தந்தை பெரியார் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம் ! கார்ப்பரேட் காவி பாசிசத்தை போராடி வீழ்த்துவோம் !

தந்தை ஈ.வெ.ரா. பெரியாரின் 141 – வது பிறந்த நாள் – அரங்கக் கூட்டம்

நாள் : 15.09.2019 ஞாயிறு மாலை 5.30 மணி
இடம் : மூட்டா அரங்கம், காக்கா தோப்பு, மதுரை.

தலைமை :

தோழர் கதிரவன்
மாநில செயற்குழு உறுப்பினர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

வரவேற்புரை :

தோழர் இராமலிங்கம்
அமைப்பாளர், ம.க.இ.க. மதுரை மாவட்டம்.

கருத்தாளர்கள் :

பேராசிரியர் மு. இராமசாமி
நிறுவனர், நிஜ நாடக இயக்கம். மதுரை.

வழக்கறிஞர் பெ. கனகவேல்
செயலாளர், சமநீதி வழக்குறைஞர்கள் சங்கம்.

தோழர் N. வீரபாண்டியன்
முன்னாள் மாநிலச் செயலாளர் AIBSNLAE, தமிழ்நாடு.

Madurai-Pala-Periyar-Birth-Slider

ந்தியா பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் கொண்ட நாடு ஆனால், கரும்புத் தோட்டத்தில் மதயானை புதுந்ததுபோல் காவி கார்ப்பரேட் கும்பல் குறிப்பாக தமிழக மக்கள் மீது கடும் தாக்குதலை தொடுத்திருக்கிறது.

ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மொழி, ஒரே ரேசன் கார்டு இப்படி அறிவிப்புகள் தொடர்கின்றன. மேலும் ஒரே… ஒரே என்று தொடர்ந்தால் அது ஒரே கட்சி ஒரே தலைவன் என்று போய் நிற்கும்! ஒரே கட்சி பாரதிய ஜனதா. ஒரே தலைவர் மோடிதான்! பாரதிய ஜனதா பிற அரசியல் கட்சிகளைப் போன்றதல்ல, பிரதமர் மோடியும் பிற கட்சித் தலைவர்களைப் போன்றவர் அல்ல. ஆர்.எஸ்.எஸ். இயக்கும் ஒரு கட்சி தான் பாரதிய ஜனதா! கார்ப்பரேட் காவி பாசிசத்தின் அரசியல் அடையாளம்தான் பிரதமர் மோடி!

ஒரு தேசிய இனத்தின் அடையாளம் மொழி. சமஸ்கிருதம்-இந்தி திணிப்பு ஏதோ தற்செயலானது அல்ல. திட்டமிட்ட திணிப்பு. 1937-ல் அப்போதைய சென்னை மாகாண பிரதமர் இராஜாஜி இந்தியை பள்ளிகளில் கட்டாயப் பாடம் என அறிவித்தார். இது தமிழர்களுக்கான கல்வி மறுப்பு. தமிழுக்கு அழிவு. இதை அனுமதிக்க முடியாது என தந்தை பெரியார் மக்களைத் திரட்டிப் போராடினார். சுமார் 2,250 பேர் கைது செய்யப்பட்டனர். வரலாற்றில் முதன்முதலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்தி எதிர்ப்பு போராட்டம் இதுவே! பெரியாருக்கு இரண்டு ஆண்டு சிறை! 2,000 ரூபாய் அபராதம்.

படிக்க:
பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?
பெரியார் பிறந்த நாள் : இந்து மதவெறி பயங்கரவாதத்தை முறியடிப்போம் !

இன்றைக்கு மீண்டும் இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு! தமிழ் இனம், மொழியின் மீது காவி கார்ப்பரேட்டுகளின் அடுத்தடுத்து தாக்குதல்! கடந்த ஐந்து ஆண்டுகளில் தலித்துகள், இசுலாமியர்கள், பெண்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. சென்ற ஆண்டு ஆர்.எஸ்.எஸ் கும்பல் கேரளாவில் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழையக் கூடாது என கூச்சல் கூப்பாடு. ஆர்ப்பாட்டம்!

வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடினார். பார்ப்பனியம் என்பது வெறும் சாதி மட்டுமல்ல, இந்துத்துவாவின் சிந்தாந்த உள்ளடக்கம். நாளை அமைக்கப்போவதாகச் சொல்லும் “இந்து ராஷ்டிரத்தின்” மனுநீதி! அதுதான் அவர்களின் அரசியல் சட்டம்.

கேரளாவில் வைக்கம் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. போராட்டத்தை பெரியார் தலைமை தாங்கி நடத்தினார். 1924 ஆம் ஆண்டு வைக்கம் போராட்டம் வெடித்தது. வைக்கம் மகாதேவன் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் ஈழவர், தீயர், புலையர், பறையர் நடக்கக் கூடாது என சட்டம் இருந்தது. மீறினால் தண்டிக்கப்படுவார்கள்! அந்த தீண்டாமைக் கொடுமைச்சட்டம் ரத்துச் செய்யப்பட்டது. போராட்டகளத்தில் பெரும் வெற்றியை ஈட்டினார் பெரியார்!

பெரியார் வெறும் கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல! சமூகநீதி, பெண் உரிமை, பெண் விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு, மொழி உரிமை, தேசிய இன உரிமை, பண்பாட்டு உரிமை, சம உரிமை, சம வாய்ப்பு என அவரது களம் பரந்து விரிந்தது சமூகத்தின் அத்தனை நிகழ்வுகளையும் பகுத்துப் பார்க்கும் தொகுப்புத்தான் பெரியார் ! எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருந்ததோ அங்கெல்லாம் சென்று போராடும் போராளியாக களத்தில் நின்றார்!

இன்று கார்ப்பரேட் காவி பாசிச இருள் படர்ந்து வருகிறது. பெரியார் சிந்தனை சுடரை ஏந்துவோம்! கார்ப்பரேட் காவிப் பாசிச சக்திகளை போராடி வீழ்த்துவோம்!

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை, தொடர்புக்கு : 97916 53200

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க