திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் காவிரி உரிமை மீட்பு பிரச்சார நடைபயணக் குழுத் தோழர்களை வரவேற்கும் விதமாக இன்று (26-04-2018) மாலை 5.00 மணியளவில் திருவாரூர் தைலம்மை திரையரங்கம் எதிரில் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது மக்கள் அதிகாரம். விவசாய சங்கப் பிரதிநிதிகளும் ஜனநாயக சக்திகளும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றவிருக்கின்றனர்.

**

‘’காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!’’ என்ற முழக்கத்தின் கீழ், வருகிற ஏப்.28 அன்று சென்னை தாம்பரம் மார்க்கெட் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.

மக்கள் அதிகாரத்தின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தில், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் தியாகு; தன்னாட்சி தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு ஆழி செந்தில்நாதன்; தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தஞ்சை புண்ணியமூர்த்தி; காவிரி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த திருவாரூர் ஜி.வரதாஜன் மற்றும் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

தகவல்: மக்கள் அதிகாரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க