த்திய கிழக்கு நாடுகளின் வெனீசு நகரம் என்றழைக்கப்படும் பஸ்ரா நகரம் தெற்கு ஈராக்கில் அமைந்துள்ளது. நதிகள், கால்வாய்கள் மற்றும் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடங்கள் அமையப்பெற்ற இந்நகரம் இப்போது திறந்தவெளி குப்பைக்கிடங்காக மாறி மிக மோசமானதொரு சுகாதாரச் சீர்கேட்டை எதிர்கொண்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 1,18,000 பேர், காற்று மற்றும் நீர் மாசுபாட்டால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் நெருப்புக் காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமை மோசமடைவதைக் கண்டு கொதித்தெழுந்த இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழலைக் கட்டுப்படுத்தத் தவறி, சுகாதாரமான குடிநீர் தராத அரசைக் கண்டித்து போராட்டங்களை வீதியில் நடத்தி வருகின்றனர்.
டைப்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உருவாகும் ஷாட்-அல்-அராப் நதிதான் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்ரா நகரின் மத்தியப்பகுதியில் ஓடும் இந்த நதியில் உப்புத்தன்மை சற்று அதிகமாக இருக்கும் நிலையில் வேதிப்பொருட்களும், நச்சுக்கழிவுகளும் கலப்பதால் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துள்ளது.

முகம் கழுவுவதற்குக் கூட லாயக்கற்றுப் போயிருக்கும் இந்த நதியில், மீன்களும், நண்டுகளும் செத்து மடிகின்றன. சுற்றுச்சூழல் மாறுபாட்டுக்குள்ளாகி ஒரு பேரழிவு நெருங்கி வரும் அபாயம் நிலவுகிறது என்கிறார் பஸ்ரா பல்கலைக்கழகத்தின் காற்று மற்றும் நீர் மாசுபாட்டு நிபுணர் செளக்ரி-அல்-ஹசான்.

ஈராக்கின் வளமான நகரங்களில் ஒன்றான பஸ்ரா, எண்ணெய் வளத்திற்குப் புகழ்பெற்றது. ஆனால் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் பணம் எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை என புலம்புகின்றனர் பொதுமக்கள்.
நோயால் பாதிக்கப்படும் மக்கள் சில சமயங்களில் மருத்துவரைப் பார்க்க மிகவும் அச்சப்படுகின்றனர். ஒரு வேளை மருத்துவ சோதனையின் போது புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டு கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம்தான் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வதைத் தடுக்கிறது என்கிறார் 27 வயதான சமூக ஆர்வலர் அலி காசிம்.

ஷாட்-அல்-அராப் நதியில் கட்டிமுடிக்கப்பட்ட இத்தாலியன் மேம்பாலம்

ஆகஸ்டு 2017-ம் ஆண்டு ஷாட்-அல்-அராப் நதியில் கட்டிமுடிக்கப்பட்ட இத்தாலியன் மேம்பாலம். விவசாயம் அழிக்கப்பட்டு, குப்பைகளும், கழிவுகளும் இந்த நதியில் கொட்டப்படுவதால் உப்புநீர் பின்வாங்கி டைப்ரிஸ், யூப்ரடீஸ் நதிகளையும் பாழ்படுத்தி, கால்நடைகள், மீன் வளம் ஆகியவற்றை அழித்து வருகிறது

கடந்த சில மாதங்களில் மட்டும் 1,18,000 பேர் மாசு கலந்த நீரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அல்-அஷார் கால்வாயின் அவல நிலை.

அல்-அஷார் கால்வாயின் அவல நிலை. ஷாட்-அல்-அராப் நதியிலிருந்து பிரிந்து பஸ்ராவின் பழைய நகரப்பகுதியில் வலம்வந்த நதி இன்று குப்பைக்கூளங்களின் புகலிடமாய் மாறிவிட்டது.

ஈராக்கின் எண்ணெய் வளமிக்க நகரங்களில் ஒன்றான பஸ்ராவினால் கிடைக்கும் வருமானம் எங்கு செல்கிறதென்றே தெரியவில்லை; ஆனால் நோய்கள் மட்டும்தான் பிரதிபலனாகின்றன என்கின்றனர் நகரவாசிகள்

அப்துல் கரீம், காசிம் சதுக்கம்

காசிம் சதுக்கத்தில் அமர்ந்திருக்கும் நபர் அப்துல் கரீம். இங்குதான் அடிப்படை வசதிகள் கோரியும், ஊழலை ஒழித்து வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராடிய 20 இளைஞர்கள் ஈராக்கிய அரசால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவர்களின் புகைப்படங்கள் சதுக்கத்தைச் சுற்றி தொங்கவிடப்பட்டுள்ளன.

வளைகுடாப் பகுதியிலிருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீன்கள். பஸ்ரா நகரத்து நதிகள் போன்று இந்தக் கடல் பாழ்படுத்தப்படவில்லை எனவே மீன்கள் கிடைப்பது எளிதாகிறது.

ஷானாஷீல் உணவு விடுதி

ஷானாஷீல் என்றழைக்கப்படும் பஸ்ரா நகரத்தின் பாரம்பரியமிக்க ஹோட்டலை எதிர்நோக்கியிருக்கும் கால்வாய் ஒன்று. இசுலாமிய, கிறித்தவ, யூத பெரும் பணக்காரர்கள் வசித்து வந்த பகுதி இது.

அல்-அஷார் கால்வாயின் பழைய படம்

இதே கால்வாயின் பழைய தோற்றம் – ஷாட்-அல்-அராப் நதியிலிருந்து பிரிந்து பஸ்ரா நகரத்தின் ஊடாகச் செல்லும் கால்வாய் ஒன்றின் பழைய படம்.

2016-ம் ஆண்டு யுனெஸ்கோவால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட மெசபடோமிய சதுப்பு நிலங்கள். வசந்தத்தின் புகலிடமாக இருந்த இடத்தில் இன்று வாழ முடியாத சூழ்நிலை நிலவுவதால் நிறைய பேர் குடிபெயர்ந்து விட்டனர். ஹூசேன் மட்டும் மீன்பிடி, சுற்றுலா என இன்னமும் இங்கேயே வாழ்ந்து வருகிறார்.

ஹூசேனின் மகனும், உறவினரின் பிள்ளையும் படகில் விளையாடுகின்றனர். இவர்கள் பள்ளியில் படிக்கின்றனர். ஆனால் பல குழந்தைகள் படிப்பை நிறுத்திவிட்டனர்.

இன்னொரு நபர் தன்னுடைய இரு மகன்களுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.


தமிழாக்கம்: வரதன்
நன்றி:  அல்ஜசீரா 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க