ந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக நடந்த போராட்டங்களின் தொகுப்பினை உங்களுக்காக வழங்குகிறோம்…

♠ ♠ ♠ 

மேற்கு வங்க பல்கலையில் மத்திய அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் !

மேற்கு வங்க மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். -ன் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் சார்பில் கடந்த 19-ம் தேதி கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ சென்றார். ஆனால், பல்கலையின் நுழைவு வாயிலில் மாணவர்கள் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.

மேற்க்கு வங்க மாணவர் போராட்டம்.

பல்கலைக் கழகத்தின் இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் கலாச்சார பிரிவு மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சுப்ரியோவுக்கு கருப்புக்கொடி காட்டியதுடன், அவரை திரும்பி செல்லும்படி முழக்கமிட்டனர். இதனால், ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பல்கலை நுழைவு வாயிலிலேயே அவர் தடுக்கப்பட்டார். பின்னர் அமைச்சரை போலீசு வந்து உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறது.

மீண்டும், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகும் அவருடைய காரை மாணவர்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் நேரடியாக பல்கலை கழகத்துக்கு சென்று விசாரணை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

♠ ♠ ♠ 

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டெல்லி நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணி !

ரும்பு நிலுவைத் தொகை, கடன் நிவாரணம், இலவச மின்சாரம், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் குழு பரிந்துரைகள் அமலாக்கம் போன்ற 15 கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரபிரதேசத்தில் பாரதிய கிஸான் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 11-ம் தேதி சஹரன்பூரில் இருந்து நொய்டா வழியாக டெல்லிக்கு பேரணியாக சென்றனர்.

நொய்டாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்.

நொய்டாவில் விவசாயிகளை தடுத்து நிறுத்திய அரசு அதிகாரிகள், கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாகவும் பேரணியை கைவிடவும் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும்  எட்டப்படவில்லை. பேரணியைத் தொடர்ந்து நடத்திய விவசாயிகளை  டெல்லி – உத்தரப்பிரதேச எல்லையில் போலீசு தடுத்து நிறுத்தியது. விவசாய சங்க பிரதிநிதி குழுவை மட்டுமே கிரிஷி பவனில் அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்க முடியும் என போலீசார் திட்டவட்டமாக  கூறியதால் 11 பேர் அடங்கிய குழு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

படிக்க:
கேள்வி பதில் : ஒரே மொழி சாத்தியமா – இசுலாம் – கிறித்துவத்தில் சாதி – ஹாங்காங்
♦ எடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு ! வீடியோ

♠ ♠ ♠ 

பருவநிலை மாற்றம் : டெல்லியில் மாணவர்கள் போராட்டம் !

லகம் முழுவதிலும் பருவ நிலை மாற்றத்தை தடுக்க வலியுறுத்தி பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி லோதி கார்டன் பகுதியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 23 வயது மாணவியான பணாஸ்ரீ தபா கூறும்போது “நான் ஒரு வனச்சரகரின் மகள். ‘பாதுகாப்பதற்கு எதுவுமே இல்லாமல் போனால் என் தந்தை எதைப் பாதுகாப்பார்?’ இது பருவநிலை மாற்றத்தையும் கடந்த ஒரு விஷயம். இது இயற்கையின் கோபம். இந்தக் கோபம் நம்மை நோக்கி வருகிறது. அதனால்தான் நான் இங்கு வந்தேன்” என்று அவர் கூறியதாக பிபிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

♠ ♠ ♠ 

மோட்டார் வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து ஸ்டிரைக் ! தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடவில்லை : நாடு முழுவதும் ரூ. 100 கோடி சரக்கு தேக்கம்..!

த்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில், மோட்டார் வாகன திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்ததையடுத்து, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி,  போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பு, வாகன பதிவு கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வு போன்றவை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில்  அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நேற்று நடத்தியது.

கோப்புப் படம்.

டெல்லி, அரியானா, உ.பி., ம.பி., குஜராத், மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என அனைத்து மாநிலத்திலும் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயக்கப்படவில்லை. நாடு முழுவதும் சுமார் 40 லட்சம்  லாரிகள் நிறுத்தப்பட்டது. இதனால், சரக்கு போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஸ்டிரைக்கில் முழுமையாக ஈடுபட்டது. இதனால், சுமார் 4 லட்சம் லாரிகள்  ஓடவில்லை. இதனால், 100 கோடி  மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளது. தமிழகத்தில் 10 கோடி சரக்குகள் தேக்கமடைந்துள்ளதாகவும் அரசுக்கு ஒரு கோடி வரி இழப்பு என்றும் தெரிவித்துள்ளனர்.

♠ ♠ ♠ 

கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் !

சென்னையில் அதிக அபராதம் விதிக்கப்படுவதால், அதிக பாரம் ஏற்ற மாட்டோம்; கன்டெய்னர் லாரிகளுக்கு உரிய வாடகை நிர்ணயிக்க வேண்டும் எனக்கூறி, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 16-ம் தேதி முதல் வேலைநிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் 21 சங்கங்கள் பங்கேற்றன. தற்போது, 20 அடி கன்டெய்னருக்கு வழங்கப்படும் ரூ 2,500 வாடகையை 3,800 ஆகவும் 40 அடி கன்டெய்னருக்கு வழங்கப்படும் ரூ 3,500-ஐ 4,800 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். காலி  கன்டெய்னர் லாரிகளுக்கு வழங்கப்படும் 2,000 வாடகையை 3,300 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்தனர்.

படிக்க:
துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019
♦ பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?

இதனால் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கன்டெய்னர்கள் தேங்கியதால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிப்புக்குள்ளானது. அரசுக்கு பல கோடி  ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறக்கோரி, தண்டையார்பேட்டை தாசில்தார் லட்சுமி தலைமையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை முடிவில், 20 அடி கன்டெய்னருக்கு வாடகை 2,500 ரூபாயில்  இருந்து 3,500 ரூபாயாகவும், 40 அடி கன்டெய்னருக்கு வாடகை 3,500 ரூபாயில் இருந்து 4,500 ரூபாயாகவும் உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தனர். இருப்பினும் சில சங்கங்கள் இந்த முடிவை ஏற்க மருத்ததால் குழப்பம் நீடித்து வருகிறது.

♠ ♠ ♠ 

கடைமடைக்கு காவிரி நீர் வராததை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் கைது !

டைமடைக்கு காவிரிநீர் வராததை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர். மேட்டூரிலிருந்து கடந்த மாதம் 13-ம் தேதியும், கல்லணையிலிருந்து 17-ம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. அதேசமயம் கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட தண்ணீர் கடலில் கலந்து  வீணானது.

இதையடுத்து கடை மடைக்கு வராமல், காவிரிநீரை கடலுக்கு திருப்பி விட்ட எடப்பாடி அரசை கண்டித்தும், தூர் வாருவதில் செய்யப்பட்ட கொள்ளையை கண்டித்தும் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை மண்டல பொறியாளர்  அலுவலகத்தை கடந்த 16-ம் தேதி மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று முற்றுகையிட்டனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலிசு 2 குழந்தைகள், 7 பெண்கள் உள்பட 29 பேரை கைது செய்தனர்.

♠ ♠ ♠ 

வேலூர் அருகே ரிங்ரோடு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ! நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள் !

வேலூர் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதை தவிர்க்கவும், வேலூரை சுற்றி ரிங்ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து ஆரணி, திருவண்ணாமலை பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் கனரக வாகனங்கள் சாத்துமதுரை, நெல்வாய், ஆவாரம்பாளையம், மலைக்கோடி வழியாக செல்லும் வகையில் ரிங்ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

வேலூர் விவசாயிகள் போராட்டம்.

இதற்காக ஆவாரம்பாளையம் பகுதியில் ரிங்ரோடு அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய வேலூர் தாலுகா மண்டல துணை தாசில்தார் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி வந்தனர். அப்போது, விவசாய நிலத்தில் இறங்கி அளவீடு செய்ய தொடங்கினர்.

உடனே விவசாயிகள், நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். சமாதானம் பேசிய  போலீசாரிடம், சாலை அமைக்க எங்களின் வாழ்வாதாரமான நிலத்தை அழிக்கிறீர்களே, நாங்கள் என்ன செய்வது? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ஒரு விவசாயி, எனது நிலத்தை அளந்தால் தீக்குளிப்பேன் என்றார். அப்போது அதிகாரிகள், ‘உயரதிகாரிகளின் உத்தரவின்படி அளக்க வந்துள்ளோம். நீங்கள் டி.ஆர்.ஓ. -வை சந்தித்து முறையிடுங்கள்’ என தெரிவித்தனர். இதனை ஏற்காத பொதுமக்கள், “எங்கள் இடத்தை அரசு எடுக்க, நாங்கள் எதற்காக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்” என்று கேள்வி எழுப்பியதல் அதிகாரிகள் திரும்பி சென்றுள்ளனர்., விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டனர்.

♠ ♠ ♠ 

கரும்பு நிலுவை தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம் !

டந்த 2017- 2018 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு இறையூர் அம்பிகா, எ. சித்தூர் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். அதேபோல் விவசாயிகளின் பெயர்களில் வங்கியில் கடன் வாங்கிய ஆலை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆலை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 12 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால், வருகின்ற அக்டோபர் 3- ஆம் தேதி முதல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

♠ ♠ ♠ 

ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் எச். ராஜா வருகைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் !

விருதாச்சலம் – அரியநாச்சி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிரச்சினைக்குரிய இந்த கோயிலுக்கு 19-ம் தேதி பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா வரவுள்ளதாக கிராமத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போஸ்டர் ஒட்டினர். இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆனால், காவல்துறை எச்சரிக்கை, கிராமமக்கள் எதிர்ப்பையும் மீறி எச்.ராஜா ஊருக்குள் நுழைய முயன்றார். அங்கு திரண்ட பொதுமக்கள், எச்.ராஜா காரை வழிமறித்து, கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான கிராமத்தில் ஆன்மிகத்தை வைத்து எச்.ராஜா அரசியல் செய்ய முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, எச்.ராஜா கிராமத்திற்குள் செல்லாமல் திரும்பி சென்றார். மக்களின் ஒற்றுமையே மதவாதிகளை அடித்தி விரட்டும்.

தொகுப்பு : – வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க