மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் என்ற தலைப்பில் தமிழகம் தழுவிய அளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் பல்வேறு சமூக ஜனநாயக அமைப்புகளை இணைத்துக்கொண்டு இணையவழி ஆர்ப்பாட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், திண்ணைப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் 28.08.2020 அன்று கடலூர் மாவட்டம் பூவனூர் பகுதியில் இணையவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 3,5 மற்றும் 8 வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும், கலை அறிவியல் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் கொண்டு வரும் நுழைவுத்தேர்வை திரும்பப்பெற வேண்டும், சமஸ்கிருத இந்தித் திணிப்புக்கு எதிராகவும் கண்டன முழக்கமிட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பெரும்பான்மை மக்களுக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கையை முழுமையாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தோழர் கணேஷ் தலைமை வகித்தார். மேலும் இதில் தோழர் கார்த்திக், தோழர் பால்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக் தோழர் அர்ஜுன் நன்றி உரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம், பூவனூர் பகுதி இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110