ஸ்டெர்லைட் நச்சு ஆலையில் நடந்த விபத்துகளில் சிலவற்றை தமது முகநூல் பக்கத்தில் தொகுத்து பதிவிட்டிருக்கிறார், கப்பிக்குளம் ஜெ.பிரபாகர்.

02.01.1997 அன்று 7 சிலிண்டர்கள் வெடித்து 40 தொழிலாளர்கள் உயிர்தப்பினர்.

03.05.1997 அன்று கந்தக அமிலக் குழாய் வெடித்து ஒருவர் உடல் வெந்து சாவு.

05.07.1997 அன்று ஸ்டெர்லைட் நச்சுப்புகையால் அருகிலுள்ள ரமேசு பூ கம்பெனியில் வேலைபார்த்த 165 பெண் தொழிலாளர்கள் மயக்கம், பலருக்கு கருச்சிதைவு.

30.08.1997 அன்று செம்புக் கலவை உலை வெடித்து பனை உயரத்துக்கு தீ. திருநெல்வேலியைச் சேர்ந்த பெருமாள், தூத்துக்குடி சங்கர் என்ற இரண்டு தொழிலாளர்கள் எலும்புக்கூடாயினர். 3 பேர் படுகாயம்.

14.02.1997 அன்று ஆலையில் தீ விபத்து. கரும்புகை பரவலால் சுற்று வட்டாரத்திலுள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல்.

16.04.1998 அன்று நள்ளிரவில் பயங்கர விபத்து. 6 பேர் கருகினர். அதில் 3 பேர் நிகழ்விடத்தில் சாவு.

19.11.1998   அன்று கந்தக அமில குழாய் வெடித்து 5 பொறியாளர்களும் ஒரு கூலித் தொழிலாளியும் உடல் வெந்து தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்றனர்.

26.12.1998 அன்று எண்ணெய் சேமிப்புத் தொட்டி வெடித்து தீ விபத்து.

(மாதிரி படம்)

02.03.1999 அன்று நச்சுப் புகையால் அருகிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தின் அரசு ஊழியர்கள் 11 பேர் மயக்கம். அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை.

21.09.2008 – நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நல்லாத்துக்குடியைச் சேர்ந்த சம்பூர்ண ஆனந்த் என்பவரது மகன் பொறியாளர் விஜய் (24) கூலிங் பிளாண்ட்டின் ஒரு பகுதி திடீரெனஇடிந்து விழுந்ததால் உயிரிழந்தார். இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மெக்கானிக் பிரிவு ஒப்பந்த ஊழியர் கேரளாவைச் சேர்ந்த கணேசன் படுகாயம் அடைந்தார்.

18.09.2010 – திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகிலுள்ள ஊத்துமலை கிராமத்தினை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (21) ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் வாகன ஓட்டுனராகபணியாற்றி வந்தார். அமிலம் ஏற்றி, இறக்கும் போது உடலில் கொட்டியதால் தூத்துக்குடி AVM தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

12.10.2010 சிகிச்சை பலனின்றி முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தார்.

03.03.2011 – ஸ்டெர்லைட் ஆலை தீ விபத்தில் ரதீஷ் என்ற ஒப்பந்த தொழிலாளிக்கு 35 விழுக்காடு தீக்காயத்தோடு உயிருக்குப் போராடி வந்தார்.

படிக்க:
ஆய்வுக்குழு கிடக்கட்டும் ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம்
பாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் !

31.05.2011 – ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே ஏற்பட்ட மின்கசிவால் அமலநாதன்(28) என்ற தொழிலாளி உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

13.08.2011 – ஸ்டெர்லைட் ஆலை மின் கசிவால் தங்கப்பாண்டி (32) படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தனது கையை இழந்தவர்

17.08.2011 – ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே கந்தக-டை-ஆக்சைடு வாயுக்கசிவு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். பாதிப்பின் விபரங்கள் தெரியவில்லை.

14.09.2011 – ஸ்டெர்லைட் ஆலையில் அமிலத்திற்குள் விழுந்து ஒப்பந்த தொழிலாளியான தூத்துக்குடி, இந்திரா நகர், 3வது மைல் பகுதியைச் சேர்தவர் சுப்பையா மகன் பாண்டியன் (43) உயிரிழந்தார். பாஸ்பரிக் ஆசிட் பிளாண்ட் பொறியாளரான தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள தீர்த்தாம்பட்டியைச் சேர்ந்த செங்கராய பெருமாள் மகன் சுரேஷ்குமார் (25) படுகாயமடைந்தார்.

10.10.2011 – ஸ்டெர்லைட் ஆலையில் சல்பர் டை ஆக்சைடு ஆசிட் பிளான்டில் திடீரென மின்சாரம் தடைபட்டதால் வாயுக் கசிவு ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களுக்கு தொழிற்சாலையில் உள்ள முதல் உதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சைஅளிக்கப்பட்டது.

09.09.2012 – ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே அமைந்துள்ள ஸ்டெர்லைட் நிறுவன மின் உற்பத்தி நிலையத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதால் தீ விபத்துஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையின் தேவைக்காக இதில் தினமும் 80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

22.02.2013 – தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் 4வது கப்பல் தளத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான மூலப்பொருளான தாமிரத் தாது, கப்பலிலிருந்து நேரடியாக லாரியில்இறக்கும் போது, உடல் மீது கொட்டியதால் லாரியின் கிளீனரான தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சிந்தலக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த மயிலேறி மகன் கருப்பசாமி(23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

08.03.2013 – ஸ்டெர்லைட் ஆலை பாஸ்பரிக் அமில உற்பத்தி பிரிவில் மின்கசிவால் அமலன்(30) என்ற தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாதிரி படம்

18.03.2013 – ஸ்டெர்லைட் தொழிற்சாலையில், 60 அடி உயரத்திலிருந்து இரவு 8 மணிக்கு தவறி விழுந்து படுகாயம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், வெயிலுகந்தம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாசானமுத்து மகன் சுவாமிநாதன் (45) உயிரிழந்தார். இவர் 17 வருடங்களாக ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார்.

23.03.2013 – ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அதிகாலை முதல் நச்சு வாயு வெளியேறியது. தூத்துக்குடியிலுள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். செடி, கொடிகள் கருகின.

24.03.2013 – ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகதி மேதா மகன் கைலாஷ் மேதா (45) ஆலைக்குள் மயங்கி விழுந்தார். ஏ.வி.எம்.மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

26.03.2013 சிகிச்சை பலனின்றி கைலாஷ் மேதா  உயிரிழந்தார். இயற்கை மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

17.06.2018 ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார்.

(உதவி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், கடலோர மக்கள் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு, வினவு, மனித உரிமை பாதுகாப்பு மையம், அகில இந்திய மீனவர்சங்கம், மதிமுக இணையத்தள நண்பர்கள், மற்றும் பூவுலகின் நண்பர்கள்)

முகநூலில் :  Kappikulam J Prabakar

இதையும் பார்க்க: