சென்னை பல்கலை : கிருபாமோகனை மீண்டும் இணை ! மாணவர் போராட்டம் !

ஆர்.எஸ்.எஸ். கும்பலால் வெளியேற்றப்பட்ட மாணவர் கிருபாமோகனை சென்னை பல்கலைக்கழகத்தில் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என மாணவர்கள் போராட ஆரம்பித்துள்ளனர்.

0

சென்னை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் கிருபா மோகனின் சேர்க்கை செல்லாது எனக் கூறி அவரை பல்கலையிலிருந்து நீக்கியுள்ளது பல்கலை நிர்வாகம்.

சென்னைப் பல்கலையில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் எனும் மாணவர் அமைப்பு, சென்னைப் பல்கலை மாணவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காகவும், பல்கலையில் நிர்வாகத்தால் புகுத்தப்படும் இந்துத்துவக் கருத்தியல்களுக்கு எதிராகவும், பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த ஆண்டு இதே பல்கலையில் இதழியலில் முதுகலை பட்டம் முடித்த மாணவர் கிருபா மோகன், இந்த அமைப்பில் முன்னணியாக செயல்பட்டு வந்திருக்கிறார். இந்த ஆண்டு தத்துவவியலில் புத்த மதத் தத்துவம் பாடப்பிரிவில் படிக்க கல்லூரியில் மீண்டும் சேர்ந்துள்ளார்.

இதழியல் படிப்பு முடிந்தது அவரது  ‘தொல்லை’ முடிந்தது என்று கனா கண்டு கொண்டிருந்த ஏ.பி.வி.பி மற்றும் இந்துத்துவக் கும்பலின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும்வகையில் மீண்டும் பல்கலையில் கிருபா மோகன் சேர்ந்தார். இது பொறுக்க முடியாமல், ஆளுனர் மாளிகையிலிருந்து தத்துவவியல் துறைத்தலைவருக்கு தொடர்ச்சியாக கிருபா மோகனை கல்லூரியிலிருந்து வெளியேற்றுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலை காவிக் கும்பலுக்கு அடிபணிந்து பொய்க்காரணங்களைச் சொல்லி அவரை படிப்பிலிருந்து வெளியேற்றியதன் பின்னணியை அவரே விவரிக்கிறார். பாருங்கள் ! பகிருங்கள் !

சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் கிருபாமோகனை உடனடியாக பல்கலைக்கழகத்தில் இணைக்க வேண்டும் ! என்ற முழக்கத்தின் கீழ், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“ஆளுநரின் உத்தரவின் பெயரில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரின் தொடர் நெருக்கடியாலும் மாணவர் கிருபாமோகன் நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கப்படக் காரணம் என்னவென்றால் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தில் செயல்பட்டதுதான்.

அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ‘RSS – ஆளுநர்’ கூடாரம் மேற்கொண்டுள்ளது. இதனை அம்பேத்கர் பெரியார் வழிநின்று முறியடிப்போம்” என மாணவர்கள் முழங்கினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம். 
தொடர்புக்கு : 97888 08110.

***

அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்படுவது குற்றமா ?

  • சென்னைப் பல்கலைக்கழக மாணவர் கிருபாமோகன் நீக்கம் !
  • ஆளுநர் மாளிகை உத்தரவு !

மாணவர்கள், இளைஞர்களே !

  • சென்னைப் பல்கலைக் கழகத்தின் உத்தரவை திரும்பப் பெற குரல்கொடுப்போம் !
  • பாதிக்கப்பட்ட மாணவருக்கு துணைநிற்போம் !

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 94451 12675.

***

ம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தில் செயல்பட்டதற்காக ஆளுநரின் அழுத்தத்தின் பேரில் மாணவர் கிருபாமோகனது அட்மிசனை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் இரத்து செய்துள்ளது.

இதனை கண்டித்தும் மாணவர் கிருபாமோகனை மீண்டும் பல்கலைக்கழகத்தில் இணைக்கக் கோரியும் 05.09.2019 அன்று சென்னைப் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை சென்னை பல்கலையில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்ட தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம்.
தொடர்புக்கு : 97101 96787.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க