தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உறவினர்கள் குமுறல் ! வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியாணவர்களின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்களின் உறுதியான போராட்டம்தான் அரசை பீதியடையச் செய்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உறவினர்கள் குமுறல் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் சார்பில் 30.05.2018 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில் தங்கள் தரப்பு வாதமாக “ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பில் ஒரு மருத்துவர் உடன் இருக்க வேண்டும், அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் மீது கொலைவழக்கு பதிய வேண்டும். இறந்தவர்களுக்கு தூத்துக்குடி பகுதியில் நினைவிடம் அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும்.” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மறு பிரேத பரிசோதனை நடத்தலாம் எனக் கூறியிருந்தனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்து அவர்கள் சொல்லும் மருத்துவர்களை அனுமதிக்க முடியாது என தெரிவிதனர். மாறாக வேறு சில அரசு மருத்துவர்கள் முன்நிலையில் பிரேத பரிசோதனை செய்யலாம் எனக் கூறி இருந்தனர்.

இது மக்களை படுகொலை செய்த அரசுக்கெதிரான ஆதாரங்களை அழிக்கும் வகையில் அமையும் என்பதால் உறவினர்கள் தரப்பில் இதனை ஏற்க மறுத்துவிட்டனர். அதனடிப்படையில் தாங்கள் உச்ச நீதிமன்றம் செல்வதாக அறிவித்தனர். அதற்கு ஒருவார காலம் அவகாசம் கோரப்பட்டு, அதுவரை உடல்களை பதப்படுத்திவைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

நிவாரணம் என்ற பசப்புகளுக்கும், அரசின் மிரட்டல்களுக்கும் மசியாமல் தங்களுக்கான நியாயத்திற்காக போராடும் இவர்களின் உறுதியை பாருங்கள். இவர்களைத் தான் சமூக விரோதி என்கிறார் ரஜினி. அதற்கும் அவர்கள் தக்க பதிலளித்துள்ளனர். இந்த வீடியோவை பாருங்கள்… பகிருங்கள்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க