தூத்துக்குடி படுகொலையின் குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் ! ஓசூர் ஆர்ப்பாட்டம்

“ஸ்டெர்லைட்டை எதிர்த்த மக்கள் மீது துப்பாக்கி சூடு ! அரசும் ஸ்டெர்லைட் நிர்வாகமும் திட்டமிட்டு நடத்திய படுகொலை !! படுகொலையின் குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் !!!” என்ற முழக்கத்தை முன்வைத்து ஒசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக 24.05.2018 மாலை 5.00 மணியளவில் இரயில் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு.-வின் மாவட்ட செயலாளர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் இ.கோ வெங்கடேசன் நிறைவுரையாற்றினார்.

இவ்வமைப்பின் முன்னணி தோழர்கள், பெண்கள், குழந்தைகள், பெரியோர் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டு தூத்துக்குடி படுகொலைக்கெதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்க நிகழ்வாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி, துப்பாக்கிச்சூட்டில் பலியான போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் “மக்கள் தங்களின் வாழ்வுரிமைக்காக கொலைகார ஸ்டெர்லைட்டை மூடு! என்ற முழக்கத்தை முன்வைத்து அறவழியில் முற்றுகைப்போராட்டம் அறிவித்து நடத்தினர். இது வழக்கமான நடைமுறைதான். இருந்தபோதிலும் ஸ்டெர்லைட் முதலாளியின் இலாபவெறிக்காக மத்திய அரசின் துணைகொண்டு மக்களை கொலை செய்துள்ளது இந்த அரசு.

இப்படுகொலையின் சூத்திரதாரிகளான தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மக்கள் மத்தியில் பொதுவிசாரனை நடத்தி தண்டிக்க வேண்டும்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை பலரும் இறுதிவரை கண்டு, கேட்டு தங்கள் ஆதரவை தெரிவித்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர். தொடர்புக்கு : 97880 11784.

***

அரச பயங்கரவாதத்துக்கு அடிபணிய மாட்டோம் ! திருச்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து “கார்ப்பரேட் கைக்கூலி எடப்பாடி அரசே, சாவுக்கு அஞ்சமாட்டோம் ஸ்டெர்லைட்டுக்கு சவக்குழி தோண்டும் வரை ஓயமாட்டோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து திருச்சி பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் 24.05.2018 அன்று மாலை 6:00 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர் செழியன் தலைமை தாங்கினார். தோழர் ராஜா சிறப்புரையாற்றினார். மேலும் பல்வேறு மாற்று கட்சினரும், ஜனநாயக சக்திகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம், திருச்சி மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க