மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 8 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தனர். அதனையொட்டி நேற்று (டிசம்பர் 8) தமிழகம் முழுவதும் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளும், கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அதிகாரம் அமைப்பினரும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோவை :
“கார்ப்பரேட் கொள்ளைக்காக விவசாயிகளை காவு கொடுக்கும் வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, டிசம்பர் – 8, 2020 அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்போம் ! டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்!!” என்ற தலைப்பில் கோவையில் மக்கள் அதிகாரம் தலைமையில் ஜனநாயக அமைப்புகள் பங்கேற்புடன் 8.12.2020 அன்று காலை 11 மணிக்கு, கோவை பவர் ஹவுஸ் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் மக்கள் அதிகாரம் கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ. (எம்.எல்) ரெட் ஸ்டார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சி, தமிழர் திராவிடர் கழகம், அகில இந்திய புரட்சிகர பெண்கள் அமைப்பு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கண்டன உரையாற்றினர்.
தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202
000
உளுந்தூர்பேட்டை :
வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் டிசம்பர் 8-ம் தேதி நடைபெற்ற வேலாஇநிறுத்தப் போராட்டத்தில், மக்கள் அதிகாரம் உளுந்தூர் பேட்டை வட்டாரம் சார்பாக தோழர்கள் வினாயகம், மணிபால், சங்கர், சுபாஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் போலீசு கைது செய்தது.
தகவல்
மக்கள் அதிகாரம்
உளுந்தூர்பேட்டை