சென்னை பல்கலையில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர் கிருபாமோகன் நீக்கம் ! சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் !

சென்னை பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மாணவர் கிருபாமோகன் தத்துவவியல் – பவுத்தத் துறையில் சேர்ந்துள்ளார். கடந்த ஒருமாதமாக கல்லூரிக்கு முறையாகச் சென்று பயின்று வந்த நிலையில், இருவாரங்களுக்கு முன்னர் ஒருநாள் அவரது துறைத்தலைவர் அழைத்து, கிருபா மோகனை கல்லூரியில் இருந்து வெளியேற்ற ஆளுநர் மாளிகை மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் தரப்பில் இருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தனது பணிக் காலத்தில் இத்தகைய அழுத்தத்தை சந்தித்ததில்லை எனவும் தெரிவித்தார். அதற்குக் காரணமாக கிருபா மோகன் அதே கல்லூரியில் கடந்த ஆண்டு இதழியல் படிக்கையில் கல்லூரியில் இயங்கும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பாட்டாளராக இருந்ததுதான் காரணம் என்றும் தெரிவித்தார்.

Kiruba-mohan
மாணவர் கிருபாமோகன்

கடந்த வாரத்தில் கிருபா மோகனைக் கூப்பிட்டு அவரது சேர்க்கைக்கான ஆவணங்கள் பற்றாக்குறையாக இருப்பதைக் காரணம் காட்டி, அவரை கல்லூரியில் நீக்குவதாக ஒரு கடிதத்தை நீட்டியிருக்கிறார் துறைத் தலைவர்.

ஆனால், உண்மையான காரணம், கல்லூரி வளாகத்தில்  பல்கலைக்கழக மாணவர்களின் அடிப்படை பிரச்சனைக்கு குரல் கொடுப்பது என்பதோடு மட்டும் அல்லாமல் ஹைட்ரோகார்பன், எட்டுவழிசாலை, அணுக்கழிவு, பொள்ளாச்சி மாணவிகளை சீரழிந்த கும்பலுக்கு எதிராக போராட்டம் தொடங்கியது என தொடர்ந்து மாணவர்களுக்காகவும் சமூகத்துக்காகவும் போராடியுள்ளார். கல்லூரியில் உள்ள ஆசிரியர்களை மிரட்ட வந்த ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலை, மாணவர்களைத் திரட்டி விரட்டியடித்துள்ளார். இதுதான் RSS- BJP சங்கிகளுக்கு பிரச்சினை. அதனால்தான் ஆளுனர் மாளிகையில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற்னர். சென்னை பல்கலைக்கழகத்தின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக 06.09.2019 அன்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாணவர்களின் கோரிக்கையாக:

  • மாணவர் கிருபாமோகனை பல்கலைக்கழகத்தில் எந்தவித நிபந்தனைகளும் இன்றி அனுமதிக்க வேண்டும்.
  • இதற்கு காரணமான ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  • மாணவர்களின் கருத்திலோ, உரிமைகளிலோ பல்கலைக்கழக நிர்வாகம் தலையிடக்கூடாது.

என போராட்டத்தில் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு: 97888 08110

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க