சென்னை உயர்நீதிமன்றத்தை முன்வைத்து நீதித்துறையின் வரலாற்றை சுவைபடக் கூறும் புத்தகத்தின் PDF வடிவம்…

நண்பர்களே….

பொ.வேல்சாமி

”சாதிக்கு ஒரு நீதி” என்று வாழ்ந்து வந்த இந்திய – தமிழ்நாட்டு மக்களுக்கு பொதுவான “நீதி” என்பதை காலனியாதிக்கவாதிகள் தான் உருவாக்கிக் கொடுத்தனர் என்ற வரலாற்று நிகழ்வை யாவரும் பொதுவாக அறிந்துள்ளனர். அத்தகைய நீதி வழங்கும் போக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலங்களில் எப்படி படிப்படியாக உருவாக்கப்பட்டு நிலைபெற்றது என்பதை சுவைபடப் பேசும் ஒரு நல்ல நூல் இது.

படிப்பவர்களுக்கு வியப்பளிக்கும் பல செய்திகள் நூலில் உள்ளன. வாசிப்புச் சுவை குறையாமல் நூல் முழுமையும் எழுதி செல்கிறார் மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.சி.இராமகிருட்டிணன் அவர்கள். இத்தகைய நூலை நண்பர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசையில் உங்களுக்கு இந்நூலின் இணையதள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நூலை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க