2019 தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் !

கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கும் ‘ஒருநாள் தேசிய கருத்தரங்கம்’

நாள் : ஜூலை 20, 2019, சனிக்கிழமை
நேரம் : காலை 10.00 முதல் 6.00 மணிவரை
இடம் : வினோபா அரங்கம், தக்கர் பாபா வித்யாலயா, தி.நகர், சென்னை (நந்தனம் சிக்னல் அருகில்)

சிறப்புரை :

பேராசிரியர் வீ.அரசு
மேனாள் தமிழ்த்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
ஒருங்கிணைப்பாளர், பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு-சென்னை

பேராசிரியர் ஜி.ஹரகோபால்
National Law School of India University, Bangalore,
தலைமைக் குழு உறுப்பினர், கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றம் (AIRTE)

கருத்துரையாளர்கள் :

பேராசிரியர் கதிரவன்
உயிரி தொழில்நுட்பத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு-சென்னை

ஆசிரியர் சு.மூர்த்தி
ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு

மருத்துவர் எழிலன்
இளைஞர் கழகம்

முனைவர் க.ரமேஷ்
பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு – சென்னை

பேராசிரியர் அமலநாதன்
பொருளியல் துறை, தூய சவேரியார் கல்லூரி, பாளை. பொதுக்கல்விக்காக ஓருங்கிணைப்புக் குழு – நெல்லை

நிறைவுரை :

மேனாள் நீதிபதி திரு. அரிபரந்தாமன்
சென்னை உயர்நீதிமன்றம்

நண்பர்களே, வணக்கம்.

த்திய அரசு கடந்த ஜூன் மாதம் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டு கருத்துக்கேட்பு நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் 2019 – 2020 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அதை அமுலுக்கும் கொண்டு வந்துவிட்டது. மோடி அரசின் இந்த நடவடிக்கை கல்வித்துறை எதிர்கொள்ளப் போகும் அபாயத்திற்கு ஒரு சான்று.

தேசிய கல்விக் கொள்கையை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கவில்லை . மாறாக, ஆர்.எஸ்.எஸ் சார்ந்த கல்வி அமைப்புகள் மற்றும் தனியார் பள்ளி/கல்லூரி நிறுவனங்களின் கூட்டமைப்பு, CII, FICCI, NASCOM முதலாளிகள் சங்கம் போன்றவைகளிடம் மட்டுமே கருத்து கேட்டு தயாரித்துள்ளனர். இதிலிருந்தே இந்த கல்விக் கொள்கை யாருடைய நலனுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை உணர முடியும்.

தேசிய கல்விக் கொள்கையிலே, 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு; 8 -ம் வகுப்பிலிருந்து கட்டாய தொழிற்கல்வி; பள்ளிப்படிப்பிலிருந்து உயர்கல்வி வரை இந்தி – சமஸ்கிருத திணிப்பு; கல்வி மீதான மாநில அரசின் அதிகாரத்தை பறித்து பிரதமர் தலைமையிலான தேசிய கல்வி ஆணையத்திடம் ஒப்படைப்பது; B.A.,B.Sc உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் தேசிய அளவிலான தகுதித்தேர்வு; கல்விக்கட்டணம், ஆசிரியர் நியமனம், புதிய கல்லூரிகள் ஆரம்பிப்பது ஆகியவற்றிக்கு அரசின் ஒப்புதல் தேவையில்லை, கல்லூரி நிர்வாகமே தீர்மானித்துக் கொள்ளலாம்; திறமை அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம்; டாடா, அதானி, அம்பானி, பில்கேட்ஸ், மார்க் சுகர்பர்க் போன்ற ‘தனியார் கொடை வள்ளல்கள்’ கல்வித் தொழில் தொடங்க முன்னுரிமை; தனியார் கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளையும் சமமாக அணுகுதல் போன்ற பரிந்துரைகளை வரைவு அறிக்கை முன்வைத்துள்ளது.

இப்பரிந்துரைகளின் நோக்கமே கல்வி கொடுக்கும் பொறுப்பில் இருந்து அரசின் பங்களிப்பை முற்றிலும் நீக்குவதுடன், ஒட்டு மொத்த இந்திய கல்வி சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்பாட்டின் கீழ் ஒப்படைப்பதும் அதற்கு தகுந்த நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதுதான்.

படிக்க:
♦ புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள்

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை என்பதைப் போன்றுதான் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி என்பதே ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யின் கொள்கை.

பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுத்து நவீன குலக்கல்வியை திணிக்கின்ற, கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கி நிதி மூலதனங்களின் கொள்ளைக்காக வழிவகை செய்கின்ற தேசிய கல்விக் கொள்கையை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, நிராகரிக்க வேண்டும்.

பெரும்பான்மை மக்களின் நலனுக்கான கல்விக் கொள்கையை கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து உருவாக்க வேண்டும்.

தகவல் :
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,
(Co-ordination Committee for Commin Education)
சென்னை, தொடர்புக்கு : 94443 80211, 72993 61319