CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் ! காணொளி

மதுரையில் கடந்த டிச-22 அன்று நடைபெற்ற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16ஆம் ஆண்டு விழா கூட்டத்தில் பங்கேற்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் ஆற்றிய உரைகளின் காணொளி!

குடியுரிமை திருத்த சட்டம், சபரிமலை தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஆகியவற்றை பற்றி மதுரையில் கடந்த டிச-22 அன்று நடைபெற்ற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16ஆம் ஆண்டு விழா கூட்டத்தில்,  வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் ஆற்றிய உரைகளின் காணொளி!

CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் !
– வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

யார் ஒருவர் பாதிக்கப்பட்டு ஒரு நாட்டுக்கு வந்தாலும் அவர்களுக்கு அகதி அந்தஸ்து தருவதும், அவர்களுக்கு குடியுரிமை தருவதும்தான் ஐநா-வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை!

இஸ்லாமியர்கள் வரக்கூடாது என்பதற்கு ஆர்.எஸ்.எஸ், பிஜேபி வைத்திருக்கும் காரணம் என்ன? ஈழத்தமிழர்கள் வரக்கூடாது என்பதற்கு அவர்கள் வைத்திருக்கும் காரணம் என்ன? மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும் ஒருவரை புறக்கணித்தால் அது தீண்டாமைதான் ! எனவே தீண்டாமை குற்றத்தின் கீழ், மோடியும் அமித்ஷாவும் இந்த சட்டத்திற்கு வாக்களித்த அனைத்து எம்.பிக்களும் கைதுசெய்யப்பட வேண்டும்.

முஸ்லீம்களை ஒழித்துக் கட்டவே தேசிய குடிமக்கள் பதிவேடு !
– ஆளூர் ஷாநவாஸ் 

மோடி அரசு அறிவித்திருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு முசுலீம்களை இந்தியாவில் இருந்து ஒழித்துக் கட்டி ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றவே ஏற்பாடு செய்யப்பட்ட திட்டம் என்பதை அம்பலப்படுத்துகிறார் ஆளூர் ஷாநவாஸ்..

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க