இந்தித் திணிப்பு, சம்ஸ்கிருதத் திணிப்பு, தனியார் மய ஊக்குவிப்பு என ஒரே நேரத்தில் பல்வேறு தாக்குதல்களை கல்வித்துறையில் தொடுத்திருக்கிறது மோடி அரசு. ஆங்கிலத்தில் இருக்கும் அந்த அறிக்கை இங்கே தமிழில் கிடைக்கிறது. இதை நாம் முழுமையாக படிக்கும் போதுதான் இந்தித் திணிப்பு எப்படி நேரடியாகவும் மறைமுகமாவும் வர இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். கீழ்க்கண்ட மொழிபெயர்ப்பு தரமாக இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவற்றின் அனேக பகுதிகள் கூகிள் டிரான்ஸ்லேசனில் போட்டு செய்யப்பட்டிருக்கிறது. தரமான மொழிபெயர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இதனை மாற்றுகிறோம். சிரமத்திற்கு வருந்துகிறோம்.

தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 இதன் Pdf கோப்பை தரவிரக்கம் செய்ய இங்கே அழுத்தவும் !

– தமிழாக்கம்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம்.

இதுதாண்டா புதிய கல்விக்கொள்கை !

5 ஆம் வகுப்புக்கு மேல் ஃபெயிலானால் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அதாவது, செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கலாம் விவசாயி மகன் ஏர் உழலாம் !

*****

பார்ப்பனர் அல்லாதோருக்கு கல்வியை மறுத்தது மனுநீதி !

இனி அடித்தட்டு சாதியினரும் வர்க்கத்தாரும் ஆரம்பக் கல்வியோடு நிறுத்திக்கொள் என்கிறது புதிய கல்விக் கொள்கை !

விரைவில் வெளிவருகிறது புதிய கலாச்சாரம் வெளியீடு, வாங்கிப் படியுங்கள் !
புதிய கல்விக் கொள்கை : மனுநீதி 2.0

கருத்துப்படம் : வேலன்


இதையும் பாருங்க…

மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன்