“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா, பிரச்சினையா?” என்ற தலைப்பில் ஐ.டி துறையில் வேலை செய்யும் மென்பொருள், பி.பி.ஓ, கே.பி.ஓ, கால் சென்டர் ஊழியர்கள் எதிர்கொள்ளும் வேலை இழப்பு பிரச்சனை தொடர்பான சிறு நூலை பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
புத்தகத்தின் பெயர் : ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சினையா?
இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- ஐ.டி துறையில் ஆட்குறைப்பு
- நிறுவனம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?
- தொழிலாளர் நலனும் நாட்டின் நலனும்
- முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா?
- எச்.ஆர் அதிகாரிகளே, திருந்துங்கள்!
- ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா?
- அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்?
- ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை?
- நிர்வாகங்களே, ஊழியர்களே யூனியனை ஆதரியுங்கள்!
- ஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா? அப்பாவிகளா?
- இணைப்பு : சங்கம் வைக்கும் உரிமை ஐ.டி துறைக்கும் பொருந்தும் – தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை கடிதம்
பக்கங்கள் : 64
விலை : ரூ 60
இந்த நூல் ஆங்கிலத்திலும் வெளியாகி உள்ளது.
ஐ.டி ஊழியர்களும், மாணவர்களும் புத்தகத்தின் பிரதிகளை பெற்று நண்பர்களிடையேயும், சக ஊழியர்களிடையேயும் வினியோகிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ் தெரியாத பிற மாநில ஊழியர்களுக்கு ஆங்கில நூலை வினியோகிக்கலாம்.
உங்களுக்கு தேவையான பிரதிகளுக்கு தமிழ், ஆங்கிலம் எண்ணிக்கை குறிப்பிட்டு combatlayoff@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது 9003009641 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
பிரதிகளுக்கான விலையை புத்தகத்தை பெற்றுக் கொண்டு ரொக்கமாகவோ, எமது சங்கத்தின் வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (ஐ.டி. ஊழியர் சங்கம்)
தொடர்புக்கு : +91 90030 09641