தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் தோழர் பாலன், சீனிவாசன், செல்வராஜ் ஊபா சட்டத்தில் கைது மக்கள் அதிகாரம் கண்டனம்

டந்த 2019-ம் ஆண்டு மாவோயிஸ்ட் தோழர் மணிவாசகம் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதற்காக சேலத்தில் 07.02.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் வீடுகளிலிருந்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன், தலைமைக் குழுத் தோழர் கோ.சீனிவாசன், தோழர் அனுப்பூர் செல்வராஜ் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தோழர்கள் பாலன், கோ. சீனிவாசன்

ரவுடிகளும் கொலைகாரர்களும் பகிரங்கமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை கைது செய்ய முடியாத போலீஸ், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தோழரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்பதற்காக கைது செய்திருக்கிறது.

படிக்க :
♦ ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !
♦ ஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா

அவர்கள் மீது Cr. 14/2020, IPC 188, 120b, 121, 121A (read with Unlawful Activities Prevention act), UAPA section 10, 13, 15 & 18IPC 188 – Disobedience to order duly promulgated by public servant ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அனைத்து முற்போக்கு ஜனநாயக இயக்கங்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

ஏற்கெனவே பாசிச பாஜகவுக்கு எதிராக இருப்பவர்களை ஊபா சட்டத்தின்கீழ் கைது செய்து சித்திரவதை செய்கின்ற மோடியின் அடியாளான எடப்பாடி அரசு, தமிழகத்திலும் இப்படிப்பட்ட ஜனநாயக விரோத செயலை அரங்கேற்றி உள்ளது. இக்கைது நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை .
99623 66321