சித்தேரிப்பட்டு : விழுப்புரத்தில் தீண்டத்தகாத கிராமமா ?

மிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்ட பல கிராமங்களில் ஒன்றுதான் சித்தேரிபட்டு. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் 1200 வாக்காளர்கள் கொண்ட கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது. காரணை ஊராட்சியில் உள்ளடங்கிய இக்கிராமத்திற்கு எப்பொழுதும் நிதி ஒதுக்குவதே கிடையாது. எத்தனை முறை மன்றாடுவது? எத்தனை முறை மனு கொடுப்பது ?

குடிநீர் இல்லை, நீர் ஆதரமாக விளங்கும் குளமும் இல்லை, ஏரி இருந்தும்  தூர்வாரப்படுவதே இல்லை. இதனால் உப்பு நீரை குடிக்க வேண்டிய கட்டத்துக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள் அதனால் பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.

  • கழிவுநீர் கால்வாய், நூலகம், விளையாட்டு மைதானம் என எதுவுமில்லை. தெருவிளக்கு இருந்தாலும் முறையாக பராமரிக்கப் படுவதில்லை.
  • 100 நாள் வேலையும் முறையாக கொடுப்பதில்லை. செய்த வேலைக்கும் முழுமையான கூலி கொடுப்பது இல்லை.
  • கடந்த 5 ஆண்டுகளாக அரசின் தொகுப்பு வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்படுவது கிடையாது.
  • காரனை ஊராட்சிக்கு ஒதுக்கும் நிதியோ, திட்டங்களோ குறைந்தபட்சம் கூட மக்களுக்கு வந்து சேருவதில்லை .
  • இந்த ஆண்டு காரனை ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட  SC/ST சிறப்பு நிதி 30 லட்சம் ரூபாயில் ஒரு பைசாக்கூட சித்தேரிப்பட்டு கிராமத்திற்கு ஒதுக்கவில்லை.

ஆனாலும் இதற்கு பேர்  கிராமம். இதற்கு பிடிஓ இருக்கிறார். மக்கள் முறையாக வரி கட்ட வேண்டும். மின்சார கட்டணம் கட்ட வேண்டும். அரசின் அனைத்து வரிகளையும் கட்ட வேண்டும். ஆனால் அரசு மக்களுக்கு எதையும் செய்யாது.

படிக்க:
ஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது ! | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உரை
நூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்

கம்பியூட்டர் டேட்டா லிஸ்டில் சித்தேரிப்பட்டு கிராமமே இல்லை என்று பிடிஓ சொல்கிறார். இத்தனை ஆண்டு காலமும் ஒரு கிராமமே தமிழக அரசின் உள்ளாட்சி டேட்டா லிஸ்டில் பதிவு செய்யப்படவில்லை என்றால் இதற்கு யார் காரணம்? கலெக்டர், BDO, செயலரின் வேலைதான் என்ன?  எதற்காக சம்பளம் வாங்குகிறார்கள்?

ஒரு கிராமத்தின் பெயரை உள்ளாட்சி டேட்டா லிஸ்டில் பதிவுசெய்யாத தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். பெரிய ஊருக்குத்தான் நிதி ஒதுக்க முடியும் சிறிய ஊருக்கு நிதி ஒதுக்க முடியாது என்று கூறும்  அநியாயத்தை இன்னும் எத்தனை நாட்கள் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும்?

ஓட்டு கேட்க வருபவர்களும் வரிகேட்க வருபவர்களும் நமக்காக ஒருபோதும் பேசப்போவதில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் தீண்டத்தகாத கிராமமாக ஒதுக்கப்பட்டிருக்கும் சித்தேரிப்பட்டு மக்கள் இந்த அநியாயத்திற்கு முடிவு கட்ட வேண்டும். ஒன்றிணைய வேண்டும்.

தமிழக அரசே!

  • சித்தேரி பட்டு கிராமத்தை ஊராட்சியாக அறிவித்திடு!
  • தமிழகத்தின் உள்ளாட்சி டேட்டா லிஸ்ட்டில் இதுவரை இணைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !

***

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !

விழுப்புரம் – சித்தேரிப்பட்டு கிராமத்தில் முறையான குடிநீர் இல்லை, நடந்து செல்ல ரோடு இல்லை, நூலகம் , விளையாட்டு மைதானம், முறையான தெரு விளக்கு இல்லை, அரசின் தொகுப்பு வீடு ஐந்து ஆண்டுகள் இல்லை, SC/ST சிறப்பு நிதி 80 லட்சத்தில் ஒரு பைசா கூட இல்லை போன்ற  கோரிக்கையை உள்ளடக்கி மக்கள் அதிகாரம் தலைமையில் கிராம மக்களை ஒருங்கிணைத்து. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது அதில்  கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இந்த கோரிக்கைகளை உடனே விரைந்து போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்று முன்வைக்கப்பட்டது.

நிறைவேறவில்லை என்றால் மாவட்ட நிர்வாகம் முற்றுகையிடப்படும் என்று முடிவு  செய்யப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்.
தொடர்புக்கு : 94865 97801.