இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்

இது ’மீட் த சயின்டிஸ்ட்’ நிகழ்ச்சியே அல்ல. அவர்கள் அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தைப் பரப்புவதற்கான தளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்...

”புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, ”இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல்” என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவரும் சென்னை விவேகானந்தா கல்லூரியின் மேனாள் இயற்பியல் துறைத்தலைவருமான பேராசிரியர் முருகன் ஆற்றிய உரையின் காணொளி …

உரையிலிருந்து சில துணுக்குகள்…

♦ நேஷனல் சயின்ஸ் காங்கிரசு ஏறத்தாழ நூறு வருடங்களுக்கு முன்பிலிருந்து நடைபெற்று வருகிறது. இது 106-வது காங்கிரசு. இந்திய விஞ்ஞானிகளுக்கு நல்ல தளமாக இருந்தது. சிறுவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் பொருட்டு, சிறுவர்களுக்கான சயின்ஸ் காங்கிரசு 25 வருசமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

♦ சிறுவர்களையும் பள்ளி ஆசிரியர்களையும் இலக்கு வைத்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விஞ்ஞானிகளுடன் சந்திப்பு என்ற உரையாடல் நிகழ்வில் பெரும்பாலும் மாணவர்கள் கேள்வி கேட்பார்கள், விஞ்ஞானிகள் அதற்கு பதிலுரைப்பார்கள். ஜெகதள கிருஷ்ணனும், நாகேஸ்வர ராவும் ஆளுக்கு ஒரு மணிநேரம் பேசியிருக்கிறார்கள். இது ‘மீட் த சயின்டிஸ்ட்’ நிகழ்ச்சியே அல்ல. அவர்கள் அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தைப் பரப்புவதற்கான தளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

♦ இன்றைய நிலையில் அறிவியல் நம்மை அதிகமாக பாதிக்கிறது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? உண்மை இல்லை. எந்தளவுக்கு நம்பகத்தன்மை உள்ளது. நம்பகத்தன்மை இல்லை. அறிவியல் என்றால் என்ன? அறிவியலில் நிரூபணம் என்றால் என்ன? எவிடன்ஸ் என்றால் என்ன?

அவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

தொகுப்பு:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க