சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி

பெண்களின் மாத ஒழுங்கு (மாத விடாய்) ரத்த வாடைக்கு வன விலங்குகள் வருமாம். எஸ்.வி.சேகரும், எச்ச ராஜாவும் வாயத் தொறந்தா அடிக்காத ரத்த வாடையா பெண்களோட மாத ஒழுங்கில அடிக்குது?

பரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழையக்கூடாது  என ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் அழிச்சாட்டியங்களை தோலுரிக்கிறார், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை.சண்முகம்.

கிட்டத்தட்ட 1970 வரை ஆண் – பெண் வேறுபாடின்றி சாதாரணமாக சென்று வழிபட்டிருக்கிறார்கள். எந்த சாஸ்திர விரோதமோ, ஆகம விரோதமோ இல்லாத ஒரு மலைக்கோயில் சபரிமலை ஐயப்பன் கோயில். இப்போது திடீரென ஆகமத்திற்கு ஆகாது என்கிறார்கள் இந்துத்துவவாதிகள்.

இன்னும் பலரோ, காலங்காலமாக இருந்து வந்த பழக்கம் என்கிறார்கள். காலங்காலமாக இருந்ததனால், உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா? காலங்காலமா தேவதாசி முறையும்தான் நமது நாட்டில் இருந்தது. அதற்காக நம் வீட்டு பெண்ணை தேவதாசி முறைக்கு விடுறேன்னு ஒருத்தர் விடுவோமா? இது இந்து மதத்துல இருந்தது. மத உரிமைன்னு சொன்னா செருப்ப கழட்டி அடிக்க மாட்டோம்?

படிக்க:
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு
தில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் !

பெண்களின் மாத ஒழுங்கு (மாத விடாய்) ரத்த வாடைக்கு வன விலங்குகள் வருமாம். எஸ்.வி.சேகரும், எச்ச ராஜாவும் வாயத் தொறந்தா அடிக்காத ரத்த வாடையா பெண்களோட மாத ஒழுங்கில அடிக்குது?

பெண்கள் வந்தா தெய்வக் குத்தமாகிடும்னு சொல்றாங்க .. அது தெய்வக்குத்தமா ? இல்லை பாப்பாரக் குத்தமா ?

ஆண்டவனே பெண்களின் பூஜையை ஏத்துக்கும் போது, பெண்கள் நுழையும் உரிமையைப் பறிக்க இவனுங்க யாரு? ஆண்டவனவிட பெரிய ஆளா? மலைக்கு மாலை போட்டுப் போற ஒவ்வொரு ஆணும், “ எம்பொண்டாட்டிய சாமி கும்பிடக்கூடாதுனு சொல்ல நீ யாருடானு?” இந்த இந்துத்துவக் கும்பலிடம் கேட்கனும்.

மாலைபோட்ட நாள் தொடங்கி, திரும்பி வீட்டுக்கு வரும் வரையில், காலையிலிருந்து பூஜை புனஸ்காரம் செஞ்சி, வீட்டை சுத்தம் செய்து, விரதத்துக்கு உணவு செய்யும் நம் வீட்டுப் பெண்கள் அந்த ஐயப்பனை தரிசிக்கக் கூடாதுன்னா, ஐயப்ப பக்தர்களே.. நீங்களே சொல்லுங்க, இது அந்த சாமிக்கே அடுக்குமா?

சபரி மலையில் பெண்கள் நுழையக் கூடாது எனச் சொல்வது ஐயப்பனின் குரல் அல்ல! ஆர்.எஸ்.எஸ்.-ன் குரல்!

#SabarimalaTemple, #ayyappa, #sabarimala, #ReadyToWait

தோழர் துரை சண்முகத்தின் முழுமையான உரை காணொளியில் காண …

பாருங்கள்! பகிருங்கள்!!