பத்திரிகைச் செய்தி
தேதி: 07.08.2020
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு பு.ஜ.தொ.மு அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் !
கடந்த 29.07.2020 அன்று வெளிவந்த நக்கீரன் இதழில், “பலநூறு ஏக்கர் அனாதீனநிலத்தை ஆட்டையைப்போடும் ஆளுங்கட்சியினர் + அதிகாரிகள்” என்ற தலைப்பிட்டு ஒரு சிறப்புக் கட்டுரை வெளிவந்தது.
“பாரத மிகுமின் நிறுவனத்தில் (பெல்) பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் சுமார் 400 -க்கும் மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்து பதிவு செய்யப்பட்ட சொசைட்டி ஒன்றைத் துவங்கி இயங்கி வருகின்றனர். இந்த பதிவு செய்யப்பட்ட சொசைட்டியின் செயலாளராக இருந்த தங்கராஜ், காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் கிராமத்திலுள்ள சில சர்வே எண்களில் அமைந்துள்ள நிலங்களை வாங்கித்தருவதாக உறுதியளித்து சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார். இந்த தாழம்பூர் நிலமானது அரசுக்கு சொந்தமான அனாதீன நிலம் என்பதால், அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சியினருக்கும் கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுத்து அந்நிலத்துக்கு பட்டா வாங்க முயற்சி செய்ததாகவும், ஆனாலும் வாக்களித்தவாறு தங்களுக்கு இன்னும் நிலம் கிடைக்கவில்லை எனவும் மேற்படி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க உறுப்பினர்கள் சிலர் நக்கீரனுக்குத் தகவல் சொன்னதன் பேரில் புலனாய்வு செய்யப்பட்டது’’ என்று மேற்படி கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
நக்கீரன் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்கராஜ் என்பவர், எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக இருந்த சுப.தங்கராசு தான் என மேற்படி கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை என்கிற போதிலும், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்குத் தெரியும். பு.ஜ.தொ.மு அணிகளில் சில பேருக்கும் அது தெரிந்திருக்கக்கூடும்.
மேற்படி பிரச்சினையில், அக்டோபர் – 2019 இல் சொசைட்டி உறுப்பினர்கள் சிலர் மூலம் சுப.தங்கராசு மீது மோசடி – பணம் கையாடல் நடந்துள்ளதாக புகார் ஒன்று மாநில நிர்வாகக்குழுவுக்கு வந்து, அதன் மீதான விசாரணை நடைபெற்றிருந்தாலும், இறுதி முடிவு அறிவிக்கப்படாத நிலையில், 29.7.2020 தேதியிட்ட நக்கீரன் இதழில் கட்டுரை வெளிவந்துள்ள நிலையில், அன்றைய தினமே (29.7.2020) பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக் குழுவின் அவசரக்கூட்டம் நடைபெற்றது. அதில் சுப.தங்கராசு அவர்களை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும், அவர் வகித்து வந்த மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அம்முடிவு அன்றைய தினமே மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மட்டம் வரை தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கீற்று இணையதளத்தில், “ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு” என்கிற பெயரில் வெளியான கட்டுரையில் ஒட்டுமொத்த தலைமைக்குழுவுக்கும் இக்‘குற்றத்தில்’ பங்குள்ளது என்ற அவதூறு கட்டுரை வெளியாகியுள்ளது. எந்தக் கட்டுரையை வெளியிடுவது என்பது கீற்று இணையதளத்தின் உரிமை என்கிறபோதிலும், பல்லாயிரம் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள புரட்சிகரத் தொழிற்சங்க அமைப்பான பு.ஜ.தொ.மு மீதான குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிந்து வெளியிடுவதுதான் ஊடக தர்மமாக இருக்க முடியும். வணிகப் பத்திரிக்கையான நக்கீரன் கூட தனக்கு வந்த தகவல்கள் அடிப்படையில் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், கீற்று இணையதளமோ, பு.ஜ.தொ.மு மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறு குறித்த உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வெளியிட்டிருப்பதன் நோக்கம் என்ன? அவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற இயக்கத்தினை வீழ்த்திவிட முடியாது. இந்தச் சூழலில், சுப.தங்கராசு அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன? அந்தக் குற்றச்சாட்டை பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக்குழு எவ்வாறு கையாண்டது? என்பது குறித்து ஒரு சுருக்கமான விளக்கத்தைத் தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுமார் 400 தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வாங்கித்தருவது என்ற நோக்கத்துடன் ஒரு சொசைட்டி ஆரம்பிக்கப்பட்டது. அந்த சொசைட்டிக்கு ஒரு நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டு, அதன் செயலராக சுப.தங்கராசு இருந்து வந்தார். வாங்கத் திட்டமிடப்பட்ட வீட்டுமனைகளுக்காக சொசைட்டி உறுப்பினர்களிடமிருந்து, மொத்தமாக சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாகவும், ஆனால் இதுவரை திட்டமிட்டவாறு வீட்டுமனைகள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த முறைகேட்டில் சுப.தங்கராசு அவர்களுக்கு முக்கியப்பங்கிருப்பதாகவும், அந்த சொசைட்டி உறுப்பினர்கள் சிலர் 11.10.2019 தேதியிட்ட புகார் கடிதம் ஒன்றை மாநில நிர்வாகக்குழுவுக்கு அளித்தனர். இந்தப் புகாரின் மீது சுப.தங்கராசு விளக்கம் அளிக்க வேண்டும் என மாநில நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டதன் பேரில் அவரும் 14.10.2019 தேதியிட்டு, தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
25.10.2019 அன்று கூட்டப்பட்ட பு.ஜ.தொ.மு.வின் மாநில நிர்வாகக்குழுவில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, சுப.தங்கராசு மீது கூறப்பட்ட புகாரின் உண்மைத் தன்மையைக் கண்டறிய 3 பேர் கொண்ட விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக்குழுவானது 12.11.2019 முதல் 17.11.2019 வரை பல்வேறு ஆவணங்கள், சான்றுகள், இதில் சம்பந்தப்பட்டுள்ள தனிநபர்களது வாக்குமூலங்கள் என பலவற்றைத் திரட்டி, தனது விசாரணை அறிக்கையை 25.11.2019 அன்று மாநில நிர்வாகக்குழுவுக்குக் கொடுத்தது. ( இந்தப் பிரச்சினை குறித்து புகார் அளித்தவர்களில் சிலரும், இந்த சொசைட்டியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினரும் விசாரணைக்குழு நடவடிக்கைகளுக்கு எவ்வித ஒத்துழைப்பும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )
மேற்குறிப்பிடப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு 03.12.2019 முதல் 05.01.2020 வரை பல சுற்று கூட்டங்கள் நடத்தி விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் மூலமாக குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக மாநில நிர்வாகக்குழு வந்தடைந்த முடிவின் அடிப்படையில் சுப.தங்கராசு அவர்களுக்கு 06.01.2020 அன்று குற்றப்பத்திரிக்கை வழங்கபட்டு, அதன் மீதான அவரது விளக்கத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் 12.01.2020 தேதியிட்ட கடிதம் மூலமாக சுப.தங்கராசு தன்னுடைய விளக்கத்தைத் தெரிவித்தார்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அமைப்பு விதிகளின்படி, மாநிலக்குழு முதல் மாவட்டக்குழு வரை அமைப்பின் கொள்கைக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எந்தத் தனிநபர் மீதோ அல்லது எந்தக் குழு மீதோ புகார் வந்தால் அதை எப்படிக் கையாள வேண்டுமென விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளின் அடிப்படையில், மேற்குறித்த விசாரணைக்குழு அறிக்கை மீது நடந்த விவாதத்தின் வழியாக வந்தடைந்த முடிவுகள், அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை, அந்தக் குற்றப்பத்திரிக்கை மீது சுப.தங்கராசு கொடுத்த விளக்கம் ஆகியவற்றை மாநில நிர்வாகக்குழு பரிசீலித்து, தண்டனை வழங்குவதற்குரிய அடிப்படை இருந்தால், குற்றத்தின் தன்மைக்கேற்ப வழங்கப்பட வேண்டிய தண்டனை என்னவென்பதைத் தீர்மானித்து, தொடர்புடைய ஆவணங்களோடு மாநில செயற்குழுவில் வைத்து விவாதித்து இறுதி முடிவெடுக்க வேண்டும். புகார் மற்றும் புகார் மீதான விளக்கம் தொடங்கி இறுதி முடிவெடுப்பது வரை இயற்கை நீதிக்கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்பதில் பு.ஜ.தொ.மு -வின் மாநில நிர்வாகக்குழு உறுதியாக நின்றது.
மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் சுப.தங்கராசு அவர்களது தாயாரின் உடல்நலக்கோளாறு தீவிரமானது. தீவிர சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அடுத்தடுத்த நாட்களில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலம் குன்றிய நிலைமை, சுப.தங்கராசுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைமை, பு.ஜ.தொ.மு அங்கம் வகிக்கும் “மக்கள் அதிகாரம்” அமைப்பின் மாநாட்டுப் பணிகள் ஆகிய பல்வேறு புறநிலைமைகள் காரணமாக மேற்குறித்த விசாரணை நடவடிக்கை மீது மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க முடியவில்லை.
இதன் தொடர்ச்சியாக, கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக 22.03.2020 முதல் பல்வேறு கட்டங்களாக அமலாக்கப்பட்டுவரும் பொது ஊரடங்கு காரணமாகப் பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டு, ஈ-பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க முடியாத நிலைமை காரணமாக மாநில நிர்வாகக்குழு நேரில்கூடி இறுதி முடிவெடுக்கவோ, மாநில செயற்குழுவைக் கூட்டி விவாதித்து இறுதி முடிவெடுக்கு ஒப்புதல் பெறவோ, மாவட்ட செயற்குழு மட்டம் வரை எடுத்துச்சென்று விவரிக்கவோ இயலாத சூழல் நிலவியது.
இந்தச் சூழலில் நக்கீரன் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்து தேவையற்ற குழப்பங்கள், அவநம்பிக்கைகள், அவதூறுகள் உள்ளிட்ட எதையும் அனுமதிக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, நக்கீரன் கட்டுரை வெளியான அன்றைய தினமே கான்பரன்ஸ் கால் மூலம் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. நமக்கு நாமே வகுத்துக்கொண்டு, மாநில நிர்வாகக்குழு முதல் கிளைச்சங்கம் வரை அமல்படுத்தி வருகின்ற ஒழுங்குமுறையை எவராலும் மறுக்கவோ, மீறவோ முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இருப்பினும், மாநில செயற்குழுவில் விவாதிப்பது என்கிற விதிமுறையை மீறி, குற்றம் சாட்டப்பட்ட சுப.தங்கராசு மீது நடவடிக்கை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 29.07.2020 முதல் சுப.தங்கராசு அவர்கள் பு.ஜ.தொ.மு.வின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும், அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட சுப.தங்கராசு வகித்து வந்த பொதுச்செயலாளர் பொறுப்பை மாநில இணைச்செயலாளர் தோழர் டி. பழனிச்சாமி அவர்கள் தற்காலிகமாக ஏற்று செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நக்கீரன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனாதீன நிலத்தை அபகரிக்கும் முயற்சி என்பது குறித்து விசாரணைக்குழுவின் விசாரணையின்போது தெரியவந்தது. இந்த சட்டவிரோத, மக்கள்விரோத, அபகரிப்பு குறித்து உடனடியாகப் பரிசீலித்து, இதன் அடிப்படையிலேயே குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்ட போதிலும், சுப.தங்கராசு மீதான ஒழுங்கு நடவடிக்கைகளில் புறநிலைமைகளைத் தாண்டி உடனடியாக இறுதி முடிவெடுக்க போராடி இருக்க வேண்டும் என்கிற பாரிய தவறிழைத்துள்ளோம் என்பதை சுயவிமர்சனமாக உணர்கிறோம்.
அதேசமயத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் எந்தத் தகுதியில் இருந்தாலும், அவர் மீதான குற்றச்சாட்டின் உண்மைத் தன்மைக்கேற்ப எவ்வித பாகுபாடும் இன்றி அமைப்புரீதியான தண்டனை வழங்குவதிலும், அத்தகைய நடவடிக்கைகளை கீழ் அணிகள் வரை எடுத்துச்சென்று ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிப்பதிலும் பு.ஜ.தொ.மு உறுதியாக நிற்கிறது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இடைநீக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் சுப.தங்கராசு அவர்களுடன் தொழிற்சங்கரீதியாக எவ்விதத் தகவல் பரிமாற்றமோ, தொடர்போ வைத்துக் கொள்ள வேண்டாம் என மாநில நிர்வாகக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
டி. பழனிச்சாமி
பொதுச் செயலாளர் (பொறுப்பு)
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு: 944444 2374.
கீற்று வலைத்தளம்,ஆர்.எஸ்.எஸ் கைப்பிள்ளையாக மாறியுள்ள முட்டு சந்தில் திணறும் சேர நாட்டு வாரிசுகளின் மசாலாவே,சூட்சமத்தின் சூக்குமம்… பன்னாட்டு விளம்பர வசூல், தங்களை முற்போக்கு ஒருங்கிணைப்பு வழிகாட்டி போன்ற நினைவலைகளை ஏற்படுத்தி, புரையோடி போனப் முதலாளிகளின் மேஜை எலும்புகளில் இளைப்பாறி வரும் உளவியல் கும்பல், உதாரணத்திற்கு அம்பானி நடத்தும் பல தொழில்களில் நியூஸ்18 ஊடகமும் ஒன்று, அதுபோல் வஞ்சக வலைவிரிக்கும் தன்னார்வ குழுமங்களின் எதிர் புரட்சி வரிசையில் இதுவும் ஒன்று…!!!
1. //பல்வேறு புறநிலைமைகள் காரணமாக மேற்குறித்த விசாரணை நடவடிக்கை மீது மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க முடியவில்லை.//
//இருப்பினும், மாநில செயற்குழுவில் விவாதிப்பது என்கிற விதிமுறையை மீறி, குற்றம் சாட்டப்பட்ட சுப.தங்கராசு மீது நடவடிக்கை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது.//
முடிவெடுக்காமல் இருக்கும் போது 29.07.2020 கூட்டத்தில் எப்படி அவரை பொறுப்புகளில் இருந்து இடை நீக்கம் செய்ய வேண்டும். ஒரு வேளை தற்போது குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருந்தது என்று கூறினால் இந்த இடைநீக்கத்தை 05.01.2020 அன்றே செய்துவிட வேண்டியது தானே? அன்று ஏன் செய்யவில்லை?
12.01.2020 க்கு பிறகு உடனே முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியது வலது சந்தர்ப்பவாதம் என்றால், 29.07.2020 “மாநில செயற்குழுவில் விவாதிப்பது என்கிற விதிமுறையை மீறி, குற்றம் சாட்டப்பட்ட சுப.தங்கராசு மீது நடவடிக்கை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது.” என்பது இடது சந்தர்ப்பவாதம். இரண்டுமே தவறு. பிரச்சனை தோழர் சுப. தங்கரசு முறைகேடு செய்தார இல்லையா என்பது அல்ல, அப்படி இருந்தாலும் அது இரண்டாம்பட்சம் தான்! உங்களால் ஏன் சரியாக செயல்பட முடியவில்லை என்பது தான் முக்கியம். அதை விளக்குங்கள்.
//குற்றம் சாட்டப்பட்ட சுப.தங்கராசு மீது நடவடிக்கை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது.// அப்படி என்ன தவிர்க்க முடியாத சூழல் என்பதை விளக்கினால் பொருத்தமாக இருக்கும்?
2. //பு.ஜ.தொ.மு அங்கம் வகிக்கும் “மக்கள் அதிகாரம்” அமைப்பின் மாநாட்டுப் பணிகள் ஆகிய பல்வேறு புறநிலைமைகள் காரணமாக மேற்குறித்த விசாரணை நடவடிக்கை மீது மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க முடியவில்லை… …இதன் தொடர்ச்சியாக, கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக 22.03.2020 முதல் பல்வேறு கட்டங்களாக அமலாக்கப்பட்டுவரும் பொது ஊரடங்கு//
மக்கள் அதிகாரம் மாநாடு முடிந்தது 23.02.2020, ஊரடங்கு தொடங்கியது 22.03.2020, இடையில் ஒரு மாதம் இருந்ததே?
3. //இறுதி முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் சுப.தங்கராசு அவர்களது தாயாரின் உடல்நலக்கோளாறு தீவிரமானது. தீவிர சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அடுத்தடுத்த நாட்களில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலம் குன்றிய நிலைமை, சுப.தங்கராசுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைமை, பு.ஜ.தொ.மு அங்கம் வகிக்கும் “மக்கள் அதிகாரம்” அமைப்பின் மாநாட்டுப் பணிகள் ஆகிய பல்வேறு புறநிலைமைகள் காரணமாக மேற்குறித்த விசாரணை நடவடிக்கை மீது மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க முடியவில்லை.//
இதெல்லாம் ஏற்ககூடிய காரணமே இல்லை. லெனின் அடிக்கடி அறிவுறுத்துவார், “நாம் எந்த முடிவை எடுக்கும் போதும் மக்கள், தொழிலாளர்கள் நலனில் இருந்து சிந்தித்தால் ஊசலாட்டம் இருக்காது” என்று. அந்த வகையில் நீங்கள் செயல்பட்டிருந்தால் இப்படி சொத்தைக் காரணங்களை சொல்லிக்கொண்டிருக்க மாட்டீர்கள். நிர்வாக குழுவில் உள்ள அத்தனை நபர்களும் இந்த காலத்தாமத்திற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு சிலர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் தொழிலாளர்கள் அனைவரும் அதற்காக காத்திருக்க வேண்டுமா?
தோழர் சுப. தங்கராஜ் அவர்களுக்கு எப்பொழுது நெஞ்சுவலி வந்தது, எதுவரை மருத்துவமனையில் இருந்தார் என்ற நாள்வாரி விவரம் கொடுக்க வேண்டியது அவசியம் என கருதுகிறோம்.
4. // சுப.தங்கராசு மீதான ஒழுங்கு நடவடிக்கைகளில் புறநிலைமைகளைத் தாண்டி உடனடியாக இறுதி முடிவெடுக்க போராடி இருக்க வேண்டும் என்கிற பாரிய தவறிழைத்துள்ளோம் என்பதை சுயவிமர்சனமாக உணர்கிறோம்.//
சுயவிமர்சனம் ஏற்றுக்கொண்டீர்கள்! சரி எதை சுயவிமர்சனமாக ஏற்றுக்கொண்டீர்கள்? ” உடனடியாக இறுதி முடிவெடுக்க போராடி இருக்க வேண்டும்” என சொல்கிறீர்களே இறுதி முடிவெடுக்க போராடாமல் இருந்ததை ‘எது தடுத்தது’ என்று சொல்லுங்கள்? “அதை” தான் மாற்ற வேண்டும். (உங்க சுயவிமர்சனத்தை போய் குப்பையில் போடுங்க.)
புறநிலையா? இப்பொழுது அந்த புறநிலை எங்கே போனது? தலைமைக்கு அழகு தவறுக்கு பொறுப்பேற்றுக்கொண்டு, அதை எவ்வளவு விரைவாக மாற்றிக்கொள்கிறது என்பது. பழியை புறநிலை மீது போட்டு தப்பித்துக்கொள்வதல்ல. அந்த வகையில் உங்களது ‘சுயவிமர்சனம்’ உங்களிடம் தலைமைப் பண்பு இல்லை என்பதையே காட்டுகிறது.
5. // இயற்கை நீதிக்கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்பதில் பு.ஜ.தொ.மு -வின் மாநில நிர்வாகக்குழு உறுதியாக நின்றது.// // ஒழுங்குமுறையை எவராலும் மறுக்கவோ, மீறவோ முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.// // ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிப்பதிலும் பு.ஜ.தொ.மு உறுதியாக நிற்கிறது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.//
எதற்கு இந்த வெற்று அலங்காரச் சொற்கள். நடைமுறையில் இருக்க வேண்டியதை வார்த்தைகளால் திரும்ப திரும்ப சொல்வதால் ஒரு பலனுமில்லை. தவிர்க்க முடியாத வகையில் கீழ்கண்ட வரிகள் சிந்தனைக்கு வருகின்றன…
“மிக அடிக்கடி நடக்கிறபடி, புரட்சிகரமான சிந்தனையிலுள்ள குழப்பம் அவர்களைப் புரட்சிகரமான பகட்டுப் பேச்சுக்குக் கொண்டுபோய்விடுகிறது. பார்க்கப் போனால், சமூக -ஜனநாயகவாதத்தின் பிரதநிதிகள் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தில் “புரட்சிகரமான கம்யூன்” எனும் சொற்களைப் பயன்படுத்தியது புரட்சிகரமான பகட்டுப் பேச்சு தவிர வேறொன்றுமில்லை. எதிர்காலப் பணிகளை மூடிமறைப்பதற்காகத் தேய்ந்தொழிந்து போன பழங்காலாத்தைச் சேர்ந்த “கவர்ச்சிகரமான” சொற்களைப் பயன்படுத்தும் இப்படிப் பட்ட பகட்டுப் பேச்சை மார்க்ஸ் அடிக்கடி கண்டித்தார். இவ்வகை வழக்குகளில் ஏற்கெனவே வரலாற்றில் தன் பாத்திரத்தை வகித்து முடித்த ஒரு சொல்லின் கவர்ச்சி அத்தனையும் பயனில்லாத, தீங்கான பொய்ப் பகட்டாகும், குழந்தையின் கிலுகிலுப்பையாகும்.” ( பக்கம் 188. சமூக ஜனநாயக புரட்சியில் இரண்டு செயல்தந்திரங்கள் -லெனின்)
6. //அமைப்பு விதிகளின்படி,// முறையாக நடந்துக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு உடனே //விதிமுறையை மீறி// முடிவெடுக்கிறோம் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு இது முரண்பாடாக தெரியவில்லை?
7. // சொசைட்டி உறுப்பினர்கள் சிலர் மூலம் சுப.தங்கராசு மீது மோசடி – பணம் கையாடல் நடந்துள்ளதாக புகார் ஒன்று மாநில நிர்வாகக்குழுவுக்கு வந்து, அதன் மீதான விசாரணை நடைபெற்றிருந்தாலும், இறுதி முடிவு அறிவிக்கப்படாத நிலையில்//
ஆளும் வர்க்கத்தின் கருவியான அரசின் அனைத்து உறுப்புகளும், தமது எந்த பிரச்சனையையும் தீர்க்காது என்பதை மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்துக்கொண்டு மாற்றை நோக்கி வருகின்றனர். அதே போல் உங்களது தலைமையை நோக்கி வந்த புகார் உங்களால் தீர்க்க முடியாமல் போனதால் உங்களை மீறி நக்கீரனிடம் சென்றிருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி உங்களால் மக்களுக்கு மாற்றை தர முடியும்?
திரு தமிழ் …
உங்களுடைய பதிவு ஒட்டுமொத்த புரட்சியாளர்களின் கருத்தைப் பிரதிபலிப்பதாய் உள்ளது. எந்த விமர்சனக் கண்ணோட்டத்தை வைத்து இந்த அமைப்பின் அடித்தளம் உருவானதோ அதன் மடியிலேயே மடியும் நிலை உருவாகி விட்டதோ என்று கூட சிந்திக்கத் தோன்றுகிறது .
கொரோனா நிலைமையை பயன்படுத்தி பாசிச சூழல் கழுத்தை இறுக்கி வரும் நிலையிலும், முதலாளித்துவத்தின் கொடூர முகம் அப்பட்டமாய் அம்பலப்பட்டு நிற்கும் நிலையிலும், எதிர்த்தாக்குதல் நடத்த மக்களை ஆயப்படுத்தும் பிரதான வேலையை விட்டுவிட்டு, புரட்சிகரக் கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் கையறு நிலையில் நின்று கொண்டு, சுயவிமர்சனம் என்ற பெயரில் ஒட்டு மொத்த அமைப்பையுமே கேள்விக்குள்ளாகியிருக்கும் அவல நிலையைக் களையும் வழிதான் என்ன?
அப்படி ஒரு தீர்வு நடைமுறையில் சாத்தியமானதா?
திரு. நாவலன்…
//அவல நிலையைக் களையும் வழிதான் என்ன?
அப்படி ஒரு தீர்வு நடைமுறையில் சாத்தியமானதா?//
‘லெனின் எவ்வாறு மார்க்ஸைப் பயின்றார்’ என்ற நூலில் தோழர் லெனின், கட்சி ரீதியான, போர்தந்திரம், செயல்தந்திரம் போன்ற அரசியல் ரீதியான என அனைத்து பிரச்சனைகள் தோன்றும் போதும், உடனே மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இத்தகையை பிரச்சனைகள் எழும்போது எப்படி கையாண்டார்கள் என்பதை கற்றுக்கொள்வாராம். மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் எழுத்துக்களை அப்படியே பிரதியெடுக்காமல், மிக ஆழமாக திரும்ப திரும்ப கருத்தூன்றி படித்து என்னற்ற முறையில் குறிப்பெடுத்துக்கொள்வாரம். மார்க்ஸால் எப்படி “குறிப்பிட்ட” முடிவை எடுக்க முடிந்தது என்ற “கண்ணோட்டத்தை” கற்றுக்கொண்டு, அதே “கண்ணோட்டத்தில்” நடைமுறையில் ஏற்படும் பிரச்சனைகளை கையாளுவார் என தோழர் குரூப்ஸ்கயா எழுதியிருப்பார். இது நமக்கானப் பாடம். தோழர் மருதையன் விலகல், தற்போதைய பு.ஜ.தோ.மு. மீதான புகார் என என்னெற்ற பிரச்சனைகளை விட மிகப்பெரிய பிரச்சனைகளை போல்ஸ்விக் – மென்ஸ்விக்குகளிடையே ஏற்பட்டது. கம்யூனிஸ்டு கட்சி வரலாறு என்பதே இடது – வலது சந்தர்ப்பங்களுக்கு எதிரான போராட்டமே தவிர வேறொன்றுமில்லை. இந்த போராட்டம் இல்லையென்றால் கட்சியின் வாழ்வு இல்லை என்றாகிவிடுகிறது அல்லது கட்சி என்பது அவசியமில்லாமல் ஆகிவிடுகிறது. ஆகவே விரக்தி மனநிலை தேவையற்றது. லெனினது ‘என்ன செய்ய வேண்டும்?’, ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’, மற்றும் ‘ரஷ்ய போல்ஸ்விக் கட்சி வரலாறு’ போன்ற நூல்கள் இது போன்ற பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்பதை புரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
“…கட்சிப்போராட்டங்கள் ஒரு கட்சிக்கு வலிமையும் உயிர்சக்தியும் தருகின்றன; ஒரு கட்சியின் பலவீனத்துக்கு அதன் செறிவின்மையும், தெளிவான எல்லைப் பாகுபாடுகளைக் குழப்புவதிலும் மிகப்பெரிய சான்றாகும்; தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்வதின் வழியே கட்சி மேலும் வலுப்பெறும்…” (லெனினின் ‘என்ன செய்ய வேண்டும்?’ நூலின் முகப்பில் உள்ள லஸ்ஸாலின் வரிகள்.)
இதுவரை அமைப்பில் இருந்து விலகியவர்கள், அணிகள், மார்க்ஸிய லெனினிய தத்துவத்தின் மீது நம்பிக்கையில்லாமல் அல்லது அதை எப்படி பிரயோகிப்பது என்பதை அறியாமல் விலகிவிட்டனர். இது ஒரு குட்டி முதலாளித்துவ அவநம்பிக்கையின் விளைவு.
ஆம்பள்ளி & கோ போன்றவர்கள் வேறு விதமானவர்கள். மக்களை, அணிகளை விட தங்களை ‘அதிபுத்திசாலிகளாக’, மார்க்ஸியத்தை மேலோட்டமாக தெரிந்துக்கொண்டு, தாங்கள் தான் சரியாக மார்க்ஸிஸ்டுகள் என கருதிக்கொள்ளும் காமெடி பீஸ்கள். குட்டி முதலாளித்துவ வர்க்க உணர்வின் சீரழிந்த நிலையை எட்டிவிட்டனர்.
லெனின் இறந்தப் பிறகு சோவியத்துகளின் காங்கிரஸில் ஸ்டாலின் உரையில் இருந்து…
“நம்மை விட்டுப் பிரிந்தப்போது, நம் கண்ணின் கருமணியைப் போல் நம் கட்சியின் ஒற்றுமையைக் காப்பாற்ற வேண்டும் என்று தோழர் லெனின் நமக்குக் கட்டளையிட்டார். தோழர் லெனின் இந்தக் கட்டளையையும் நாங்கள் பெருமை மிக்க முறையில் பூர்த்தி செய்வோம் என்று உறுதி செய்கிறோம்!….”
தவறு செய்த போலீசை பணியிடை நீக்கம் செய்யும் அரசின் கண்துடைப்பு நாடக்கத்திற்கும் நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கைக்கும் என்ன வித்தயாசம் உள்ளது…