hatred for a group of people that would be classified as racism in any other nation.

  6. ஒன் அவர் மின்வெட்டுக்கே பாப்பான் தன் ஊடகத்தில் ஆற்காடு வீராசாமி ஆயாவை எல்லாம் திட்டுனானே இப்ப மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்று கிளாஸ் எடுப்பதை பாருங்கள்.இலவசம் கொடுக்காதே என்று அழுதவன் இன்னைக்கு எதாவது சொல்கிறானா பாருங்கள். டாஸ்மாக் குடி கெடுக்குது அரசே மது விக்குதுன்னு அழுதவா இன்னைக்கு என்ன சொல்றா பாருங்கோ.this is what we say பார்ப்பன பம்மாத்து.

    • சித்தரே, சித்த சும்மா இருங்கோ, ஏற்கனவே அவாள்ளாம் இஞ்சி தின்ன மாதிரி உர்ர்ர்ருனு இருக்கா, இது நீங்க வேற ரெண்டு பச்ச மொளகாவை கிள்ளி பட்டறையில சொருகுறேளே

      • அரசியல் அறிவோ புரிதலோ ஏதும் அற்ற விஜயகாந்தை வளர்க்கர்துக்கு தொடர்ச்சியாக அவா பத்திரிக்கைகள் அட்டையில் போட்டு உருப்பெருக்கி கருணாநிதியை கண்டபடி திட்ட வைத்தாளே இப்போ அவர் ஜெவை திட்டும் போது அவரையே அரை வேக்காடுன்னு திட்ராளே ஏண்ணா?

    • i dont know about you,but we have been the most economical and disciplined users of anything in life.Always,i have survived in Madras for 14 years without A/C(when i could have afforded) and bad water problem.I dont know whom you are talking about.

      Inaikkum ellam kedukutthu thaan,aana enna seyya. adhukku idhu paravaillana irukka vendiyathu thaan.

  7. மகளிர் உரிமை பற்றி உரத்து பேசும் இந்நாளிலேயே நடிகைகளின்
    நிலை என்ன என்பது உலகுக்கே தெரியும்.செல்வி நடிகையாக
    வாழ்க்கையை ஆரம்பித்த அந்த காலத்தில்? அந்த வன்மம்
    தொடர்கிறது ஆண் அமைச்சர்களை சாஸ்டாங்கமாக காலில்
    விழ வைப்பதிலிருந்து,பந்தாடுவதுவரை.

  8. பார்ப்பன பம்மாத்து என்று வினவும் சிலரும் கருதும் தற்போது நடக்கின்ற கூத்தோ…
    இல்லை இதற்கு முன் நடந்த ‘பகுத்தறிவு’, ‘திராவிட’ பம்மாத்து என்று சிலர் கருதிய கூத்தோ…

    என்றென்றும் என்றென்றும் பேக்கான்டிகளாக இருப்பது சாமனிய வாக்காளன்…

  9. அவாள்கள் எல்லாம் பதிவைப் படித்து சூடேறுகிறதைப் பார்த்தால் ஜெயா மாமியை 24ம் புலிகேசி என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்தான் போலும்.

      • எம்பேர்ல எம்மூஞ்சு தெரியுதா சுப்புனி! இந்த மதவாதிகளெல்லாம் சொல்லிவச்ச மாதிரி பேர புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்களே ஏன்?

        • சுஜித் என்பது பொதுவாக இந்து/சமண/பவுத்தர்கள் இட்டுக்கொள்ளும் வடமொழிப் பெயர். கான் என்பது அரபுப் பெயர் இல்லையெனினும், மத்திய/தெற்காசிய நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களின் பெயர்களுக்குப் பின்வருவது. இதுதான் மார்க்சீயவாதியான உங்கள் பெயரின் காரணத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வக்கோளாற்றுக்குக் காரணம். விரும்பினால் விளக்கவும்.

    • ஆமாம் பாய்….
      ஜாமாத்காரர்களைப்போலவே அவாளும் சூடாயிட்டாள்…அவ்வளவு தான்…

  10. Brahmins are in top notch positions and surpassed other castes:
    Don’t you think the phrase – ‘survival of the fittest’ explains it?
    Even if they have been achieving it by my means of injustice, that is a good strategy(though it affects other castes, it benefits their own) which proves them that they are a exemplary race in humanity!!
    Well.. this is just a doubt.

    • மிஸ்டர் டவுட்டு…
      பல போலி பகுத்தறிவாளர், போலி கம்யூனிஸ்டுகள் ஆதாரமில்லாமல் பிராமனர்களைத்தூற்றுவார்கள்…

      நீங்கள் ஆதாரமில்லாமல் பீற்றிக்கொள்கிறீர்கள்….அவ்வளவுதான்…

      அது சரி…தமிழில் பின்னூட்டம் இட்டால் என்ன?
      why this aangila veri?

      • aangila veri பற்றி டவுட்டு கிட்ட கேட்ட டவுட்ட பற்றி சுப்ரமணிவாள் கிட்டயும் கொஞ்சம் கேளுங்க ஓய். மனுசன் aangilaத்த வுடமட்டேன்றாரு

        • நண்பரே…பிற்படுத்தப்பட்டோர் நல்ல மதிப்பென் எடுக்கிறார்களல்லவா…இது ஆரோக்கியமான விஷயம் தான்…இது தான் என் நிலைப்பாடு….இட ஒதுக்கீடு கட்டாயத்தேவை…

          ஆனால்…தருமியின் கட்டுரை பாரபட்சமானது…
          3.5% – எப்போது எடுக்கப்பட்ட கனக்கு?
          எந்த நரியின் மிஷன் அது?

          ஒரு சாரரை மட்டும் இதற்கு காரணம் காட்டி ஜாதி கொடுமையால் பலனடைந்த பலர் / தீவிரமாக வளர்த்த, வளர்க்கும் பலர் தப்பிக்கின்றனர்…

          இதைத்தான்நான் சொல்ல வருகிறேன்…

          • வீரன் அவர்களே,

            ஒன்று நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். பார்ப்பனர்களின் அட்டூழியத்தை தோலுரிப்பதன் அர்த்தம், சாதி இந்துக்களின் அட்டூழியங்களை நியாயப் படுத்த அல்ல. இருவருமே நச்சு கிருமிகள் தான் இந்த சமுதாயத்தை பொருத்தவரை. பார்ப்பனர்களின் கை இன்று ஓங்கி இருக்கவில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் பார்ப்பனியத்தின் கை? அதை பேணிப் பாதுகாக்கும் இந்து மதத்தின் கை? (இப்படி சொல்வதால் நீங்கள் நான் ஒரு நாத்திகன் என்றோ, முஸ்லீம் கிருத்துவன் என்றோ முட்டாள்தனமான முடிவுக்கு வரமாட்டீர்கள் என்று நம்புகிறேன்). மாற்றம் என்பது ஒருவரின் கை ஓங்கி ஒடுங்கி இருத்தல் அல்ல. ஒட்டுமொத்த தலைகீழான புரட்டிபோட்டு நடக்க வேண்டிய விசயம் அது. இந்து மத்தை பொருத்தவரை அது ‘பிறப்பின் அடிப்படையில் மனிதனை’ வகைப் படுத்தும் அயோக்கியமான கோட்பாட்டினை தூக்கி எறிவதில் இருந்து தொடங்க வேண்டும்.

        • நீங்கள் பார்ப்பன ஜாதி எதிர்ப்பாளரா? மேலே படிக்காதீர்கள்…

          ஜாதி வேறுபாடற்ற சமூகம் வேண்டும் என்று விரும்புபவரா?

          ஜாதி கொடுமையை நீக்க முதல் தேவை பார்ப்பன எதிர்ப்பு…
          அதில் சமூகம் வெற்றியும் பெற்றுள்ளது…

          அடுத்த நிலைக்கு செல்ல மற்ற ஓநாய்களையும் அடக்க வேண்டும்…
          குடுமி மட்டும் போதாது…
          குடுமி அறுந்து சமூகத்தின் கையில் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன…

          அனால்…இதற்கு ஜாதி எட்கிர்ப்பாளர்கலுக்கு மனம் வர மாட்டேன் எஙிறது அன்பதே என் ஏக்கம்…

          • மிக நேர்த்தியான முறையில் சாதி கொடுமையை கையாண்டுள்ள வரிகள்…

            சமுதாய வர்க்க பேதங்கள் குறித்தான பொது மக்களின் கவலைகள் ,அனைத்து மேல் சாதிகளுக்கும் பொதுவான விமர்சனங்களாக எழும்போதே அவற்றிற்கான தீர்வு கிடைக்குமேயன்றி, குறிப்பிட்ட ஒற்றை சாதிக்கான எழுத்தியல் அல்லது பேச்சு வகை விமர்சனமாக வெளிப்படுவது, இந்த நாடு வழங்கியுள்ள எழுத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்கான சான்றாக இந்திய வல்லரசுக்கு வேண்டுமானால் பயன்படுமே தவிர, சமுதாய மாற்றங்களை ஒரு போதும் நல்காது…

          • //நீங்கள் பார்ப்பன ஜாதி எதிர்ப்பாளரா? மேலே படிக்காதீர்கள்…//

            வீரன் அவர்களே,
            பிலால் முகமது டெக்னிக் என்றால் என்ன சற்று நெட்டில் தேடிப் பாருங்கள். இங்கு வினவில் ‘அவா’ போடும் பெரும்பாலான கமெண்டுகள் எல்லாம் அந்த மாதிரியான வகைகளே. சுருக்கமாக சொல்லப் போனால் தம் இனத்தின் மீது வரும் விமர்சனங்களை எல்லாம்,அப்படியே மற்றவர்களின் மீது மடைமாற்றிவிடுவது. இங்கு பதிந்துள்ள அனைத்து பின்னூட்டங்களையும் பார்த்தால் உங்களுக்கு எளிதில் புரியும். எங்கெல்லாம் பார்ப்பன பம்மாத்து பேசப் படுகிறதோ, அங்கேயெல்லாம் ஆதிக்கசாதி,இஸ்லாம்,கிருத்து மதம் இளுக்கப படும். ஆனால் இதே நபர்கள் ஒரு போதும் ஆதிக்கசாதி,இஸ்லாம்,கிருத்து சார்ந்த கட்டுரைகளின் மறந்தும் கூட ‘பார்ப்பனியத்தையோ’, இந்து மதத்தையோ இழுக்கமாட்டார்கள்.

        • indha katturaila neraya flaws irukku,IIT/IIMs pathi pesum pothu.

          General Quotavula vara ellarume brahmins kedayathu,ella statela irunthum neraya caste groupsla irunthu makkal select aaguraanga.TNlernthu mattum thaan most people brahminsa iruppanga,adhu yennu enakku theriyathu.

  11. பார்ப்பனர்கள்னு சொன்னா மனம் நோகுதுன்னு சொல்ற அவாளுக்கு எத்தன தடவதா விளக்கம் சொல்றது.முன்னமேயே சொன்னதுதான் இது.
    ”இழிவு படுத்தும் நோக்கத்தில் சொல்லப்படுவது அல்ல பார்ப்பனர் என்ற சொல்.பிராமணர்-Brahman- Brahmin -என்ற வட மொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்தான் பார்ப்பனர் எனபது.அது மட்டுமல்ல பிராமணர் என்று சொல்லும்போது அவர் பிரம்மனின் தலையில் பிறந்தவர்,உயர்ந்த பிறவி,ஏனையோர் தாழ்ந்த சாதி சூத்திரன் பஞ்சமன் என்ற கட்டுகதையைஎல்லாம் ஒப்புக் கொள்வதாகிறது.எனவேதான் பிறவியிலேயே இழிவு கற்பிக்கப்படுவதை மறுக்கும் வகையில் மான உணர்வு உள்ளோர் பிராமணர் என்பதை விடுத்து தமிழ் சொல்லான பார்ப்பனர் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள்.ஆகவே பிறரை இழிவு படுத்துவதற்கு அல்ல தம் மீது இழிவு சுமத்தப்படாமல் இருக்கவே பார்ப்பனர் என்ற சொல்.”

    பழந்தமிழ் இலக்கியங்கள் அவர்களை பார்ப்பனர் என்றே சொல்கின்றன.அவாள் உத்தரவு போடுற மாரிஎல்லாம் அவர்களை அழைக்கமுடியாது.எதார்த்த உலகத்திலும் அவர்கள் பிற சாதி மக்களிடம் பேசுறப்ப ”சாமி” ன்னு அவர்களை கூப்பிடுவாங்க.அப்பத்தா அவர்களும் பார்ப்பனர்களை சாமின்னு சொல்வாங்கன்னு.ஒரு முறை அவனை சாமின்னு கூப்பிட பழக்கிட்டா போதும்.அப்புறம் இவுங்க சாமிய கட் பண்ணிருவாங்க. வெள்ளைக்காரன் கூடத்தான் தன்னை யுவர் எக்சலன்சி யுவர் ஆனர் என்று கூப்பிட சொன்னான். பஞ்சகச்சமும் டர்பனும் கட்டிகிட்டு அதுக்கு சம்பந்தமே இல்லாம கோட்டும் போட்டுக்கிட்டு அவன் காலை நக்கி பிழைத்த நயவஞ்சகர்கள் அப்படித்தான் கூப்பிட்டார்கள்.ஆனால் மானமுள்ள மக்களோ ”போடா பரங்கி”என்று பொங்கி எழுந்ததால்தான் நாட்டை விட்டு ஒழிந்தன வெள்ளை ஆதிக்க நாய்கள்.

    • உங்கள் பதிலை புக்மார்க் செய்துவைத்துகொள்ளுங்கள் அன்பு. மீண்டும் இதே கேள்வியை ஒன்னுமே தெரியாத மாதிரி வேறொரு கட்டுரையில்,யாராவது கேட்டு வைப்பார்கள். அப்போ ஜஸ்ட் ‘காபி பேஸ்ட்’.

    • பார்ப்பனர் என்று சொல்லுவது எந்த வித மாறுபட்ட பொருளையோ, அவமானகரமான அர்த்தத்தையோ தருவதில்லை… இன்றைய கால கட்டங்களில் விளக்கி ஏற்று கொல்லப்பட்ட ஒரு குறிப்பிட்ட சாதியை குறிக்காது, குறிப்பிட்ட பண்புகளை உடைய நடவடிக்கையில் ஈடுபடுவோரை குறிப்பதாக தான் இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் பயன்படுத்துகின்றனர்…
      தீண்டாமைமை எண்ணம், அயல் மத துவேசம், வர்க்கப்பிரிவினை எண்ணம் உடைய அனைவரும் பார்ப்பனர் அல்லது கருப்பு பார்ப்பனர் என்று வினவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளனர்…
      \\பழந்தமிழ் இலக்கியங்கள் அவர்களை பார்ப்பனர் என்றே சொல்கின்றன\\
      சுலபமாக பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் ஆரியர்கள் என்று விளிக்கப்படும் பார்ப்பனர்களுக்கும் உள்ள தொடர்பை ஒப்புவதாக உள்ளது இந்த கருத்து…
      தமிழ் இலக்கியங்கள் பொதுவாக ‘அந்தணர்’ என்ற சொல்லாட்சியையே பயன்படுத்தி உள்ளன…

      \\ பிற சாதி மக்களிடம் பேசுறப்ப ”சாமி” ன்னு அவர்களை கூப்பிடுவாங்க\\
      “சாமி” என்ற சொல் அந்தணர்களை நோக்கி மட்டும் கூறப்பட்டதல்ல. அந்த கால கட்டங்களில் அதிக பொருளும், ஆள் பலமும் படைத்த மேல் சாதி என கூறிக்கொண்ட அனைவரும் சாமி, ஆண்டே, எசமான், ஐயா, முதலாளி என்ற சொல் வழக்குகள் இருந்துள்ளன…

      இங்கே கருத்து மழை பொழியும் சமத்துவ கனவான்கள் பெரும்பாலோனோர் குடும்பங்களில் கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு சாமியோ, ஆண்டேயோ, எசமானோ, ஐயாவோ, இன்று வரை ஒரு முதலாளியோ உண்டு என்பது கசப்பான உண்மை.. மறுப்பார் இல்லை…

      சமுதாய வர்க்க பேதங்கள் குறித்தான பொது மக்களின் கவலைகள் ,அனைத்து மேல் சாதிகளுக்கும் பொதுவான விமர்சனங்களாக எழும்போதே அவற்றிற்கான தீர்வு கிடைக்குமேயன்றி, குறிப்பிட்ட ஒற்றை சாதிக்கான எழுத்தியல் அல்லது பேச்சு வகை விமர்சனமாக வெளிப்படுவது, இந்த நாடு வழங்கியுள்ள எழுத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்கான சான்றாக இந்திய வல்லரசுக்கு வேண்டுமானால் பயன்படுமே தவிர, சமுதாய மாற்றங்களை ஒரு போதும் நல்காது…

    • //அவன் காலை நக்கி பிழைத்த நயவஞ்சகர்கள் அப்படித்தான் கூப்பிட்டார்கள்.ஆனால் மானமுள்ள மக்களோ ”போடா பரங்கி”என்று பொங்கி எழுந்ததால்தான் நாட்டை விட்டு ஒழிந்தன வெள்ளை ஆதிக்க நாய்கள்.//

      அருமையான வரிகள்.

    • // பஞ்சகச்சமும் டர்பனும் கட்டிகிட்டு அதுக்கு சம்பந்தமே இல்லாம கோட்டும் போட்டுக்கிட்டு அவன் காலை நக்கி பிழைத்த நயவஞ்சகர்கள் அப்படித்தான் கூப்பிட்டார்கள். //

      மேலே கூறிய கெட்டப்பில் வெள்ளைக்காரனை துதித்தும், எதிர்த்தும் இருந்தவர்களில், பார்ப்பனர்களைத் தவிர வேறு யார் யாரெல்லாம் அடக்கம் என்று கணக்கெடுத்தால் விளைவு விசித்திரமாக இருக்கும்.

      • அப்படி ஒரு லிஸ்ட் தயாரித்தால் இன்றுள்ள பல ‘பகுத்தறிவுச்செம்மல்’ களின் டவுசர் கிழிந்துவிடும்…டங்குவாரு அந்துடும்…

        அப்படியெல்லாம் செய்யமட்டார்கள் நம் பகுத்தறிவுக்குஞ்சுகள்…

      • பார்ப்பனர்கள் என்று குறிப்பிட்டு சொல்லாதபோதும் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது.பஞ்சகச்சம் யாரை குறிக்குதுன்னு சண்டைக்கு வர வேணாம்.அந்த கால கட்டத்தில் சாதி வேறுபாடின்றி மேட்டுகுடி களவாணிகள் ,சாரி , கனவான்கள் எல்லோருமே பஞ்சகச்சம் வைத்து வேட்டி கட்டுவதுதான் பழக்கமாக இருந்தது.

        நாட்டை காட்டிக் கொடுத்த அந்த கைக்கூலிகளில் நாம் சாதி வேறுபாடு பார்ப்பதில்லை.கழுத விட்டையில எது சிறந்தது என்ற ஆராய்ச்சி தேவையில்லை.

        • If those guys did not go and work for the british,today we would have been like Zimbabwe/Afghanistan.The country with superior technology and money is what ll triumph.This is the reality,if ur enemy is more powerful than you,it is makes sense to join him and learn from him.

          Thats why we had scienitists like Raman/hargobind Khurana and so many of our people are in the west doing research and there is so much respect for our people everywhere in the world.It is because of those guys that we are more advanced than many countries in the world,else we would have also been like african countries.

          You see Japan,USA dropped an atom bomb on them.Did they get angry and try to attack USA back,instead they joined them and look at where they are today.

          If you decide everything emotionally,we would be where Eazham Tamils are today.You have to be getting ahead in life and look for ways to do it.if you still sit and think about the past,time ll just pass and nothing ll happen.

      • கைல கட்ட துப்பாக்கி வச்சு கிட்டு பிரிட்டிஷ் ஆர்மி ல இருந்த பிற ஜாதி புல்லுருவிகள்ள எல்லாம் என்ன பண்றது

    • yes I agree.But if vinavu says aomething about MUSLIMS AND CHRISTIANS,OR devar,vanniar ,why he is not using their cast? any fear about them.

      Also in TN most of the people use tulakkargal,parayargal for mentioning the Muslims and Christians.But vinavu not using this? This also from the past peoples are commonly in this.Could you pls explain in genuine why vinavu is not using?

    • அந்த மானமுள்ள மக்கள் எப்படி பிரிட்டிஷ் ஆட்சி இந்தியால வர விட்டாங்க. so called வீர பரம்பரை எல்ல்லாம் வேற வேளைக்கு போய்டன்களோ !!

  12. Anbu

    I dont find the word paarpanan hateful or offensive at all.I know about the saamy thing but i wud like to remind one thing,only my grandfather and grandmom call our samsaari by name,my father and all call him neenga,vaanga only and he also calls my dad by name.

    • அய்யய்யே,சுப்புணி ஒன்னோட ரவுசுதான் பெரிய இம்சையா இருக்குன்னா இந்த தாத்தா பாட்டி பெரும தாங்க முடியலையே.சரி இந்த தாத்தா பாட்டி அம்மா வழியா அப்பா வழியா.

      ஆனா ஒரு விசயத்துல ஒன்ன பாராட்டனும் சுப்புணி.நீ வினவுல போட்ட கமெண்டுல இன்னைக்குத்தா உண்மைய சொல்லியிருக்கே.பாப்பனன் ங்கிறது கெட்ட வார்த்தை இல்லைன்னு.இத கொஞ்சம் மத்த அம்பிகளுக்கும் சொல்றது.அவா பாவம் ரொம்பத்தா கொந்தளிக்கிறா.கையாலாகாத கோபத்துல வெட வெடககுற அவாள பாத்தா எங்களுக்கே பாவமா இருக்கு.

      • dei sombu

        unna maadhiri vethu payalaye rausu panna vittachu,nee idhu varaikkum enna unmai solli irukka,inga yaarukkum kovam illa?avungalukku ellam varutham avlo thaan.

        Kayalagatha groupu unga groupu thaan,athaan website ellam vechu thittureenga.

        • \\dei sombu unna maadhiri vethu payalaye rausu panna vittachu nee idhu varaikkum enna unmai solli irukka,inga yaarukkum kovam illa?avungalukku ellam varutham avlo thaan.
          Kayalagatha groupu unga groupu thaan,athaan website ellam vechu thittureenga.//

          எவ்வளவு நாகரீகம்.இதப்படிக்கிற பார்ப்பனர்கள் சுப்புணியின் இந்த கழிசடைத்தனத்தை ஏன் கண்டிக்கல.பார்ப்பனர் என்ற ஒத்த சொல்லுக்கே கோவப்படுற அவாள் இதுக்கு என்ன சொல்றாங்க.

          சுப்புணி,உனக்கு ஏன் இப்படி ஆத்திரம் கொப்பளிக்குதுன்னு தெர்யும்.ஏற்கனவே நீ சொன்ன பொய்யையெல்லாம் ஆதாரத்தோட வெளிக்காட்டுநேன்னு தானே.இதுல நான் பொய் சொல்றேன்னு கூசாம அடிச்சு விடுற.

          நான் சொல்வதெல்லாம் உண்மை.உண்மையை தவிர வேறில்லை.நான் சொன்னதுல எது பொய்யின்னு எடுத்துக் காட்டிரு.அப்டி காட்டிட்டா உன்கூட வாதம் பண்ண வரல.

          எதுத்து வாதம் பண்ண முடியாம இப்படி திட்டியாவது என்ன தொரத்தலாம்னு பாக்குற.அது நடக்காது.அப்புறம் அது என்ன வெறும்பய.ஒரு முழுமையான மனிதனாக வாழத்தேவையான அனைத்தும் என்னிடம் உள்ளன.

          • what did u prove against me? I clearly said what is what? You think you proved something against me.If you think what you had mentioned about my grandparents and ancestral property is a proof that i lied,i feel sorry for you.i have no reason to justify or prove anything to you, but i have said what i have to,if u still think i am lying,i dont care about it.

            First thing why i called u sombu was because in the first discussion,u spoke about my grandparents in an insulting tone and you have done the samething now again.Thats why i called you sombu.

            But the issue is i still dont understand why my personal life and its realities has anything to do with the discussion.You are saying,i dont know how to discuss and that i dont have arguments,the reality is that you are the one hiding behind distorted history/brahmin bashing,making fun of brahminical things,personal attack on brahminical customs,veiled attack on women etc etc,infact you are the coward who cannot handle the issues face to face and you keep talking about history and facts with a clear bias and hate
            all the time.

            The difference between you and me is,I abuse directly and you do so by hiding behind your conspiracy theories.

            PS: No brahmin ll come and defend/interfere in any other brahmin’s arguments.This is the fundamental thing you quota fuckers never understand,u have to make it on your own and if u let others do it for you,it is called begging.we exist on our own and not with anyone’s support.

            • //PS: No brahmin ll come and defend/interfere in any other brahmin’s arguments.This is the fundamental thing you quota fuckers never understand,u have to make it on your own and if u let others do it for you,it is called begging.we exist on our own and not with anyone’s support//

              Is this the way of replying thing you learnt from your parents and grand parents, Mr subramaniam?

            • // PS: No brahmin ll come and defend/interfere in any other brahmin’s arguments.This is the fundamental thing you quota fuckers never understand,u have to make it on your own and if u let others do it for you,it is called begging.we exist on our own and not with anyone’s support.//

              very high claim, and insulting..

              • ஒருமுறை ‘மோடி பிரதமர் ஆவான்.. அப்போ நீங்க எல்லாம் எங்க போய் இருப்பீங்கன்னு பாக்குறேன்’ என்ற சுப்பியின் கேள்விக்கு ‘உன் சமாதில மேல’ அப்டீன்னு நான் சொன்ன பதிலை நீக்கிய வினவே…’Quota fucker ‘ என்ற அவனுடைய இந்த திமிரை மட்டும் அனுமதித்தது ஏன்? அது english ல இருக்கு அப்டீங்குறதனாலா? இல்லை சுப்பிரமணி மற்றும் தன்னை மெச்சும் பார்ப்பானின் தரம் என்ன என்பதை வாசகர்களுக்கு உணர்த்தவா?
                பழமொழி : தன்ன மெச்சுமாம் தென்னை மரத்து கொரங்கு..

                • நண்பரே கோட்டா பத்தி சுப்புணியின் ஆபாச கூற்றை moderate பண்ணாம வெளியிட்ட வினவுக்கு நன்றி சொல்லணும்.பார்ப்பனர்களின் உண்மை முகத்தை ஊசலாட்டமான மனநிலையில் உள்ளோர் புரிந்து கொள்ள அது உதவும்.அந்த கூற்றுக்கு அந்த பாணியிலேயே நாம் பதில் சொல்ல முடியாது.

                  நாய் நம்மள கடிச்சுருச்சு என்பதற்காக நாயை நாம் திருப்பி கடிக்க முடியாதில்லையா.

                  • கரெக்ட் தான் அன்பு. அதுவும் வெறி பிடிச்ச நாய்களை திரும்பியே பார்க்க கூடாது.

            • சுப்புணி,
              பொய் பேசுறத உடவே மாட்டியா.உன்னோட grandparents ஐ இன்சுல்ட் பண்ற மாதிரி நான் எதுவுமே சொன்னதில்லை.நானயமானவனா இருந்தா எடுத்துக் காண்பி.உண்மையை சொல்றதுன்னா அவர்களை வயதில் பெரியவுங்க என்ற முறையில மரியாதை குடுக்க வேண்டியது எம்மோட கடமை. அவர்களை இகழ்ச்சியா பேச எனக்கு அவர்கள் மேல தனிப்பட்ட விரோதம் என்ன இருக்கு.வாதங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லாம எதிராளிய திட்டுவதற்கு இப்படி பொய்யா தனிநபர் தாக்குதல்ன்னு சாக்கு சொல்ற.

              நீ என்னை திட்டுவது பற்றி மற்ற பார்ப்பனர்கள் கருத்தை கேட்டது அவர்கள் உதவி செய்ய கேட்டு கெஞ்சுவதற்கு இல்லை. எனக்கான வாதங்களை எடுத்து வைக்கும் ஆற்றல் எமக்கு உண்டு.நான் இவ்வளவு நாள் வாதம் பண்ணியும் இது உனக்கு புரியலையா.பார்ப்பனர் என்று சொல்றதே இழிவு படுத்துது ன்னு தாவிக் குதிக்கும் யோக்கியர்கள் எதிர் கருத்து சொல்பவர்களை ஒரு பார்ப்பனன் ”சொம்பு” என்றும் ”டா” போட்டும் திட்டுவது பற்றி கள்ள மவுனம் சாதிக்கும் நயவஞ்சகத்தை தோலுரிப்பதே அந்த வாதம்.

              ஒரு பார்ப்பனரின் வாதத்துல இன்னொரு பார்ப்பனர் தலையிட மாட்டார் ன்னு பீலா விட்டுக்கிட்டே நானும் அம்பி என்பவரும் டர்பன் பஞ்ச கச்சம் பத்தி விவாதம் பண்ணுறதுல பூந்துருக்க பாரு.கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்.உன்னோட புளுகு ஒரு நாள்தான் தாங்கும்.

              வாதங்களை நேரடியாக எடுத்து வைக்கும் நான் எப்படி கோழையாவேன்.என்னுடைய கருத்த எதன் பின்னாலும் மறைந்து கொண்டு சொல்லவில்லை.நீதா பொய் சொல்லி பிடிபட்டபோது ”what if i say the truth or lie, either ways is my testament fundamental,do u even know whether i am a real person or an internet bot.” என்று சொல்லி இன்டர்நெட் ரோபோவாக நடித்து தப்பிக்க பாத்த.நீதா வாதங்களை எதிர் கொள்ள வக்கில்லாத கோழை.நீ ரோபோவாகவே இருந்தாலும் கவலையில்லை.கம்ப யூட்டர் கூட செஸ் விளையாடுற மாதிரி உன்னை உருவாகிய அந்த பார்ப்பனியம் நிரம்பிய மூளையுடந்தான் விவாதம்.

              அப்புறம் நீங்கல்லாம் சொந்த கால்ல நிக்கிறதா பெருமை அடிச்சுருக்கிற.வரலாறு நெடுகிலும் பார்ப்பனர்கள் ஒட்டுண்ணி கூட்டம்தான்.உழைத்து வாழ்வது எங்கள் குல தர்மம்.உஞ்ச விருத்திதான் உங்கள் குல தர்மம்.மன்னராட்சி காலத்துல அவன்கிட்ட தானம் வாங்கித்தான அக்கிரகாரங்களை அமைத்தீர்கள்.அவன்கிட்ட ஆட்டைய போட்டதுதான உங்கள் சொத்து பத்து எல்லாம்.பூதானம்-நிலங்களை ஆட்டை- கோதானம் \யாரோட மாடுன்னாலும் ஓட்டிட்டு போயிடுறது/இப்படித்தானய்யா சொத்து சேர்த்தீர்கள்.
              இப்பவும் தர்ப்பை புல்ல தூக்கிட்டு திவசம்,காரியம் பண்ண அலையுறது யாரு.எழவு துக்கத்துல இருக்கவன்டையும் காசு பாக்குறதுக்கு பேரு சொந்த காலா.அர்ச்சன தட்ட தூக்கிட்டு வந்து பிச்சைஎடுக்கிரதுக்கு பேர் சொந்த காலா.முகூர்த்த நேரம் குறிச்சு கொடுத்துட்டு பிள்ளைவாள் உங்களுக்கு தெரியாதது இல்லை.நீங்களே பாத்து கொடுங்கோன்னு பல்லக் காட்டுறதுக்கு பேர் சொந்த காலா.இப்படி காசு பாத்து உடம்ப வளத்துக்கிட்டு மக்கள் வரிப்பணத்துல படிச்சுட்டு துட்டு பாக்க மேல்நாட்டுக்கு ஓடிப்போறதுக்கு பேர் சொந்த சம்பாதனை இல்லை.துரோகத்தின் சம்பளம் அது.

              அப்புறம் இட ஒதுக்கீடு பத்தி அசிங்கமா பேசியிருக்கிற.உன்னளவுக்கு தரம் தாழ்ந்து நான் எழுத மாட்டேன்.நாங்க கோட்டாவுல படிக்கிறது எங்க உரிமைன்னு உரத்து சொல்றோம்.அதற்கான நியாயங்களையும் இந்த வலையுலகில் பக்கம் பக்கமா எடுத்து சொல்லி இருக்கோம். எங்கே alms வாங்குறது எங்க உரிமைன்னு சொல்லு பாப்போம்.

              • நேரில் இருந்திருந்தால் உங்களை கட்டி தழுவியிருப்பேன் அன்பு. அருமை. அருமை.

                • ஆதரவுக்கு நன்றி தோழர்.

                  இத்தகைய ஆதரவு எதிரிகளின் ஏச்சு பேச்சுகளை புறந்தள்ளி ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக பேச மேலும் ஊக்கம் தருகிறது.நன்றி.

                  • துணிச்சலோடு கருத்துக்களை முன் வைத்ததற்கு நன்றியும் வாழ்த்துக்களும் அன்பு.

                  • ஆதியில் சாதியற்றவராய் வாழ்ந்த தமிழர்கள் மீண்டும் அந்த உன்னத நிலையை அடைய அன்பு, ம பொன்ராஜ் போன்றவர்களின் பணி பல்வேறு தளங்களில் விரிவடைய வேண்டும்.

                • Mr. Ponraj

                  I have a suggestion. Why don’t you prepare FACT Sheet about following repeated items and publish in separate section in Vinavu site. Any new joiner can readily refer it instead of asking repeated questions & you people giving repeated answers.

                  1) How the Brahmins in present scenario affects the growth of Dalit? some statistica figures, major continue activities, etc. Pl don’t give 1 or 2 incidence happened here & there as reference

                  2) How RSS is working against the Muslims in TamilNadu (may be South India)? How many Muslims are killed, how many are lost their business? etc

                  3) How Narendra Modi ruling is not good in last 5 years? (2002 incident is separate one)

                  4) Instead of waiting for Govt to change their policies, what a common man can do practically to stop liberalization & stop privatesation?

              • “பார்ப்பனர்கள் ஒட்டுண்ணி கூட்டம்தான்” – சரி அப்படிஏ வச்சுக்குவோம். மத்த ஜாதி (including Dalits) முட்டாள் குரங்குகெல்லாம் எதுக்கு பரப்பான பத்திரிக்க சொல்றத கேட்கறிங்க. Why don’t you apply your common sense(hope they have) and elect a Govt that will support you????

                Fact is all these caste people are now-a-days clever to elect the MLAs based on their caste who can do favour to them (illegally/corrupted) in their business and protect their cast people. Is it not?

  13. இந்தக் கட்டுரை எதைப்பற்றியது? ஜெயலலிதாவின் நிர்வாக சீர்கேடு பற்றியது. அவர் ஆட்சியல் தமிழகம் நாசாமாக போய்கொண்டிருப்பது பற்றியது.

    விவாதம் அதைப்பற்றியா நடக்கிறது?

    இதுவே கருணாநிதி ஆட்சியாக இருந்தால் இன்னேரம் ஒவ்வொருத்தனும் தமிழ்நாட்டை முன்னேத்த ஆலோசனை எழுதியிருப்பாங்க. இல்லை கருணாநிதியின் குடும்ப அரசியல், பிழைப்புவாதம் பற்றி மைல்கணக்காக எழுதியிருப்பாங்க, இல்லையெனில் திராவிட அரசியலால் எப்படி தமிழகம் சீரழிந்து போனது என்று வகுப்பு எடுத்திருப்பாங்க, கடைசியாக இட ஒதுக்கீடு அநியாயத்துனாலதான் இது போல நடந்துவிட்டதுன்னு முடிச்சிருப்பாங்க

    ஆனால் நடப்பது அவா ஆட்சியாச்சே, போயஸ் தோட்டத்துலேருந்து தமிழக அதிகார/நிர்வாக தலைமை வரைக்கும் இருப்பது அவாளாச்சே

    அதனால நைசாக ஜெயலலிதாவையும் மற்றவாளையும் பற்றி பேசுவதை கவனமா தவிர்த்துவிட்டு பார்ப்பனர்களை இழிவு செய்துவிட்டதைப்போல ஒரு பொய்த்தோற்றதை திட்டமிட்டு உருவாக்கி அந்த வழியில் மொத்த விவாதமும் ஹைஜேக் செய்யப்பட்டுவிட்டது.

    இதுதாண்டா பார்ப்பன பம்மாத்து….!

    • //இந்தக் கட்டுரை எதைப்பற்றியது? ஜெயலலிதாவின் நிர்வாக சீர்கேடு பற்றியது. அவர் ஆட்சியல் தமிழகம் நாசாமாக போய்கொண்டிருப்பது பற்றியது.விவாதம் அதைப்பற்றியா நடக்கிறது?//

      பார்ப்பனீயத்தை இழுக்காமல் அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை கண்டிக்க வலு இல்லையா உங்களுக்கு…
      பதிவரின் நோக்கம் ஆட்சி அவலங்கள் மட்டுமென்றால் தலைப்பில் பார்ப்பனீயத்தை சொருக அவசியம் இருந்திருக்காது.. வினவின் கோட்டப்படி இந்த பதிவு பார்ப்பனீய பழிப்புரைகளை சுமந்து வரவேண்டும் என்று கூறி இருப்பார், அவரும் தலைப்பில் பார்ப்பனீயத்தை சொருகி இருப்பார்… அவ்வுளவுதான்…

      \\இதுவே கருணாநிதி ஆட்சியாக இருந்தால் இன்னேரம் ஒவ்வொருத்தனும் தமிழ்நாட்டை முன்னேத்த ஆலோசனை எழுதியிருப்பாங்க\\
      பதிவர் ஷத்திரிய/சூத்திர/பஞ்சம அல்லது இசை வேளாள பம்மாத்து என்று தலைப்பில் சொருகி இருக்க முடியுமா?

      \\நடப்பது அவா ஆட்சியாச்சே, போயஸ் தோட்டத்துலேருந்து தமிழக அதிகார/நிர்வாக தலைமை வரைக்கும் இருப்பது அவாளாச்சே\\
      சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு துறை, ஆட்சி துறை, காவல் துறை, வருவாய் துறை, பொது துறை ஊழியர்களில் எத்தனை சதவீதம் அவாள் இருக்கிறார்கள் என்று புள்ளி விவரம் குறிப்பிட்டு உங்கள் கருத்துக்கு வலு சேர்க்கும்படி விழைகிறேன்…

      \\பார்ப்பனர்களை இழிவு செய்துவிட்டதைப்போல ஒரு பொய்த்தோற்றதை திட்டமிட்டு உருவாக்கி அந்த வழியில் மொத்த விவாதமும் ஹைஜேக் செய்யப்பட்டுவிட்டது. \\
      வினவில் அ.தி.மு.க ஆட்சியை விவாதித்து ஒரு பலனும் இல்லை என்பது தெரிந்தே, விவாதத்தை வழக்கமான சாதி சாயத்தை பூசி எடுத்து செல்ல விரும்பியுள்ளனர்.. எதிர்பார்த்தது நடக்கிறது… நீங்கள் ஏனையா புலம்புகிறீர்…

      • மறுபடியும் அதே புலம்பல், அதே பம்மாத்து.

        இங்கே பார்பனியத்தை இழுத்து வந்த ஒன்றை எடுத்துப்போட்டு அது எப்படி பார்ப்பனியம் அல்ல என்று பேசினால் பரவாயில்லை, அப்புடி யாரும் பேசக்காணோம்! ஏன்???

        அது என்ன பார்ப்பனிய பழிப்புறை? எங்கே ஒரே ஒரு பழிப்புறையை பதிவிலிருந்து எடுத்து போடுங்களேன்

        இது ஏன் பார்ப்பன பம்மாத்து என்று தலைப்பிட வேண்டும் என்பதை இங்கே தேட முடியாது, அவாள் ஆட்சிதான் நல்லாட்சி என்று ஜெ ஆட்சிக்கு வந்தவுடன் சொம்படித்த பார்ப்பன ஊடகங்களை போய் கேளும்.

        அதிமுக என்ன ஜனநாயக கட்சியா? இல்லை ஜெயா ஒரு ஜனநாயகவாதியா, பச்சையான சர்வாதிகாரி, அதை விளக்கும் உதாரணங்கள் இந்த கட்டுரையிலேயே இருக்கிறது. இப்போதைக்கு அவரும் மைலாப்பூர் மாபியாவும்தான் தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கின்றனர். என்னமோ இது தெரியாத மாதிரி, சட்டமன்றத்துல பார்ப்பான் எவ்வளவு, அதிகாரியில பார்ப்பான் எவ்வளவுன்னு புள்ளிவிவரம் கேட்கிறீர்…. இதுவே ஒரு பம்மாத்துதான் 😉

        முதலில் ஆட்சியை பற்றிய விமரிசனங்களுக்குள் போகனும் அப்புறம் சாதிச்சாயம் பூசுறானா இல்லையான்னு பாக்கனும்.அதை விட்டுட்டு, பார்ப்பானை இழிவு படுத்தி எழுதிவிட்டதாக பொய் சொல்லி மூக்கை சிந்தினா அதுக்கு பேரு என்ன?

        இறுதியாக எப்படி கருணாநிதி ஆட்சியை பற்றி பேசும்போது அவர் குடும்ப அரசியலை தொடாமல் பேசவே முடியாதோ, எப்படி மோடி ஆட்சியை இந்து மதவெறி மதிப்பீடுகளை விட்டு பரிசீலிக்க முடியாதோ, எப்படி காங்கிரஸை அமெரிக்க அடிமைத்தனத்தை விட்டு விமரிசிக்க முடியாதோ அதே போல இந்த அதிமுக ஆட்சியை பார்ப்பன/பார்ப்பனிய பின்புலம் இல்லாமல் பேசவேமுடியாது. இதுதான் வரலாறு. இந்த யதார்த்தை புரிந்து கொள்ளாமல் சும்மா பார்பானை திட்டுறான்னு பேசினா ஒண்ணு அரசியல் ஞானசூன்யம் இல்லேன்னா பார்ப்பன பம்மாத்து

        • ellam sari,

          Aaana inga sonna matterla makkala baadhikura vishayam karunanidhiyin kudumba aatchi mattum thaan.Modi,Congress,Jayalalitha-ivungala pathi ellam irukkura extra kuttrachaatunala makkalukku endha prachanayum illa.

          Cho,Subramanian Swamy ivunga pecha ketta enna thappu,avungalala TNukku nalladhu nadakkaathunnu yen theermanam pannureenga.

          Mu.Kaavukku ethanayo flaws irukku,kudumbam adula oru panguthaan.

          Adhu sari,sasikala pecha kettu velai senja prachanai illaya.prachanai cho,subramanian swamy kitta mattum thaana.

        • //இது ஏன் பார்ப்பன பம்மாத்து என்று தலைப்பிட வேண்டும் என்பதை இங்கே தேட முடியாது, அவாள் ஆட்சிதான் நல்லாட்சி என்று ஜெ ஆட்சிக்கு வந்தவுடன் சொம்படித்த பார்ப்பன ஊடகங்களை போய் கேளும்//

          ஊடகங்களுக்கிடையேயான கருத்தியலை நிலைநாட்டும் போட்டிக்கு வினவு பலியாகிவிட்டது என்று சொல்வதை ஏற்க முடியாது…

          //அதிமுக என்ன ஜனநாயக கட்சியா//
          உங்கள் அகராதியில் எந்த கட்சியை நீங்கள் ஜனநாயக கட்சி என்று ஒத்துகொண்டிருக்கிரீர்கள்… இந்திய ஜனநாயக கம்யுநிச்டுக்கள் கூட உங்கள் பார்வையில் போலிகள்தானே.. இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்காத, தேறுதல் இல்லாத சில புரட்சி குழுக்களை ஜனநாயக கட்சி என்பீரோ… 🙂

          //சட்டமன்றத்துல பார்ப்பான் எவ்வளவு, அதிகாரியில பார்ப்பான் எவ்வளவுன்னு புள்ளிவிவரம் கேட்கிறீர்…. இதுவே ஒரு பம்மாத்துதான் //

          ஆதாரத்தோடு விளக்க சொன்னால் பம்மாத்து என்று சொல்லுவதுதான் அசல் பம்மாத்து..

          234 பேரடங்கிய சட்டப்பேரவையில் ஜெயாவை தவிர வேறு எந்த பார்ப்பனருமே கிடைக்கலையா குறிப்பிட்டு வறுத்தெடுக்க…தேடிப்பாருங்க நம்ம எஸ்.வீ சேகர் மாதிரி (ஆங்.. அவருதான் பூட்டருள்ளே…) ஒன்னு ரெண்டு இருக்க போவுது…

          பாரப்பா பழனியப்பா, பம்மாத்தாம்..பம்மாத்தாம்…
          பதிவதப்பா பெரியதப்பா… பதில்கள் தான் நெருடுதப்பா…
          அரிதாரம் இருக்குதப்பா… ஆதாரம் இல்லையப்பா…
          புள்ளி விவரம் இல்லையப்பா.. புழுதி வாரி தூற்றுவோமப்பா…
          பார்ப்பானே இல்லாத ஆபீசிலும், பார்ப்பனியம் வேண்டுமப்பா..
          பல்லிளுத்து, பகடி செய்து, திட்ட எமக்கு பார்ப்பனீயம் வேண்டுமப்பா…

          ஆதாரம் இல்லாமல் ஒரு இனத்தை, சாதியை, மதத்தை குற்றம் சாட்டி எழுதப்படும் பதிவுகளை போலிப்பதிவுகள் என்று சொல்லலாமா… எழுதுபவர்களை பதிவுலக போலிகள் எனலாமா…

          நீங்கள் கம்யுனிசத்தில் போலிகளை அடையாளம் காண கற்றுகொடுத்தீர்கள், நாங்கள் பதிவர்களில் போலிகளை அடையாளம் கண்டோம்…

          //இறுதியாக எப்படி கருணாநிதி ஆட்சியை பற்றி பேசும்போது அவர் குடும்ப அரசியலை தொடாமல் பேசவே முடியாதோ,//
          இது குறுகிய பார்வை… திட்ட வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் தான் நேற்றைக்கு வந்த குடும்ப அரசியல் கண்ணுக்கு தெரியும்… விமர்சனம் என்று ஆரம்பித்தால் எவ்வுளவோ எழுதலாம்… மகன்கள் தலையெடுக்கும் முன்னர் இருந்த கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையை மறந்துவிட்டு கருணாநிதியை விமர்சனம் செய்யவே முடியாது…

          //இந்த அதிமுக ஆட்சியை பார்ப்பன/பார்ப்பனிய பின்புலம் இல்லாமல் பேசவேமுடியாது//
          எந்த ஒரு விடயத்தையுமே சாதி சாயம் இல்லாமல் பேசவே முடியாது – என்பதே இதன் பொருள்…

          கலைஞ்சர் தொலைக்காட்சியில் “நடப்பது என்ன” என்று ஒரு நிகழ்ச்சி பாருங்கள்… அதிமுக ஆட்சியை அங்குலம் அங்குலமாக, அணு அணுவாக விமர்சனம் செய்கிறார்கள், பார்ப்பனிய வசவுகள் எதுவுமே இல்லாமல்… “பார்ப்பன கூட்டம் நடுநடுங்க வேண்டும்” என்று சொல்லுகிற ஒரு கட்சி தலைவரின் ஊடகம் ஒரு பொது விமர்சன நிகழ்வில் சாதி வன்மம் இல்லாமல் விமர்சிப்பதுதான் சரியான ஊடக அணுகுமுறை…

          பாசிசம், மைலாப்பூர், மாபியா, பார்ப்பன கும்பல் போன்ற ஜிமிக்கி மசாலா வார்த்தைகள் இல்லாமல் இந்த ஆட்சியை விமர்சிக்கும் நோக்கமும் இல்லை, அதற்கான கருத்து வளமும்,கிரௌண்ட் வொர்க்கும் இல்லை உங்களிடம்… கலைஞ்சர் டிவி பார்த்து கற்று கொள்ளுங்கள்…

          • மனிதன், பிராமின் பாஷிங்கா….

            மேல சுப்ரமணி எழுதியிருப்பதை பாருங்க

            PS: No brahmin ll come and defend/interfere in any other brahmin’s arguments.This is the fundamental thing you quota fuckers never understand,u have to make it on your own and if u let others do it for you,it is called begging.we exist on our own and not with anyone’s support.

            இதுக்கு பேரு என்ன? நாங்க கோட்டாத் தாயோளின்னு இவன் சொன்னா இவனை என்னான்னு சொல்ல்லாம்?

            பாப்பன பம்மாத்துன்னு தலைப்பு வச்சதுக்கே பிராமின் பேஷங்குனு இந்த குதி குதிக்கிறானே, காலங்காலமா சாதிய அமைப்போட தலையில உக்காந்துகிட்டு தன்னைத்தவிர அனைத்து மனிதனும் தாழ்ந்தவன்னு பிரச்சாரமும் பிராக்டிசும் செய்யறவனை மத்தவனெல்லாம் என்ன சொல்லலாம்?

            இல்ல இப்படி ஒரு சாதி வெறி பிடிச்ச மிருகத்துதோட கூடிக் குலாவும் உங்களை என்ன சொல்லலாம்?

          • பார்ப்பனர்கள் மட்டும் தான் பப்ளிக்காம். மனிதன் சொல்லிட்டாப்ல.

            • உங்கள் புரட்சி கருத்துக்களை நீங்கள் யார் மீது தூவுகிரீர்கள், பார்ப்பனர்கள் மீதா பப்ளிக் மீதா… பார்ப்பனர்கள் மட்டும் பப்ளிக் ஆக முடியாது… ஆனால் அந்த பப்ளிக்கில் சுப்பரமணியநும் உண்டு, நீங்களும் நானும் உண்டு…

              • நாங்க இங்க தமிழர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கிறோம் உங்கள் மீது எதையும் தூவவில்லை.

  14. அது எப்படி மனிதன், நான் முன்வைத்ததில் நைசாக பதில் சொல்ல முடியாத நழுவ்விட்டீங்க?

    @@@@@@@@@இங்கே பார்பனியத்தை இழுத்து வந்த ஒன்றை எடுத்துப்போட்டு அது எப்படி பார்ப்பனியம் அல்ல என்று பேசினால் பரவாயில்லை, அப்புடி யாரும் பேசக்காணோம்! ஏன்???

    அது என்ன பார்ப்பனிய பழிப்புறை? எங்கே ஒரே ஒரு பழிப்புறையை பதிவிலிருந்து எடுத்து போடுங்களேன்

    முதலில் ஆட்சியை பற்றிய விமரிசனங்களுக்குள் போகனும் அப்புறம் சாதிச்சாயம் பூசுறானா இல்லையான்னு பாக்கனும்.அதை விட்டுட்டு, பார்ப்பானை இழிவு படுத்தி எழுதிவிட்டதாக பொய் சொல்லி மூக்கை சிந்தினா அதுக்கு பேரு என்ன?

    காலங்காலமாக மன்னார்குடி மாபியா பிடியில் அதிமுக என்று சசிகலா கூட்டத்தை பார்ப்பன ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் எழுதிவந்த போது அதை யாரும் மறுக்கக் காணுமே?

    @@@@@@@@@@@

    இதுக்கெல்லாம் டீ இன்னும் வரல ஆனா அதே பொய்யுரை வருது

    ///ஆதாரம் இல்லாமல் ஒரு இனத்தை, சாதியை, மதத்தை குற்றம் சாட்டி எழுதப்படும் பதிவுகளை போலிப்பதிவுகள் என்று சொல்லலாமா///

    இதுக்கு பேருதான் ”கைய புடிச்சு இழுத்தியா” நானும் இந்த வெளாட்டை வெளாடலாம், ஆனா வெட்டியா இருக்கும் போது மட்டும்.

    —————————-

    ஜெயலலிதா சர்வாதிகாரின்னு ஒத்துகிட்டத்துக்கு அப்புறம் எதுக்காக அமைச்சர்ல புள்ளிவிவரம் எடுக்கிறீங்க? இல்லையின்னா ஜெயா விருப்பத்தை மீறி ஜனநயாக பூர்வமாகத்தான் கட்டுரையில் விவரிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் நடந்தது என்று எழுத முடியுமா?

    ///ஊடகங்களுக்கிடையேயான கருத்தியலை நிலைநாட்டும் போட்டிக்கு வினவு பலியாகிவிட்டது என்று சொல்வதை ஏற்க முடியாது…/////

    இப்படி சொல்லி எஸ்கேப்பாக முடியாது. பார்ப்பன மேட்டிமைன்னு பார்ப்பன ஊடகங்கள் பிரச்சாரம் செய்யும் போது அதை அம்பலப்படுத்திதான் பிரச்சாரம் செய்யவேணும். இதுக்கு மேல சித்தர் சொன்ன பதில் காப்பி போடறேன் பாருங்க

    @@@@@@ஒன் அவர் மின்வெட்டுக்கே பாப்பான் தன் ஊடகத்தில் ஆற்காடு வீராசாமி ஆயாவை எல்லாம் திட்டுனானே இப்ப மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்று கிளாஸ் எடுப்பதை பாருங்கள்.இலவசம் கொடுக்காதே என்று அழுதவன் இன்னைக்கு எதாவது சொல்கிறானா பாருங்கள். டாஸ்மாக் குடி கெடுக்குது அரசே மது விக்குதுன்னு அழுதவா இன்னைக்கு என்ன சொல்றா பாருங்கோ.this is what we say பார்ப்பன பம்மாத்து.@@@@@@@@@@@@@@

    அதிமுகவே ஒரு சாதி அரசியல் செய்யுற கட்சிதான், பார்ப்பனத்தலைமை இருந்தாலும் தென் மாவட்ட தேவர் ஓட்டுக்காக அவங்க செஞ்சது கொஞ்ச நஞ்சமா? சமீபத்திய பரமக்குடி துப்பாக்கி சூடு வரை அம்மா ஆட்சியல சாதிவெறி வன்கொடுமைகள் அசால்டா நடப்பது எப்படி?

    இந்திய அரசியலை சாதிய பின்புலம் இல்லாமல் விமர்சிக்க வேண்டும் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து. இங்கே சாதிய அரசியலை வைத்துத்தான் ஒவ்வொரு கட்சியும் போணிஆகுது.

    அதனால எப்படி எழுதனும்னு வகுப்பெடுப்பதற்கு முன்னால கட்டுரையில எழுதியிருப்பதை படிச்சிட்டு மேலே டீ கொடுக்காத விசயத்துக்கு டீ எடுத்து வாங்க அப்புறம் விவாதிப்போம்.

    பை பை

    • \\அது எப்படி மனிதன், நான் முன்வைத்ததில் நைசாக பதில் சொல்ல முடியாத நழுவ்விட்டீங்க? \\

      திரு கிர்பான் அவர்களே… நான் கூற நினைத்தது ஒரே ஒரு கருத்துதான்… பார்ப்பனீயத்தை தொடமால் இந்த ஆட்சியை விமர்சித்திருக்க முடியாதா என்பதே…
      கட்டுரையின் கருத்துகள் அனைத்தும் மிக்க சரியானவை.. மேலும் கட்டுரையின் எந்த இடத்திலும் வீண் சாதி சாயம் இல்லாமல் ஒரு நல்ல விமர்சனமாக தான் கட்டுரை இருக்கிறது… இன்னும் நிறைய நிறைய அவலங்கள் விட்டு போயுள்ளன.. ஒருவேளை பிற பதிவுகளில் தொடராக வரலாம்…

      இவ்வுளவு அருமையான விமர்சனம் வைத்துவிட்டு, அதில் பார்ப்பனம் என்று தலைப்பில் செருகி, விமர்சனத்தின் போக்கையே ஒரு சாதி சண்டையாக மாற்றி விட்டதே என்று தான் கவலை தெரிவித்திருக்கிறேன்.. கருத்துக்களை மக்களிடம் சேர்ப்பதான பதிவரின் நோக்கம் தலைப்பிலேயே சிதைக்கப்பட்டிருக்கிறது அவ்வளவே…

      ஒரு நல்ல கட்டுரை, கட்டுரையின் கருவுக்கு தொடர்பே இல்லாத மறுமொழிகள் – காரணம் தலைப்பு.

  15. ஏம்பா உங்களுக்கெல்லாம் எவ்வளவு தடவை சொன்னாலும் புரியாதா?சிறந்த நிர்வாக திறமை, ஆழ்ந்த அரசியல் அறிவு, இரும்பு பெண்மணி, ஆங்கிலப்புலமை,தொலைநோக்கு பார்வை என்று நாலாவது வரை படித்த ஒரு நடிகையை எங்களுக்கு அறிமுகப்படுத்திய பார்ப்பன ஊடகங்களின் பம்மாத்தை வேறு என்ன வார்த்தையில் சொல்ல வேண்டும்?

  16. எதர்க்கெடுத்தாலும் அவாலை கொரை சொல்லின்டு திரியாதெல் அவால் எல்லாம்நன்னா படிக்கிரால்நன்னா சம்பாதிக்கிரால் அவ்வாஉன்டு அவா வேலை உன்டு இருக்கால் அவாலுக்கெல்லாம் ஒரு ப்ரஷனை என்ரால் ஊடகஙகல் மர்ர்ரும் தினமலஙல் துக்லக் எல்லாம் பெசும் உனக்கும் எனக்கும் யாரூ பேசுவஙக ஒரு பெரியார் அல்ல ஒரயிரம் பெரியார் வந்தாலும்நம்மை காப்பார்ர நாதி இல்லை

  17. பிராமீணைப் பத்தி தப்பா பேசினா, தெயிவ குத்தம்டா…
    அவாள்ளாம் ஒன்னா செர்ந்து காஞ்சிபுரத்துல யாகம்
    பண்ணுவாள்..அப்புறம் பாருங்கோ…..
    நமக்கெல்லாம் பேதியாகும்……

Leave a Reply to coimthur_thambi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க