சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் படுகொலைக்கு காரணமான போலீசு – நீதித்துறை – சிறை நிர்வாகம் ஆகியவற்றை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் மதுரை, நெல்லை மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகள்.

***

  • சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை லாக்-அப் படுகொலை செய்த குற்றவாளி போலிசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்! சிறையிலடை!
  • குற்றவாளிகளைப் பாதுகாக்க பொய் அறிக்கை விட்ட எடப்பாடியே பதவி விலகு!

என்கிற முழக்கத்தை முன்வைத்து 26/06/2020 அன்று மக்கள் அதிகாரம் மதுரை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து பொது முடக்கம் அமலில் உள்ள இந்தத் தருணத்தில் திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் அப்பகுதியைச் சுற்றியிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கவனத்தை ஈர்த்தது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
மதுரைப் பகுதி
தொடர்புக்கு : 6383243495

***

நெல்லையில் இன்று (26.06.2020) மக்கள் அதிகாரம் தோழர்கள் கண்டன முழக்கம் எழுப்பி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்த காணொளி. பாருங்கள்… பகிருங்கள்…

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை.

***

சாத்தான்குளம் – தந்தை மகன் போலீசால் அடித்து கொலை! கொலை வழக்கில் கொலைகார போலிசை கைது செய் !

மருத்துவ சிகிச்சை அளிக்காத நீதித்துறை நடுவர், அரசு மருத்துவர், சிறை அலுவலர் மீதும் நடவடிக்கை எடு!

வரம்பற்ற போலீசு அதிகாரத்தை அனுமதியோம்!

போலீசை மக்கள் கண்காணிப்பில் வைக்கப் போராடுவோம்! வெள்ளிக்கிழமை 26.06.2020 அன்று காலை 11:30 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க