சென்னையில் கடந்த 2018 ஆகஸ்ட், 21-ஆம் தேதி அன்று உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் அரங்குக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

அக்கூட்டத்திற்கு பு.மா.இ.மு-வின் சென்னை மாநகர செயலாளர் தோழர் சாரதி தலைமை தாங்கினார்.

மேலும் அரங்குக் கூட்டத்தில் குடியாத்தம் அரசுக்கல்லூரியின் மேனாள் முதல்வர் ப.சிவக்குமார், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் நிறுவன உறுப்பினர் முனைவர் ரமேஷ், மற்றும் பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சென்னையின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சார்ந்த மாணவர்கள் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரங்கக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஏழை மாணவர்களின் பட்டதாரி கனவைப் பறிக்கும் மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். இலவசக் கல்வி கிடைக்க பெற்றோர்கள், ஆரிசியர்கள், மாணவர்கள் என அனைவரும் ஓர் அணியில் திரளுவோம். என்ற உறுதியேற்புடன் இக்கூட்டம் நிறைவடைந்தது.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,  சென்னை. தொடர்புக்கு : 94451 12675.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க