அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 05

ம் கருத்து நிலைகளை, கண்ணோட்டங்களை, தமது சொந்த தனித்துவத்தை என்னிடமில்லாது வேறு யாரிடம் இவர்களால் நிலைநாட்ட முடியும்? என்னுடன் நடத்தும் விவாதங்களில் இல்லாமல் வேறு எதில் இவர்கள் தம் அறிவு வெற்றியின் மகிழ்ச்சியை, உண்மையைக் கண்டறிந்த சந்தோஷத்தை அடைவார்கள்?

ஆறு வயதுக் குழந்தைகளுடனான “அறிவுச் சண்டையில்” வெற்றி பெறுவது அவ்வளவு கடினமா என்ன? ஆனால், “அறிவுச் சண்டையின்றி” இதற்கான தயாரிப்பு முகமாக சலிப்பான தேர்வுகளை முடித்து விட்டு அவர்கள் அன்றாடம் பள்ளியிலிருந்து திரும்புவதால் யாருக்கு என்ன பயன்?

சிக்கலான கணக்குகளைப் போட நான் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவேன். அதே சமயம் நான் “தவறிழைப்பேன்”, பாவனை நயத்தோடு படிக்கச் சொல்லித் தருவேன். பின் அவர்கள் நான் படிக்கும் போது என்னைத் திருத்துவார்கள். சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொள்வேன், பின்னர் அவர்கள் என்னை வெற்றியடையும் போது மகிழட்டும்.

அவர்கள் புதியவற்றை அறிந்து கொள்வதன் மீது ஆர்வம் காட்டுவார்கள். “உங்களுக்கு எந்த மாதிரிக் கணக்குகளைத் தரட்டும்? சிக்கலான, கடினமான கணக்குகளையா, எளிய, சாதாரணமான கணக்குகளையா?” என்று கேட்கையில் “சிக்கலான, மிகச் சிக்கலான கணக்குகளைத் தாருங்கள்” என்று ஒருமித்த குரலில், வீராவேசமாக அவர்களிடமிருந்து பதில் வரும். எல்லோராலும் கணக்குகளைப் போட முடியாவிடில் பரவாயில்லை! ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு எல்லோரையும் உயர்த்தப் பாடுபட வேண்டும். குழந்தை சிந்தனை உலகில் மூழ்குவான், புதியவற்றை அறிய முற்படுவான்.

குழந்தைகளே, நீங்கள் விரைவிலேயே பள்ளி வாழ்க்கையை விரும்பத் துவங்குவீர்களென நம்புகிறேன். நீங்கள் பாடங்களின் மீது ஆர்வம் காட்டுவீர்கள். பாடங்கள் உங்கள் வாழ்க்கையின் உட்பொருளாகும். எனது செல்வாக்கைப் பொறுத்தமட்டில், உங்களது நல்லறிவையும் நுட்பமான மனதையும் நான் நம்புகிறேன். அனேகமாக, நான் எப்படிப்பட்ட ஆசிரியர் என்று உங்கள் மத்தியில் விவாதம் தோன்றக்கூடும்.

“நீங்கள் எவ்வளவு நகைச்சுவையுணர்வு மிக்கவர்!” என்பாள் மாரிக்கா. “நீங்கள் எங்களுக்கு எப்போதும் எவ்வளவு சிரிப்பு வரவழைக்கின்றீர்கள் தெரியுமா?”

“இல்லை!” என்று அவளுடன் விவாதம் செய்வான் சாஷா. “அவர் மிகவும் புத்திசாலியானவர்.”

“நீங்கள் அனேகமாக நூறுக்கு மேற்பட்ட நூல்களைப் படித்திருப்பீர்கள், அப்படித்தானே?” என்று போன்தோ என்னைக் கேட்பான்.

“நீங்கள் ஏன் தப்பு செய்கின்றீர்கள்? உண்மையிலேயே உங்களுக்கு இந்த எளிய சொற்களை எழுதத் தெரியாதா?” என்று தேன்கோ ஆச்சரியப்படுவான்.

“நீ என்ன, அவர் வேண்டுமென்றே தான் தப்பு செய்கிறார்” என்று என்னைப் பாதுகாப்பான் கோச்சா.

“நீங்கள் வேண்டுமென்றேதான் தவறு செய்கின்றீர்களா? ஏன்?” என்று புரியாமல் கேட்பாள் ஏக்கா.

“நான் விட்டம் என்றால் என்ன என்று சொல்லித் தந்தேனே உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கீகா தம்பட்டம் அடித்துக் கொள்வான்.

“நீ ஒன்றும் அவருக்குச் சொல்லித் தரவில்லை, அவருக்கு எல்லாமே தெரியும்” என்று மாயா மறுப்பாள்.

படிக்க:
“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !
காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?

“அவரும் மனிதர் தானே, அவருக்கு எப்படி எல்லாவற்றையும் அறிந்து நினைவில் வைத்துக் கொள்ள முடியும்? இது முடியாது, இல்லையா?” என்று இராக்ளி என்னைக் கேட்பான்.

என் அன்புக் குழந்தைகளே, இப்படிப்பட்ட உங்களுடைய சந்தேகங்களில்தான் உங்கள் கண்களில் என் செல்வாக்கு வளரும். உங்கள் ஆசிரியரும் ஒரு மனிதர், உங்களுக்குத் தேவையானவர் என்பது புரியும். நான் விருப்பமானவராக இருந்தால், அதை விட உயர்ந்த அங்கீகாரம் உங்கள் மத்தியில் எனக்குத் தேவையில்லை.

இப்படிப்பட்ட முறைக்கெதிராக குரல் எழுப்பும் பாரம்பரிய போதனை முறையைப் பொறுத்தவரை, அது கிடக்கட்டும். உங்கள் மீதான நம்பிக்கை எப்போதும் தொடர்ச்சியாக இருக்க எனக்கு உதவும்.

இப்போது, அடுத்த 15 நிமிடப் பாடவேளை துவங்கும் போது நான், கடைசி பெஞ்சில் தாத்தோ அருகே உட்கார்ந்து, கரும்பலகையை மூடியுள்ள திரையை விலக்கி வலது பகுதியைக் காட்ட யாரிடமாவது சொல்வேன். அங்கே பின்வருமாறு வரையப்பட்டிருக்கும் :

“குழந்தைகளே, எனக்கு ஆறு முக்கோணங்கள் தெரிகின்றன!”

“முக்கோணங்கள் அல்ல சதுரங்கள்” என்று உங்களில் யாராவது என்னைத் திருத்தக்கூடும்.

“ஆமாம், ஆமாம், சதுரங்கள்! நான் என்ன சொன்னேன்?… அங்கே ஆறு சதுரங்கள் வரையப்பட்டுள்ளதாக எனக்குப்படுகிறது. சரியா?…”

….5 நிமிட இடைவேளையின் கடைசி நொடிகள். நம் கல்விப் பாதையில் தொடர்ந்து செல்ல வேண்டும். இன்னுமொரு கட்டத்தை அனேகமாக நாம் கடக்கக் கூடும்.

“மாரிக்கா, மடி மீதிருந்து இறங்கு. சாஷா, நமது மணியை எடுத்து அடி.”

“டிங், டிங், டிங்!” இனிய மணியோசை ஒலிக்கிறது.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க