சியப் பாட்டாளிகளின் உன்னத சாதனைகளை உலகுக்கு பறைசாற்றிய தினமான நவம்பர் புரட்சி நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த புரட்சிகர அமைப்புகள் கொண்டாடின. அந்த நிகழ்வுகளின் தொகுப்பு.

*****

கோத்தகிரியில்…

கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் (இணைப்பு) புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக நவம்பர்-7 ரஷ்ய புரட்சி நாள் விழா கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், வாகனப்பிரிவு தோழர்கள் உட்பட 35பேர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட பொருளாளர் தோழர் விஜயன் அவர்கள் கொடியேற்றி உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் தோழர் பாலன் சிறப்புரையாற்றினார். அழைப்பாளராக மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அவர்களது உரையில் ரஷ்ய புரட்சி வரலாறும், தொழிலாளி வர்க்கத்தின் மீதான  தற்போதைய அடக்குமுறைகளுக்கு விடிவு போராட்டங்களே! என்றும் விளக்கினார்கள்.

இறுதியில் நீ.அ.தொ. ச வாகனப்பிரிவு தலைவர் தோழர் சுப்பிரமணி இனிப்புகள் வழங்கினார்.

நமது நாட்டிலும் ஒரு புரட்சியை உருவாக்க போராட வேண்டியதன் அவசியத்தையும், அதற்கான போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்ற உற்சாகத்தை தோழர்களுக்கு இந்த நிகழ்வு வழங்கியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்
(இணைப்பு) புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம்.

*****

பென்னாகரத்தில்…

வம்பர் 7 சூளுரை! மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் !”

என்ற தலைப்பின் கீழ் 7.11.2018 அன்று காலை 10 மணியளவில் புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி சார்பாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு புமாஇமு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன் தலைமை தாங்கி, நவம்பர் புரட்சி இந்தியாவிற்கு தேவை என்பதனை விளக்கி பேசினார்.

இறுதியாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தோழர்கள் மாணவர்கள் என அனைவரும் உற்சாகத்துடன் கலுந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தர்மபுரி, கிருஷ்ணகிரி சேலம், மாவட்டங்கள்
தொடர்புக்கு: 63845 69228

*****

வேலூரில்…

ஷ்யாவில் தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நாளான நவம்பர் 7, அன்று அந்நாளை உயர்த்திப் பிடிக்கும் வகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு  சங்கங்களான தட்டுவண்டி, தரைக்கடை வியபாரிகள் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் செங்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டது.

மீன் மார்க்கெட், அண்ணா கலையரங்கம் மற்றும் அடுக்கம்பாறை ஆகிய இடங்களில் கிளை சங்க தலைவர்கள் கொடி ஏற்றினர். இதில் மாவட்ட துணைத்தலைவர், செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழக தோழர்கள் கலந்துக்கொண்டு இன்றைய ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் சுரண்டலையும், அதற்கு துணையாக உள்ள பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தியும், அதை எதிர்த்து போராட வேண்டியதின் அவசியத்தையும் பேசினர்.

இது இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து தோழர்களுக்கும் உணர்வூட்டும் வகையில் அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,
வேலூர் மாவட்டம்.

*****

கடலூரில்…

சிய சோசலிச புரட்சியின் 1010-வது ஆண்டை முன்னிட்டு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக, பாட்டாளிவர்க்க ஆசான் தோழர் லெனின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.மேலும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தோழர்கள் ரசியப் புரட்சி பற்றியும் அதன் மகத்தான சாதனைகள் குறித்தும் உரையாற்றினர். மேலும் இந்திய மக்களை மரணக்குழிக்கு தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம் என சூளுரைத்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர். பேச : 97888 08110.

*****

சென்னையில்…

க்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் ! என்ற முழக்கத்தின் கீழ் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் பறைமுழக்கத்துடன் கொடியேற்றி ரசியப் புரட்சிநாள் கொண்டாடப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை.

_______________

சென்னை மதுரவாயல் பகுதியிலும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பிலும் நவம்பர் புரட்சிநாள் விழா பறைமுழக்கத்துடன் செங்கொடி ஏற்றி நடத்தப்பட்டது.

இதில் சிறுவர்கள், மாணவர்கள் – இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் புது உற்சாகத்தை வழங்கியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க