42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : நம்பிக்கையளிக்கும் இளைஞர்களின் தேடல்

நூற்றுக்கணக்கான அரங்குகள்… ஆயிரக்கணக்கான நூல்கள்… எந்த நூலைத் தேர்ந்தெடுப்பது? இன்றைய அரசியல் சூழலில் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் சிலவற்றை பட்டியலிடுகிறார் தோழர் துரை.சண்முகம்.

42-வது புத்தகக் கண்காட்சி : நம்பிக்கையளிக்கும் இளைஞர்களின் தேடல்

புத்தகக் கண்காட்சிக்கு இளைஞர்கள் நிறைய வருகிறார்கள் என்பது மட்டுமல்ல… வருகைதரும் இளைஞர்களின் புத்தக தேடல் சமூகப் பார்வை சார்ந்து இருக்கிறதென்பதுதான் மகிழ்ச்சியளிக்கக் கூடிய விசயம். வெறும் புத்தகத்தை வாங்குவது என்றில்லாமல் புதிய கருத்துக்களை சிந்திக்க முற்படுவது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

தமிழக இளைஞர்கள் வலைத்தளம், செல்போன் இதுபோன்ற விசயங்களில்தான் கவனம் செலுத்துகிறார்கள் என்ற கருத்தை தகர்த்திருக்கிறார்கள் அன்றாடம் புத்தகக் காட்சிக்கு வருகைதரும் இளைஞர்கள். ஐ.டி. துறையில் பணியாற்றும் இளைஞர்கள் தொடங்கி ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர்கள் வரையில் வருகை தருவது உற்சாகமளிக்கிறது. குறிப்பாக அரசியல் நூல்களை தேடி வாங்குகிறார்கள்.

மார்க்ஸ்-எங்கெல்ஸின் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை மற்றும் ராகுல் சாங்கிருத்தயாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை ஆகிய இரு நூல்கள் அவர்களின் பிரதான தேர்வாக இருக்கிறது. பல்வேறு வர்க்கப் பிரிவினரும், பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர்களும்கூட மார்க்சிய எழுத்துக்களை நாடி வருகின்றனர்.

♦ ♦ ♦

ந்த ஆண்டு புத்தகக் காட்சியையொட்டி கீழைக்காற்று சார்பில் இரு நூல்களை கொண்டு வந்திருக்கிறோம். ஒன்று, கோவிலுக்குள் காவிப் பாம்பு.

சாமானிய மக்களின் பக்தியை எப்படி மதத்தின் வெறியாகவும்; அந்தக் கோயில்களை சாதியத்தின் கோட்டையாகவும் எவ்வாறு மாற்றுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது, இந்நூல்.

சமீப காலமாக இந்து அறநிலையத்துறையையே கலைக்க வேண்டும், கோயில்களை அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்து வரும் சூழலில், யதார்த்த உண்மைகள் என்ன என்பதை எடுத்துரைக்கிறது இச்சிறுநூல்.

அடுத்தது, இலுமினாட்டி வரலாறும் அரசியலும். ஹீலர் பாஸ்கர் வகையறாக்கள் முன்வைக்கும் சதிக்கோட்பாடுகளின் அரசியல் பின்புலத்தைத் தோலுரிக்கிறது இச்சிறுநூல்.

♦ ♦ ♦

நூற்றுக்கணக்கான அரங்குகள்… ஆயிரக்கணக்கான நூல்கள்… எந்த நூலைத் தேர்ந்தெடுப்பது? இன்றைய அரசியல் சூழலில் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் சிலவற்றை பட்டியலிடுகிறார் தோழர் துரை.சண்முகம்.

சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !

நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35

அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் : 147, 148

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க