மோடியை முன்னிறுத்தி பாஜக வெளியிட்ட 2014-ம் ஆண்டின் ’பளபள’ தேர்தல் அறிக்கை, வெற்று காகிதமாகிவிட்ட நிலையில், ‘ராமர் கோயில் கட்டுவோம்’ என்ற முழக்கத்துடன் 2019 மக்களவை தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது பாஜக.  இதுகுறித்த கருத்துக்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.  பாஜக தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே, டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் #sanghifesto என்ற பெயரில் பாஜக கும்பலின் போட்டோஷாப் பாணியில் கிண்டல் பதிவுகள் வைரலாக பரவின.

சந்திரமோகன்

பாஜகவின் தேர்தல் அறிக்கை படிக்கவில்லை எனக் கவலைப்படுபவர்கள் கவனத்திற்கு !கவலைப்பட வேண்டாம்! நான் முழுக்க படித்துவிட்டேன் !
உங்கள் நேரத்தை வீண் செய்ய வேண்டாம்!
முதல் படத்தில் ” சங்கல்ப் பத்ரா ” என்ற பெயரில் இருப்பது தேர்தல் அறிக்கை!
இரண்டாம் படத்தில் இருப்பது தான், அறிக்கையின் மொத்த சரக்கும்!
மோடியின் லாலிபாப் குச்சி மிட்டாய் தேர்தல் அறிக்கை!

வினோத். எஸ்

பாஜக தேர்தல் அறிக்கை ஒரு பார்வை…

2014 :

  • எல்லோருக்கும் கழிப்பறை.
  • எல்லோருக்கும் வீடு.
  • எல்லோருக்கும் மின்சாரம்.
  • எல்லோருக்கும் கேஸ் இணைப்பு.
  • ராமர் கோயில் கட்டுவோம்.

2019

  • எல்லோருக்கும் கழிப்பறை.
  • எல்லோருக்கும் வீடு.
  • எல்லோருக்கும் மின்சாரம்.
  • எல்லோருக்கும் கேஸ் இணைப்பு.
  • ராமர் கோயில் கட்டுவோம்.

2024

  • எல்லோருக்கும் கழிப்பறை.
  • எல்லோருக்கும் வீடு.
  • எல்லோருக்கும் மின்சாரம்.
  • எல்லோருக்கும் கேஸ் இணைப்பு.
  • ராமர் கோயில் கட்டுவோம்.

2224

  • எல்லோருக்கும் கழிப்பறை.
  • எல்லோருக்கும் வீடு.
  • எல்லோருக்கும் மின்சாரம்.
  • எல்லோருக்கும் கேஸ் இணைப்பு.
  • ராமர் கோயில் கட்டிட்டே இருக்கிறோம்.

நரேன் ராஜகோபாலன்

பாஜக தேர்தல் அறிக்கையில் மூன்று அம்சங்கள் கவலை அளிக்கின்றன.

1 ) ஆர்ட்டிக்கிள் 370 கஷ்மீரிலிருந்து நீக்கப்படும் என்றொரு வாக்குறுதி. இதை கஷ்மீரின் இரண்டு முக்கிய கட்சிகளும் எதிர்க்கின்றன. மெஹபூபா முப்தி ஒரு படி மேலே போய், ஆர்டிக்கிள் 370 நீக்கப்பட்டால், கஷ்மீர் இந்திய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் என்று சொல்லி இருக்கிறார். இது ஒரு தெளிவான கேம் ப்ளான். படித்த வடக்கத்திய முட்டாள்களே, கஷ்மீருக்கு மட்டுமென்ன சிறப்பு சலுகை என்று திட்டிக் கொண்டிருப்பதை revalidate செய்யும் திட்டம். இது ஒரு complex subject. சுருக்கமாய் இந்து பெரும்பான்மை இருக்கும் நாட்டில், மாநிலங்களில், இஸ்லாமிய பெரும்பான்மை இருக்கும் ஒரே மாநிலம் ஜம்மு & கஷ்மீர் தான். அதனால் தான் அரசியல் அமைப்பு சட்டம் அந்த சிறப்பு சலுகையினை வழங்கி இருக்கிறது. அந்த அடிப்படைகள் ஒரு நாளும் இந்துத்துவ அடிப்படைவாத கும்பலுக்கு மண்டையில் ஏறாததால் தான் இந்த அறிவிப்பு. ஆக பெரும்பான்மையான இஸ்லாமிய வாக்கு இப்போதே கஷ்மீரில் காலி.

2 ) உள்நாட்டு கட்டமைப்புக்கு 100 இலட்சம் கோடிகள் செலவிடப்படும் என்று சொல்லப் பட்டு இருக்கிறது. ஏற்கனவே IL&FS சிக்கலில் முக்கால்வாசி திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. PPP (Public Private Partnership) மாடல் குழப்பத்தில் இருக்கிறது. இதில் எங்கிருந்து 100 இலட்சம் கோடிகள் வரும் என்று தெளிவான பார்வைகள் இல்லை. பாஜக அரசின் ஒரு சில உருப்படியான அமைச்சகத்தில் முக்கியமானது நிதின் கட்கரி கையாண்ட உள்கட்டமைப்பு அமைச்சகம். ஒழுங்காய் வேலை பார்த்து இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். ஆனால் ஆண்டு கணக்கில் 20,000 கோடிகளை கடந்த ஐந்தாண்டில் தாண்டவில்லை. 20,000 கோடியிலிருந்து அடுத்த ஐந்தாண்டுகளில் 100 இலட்சம் கோடிகள் செலவு என்பது exponential jump. காங்கிரசின் NYAYக்கான செலவு வருடத்துக்கு 3.6 இலட்சம் கோடிகள். இதுவே எங்கிருந்து வருமென்பது தான் சங்கீ பொருளாதார நிபுணர்களின் கேள்வி. 3.6 இலட்சமே வராது என்றால், 100 இலட்சம் கோடிகள் எங்கிருந்து வரும்?

3 ) 2022-ல் விவசாய வருவாய் இரடிப்பாகும். 2014-லிலும் இந்த வாக்குறுதி இருந்தது. ஐந்தாண்டுகளில் விவசாயத்திற்கு என்ன செய்தார்கள் என்பதை பொறுத்து தான் 2019-24க்குள் இது நிறைவேற்றப்படுமா என்று சொல்ல முடியும். ஐந்தாண்டு விவசாய ட்ராக் ரெக்கார்டு பாஜக-விற்கு படு கேவலமாக இருக்கிறது. மேற்கில் மூன்று மாநில தோல்விக்கான மிக முக்கியமான காரணம் – விவசாயத்தின் சீர்குலைவுதான். அடிப்படை விலை உச்சபட்ச உயர்வு 150% தரப்படும் என்று சொன்னதே கேள்விக்குறியாகி, விவசாயிகளை கட்டாயமாக காப்பீடு எடுக்கச் சொல்லி, அதிலும் தனியார், அரசு காப்பீடு நிறுவனங்கள் சம்பாதித்ததுதான் மோடியின் ட்ராக் ரெக்கார்டு. ஐந்தாண்டுகளில் இந்தியாவில் விவசாயம் சீரழிந்து இருக்கிறது. ஒருவேளை, சீரழிந்த (அ) சீரழிக்கப்பட்டு கீழே விழுந்திருக்கும் விவசாய வருமானத்தினை தான் மோடி 2022க்குள் இரடிப்பாக்குவேன் என்று சொல்லி இருப்பார் என்றால், அது சாத்தியம் தான். 100ரூ சம்பாதித்து கொண்டு இருந்த ஆளை, 25 ரூபாய்க்கு தள்ளி விட்டு, மூன்றாண்டுகளில் 50ரூ வருமென்று சொல்வதில் சிக்கல் என்ன இருக்கிறது?

மற்றபடி ராமர் கோவில் கட்டுவதில் ஆரம்பித்து, ஒரே மக்கள், ஒரே தேசம் வரை பலவும் ‘ரீபிரிண்ட்’ மட்டுமே. 2014-ல் மோடி ஒரு challenger. 2019-ல் மோடி ஒரு incumbent. இரண்டையும் மக்கள் பார்க்கும் பார்வைக்கு ஏகப்பட்ட வித்தியாசமிருக்கிறது. மக்களுக்கு எது நடந்தது, எது நடக்குமென்று தெரியும். மக்கள் முட்டாள்கள் அல்ல.

பாரதி செல்வா

ராமருக்கு சிலை வைக்கப்படும்..🤔🙄

சதீஸ் செல்லதுரை

ராமர் சிலைக்கு பின் வயிறு வலிக்க சிரிக்க வைத்த பாஜகவின் வாக்குறுதி பரிதாபங்களில் டாப்பு இது.

ரவி நாயர்

பாஜக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். உள்ளே இருப்பது இதுதான்…நமோ, நமோ, நமோ, நமோ, நமோ, நமோ……

அர்ஃபா கானும் ஷெர்வானி

கோயிலுக்கும் காஷ்மீரிருக்கும் திரும்பியிருக்கிறது பாஜக, உள் எதிரி, வெளி எதிரியா? பாஜகவின் தேர்தல் அறிக்கை அக்கட்சி பயத்துடன் தேர்தலை சந்திக்க இருப்பதைக் காட்டுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டத்தைக்கூட, அது மீண்டும் நீட்டிக்கவில்லை?  பாஜகவை தேர்ந்தெடுத்தால், நீங்கள் கவலை, பயம், இரக்கமற்ற தேசியவாதத்தை தேர்ந்தெடுப்பதாகவே பொருள்.

தேவ் ப்ரமோத்

23 வருடங்களாக பாஜக தேர்தல் அறிக்கையில் இருக்கும் பொதுவான ஒரு விசயம்….

சம்பத் குமார்

சங்கிகளின் தேர்தல் அறிக்கை: இந்தியாவைச் சுற்றி ‘இந்தியப் பெர்ஞ்சுவர்’ கட்டப்படும்.

வெற்றிச்செல்வன்

சீனப்பட்டாசுகளை இந்தியாவிலேயே தயாரிக்க மேக் இன் இந்தியா திட்டத்தில் சீன கம்பெனிகளுக்கு சிறப்பு மானியம்!

ஒவ்வொரு இந்து குடும்பத்துக்கும் மாதம் 7 லிட்டர் கோமியம் இலவசமாக வழங்கப்படும் என்ற பாஜகவை கிண்டல் செய்யும் பதிவு நிஜமா எனக் கேட்டிகிறார் இந்த பதிவர்.

மன் கி பாத் என்பது இதுதானாம்!

செங்கோட்டைக்கு காவி வண்ணம் பூசப்படுமாம்!

பிரதமருக்காக ஒரு நாள் என்பது 28 மணி நேரமாக மாற்றியமைக்கப்படும்!

சவுக்கிதார்களை கண்காணிக்க சுப்ரமணிய சாமி தலைமையில் ‘பிராமணாள் கண்காணிப்பு கமிட்டி’ அமைக்கப்படும்!

சங்கல்ப் பத்திரமா ? மண்ட பத்திரமா?

ஒரு ரூபாய்க்கு நாப்கின், ஆட்சியில் இருக்கும்போது 28% ஜி.எஸ்.டி.

ஐந்தாம் வகுப்பில் நீட் தீர்வு!


தொகுப்பு:
அனிதா