கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில்…
புரட்சிகர  மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக, கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மார்ச்- 8 சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் உரிமைக்காக போராடிய தந்தை பெரியாரின் சிலைக்கு கல்லூரி மாணவர்கள் மாலை அணிவித்தனர். மேலும் மகளிர் தினத்தை உயர்த்திப் பிடிப்போம் என்று முழக்கமிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பெரியார் சிலைக்கு இரண்டு மாணவிகள் மாலையிட்டு உரையாற்றினர். பெண் உரிமைகளைப் பற்றியும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை பற்றியும், பாசிச மோடி ஆட்சியில் பெண்களுக்கு  பாதுகாப்பில்லாத நிலைமை குறித்தும் உரையாற்றினர். பெரியாரின் புகழையும், சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தையும் உயர்த்திப் பிடித்து முழக்கமிட்டனர்.
தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, கடலூர்.
♦ ♦ ♦ 
கம்பம் – என்.டி.பட்டி கிராமத்தில்…
தேனி மாவட்டம், கம்பம் – என்.டி.பட்டி கிராமத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அப்பகுதி தோழர் பிரேமா தலைமை ஏற்றார். காலமெல்லாம் பெண்களும், கடந்துவந்த பாதையும் என்ற புகைப்படக் கண்காட்சியை தோழர் சேகர் அவர்கள் திறந்து வைத்தார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஆவணப்பட இயக்குநர், வழக்கறிஞர் தோழர் திவ்ய பாரதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆண் குழந்தைகளிடம் பேச வேண்டும்; டெல்லியில் நிர்பயா என்ற பெண் பாலியல் வன்முறைக்குப் பின் சட்டங்களால் பெண்கள் மீதான தாக்குதல்கள் குறைந்துள்ளதா?” என பெண்களின் பிரச்சினைகள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

குழந்தைகள், மகளிர் பங்கேற்ற கவிதை வாசிப்பு, பாடல்கள், நடனம், நாடகம் என நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது. முன்னதாக ஸ்டெர்லைட் மற்றும் வன்முறைகளில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னணி பெண் தோழர்கள் கெளரவப்படுத்தப்பட்டனர். பல்வேறு பகுதியைச் சேர்ந்த தோழர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டாலும், உள்ளூர் பெண்கள் அதிகம் கலந்து கொண்டார்கள். இந்த சர்வதேச மகளிர் தின விழா இப் பகுதியில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: மக்கள் அதிகாரம், தேனி மாவட்டம்.

தொகுப்பு:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க