ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க எடுக்கப்படும் முயற்சிகளைக் கண்டிக்கும் விதமாக நாளை (19-12-2018) தமிழகமெங்கும் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அறைகூவல்.

எதிர்வரும் 21-12-2018 அன்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் அரிராகவன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் காணொளி:

*****

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் நேற்று (17.12.2018) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

*****

விழுப்புரத்தில்…

டெல்லி பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது, “ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனி சட்டம்  இயற்று !” என்று மக்கள் அதிகாரம் சார்பாக தடையை மீறி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் 17.12.2018 அன்று காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் தோழர் ஒருவரை கழுத்தைப் பிடித்து தள்ளும் போலீசார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்.

*****

தஞ்சையில்…

“ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டமியற்று !” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக தஞ்சை ரயிலடியில் 17.12.2018 அன்று காலை 11:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், போலீசு அனுமதி மறுத்து கடிதம் ஒன்று அளித்திருந்தது. இருப்பினும் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்காக போலீசின் அனுமதிக்காக காத்திருக்க முடியாது என்ற அடிப்படையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தை நடத்தினர். இதில் சிபிஐ கட்சித் தோழர்கள் மற்றும் சில ஜனநாயக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசு டிஎஸ்பி தலைமையில் வந்து ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தியது. மேலும் “நீங்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது தவறு..” என போராடுபவர்களை மிரட்டப்பார்த்தது. “மக்கள் தங்கள் கோரிக்கைக்களுக்காக போராடுவது உங்களுக்கு சட்டவிரோதமா..” என கேட்டதும் “நீங்கள் நீதிமன்றம் சென்று கேளுங்கள்.. எங்களுக்கு மேலிடத்து அழுத்தம்..” எனக் கூறினார் டிஎஸ்பி.  “ஒவ்வொரு பிரச்சினைக்கும் நீதிமன்றத்தை எப்படி அணுக முடியும். கருத்துச்சுதந்திரம் என்பதற்கே இது விரோதமானது அல்லவா…” என தோழர்கள் கேட்டதற்கு பதில் சொல்ல இயலாமல் அனைவரையும் கைது செய்தது போலீசு. அவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்திருந்து பின்னர் மாலை விடுவித்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க