தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற ஒவ்வொரு உரிமையும் மோடி அரசால் பறிக்கப்பட்டு வருகிறது. இன்றையை அரசியல் சூழலில் மே தினத்தின் பொருள் என்ன? தொழிலாளர்களின் பிரச்சினைகள் என்ன? அவர்களை சங்கமாக்கி அணி திரட்டுவதில் என்ன சிக்கல்?  தொலைபேசி மூலம் சில தொழிற்சங்க தலைவர்களிடம் வினவு செய்தியாளர் பேசினார்.

டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

ற்போது பாசிச ஆட்சி நடக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றத்தை செய்கிறது மோடி அரசு. மருத்துவம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தையும் தனியார்மயமாக்கி வருகிறது. மக்கள் மீதான தாக்குதல் பலமுனைகளில் இருந்து வருகிறது. குறிப்பாக பொருளாதார தாக்குதல், மதவாத தாக்குதல் அதிகமாக உள்ளது. மூலதனத்தில் இருந்து விடுதலை, உழைப்பு சுரண்டலில் இருந்து விடுதலையடைய உழைக்கும் மக்கள் ஒன்றிணைய வேண்டும். அதற்குரிய உறுதியேற்பு நாள் தான் மே தினம்.

தோழர் சீனுவாசலு,
பொதுச் செயலர்,சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம்
.

புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. மாநகராட்சியில் ஒப்பந்த முறை அதிகரித்து வருகிறது. அதற்கெதிரான போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம்.  அரசாணை 62-ன் படி, குறைந்த பட்ச ஊதியம் 15,725 ரூபாய் என்று அறிவித்தார்கள். அதனை கொடுக்காமல் இருக்கிறார்கள்.

தோழர் சீனுவாசலு,
பொதுச் செயலர்,சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம்
.

சைதை துரைசாமி மேயராக இருக்கும் பொழுதே தெருக்களை கூட்ட “ஒரு மணி நேரத்திற்கு இருபது ரூபாய் என்ற முறையில் எட்டு மணி நேரத்திற்கு இருபத்தி ஆறு நாட்கள் வேலை வழங்க வேண்டும்” என்ற முறையில் குத்தகைக்கு விட முயற்சி செய்தார்கள். அதனை எதிர்த்து போராடியதால் தற்காலிகமாக  கைவிட்டார்கள். தற்போது அரசாணை 63 ஒன்றை போட்டு மணிக்கணக்கில் வேலை செய்வதற்கான ஒப்பந்தத்தை அமுல்படுத்த முயற்சிக்கிறார்கள்.

தொழிலாளர்களும் ஒற்றுமையாக இருப்பதில்லை. கட்சிகள் பின்னாடி செல்வது, கேக் வெட்டுவது, கொண்டாடுவது என்றே இருக்கிறார்கள். மோசமமான காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை தொழிலாளி வர்க்கம் உணரவில்லை. அவர்களை வர்க்க ரீதியாக ஒன்றிணைக்க முயற்சி செய்து வருகிறோம்.

தோழர் பாபு , சிறப்புத்தலைவர்,
காஞ்சி காமகோடி மருத்துவமனை ஊழியர்கள் சங்கம்
.

தோழர் பாபு , சிறப்புத்தலைவர்,
காஞ்சி காமகோடி மருத்துவமனை ஊழியர்கள் சங்கம்
.

த்தியில் ஆளக்கூடிய மோடி அரசு தொழிலாளர் விரோதமாக செயல்படுகிறது. கார்ப்பரேட்டுக்களின் ஆதிக்கம் தான் ஆட்சி செய்கிறது. எங்கும் காண்ட்ராக்ட்மயமாகிறது. மே தினத்தில் காண்ட்ராக்ட் முறையை ஒழிக்க வேண்டும் என்பதே எங்களுடைய சூளுரை.

தோழர் திருச்செல்வன், பொதுச் செயலர்,
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்
, சிஐடியு.

132 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை மீண்டும் திரும்புகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த அரசு தயாராக இல்லை. உலகம் முழுவதிலும் வேலைப்பறிப்பு அதிகரித்து வருகிறது.  சம்பள வெட்டு , சமூக பாதுகாப்பின்மை என்று கொடிய நாட்களை சந்திக்கின்றோம். நிதி மூலதனமும், முதலாளித்துவமும் ஆட்டுவிக்கும் பாதையில் செல்கிறது அரசு.

தோழர் திருச்செல்வன், பொதுச் செயலர்,
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்
, சிஐடியு.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்கம் துவங்குவது, தனக்கு பிடித்த சங்கத்தில் உறுப்பினராக சேர்வது கூட மறுக்கப்படுகிறது. மீறி சங்கம் துவங்கினால் நிர்வாகத்தால் பழிவாங்கப்படுகிறார்கள். சங்கத்தை பதிவு செய்வது கூட பெரும்பாடாக உள்ளது. அரசு – தனியார் என்று எல்லாத் துறையிலும் நவீன தாக்குதல் அதிகரித்து உள்ளது.  தொழிலாளர்களின் கடுங்கோபத்துக்கு ஆளாகி வருகிறது மோடி அரசு. அந்தக் கோபம் பெரும்போராட்டமாக வெடித்து சிதறும் நாள் நெருங்கி வருகிறது.

தோழர் பாலகிருஷ்ணன், தலைவர்,
சிஐடியு- அரசாங்க போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்.

ற்கனவே இருக்கக்கூடிய தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் திருத்தப்பட்டுவிட்டன. தற்போது  குறிப்பிட்ட கால ஒப்பந்த ஊழியர் (Fixed Time Employs) என்ற முறையை கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது நிரந்தரம் என்பது எங்கும் கிடையாது.  சமூகப் பாதுகாப்பு, ESI,PF, விடுப்பு எதுவும் கிடையாது. தொழிலாளர்களை கூலி அடிமைகளாக மாற்றுவது என்பதுதான் நடக்கிறது.

தோழர் பாலகிருஷ்ணன், தலைவர், 
சிஐடியு- அரசாங்க போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்.

தேர்தல் நேரத்தில் இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் மோடி. ஆனால் இருக்கின்ற வேலைகளை பறித்து வீட்டுக்கு அனுப்புகிறார். துப்பாக்கி தொழிற்சாலை. ஊட்டியில் உள்ள பிலிம் பேக்டரி மூடுவிழா, மோட்டார் வாகன தொழிலை கார்ப்பரேட்டிடம் ஒப்படைத்தல், ராணுவ உடை தயாரிப்பு தொழிற்சாலை தனியாரிடம் ஒப்படைத்து விட்டு தொழிலாளர்களை விரட்டியிருக்கிறது.

அரசு பொதுச் சொத்துக்களை பாதுகாப்பது, நிரந்த வேலையை உத்திரவாதப்படுத்துவது, மக்கள் நலன் என்ற கொள்கை எல்லாம் இப்பொழுது அரசுக்கு இல்லை.

தோழர் பழனிச்சாமி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி

தொழிலாளர் உரிமை என்பதே இல்லை. ஏற்கனவே அடிமையாக இருந்தார்கள். இப்பொழுது கொத்தடிமையாக இருக்கிறார்கள். எழுத்தளவில் இருந்த சட்டங்கள் எல்லாம் இன்று மோடி அரசு முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றி விட்டது. மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தொழில்துறை துறை அமைச்சர், “முதலாளிக்கு தொழிலாளியை எப்பொழுது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கவும், எடுக்கவும் உரிமை உண்டு” என்கிறார்.

தொழிலாளர்கள் உயிர்நீத்து பெறப்பட்ட உரிமை என்னவென்பதே தொழிலாளர்களுக்கு தெரியவில்லை. அந்த உரிமை பறிபோவது பற்றியும் கவலைப்படுவதில்லை. ஏற்கனவே ஓட்டுக்கட்சிகள் தொழிலாளியை மழுங்கடிக்கும் வேலையை செய்தன. இன்று முதலாளியே அந்த வேலையில் இறங்கியுள்ளார்கள். புதுவையில் ரானே பிரேக் லைனிங் லிமிடெட் நிறுவனத்தில் ஆண்டு சுற்றுலா என்கிற பெயரில்  தொழிலாளர் தினத்தில் குடும்பத்துடன் டூர் அழைத்து செல்கின்றார்கள். எங்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் தவிர்த்து மற்ற அனைத்து தொழிலாளர்களும் இத்தினத்தில் செல்கிறார்கள்.  போராட்ட குணம் முற்றிலும் மழுங்கடிக்கப்படுகிறது.

தோழர் ராஜேந்திரன்,
மாநில பொதுச்செயலர்,108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்.

மே தினம் என்பது கொண்டாடக்கூடிய தினமாக இல்லை. எட்டு மணி நேரம் வேலை, உறக்கம், ஓய்வு என்பது எல்லாம் இல்லை. சமூகத்தை பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லாமல் போய்விட்டது. உயிர் நீத்து பெறப்பட்ட உரிமை ஒன்று கூட இல்லை. அதற்கு சிறந்த உதாரணம் எங்கள் வேலையை எடுத்துக்கொள்ளலாம். மற்ற துறைகளிலும் உள்ளது என்றாலும் நான் சார்ந்த துறையை பற்றி சொல்கிறேன். ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்கிகிறார்கள். அதற்கு மேலும் வேலை செய்கிறார்கள். போதிய ஆட்கள் பற்றாக்குறையால் நாங்களே செய்ய வேண்டியுள்ளது. மலைப்பிரதேசங்களில் பணியாற்றக்கூடியவர்களுக்கு ஓய்வு என்பது சுத்தமாக இல்லை. இருபத்தி நான்கு மணி நேரமும் பணியில் இருக்கிறார்கள். பணிப் பாதுகாப்பும் இல்லை. ஊதியமும் இல்லை. மோடி அரசு எல்லா சட்ட திட்டங்களையும் ஒழித்து கட்டி வருகிறது.

இன்றைய தினத்தில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சொல்லக்கூடியது, தொழிலாளர் சட்டம் உளுத்துப்போன, உதவாக்கரை சட்டமாக உள்ளது.  மற்ற நாடுகளில் எட்டு மணி நேர வேலையை ஆறுமணி நேரமாக குறைப்பது பற்றி  யோசித்து வருகிறார்கள். ஆனால் இங்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று மோடி கூறுகிறார். கார்ப்பரேட்டுகளின் மனம் குளிர அவர்களுக்கு சேவை புரிகிறார். எனவே முதலாளித்துவத்துக்கு எதிராக ஒடுக்குமுறைக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் வால்மார்ட், பிரான்சு, இந்தியாவில் கேரளா தேயிலை தோட்ட போராட்டம், குஜராத்தில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் போராட்டம் என்று வீரியமாக நடந்து வருகிறது. இதனை ஒருங்கிணைக்க ஒரு சரியான தலைமை இல்லை என்பது நம் நாட்டிற்கு சாபக்கேடு. விரைவில் இந்த நிலைமாற தொழிலாலார்கள் வர்க்கமாக திரள வேண்டும். பகத்சிங் வழியில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தோழர் சுதேஷ்குமார்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

டந்த இருபது வருடமாக சங்கம் வைக்கும் உரிமை இருந்தது.  மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, “முதலாளிகளுக்கு தகுந்தாற் போல் தொழிலாளிகள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும், நாட்டின் வளர்ச்சிக்காக விட்டுக் கொடுக்க வேண்டும்” என்று சாதுர்யமாக சொல்கிறார்..  இந்த அறிவிப்பை சொல்லி முடிப்பதற்குள் முதலாளிகள் பல்வேறு விஷயங்களை அமல்படுத்திவிட்டனர். இது நுட்பமான முறை.  ஏழு பேர் சேர்ந்தால் சங்கம் சேரும் உரிமை உண்டு. ஆனால் முதலாளிகள் “சங்கமாக சேராதே, ஐவர் குழுவாக சேர்” பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் என்கிறது.

தோழர் சுதேஷ்குமார்

கடந்த மூன்று ஆண்டுகளில் சங்கம் துவங்க முடியாமல் உள்ளது.   தொழிலாளர்கள் பிரச்சனை என்று தொழிலாளர் துறைக்கு சென்றால், நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்புகிறார்கள். மூன்று முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் நிர்வாகம் வரவில்லை என்றால், கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் தொழிலாளர் துறை அதிகாரி. தொழிலாளி பல் பிடுங்கபட்ட பாம்பாக இருப்பதால் முதலாளிகள் ஏறி அடிக்கிறார்கள். இன்றைய சூழலில் தொழிலாளர்கள் தங்கள் வாழ்ந்தால் போதும் என்றே இருக்கிறார். தொழிலாளர் சங்கங்களும் வலுவாக இல்லை. இதில் மோடி அரசு வெற்றி பெற்றுள்ளது. அசோக் லைலான்ட் நிறுவனத்தில் பயிற்சித் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தி நிரந்தர வேலைகளைப் பறிக்கும் அரசின் NEEM திட்டத்தை  நடைமுறைபடுத்தியிருகிறார்கள். அதேபோல் குறிப்பிட்ட கால ஒப்பந்த ஊழியர் (fixed time employs) என்ற முறையை கொண்டுவந்திருக்கிறார்கள்.நிரந்தர தொழிலாளி என்ற பேச்சுக்கே இடமில்லை.  இனி வருகின்ற காலம் தொழிலாளர்களுக்கு இருண்ட காலமாக இருக்கின்றது. இதனை பொற்காலமாக மாற்ற வேண்டும் என்றால் சிகாகோ போராட்ட வழியில் செல்ல வேண்டும்.

– வினவு களச் செய்தியாளர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க