குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் கிளந்தெழுந்து நடைபெறுகின்றன. அதிலும் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல், இந்திய மாணவர் சமூகத்திடையே பெரும் கோபத்தை உருவாக்கியது.

இதன் தொடர் விளைவாக தமிழகத்திலும், போராட்டங்கள் பற்றிப் பரவ ஆரம்பித்துவிட்டன. தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மாணவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தடைகளைத் தாண்டி மாணவர் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த போராட்டங்களின் தொகுப்பை இங்கே தருகிறோம்…

***

சென்னை பல்கலையில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் !

மாணவர்கள் சென்னை பல்கலைக் கழக வளாகத்துக்குள்ளேயே நேற்று (17.12.2019) காலை முதல் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசு குவிக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த மாணவர்கள் கார்த்திகேயன் மற்றும் சுப்பையா ஆகியோரை போலீசு கைது செய்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க கோரியும், குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், இன்றும் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

பல்கலைக் கழக நுழைவு வாயிலில் முழக்க அட்டைகளுடன் போராடும் சென்னை பல்கலைக் கழக மாணவர்கள்.
மாணவர்களை ஒடுக்கவும் மிரட்டவும் குவிக்கப்பட்டுள்ள போலீசார்.
இரவிலும் தொடரும் மாணவர்கள் போராட்டம்.

 

***

திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி மாணவர் போராட்டம் !

திருச்சியில் 17.12.2019 அன்று பெரியார் ஈவெரா கல்லூரியில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பெரியார் ஈவெரா கல்லூரி  மாணவர் கூட்டமைப்பு சார்பாக வாயிற் கூட்டம் நடைபெற்றது.

சக மாணவர்கள் மத்தியில் போராட்ட நியாயத்தை விளக்குகின்றனர்
கல்லூரி வாயில் முன்பு முழக்கமிடும் மாணவர்கள்.

***

கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்கள், 17.12.2019 அன்று காலை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீதான எதிர்ப்பை, தங்களது நுண்கலைகள் மூலம் வெளிப்படுத்தினர்.

வண்ணங்களையும், தூரிகைகளையும் ஆயுதமாக்கிய மாணவர்கள்.

 

இந்துவா, கிருத்துவனா, இசுலாமியனா, சீக்கியனா என்பது முக்கியமில்லை. நான் மனிதன்.

 

மேலும் படங்களுக்கு :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

மாநிலக் கல்லூரி மாணவர்கள் 17.12.2019 அன்று தங்களது கல்லூரி வளாகத்திற்குள் ஒன்று கூடி, குடியுரிமை திருத்தச் சட்டதின் மீதான தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

***

தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் !

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மோடி அரசு கொண்டுவந்த தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இன்று (18.12.2019) போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய போலீசை கண்டித்தும். மதரீதியாக இஸ்லாமியர்களையும், இனரீதியாக ஈழத்தமிழர்களை இந்தியாவில் இருந்து அகற்ற கூடாது எனவும். மத பிளவை ஏற்படுத்தும் CAA சட்டத்தை தடை செய்ய வேண்டும்! ஆகிய கோரிக்கைகளை தங்களது போராட்டத்தில் முன்வைத்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம் தொடர்புக்கு: 97888 08110.

***

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம், கலெக்டரிடம் மனு!

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 17.12.2019 அன்று திரண்டு, மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டிற்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, திருவள்ளூர் பேருந்து நிலையம் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

பின்னர் அங்கு நுழைவு வாயிலில் சுமார் 15 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடத்திய பின், மாணவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தொகுப்பு :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க