மக்களைச் சுரண்டிப் பிழைத்த அனைத்து பிற்போக்கு சக்திகளும் அஞ்சி நடுங்கிய சித்தாந்தம் கம்யூனிசம். கம்யூனிச ஆட்சியின் கீழ் இருந்த ரசியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பூவுலகின் வாழும் சொர்க்கங்களாக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தன. இதனைத் தொடர்ந்து மக்கள் கம்யூனிச சித்தாந்தத்தின் தாக்கத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காகவேதான், பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது உள்ளிட்டு பல்வேறு சமூக , மக்கள் நலத் திட்டங்களை அறிமுகம் செய்தன மேற்கத்திய நாடுகள்.
நவீன முதலாளித்துவத்துக்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்த சமூகத்தின் துவக்கப் புள்ள ரசியாவின் நவம்பர் புரட்சி. தோழர் லெனின் தலைமையில், தோழர் ஸ்டாலினின் சீரிய வழியில் நடத்தப்பட்ட ரசிய புரட்சியின் 101-ம் ஆண்டு கொண்டாட்டம்.
காணத் தவறாதீர்கள் !