அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 01

அத்தியாயம் நான்கு :

அரிச்சுவடி விழா (84-வது நாள்) படிப்பது – புதியவற்றை அறியும் வழி

னது ஆசிரியர் தொழிலின் ஆரம்பத்தில் நான் குழந்தைகளுக்கு எப்படி எழுத்துகளைச் சொல்லிக் கொடுத்தேன், எப்படி விளக்கினேன், படிக்கவும் எழுதவும் எப்படிச் சொல்லித் தந்தேன் என்று யோசித்துப் பார்க்கையில் எப்படியாவது மந்திரக்கோல் மூலம் பழைய நாட்களுக்குத் திரும்பி எனது அன்றைய குறைகளை நிவர்த்தி செய்யவும், சலிப்பான பாடங்கள், களைப்பேற்படுத்தும், புத்தி சொல்லும் படிப்பு முறைகள், கடுமையான கையெழுத்துப் பயிற்சிகள், பொதுவாக அதிகாரத்தொனி ஆகியவற்றை மாற்றவும் முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று தோன்றுகிறது. நான் இன்று பயன்படுத்தும் முறையின்படி அன்று அவர்களுக்கு சொல்லித் தந்திருந்தால், அவர்களுடைய இன்றைய வாழ்வில் என்ன மாறியிருக்குமென எனக்குத் தெரியாது. அனேகமாக அவர்களுடைய வளர்ச்சியை நான் துரிதப்படுத்தியிருப்பேன், எழுத்துக் கட்டம் என்றழைக்கப்படும் கடினமான கால கட்டத்தை இரண்டு மடங்கு குறைத்திருப்பேன்.

யாராவது ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது ஆறு வயதுக் குழந்தைக்கு பாடநூலில் அவ்வரிகளைப் பின்பற்றுவது கடினம் என்று எனக்குத் தெரிந்தால் இம்மாதிரி செய்யுமாறு ஏன் அவனைக் கட்டாயப்படுத்த வேண்டும்? அதுவும், “திடீரென நிறுத்தி, உன்னைப் படிக்கும்படி சொல்வேன்” என்று ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? கோடு போட்ட நோட்டுப் புத்தகத்தில் பெரிய எழுத்துகளை எழுதிப் பழகிய பின் சிறிதாக எழுதுவது கடினம் என்று எனக்குத் தெரியும் போது நான் ஏன் இவனை முட்டுக்கட்டைக்குத் தள்ள வேண்டும்?

எனது பாட முறைகள் கல்வியைக் கடினமாக்கி, குழந்தையை ஞானத்திலிருந்து தள்ளி, அவனுடைய வாழ்க்கையையும் நெருங்கியவர்களுடனான உறவையும் சிக்கலாக்கினால் இவற்றின் மனிதாபிமானம் எங்கே?

எப்படியாவது மந்திரக்கோல் மூலம் பழைய நாட்களுக்குத் திரும்பி எனது அன்றைய குறைகளை நிவர்த்தி செய்யவும் பொதுவாக அதிகாரத்தொனி ஆகியவற்றை மாற்றவும் முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று தோன்றுகிறது.

கல்வி முறைகளை எப்படி நிர்ணயிப்பது, இவற்றை எப்படி வகைப்படுத்துவது, எப்படிப்பட்ட பாட வரையளவுகளை நிலை நாட்டுவது, பாடத்தில் மூன்று, ஐந்து, ஏழு, பத்து அம்சங்களைப் பாகுபடுத்திப் பார்க்க வேண்டுமா என்றெல்லாம் கல்வி நிபுணர்கள் அடிக்கடி விவாதிக்கின்றனர். ஒருவேளை இந்தப் பன்முக சிந்தனை தன் சாரத்தில் மதிப்புமிக்கதாக இருக்கலாம். மேற்கூறிய வகைபாடுகளும் வரையளவுகளும் கட்டமைப்புகளும் பாடவேளையின் போதும் பாடங்கள் முடிந்த பின்னரும் குழந்தையின் வாழ்க்கையை எப்படி இலகுவாக்கும், இவற்றைப் பயன்படுத்தி புதியவற்றை அறியும் மகிழ்ச்சியை, பள்ளி வாழ்க்கையின் சந்தோஷத்தைக் குழந்தைகளுக்கு எப்படியளிப்பது எனும் மிக முக்கிய அம்சத்திற்கு ஆசிரியரியல் விவாதங்களும் விஞ்ஞான ஆராய்ச்சிகளும் பதில்தராவிடில் இவற்றால் எப்போதுமே தத்துவத்தை முன்தள்ள முடியாது.

இன்று வகுப்பில் எழுத்து விழா: இன்று என் வகுப்புக் குழந்தைகள் எழுத்துகளைக் கற்றுக் கொள்வதை முடிக்கின்றனர். இன்று டிசம்பர் 28-ம் தேதி, 84-வது பள்ளி நாள், அரிச்சுவடியின் கடைசி எழுத்தைச் சொல்லித் தந்து விட்டு, எல்லா எழுத்துகளையும் படித்ததற்காகப் பாராட்டுவேன். நாங்கள் எப்படி எழுத்துகளைப் படித்தோம்?

ஒரு வார்த்தையில் புதிய ஒலியைத் தனியே சுட்டிக் காட்டி பின் இதன் வரி வடிவத்தைப் படிக்கும் அவசியமே ஏற்படவில்லை. பல வார்த்தைகளின் ஒலி உள்ளடக்கத்தைப் பகுப்பாய்வு செய்த என் வகுப்புக் குழந்தைகளுக்குக் கிட்டத்தட்ட “புதிய ஒலி” என்பதே இருக்கவில்லை . “முதல் அசை என்ன… இரண்டாவது அசை… முதல் ஒலி…” என்ற வகையில் நாங்கள் வார்த்தையை வழக்கமான முறையில் பகுப்பாய்வு செய்யவில்லை. ஏனெனில் இது அவர்களின் வளர்ச்சிக்குப் புதிதாக எதையுமே தரவில்லை (இது அவர்களிடம் ஏற்கெனவே வளர்ச்சியடைந்திருந்தது), அவர்கள் புதிதாக அறிந்து கொள்ளவும் உதவவில்லை (இந்த “தேட்டத்தில் எல்லாமே குழந்தைகளுக்குத் தெரிந்திருந்தது). எழுத்துகளைச் சொல்லித் தரும் போது நான் படங்களையும் பயன்படுத்தவில்லை; இவை ஏதோ வார்த்தையில் ஒலிப் பகுப்பாய்விற்கு உதவுவதாகக் கூறுகின்றனர்.

படிக்க:
மந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் !
பீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் !

உதாரணமாக, சேவல் படத்தைக் காட்டினால் குழந்தைகள் இந்த வீட்டு மிருகத்தைப் பற்றித் தமக்கு தெரிந்தவற்றையெல்லாம் சொல்வார்கள், சேவல் என்று உச்சரிப்பார்கள் பின் இதை அசைகளாகவும் ஒலிகளாகவும் பிரிக்கத் தொடங்குவார்கள். இந்தப் பட முறையைக் கைவிட்ட நான் பொருளைப் பற்றிய பேச்சையும் கைவிட்டேன், ஏனெனில் இது உண்மையில் படிக்க வேண்டியதிலிருந்து குழந்தைகளின் கவனத்தைத் திசை திருப்பியது. வார்த்தையின் மிகச் சிறந்த வெளிப்பாடு இந்த வார்த்தையும் இதன் மாடலும்தான்.

இவ்வாறாக, நாங்கள் ‘புதிய’ எழுத்தை நோக்கி (ஒலியைத் தாண்டி) நேரடியாக “தாவிச்” சென்றோம். நான் இதை எப்படிச் செய்தேன்?

முதல் முறை :

“குழந்தைகளே, இதைப் பாருங்கள், இன்று எந்த எழுத்தைப் படிக்கப் போகின்றோம் என்று சொல்லுங்கள்.”

கரும்பலகையில் உலகம் எனும் சொல் எழுதப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது எழுத்தாகிய ‘’ என்பது புதிய எழுத்து. அருகே வட்டத்தினுள் அறிமுகமான, அறிமுகமற்ற எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன, ல எனும் எழுத்து மூன்று முறை எழுதப்பட்டுள்ளது.

“இவ்வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பாருங்கள். இங்கே ‘ல’ என்ற எழுத்து உள்ளதா? எவ்வளவு ‘ல’ உள்ளன?

குழந்தைகளுக்கு அறிமுகமான எழுத்துகள் வார்த்தையைப் படிக்கவும், புதிய எழுத்து எது என்று கண்டு பிடிக்கவும், இதைச் சொல்லவும், வார்த்தையில் இதைச் சுட்டிக்காட்டவும் உதவும்.

இரண்டாவது முறை :

“இந்த வார்த்தைகளைப் பாருங்கள். நான் சொல்லித் தரப்போகும் எழுத்து இவற்றில் சிலவற்றினுள் ஒளிந்து கொண்டிருக்கிறது. இது என்ன எழுத்து? எந்தெந்த வார்த்தைகளில் இது உள்ளது?”

கரும்பலகையில் பதினொன்று வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் எட்டு வார்த்தைகளில் புதிய எழுத்தாகிய ‘’ உள்ளது. படிக்கப் போகும் எழுத்து தனியாக வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. எழுத்துகள் மற்றும் வட்டங்கள் சேர்ந்து வார்த்தையைப் படிக்கவும் அதில் ‘ப’ என்ற எழுத்தைக் கண்டுபிடிக்கவும் உதவும். எந்த வார்த்தையில், எந்த இடத்தில் “புதிய எழுத்து” உள்ளதென அவர்கள் சொல்கின்றனர், எனது செய்கைகளைக் கவனித்து திருத்துகின்றனர். ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள ‘ப’ என்ற எழுத்தைக் கோடுபோட்டு இணைக்கும் நான் “கவனக் குறைவாக” “தவறு” செய்யக் கூடாது அல்லவா! கரும்பலகையில் பின்வரும் படம் இருக்கும், இதன் நடுவே ‘ப’ என்று நான் எழுதுகிறேன்.

மூன்றாவது முறை :

“இந்தப் படத்தைப் பாருங்கள், நாம் எந்த எழுத்தை இன்று படிக்கப் போகின்றோம் என்று கண்டுபிடியுங்கள்.”

இப்படத்தின் நடுவே ஒரு சிறு சதுரம் உள்ளது, அதில் கேள்விக்குறி இடப்பட்டுள்ளது; சதுரத்தைச் சுற்றிலும் வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் இன்று படிக்க வேண்டிய எழுத்தைச் சுற்றி வட்டமிடப்பட்டு, இவை கோடுகளால் நடுவிலுள்ள சதுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்து ‘’ என்று குழந்தைகள் கண்டுபிடித்ததும், சதுரத்தில் உள்ள கேள்விக்குறியை அழித்து விட்டு இந்த எழுத்தை எழுதுகிறேன். ஆனால் நான் “தப்பு செய்யக் கூடும்”, ‘ர’ என்பதற்குப் பதில் ‘கு’ என்றோ வேறு எழுத்தையோ எழுதினால், குழந்தைகள் என்னைத் திருத்துவார்கள்.”

நான்காவது முறை :

“இங்குள்ளவற்றில் ‘’ என்ற எழுத்து எது என்று உங்களில் யாரால் சொல்ல முடியும்?”

கரும்பலகையில் ஐந்து எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன: ஓ, க, ந, ம, ழ. இவற்றில் இரண்டு ஏற்கெனவே அவர்களுக்கு அறிமுகமானவை, மூன்று தெரியாதவை.

“ஒருவேளை இதுவோ?” என்று முதல் எழுத்தைக் காட்டி நான் கேட்கிறேன்.

“இல்லை, அது ஓ!” நான் அதைக் கரும்பலகையிலிருந்து அழிக்கிறேன்.

“ஒருவேளை இதுவோ!” என்று இரண்டாவது எழுத்தைக் காட்டிக் கேட்கிறேன்.

“இல்லை இது க.” அதையும் அழிக்கிறேன்.

“சரி, ந என்ற எழுத்து எங்கே இருக்கிறது?”

“நடுவில்!” என்று குழந்தைகள் பதிலளிக்கின்றனர்.

“இதுவா?”

“ஆமாம்!”

“இவை என்ன எழுத்துகள்?” என்று இன்னமும் நாங்கள் படிக்காத எழுத்துகளைக் காட்டி கேட்கிறேன். பலர் அவற்றைச் சொல்கின்றனர்.

“சரி, இவற்றைப் பின்னால் பார்ப்போம்.” என்று அந்த இரண்டு எழுத்துகளையும் அழிக்கிறேன்.

“இது என்ன எழுத்து?”

“ந!” ஒருமித்த குரலில் பதில் வருகிறது.

ஐந்தாவது முறை :

குழந்தைகள் வருமுன் வகுப்பிலுள்ள கரும்பலகைகளில் நாங்கள் படிக்கப் போகும் எழுத்தை இரண்டு, மூன்று முறை எழுதுகிறேன். வகுப்பறையினுள் நுழைந்ததுமே குழந்தைகள் இதைக் கவனித்து விடுவார்கள். இது என்ன எழுத்து என்று விவாதிக்கத் தொடங்குவார்கள். பாடம் துவங்கும் போது பெரும்பான்மையினருக்கு இது நன்கு தெரிந்திருக்கும்.

“இன்று எந்த எழுத்தைப் படிக்கப் போகின்றோம்?”

அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் பதில் சொல்வார்கள்.

எழுத்தைப் படித்த பின் நான் குழந்தைகளுக்குப் பல்வேறு விதமான வேலைகளைத் தருவேன். இவற்றிற்கு நான் பெரும் முக்கியத்துவம் தருகிறேன்.

எனது பாட முறைகள் கல்வியைக் கடினமாக்கி, குழந்தையை ஞானத்திலிருந்து தள்ளி, அவனுடைய வாழ்க்கையையும் நெருங்கியவர்களுடனான உறவையும் சிக்கலாக்கினால் இவற்றின் மனிதாபிமானம் எங்கே?

எழுத்துக் கட்டம் என்றழைக்கப்படும் இந்தக் கால கட்டத்தில் என் ஆறு வயதுச் சிறுவர் சிறுமியருக்குப் படிப்பதன் கஷ்டங்களைப் பற்றிச் சொல்லி அச்சுறுத்த நான் விரும்பவில்லை; எழுத்துகளில் சுவாரசியமானது எதுவுமே இல்லை என்றொரு கருத்து அவர்களிடம் ஏற்பட்டால் ருஸ்தவேலி, பாரதஷ்வீலி, சாவ்சவாத்ஸே, பூஷ்கின், டால்ஸ்டாய் போன்றவர்களைப் படிக்கும் மகிழ்ச்சியை நான் அவர்களிடமிருந்து பிடுங்கியவனாவேன். எனது முயற்சிகள் இப்படி முடியக்கூடாதென விரும்புகிறேன், எனவே, எழுத்துக் கட்டத்தை விரிவுபடுத்துவது, புதியவற்றைப் பரவலாகக் கற்றுக்கொள்ளும் அக்கறைகளை வளர்ப்பது (படிக்கும் பழக்கத்தின் மூலம் இவற்றைப் பூர்த்தி செய்யலாம்) ஆகியவற்றை லட்சியமாக முன்வைக்கிறேன்.

குழந்தைகளிடம் உள்ள படிக்கும் பழக்கத்தை அதிகப் பரவலான, உட்பொருள் மிக்க, உணர்ச்சிகரமான, சுவாரசியமான அறிதல் நடவடிக்கையாக மாற்ற வேண்டும், இப்படிக்கும் பழக்கமே இறுதி இலட்சியமாக இருக்கக் கூடாது, இது புதியவற்றை அறியும் சாதனமாகத் திகழுமாறு செய்ய வேண்டும்.

இந்த “முது மொழியின்” அடிப்படையில் எனது வகுப்புக் குழந்தைகளுக்கான பாட முறைகளை உருவாக்கினேன்.

முதல் பாடம் :

கரும்பலகையில் அசைகளும் சொற்களும் செங்குத்தாக ஒரே வரிசையில் எழுதப்பட்டுள்ளன. ஆசிரியர் கரும்பலகையிலிருந்து தள்ளி நின்று வேகமாகக் கேள்விகளைக் கேட்க வேண்டும்.

“மேலிருந்து மூன்றாவதாக நர்ச என்று எழுதப்பட்டுள்ளது. இல்லையா?”

குழந்தைகள் படித்துப் பார்த்து விட்டு நான் சொன்னது தவறு என்கின்றனர்.

“அது என்ன அசை?”

குழந்தைகள் (ஒரே குரலில்): “நசர்!”

குழந்தைகளிடம் உள்ள படிக்கும் பழக்கத்தை அதிகப் பரவலான, உட்பொருள் மிக்க, உணர்ச்சிகரமான, சுவாரசியமான அறிதல் நடவடிக்கையாக மாற்ற வேண்டும், இப்படிக்கும் பழக்கமே இறுதி இலட்சியமாக இருக்கக் கூடாது, இது புதியவற்றை அறியும் சாதனமாகத் திகழுமாறு செய்ய வேண்டும்.

“கீழிருந்து நான்காவதாக அகர் என்று எழுதப்பட்டுள்ளது. சரிதானே?”

“ஆமாம்!”

“எல்லோரும் சேர்ந்து இந்த அசையைப் படியுங்கள் பார்க்கலாம்.”

குழந்தைகள் (ஒரே குரலில்): “அகர்!”

“மேலிருந்து கீழாக எந்த இடத்தில் பாய்மரம் என்ற வார்த்தை உள்ளது?”

இந்த வார்த்தையே கரும்பலகையில் இல்லையே என்று குழந்தைகள் பார்க்கின்றனர்.

“மன்னியுங்கள்! பம்பரம் என்று சொல்ல விரும்பினேன்!”

“மூன்றாவது இடத்தில்!” என்று குழந்தைகள் கத்துகின்றனர்.

இரண்டாவது பாடம் :

“இந்த வாக்கியத்தில் நான் என்ன தப்பு செய்துள்ளேன் என்று கண்டுபிடியுங்கள்.”

குழந்தைகள் வாக்கியத்தைப் படித்து விட்டு தப்பைத் தேடுகின்றனர்; இதில் தப்பே இல்லாமலிருக்கலாம். உண்மையில் தப்பு உள்ளதா, இருந்தால் எந்த வார்த்தையில் உள்ளது, இதை எப்படித் திருத்துவது என்று இவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

மூன்றாவது பாடம் :

கரும்பலகையில் ஐந்து, ஆறு எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.

“இவற்றைக் கொண்டு ஆறு வெவ்வேறு சொற்களை எழுதலாம், எங்கே முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்!”

படிக்க:
வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து !
மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?

குழந்தைகள் வார்த்தைகளை உருவாக்கிச் சொல்ல, நான் அவற்றைக் கரும்பலகையில் எழுதுகிறேன். ஆனால் ஆறாவது வார்த்தையை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த எழுத்துகளை எப்படியெல்லாம் சேர்த்து எழுதலாம் என்று ஒன்றாகச் சேர்ந்து யோசித்து விட்டு, ஐந்து வார்த்தைகளுக்கு மேல் எழுத முடியாது என்ற முடிவிற்கு வருகிறோம்.

நான்காவது பாடம் :

கரும்பலகையில் வார்த்தைகளும் படங்களும் உள்ளன, இவை ஒவ்வொன்றும் கோடுகளால் இணைக்கப்பட்டுள்ளன.

“வார்த்தைகள் சரியான படங்களுடன் இணைக்கப் பட்டுள்ளதா என்று பார்த்துச் சொல்லுங்கள்!”

வார்த்தைகள் படங்களுடன் தவறாக இணைக்கப்பட்டிருந்தால் அவற்றைச் சரி செய்ய குழந்தைகள் எனக்கு உதவுகின்றனர். சில சமயங்களில் வேண்டுமென்றே நான் தவறாக இணைத்து தப்பு செய்தேன். குழந்தைகள் என்னைத் திருத்த ஆரம்பிக்க, நான் அங்குமிங்குமாகக் கோடு போட்டேன், சரியான வார்த்தையைக் “கண்டு பிடித்து”, வகுப்பு அமைதியாகும் வரை இப்படி செய்தேன். சுயமாக செய்து பார்ப்பதற்காக இப்படி படங்களும் எழுத்துகளும் உள்ள தாள்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவர்கள் பெரிதும் விரும்பினர். அவர்கள் தமது விடைகளைக் கரும்பலகையில் எனது விடைகளுடன் ஒப்பிட்டு மீண்டும் என் “தவறுகளைக்” கண்டுபிடித்தனர்.

ஐந்தாவது பாடம் :

நான் கரும்பலகையில் எழுத்துகள், படங்களைக் கொண்டு எளிய ஓவிய ஒலியெழுத்துப் புதிர்களை வரைந்தேன்; வார்த்தைகளிலிருந்து குறிப்பிட்ட எழுத்துகளை எடுத்து விட்டு வார்த்தையின் எஞ்சிய பகுதியைப் படங்களின் பெயர்களுடன் இணைக்க வேண்டும். விடைகளைக் கரும்பலகையில் எழுதி இவற்றைக் குழந்தைகளுடன் சேர்ந்து சரிபார்த்தேன். தனியாகப் போட்டுப் பார்ப்பதற்காக இத்தகைய புதிர்கள் அடங்கிய தாள்களை நான் தயாரித்த போது குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர், இவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டனர்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க