னவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று மதம் மற்றும் இன அடிப்படையில் வேற்றுமை காட்டும் இந்திய குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் நடந்த போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக பின்லாந்து நாட்டின் மூன்று நகரங்களில் (Helsinki, Turku, Tampere) நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, நகரின் மத்தியில் ஒன்றுகூடி முழக்கங்களை எழுப்பினர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பை வாசித்து அதன் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பற்றிய பாடல்களும் கவிதைகளும் வாசிக்கப்பட்டன.

Amnesty International அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியாவில் CAA-விற்கு எதிராக போராடும் மக்களின் மீது அரசு காவல்துறையை கொண்டு கட்டவிழ்க்கும் வன்முறைகளை கண்டித்து பின்னிஷ் மொழியில் பேசினார்கள்.

28 நாடுகள் கொண்ட ஐக்கிய ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கும் சூழலில் ஐரோப்பா எங்கும் ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து, பின்லாந்து என பல நாடுகளில் CAA மற்றும் NRC சட்டத்திற்கு எதிராக இந்தியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாழ்த்துகள் Radheesh Dhanasegaran

நன்றி : ஃபேஸ்புக்கில் கபிலன் காமராஜ் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க