“சோல் அமைதி விருது” என்பது மிகவும் புனிதமான விருது, அதைத் தகுதி இல்லாதவர்க்கு வழங்குவதை நாங்கள் ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டோம். தற்போழுது தேர்வாகி உள்ள இந்திய பிரதமர் மோதி இந்த விருதுக்கு எந்த விதத்திலும் தகுதி உடையவர் அல்ல’. பிரதமர் மோதி 2002 ல் குஜராத் முதல்வராக இருந்த பொழுது முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் அவரது அரசின் பங்கு மோசமானது. அப்பொழுது நடந்த இந்து முஸ்லீம் கலவரத்தில் தான் எதையும் கண்டுகொள்ளாத காரணத்தால் அப்பாவி முஸ்லீம் மக்கள் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
படிக்க:
♦ வடகொரியா தயாரித்த பயங்கரமான ஆயுதம் ! புகைப்பட ஆதாரங்கள்
♦ தென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் !
மேலும் அவர்கள் பிரதமர் மோதியை கொரியாவின் முன்னாள் அதிபர் சுன்-டூ-வான் அவர்களோடு ஒப்பிட்டு முழக்கமிட்டனர். அதிபர் சுன்-டூ-வான் என்பவர் 1980 ம் ஆண்டில் தான் அதிபராக இருந்த பொழுது நடந்த கொரிய இனப்படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக மோதி அவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது கிட்டத்தட்ட அதிபர் சுன்-டூ-வான் அவர்களுக்கு வழங்கப்படும் விருதைப் போன்றதாகும் என எச்சரித்தனர். அதுமட்டுமில்லாமல் இந்த விருது பிரதமர் மோதிக்கு வழங்கப்பட்டால் அது மற்ற சோல் அமைதி விருது பெற்றவர்களை அவமதிக்கும் செயலாகும், எனவே உடனடியாக இந்த முடிவைப் பரிசீலிக்க வேண்டும்” என்கிறார்கள் அவர்கள்.
நன்றி: முகநூலில் Muralidharan Kasi Viswanathan
தென் கொரியா கிறிஸ்துவ மிஸ்சோனரிகளின் ஆர்ப்பாட்டம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
Apart from Christians,What is the percentage people belonging to other religion?Do you mean to say that 100 percent of Indians living in South Korea approved the award?