கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம் திண்டிவனம் அரசுக் கல்லூரி மாணவர்களின் இரண்டாம் நாள் போராட்டம் !

“திருவள்ளுவர் பல்கலைகழக தேர்வு கட்டண உயர்வை திரும்பப் பெறு ! இந்தியை திணிக்காதே ! 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அரசாணையை திரும்பப் பெற வேண்டும் !”  ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (RSYF) ஒருங்கிணைப்பில் தொடர் போரட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இரண்டாவது நாளாக நேற்று (18.09.2019) விழுப்புரத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் திண்டிவனத்தில் உள்ள கோவிந்த சாமி அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி அமைந்துள்ள சாலையில் அமர்ந்து விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டமானது சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம். தொடர்புக்கு : 91593 51158.

படிக்க :
♦ அமித்ஷா-வின் ஆணவப்பேச்சு ! 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம் !
♦ மாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் !

***

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாவது நாளாக மாணவர்கள் போராட்டம் !

  • திருவள்ளூர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்!
  • பேராசிரியர் நிர்மல் குமார் பணியிடை மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்!
  • 5, 8-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அரசாணையை திரும்பப் பெற வேண்டும்!

இவற்றோடு அமித்ஷா அறிவித்த நாடு முழுவதற்குமான ஒரே மொழி இந்திதான் என்ற ஆணவ பேச்சை கண்டித்தும், கடலூரில் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்றும் (18.09.2019) இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தினர்.

திருவள்ளுவர் பல்கலைகழகம் தேர்வு கட்டணத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் இப்போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்து நடத்தினர்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திண்டிவனம் மற்றும் கடலூர் அரசு கலைக் கல்லூரிகளில் இன்றும் (19.09.2019) மூன்றாம் நாளாக மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க