05-10-2020

பத்திரிகை செய்தி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளராக த.கணேசன், மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர்களிடம் அமைப்புக்கு விரோதமான கருத்துகளைப் பரப்புவதும், தோழர்கள் குறித்து அவதூறு செய்வதையும் மேற்கொண்டு வருகிறார்.. இதனை அவருக்கு சுட்டிக்காட்டி கண்டித்த போது, இப்படித்தான் செய்வேன் என்று அடாவடியாக செயல்பட்டு வருகிறார். மேலும், முறையாக மாநில ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டி வேலைகளைப் பரிசீலிப்பதில்லை; பகுதி கிளைகளையும் இயக்குவதில்லை; அரசியல் ரீதியாக செயல்படுவதிலும் முன்னேற்றம் காட்டவில்லை.

இவற்றை விமர்சனம் செய்தபோது அவற்றை அவர் ஏற்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். மேலும், ஊடகப் பிரிவின் பொறுப்பாளரை மாநில நிர்வாகக் குழுவிடம் விவாதிக்காமலேயே தன்னிச்சையாக அமைப்பில் இருந்து நீக்கியிருப்பது அவர் எந்த அளவிற்கு அமைப்பு விரோதமாக செயல்பட துணிந்துள்ளார் என்பதையும் தனக்கு விசுவாசமானவர்களைக் கொண்டு கோஷ்டியாக செயல்படுவதற்கும் ஒரு எடுத்துக்காட்டு.

இவருடன் மாநில ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள சிலரும் சேர்ந்து கொண்டு செயல்படுகின்றனர். எனவே, இவர்களின் அமைப்பு விரோத செயல்பாடுகளைப் பரிசீலிக்க மாநில முன்னணியாளர் கூட்டம் 04-10-2020 அன்று கூடியது. இக்கூட்டத்தில் த.கணேசன் மற்றும் அவரை ஆதரிக்கின்ற மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களின் அமைப்பு விரோத செயல்பாடுகள் பரிசீலிக்கப்பட்டன. அந்தவகையில், த.கணேசனை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் உடனடியாக நீக்குவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இவரை ஆதரிக்கும் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் மாநில ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்தும், அமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுகின்றனர்.

எனவே, த.கணேசனுடம், அவரை ஆதரிக்கும் முன்னாள் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களிடமும் அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாமென பு.மா.இ.மு.வின் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், இந்தக் கூட்டத்தில் புதிதாக சில தோழர்களை இணைத்து மாநில நிர்வாகக் குழு புனரமைக்கப்பட்டது. புதிய மாநில ஒருங்கிணைப்பாளராக தோழர் இர.துணைவேந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்,

இர.துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு., தமிழ்நாடு.

9 மறுமொழிகள்

  1. சதிகாரர்கள் கையில் இருந்து மீட்டு அமைப்பை பாதுகாத்த தோழர்களின் துணிச்சலுக்கு வாழ்த்துகளும்..நன்றிகளும்…..புதிய மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்

  2. … கட்சிக்குள் ஊடுருவி முதலாளித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள நபர்களால் சில கட்சிக் கிளைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த நபர்கள் மக்கள் தங்களை அம்பலப்படுத்தி விடுவார்கள் என பயங்கரமாகப் பயப்படுகின்றவர்கள், இதனால் மக்கள் இயக்கத்தை அடக்குவதற்கான அனைத்துக் காரணங்களையும் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள். தாக்குதலுக்கான இலக்குகளை மாற்றுவது, கறுப்பை வெள்ளையாக்குவது போன்ற தந்திரங்களில் இறங்கி இயக்கத்தை படுகுழியில் தள்ள முயல்கின்றார்கள்.

    தாங்கள் முற்றாகத் தனிமைப்படுத்தப்படுவதை உணரும் போதும் முன்னைப்போல எதிர்ப்புரட்சி வேலைகளில் ஈடுபட முடியாமல் போகும்போதும் தங்கள் சதிவேலைகளை மேலும் தீவிரப்படுத்துவார்கள், மக்களை முதுகில் குத்துவார்கள், வதந்திகளைப் பரப்புவார்கள், புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும் உள்ள வேறுபாட்டை இயன்ற வகைகளிலெல்லாம் இருட்டடிப்பு செய்வார்கள் இவை அனைத்தும் புரட்சியாளர்களைத் தாக்குவதற்காகவே…

  3. சதி கும்பலை அமைப்பை விட்டு வெளியேற்றுவோம். விமர்சன, சுயவிமர்சன அடிப்படையில் போல்ஷெவிக் கட்சியை போல இனி நாம் அமைப்பை கட்டுவோம்.

    புரட்சி பாதையில் எப்போதும் முன்நிற்போம்.

    இன்குலாப் சிந்தாபாத்

    புரட்சி நீடூடி வாழ்க.

  4. புதிய மாநில ஒருங்கிணைப்பு குழுவுக்கு வாழ்த்துக்கள்!

    தவறு செய்வது பெரிய குற்றமல்ல ஆனால் தவறு கற்றுத்தந்த பாடத்தை மறக்க கூடாது!

    பதவி வெறியர்கள், முகஸ்துதி செய்பவர்கள், புகழுக்கு ஆசைப்படுபவர்கள், வேலை செய்யாமல் ஓபி அடிப்பவர்கள், சிவப்பு நாடா பேர்வழிகள் போன்றோர்களை இனி உடனடியாக அம்பலப்படுத்துங்கள், விமர்சன சுயவிமர்சன முறையை கறாராக பின்பற்றி முன்னுதாரணமான கட்டுக்கோப்பான மாணவர் அமைப்பை தமிழகம் முழுக்க விரிவடையச் செய்ய வாழ்த்துக்கள்!

    துடிப்பான… சுறுசுறுப்பான… புதிய இரத்தம் பாயட்டும்!
    பகத்சிங்கின் கனவு நினைவாகட்டும்!

  5. கடந்த காலங்களில் த. கணேசனின் ஆண்டைத்தனமான நடவடிக்கையால் விரக்தியாகி வெளியேறிவர்கள் பலர். அதிகாரத் தாழ்வாரத்தின்கீழ் இத்தனை காலமும் ஒளிந்துகொண்டார். அவரை பாதுகாத்து வந்தது அமைப்பு. அவருடைய ஆண்டைத்தனதிற்கு அமைப்பும் ஒரு காரணம்… முன்னமே எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கை காலம் தாழ்ந்து எடுத்திருக்கிறார்கள். எனினும் இப்போதாதவது விழித்துக் கொண்டார்களே… மகிழ்ச்சி..!

    • காவிகள் முன்னேறும்போது காளான் குட்டி முன்னேறுது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஒரு அயோக்கியத்தனம் . கடந்த ஐந்து வருடங்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் நல்ல ஒரு அரசியல் ரீதியாக மாணவர்களை புரட்சிகர உணர்வோடு சித்தாந்தம் அடிப்படையில் முன்னெடுத்துச் சென்றதையும் பார்த்தேன்.ஆனால் அவர் கடந்த இருபது வருஷமாக அனைத்து பணியையும் எடுத்து சென்றார். மிகவும் மகிழ்ச்சியானது ஆனால் இப்படி ஒரு துரோகிகள் பல செய்திகள் போட்டுக் கொண்டிருக்கிறார் வெட்கக்கேடு. இந்தச் செயலை செய்த நபரை உடனடியாக தண்டிக்க வேண்டும். யாரும் நம்பாதீர் அப்படி மீண்டும் மீண்டும் இது மாதிரி செய்தியை போட்டுக்கொண்டால் விமர்சனம் செய்யுங்கள்.

      இப்படிக்கு,

      கணேஷ்

      • கனேசன் அப்படி ஒரு சித்திரத்தை வேண்டுமானால் உங்களுக்கு உறுவாக்கி இருக்கலாம். அதற்கு நீங்கள் ஆட்பட்டிருக்கலாம். ஆனால், எனக்கு தெரிந்த வகையில் அவர் செயல்படுகள் மிகவும் குறைவே. இங்கு நாம் பார்க்க வேண்டியது வர்க்க சிந்தனைதான்.

  6. ///கடந்த ஐந்து வருடங்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் நல்ல ஒரு அரசியல் ரீதியாக மாணவர்களை புரட்சிகர உணர்வோடு சித்தாந்தம் அடிப்படையில் முன்னெடுத்துச் சென்றதையும் பார்த்தேன்///

    என்னென்ன போராட்டங்கள் பு.மா.இ.மு எடுத்தது? டி.பி.ஐ வளாகம் முற்றுகை, அதனை தொடர்ந்து 2013 / 2014 கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு , தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்ததுடன் சரி… அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் போராட்டம் ஒன்றும் நடத்தவில்லை.

    தமிழகத்தில் பல கல்லூரிகளில் இருந்த பு.மா.இ.மு இன்று 2,3 என்று சுருங்கி விட்டது. அதற்கு காரணம் சரியான திட்டலிடல் இல்லாமல் ஆண்டைத்தனமாக வேலைகளை கொடுக்கும் கணேசனின் அதிகாரத்துவப்போக்கு. மிக முக்கியமாக சென்னையில் ஒரு கல்லூரியில் கூட புமாஇமு இல்லை என்பதை என்னவென்று சொல்ல….?

    இதுதான் அவர் சித்தாந்த ரீதியாக மாணவர்களை அணி திரட்டிய விதமா? இது தான் வளர்ச்சியா? கடந்த கால உழைப்பை கொண்டு ஒருவரை மதிக்கலாம். ஆனால் நிகழ்காலத்தில் அதை சொல்லி புகழ முடியாது. தற்போது என்ன நிலை, எப்படி செயல்பாடு உள்ளது என்பதிலிருந்து தான் மதிப்பிட முடியும்.

    கடந்த ஐந்தாண்டுகளில் கணேசன் கெட்டித் தட்டிப் போய், அணிகளை சித்தாந்தந்த ரீதியாக ஏதும் வளர்க்காமல் பல்வேறு அரங்குகளிலும் பொறுப்புகளில் இருந்து கொண்டு வெறுமனே தலைவர் என சீன் போட்டுக் கொண்டு திரிந்தார். பதவி வெறி பிடித்துத் திரிந்தாரே ஒழிய எவ்வித பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு வேலை செய்யவில்லை.

    சுருக்கமாகச் சொன்னால் மேனா மினுக்கியாக வலம் வந்தார். தூங்கி எழுந்து தொப்பையை வளர்த்ததுதான் மிச்சம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க