வதூறு ஸ்பெஷலிஸ்ட்டுகளான கிஷோர் மற்றும் சாட்டை துரை கைதுக்கு பின் தொடர்ச்சியாக கருத்துரிமையின் குரல் நசுக்கப்படுவதாக எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. உண்மையில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவது என்றால் என்னவென்று தெரியாமல் உளறுவதாகவே இதைப்பார்க்கிறேன் அல்லது ஏழு ஆண்டுகளாக இந்தியா முழுக்க பாஜக-வின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி தெரியாமல் பேசுகிறார்களோ!
உண்மையில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் தெரியுமா?
ஒன்றிய பாஜக ஆட்சியில் பத்திரிகையாளர்களின் கருத்துரிமை எப்படி இருக்கிறது என்பதன் மூலும் அதை புரிந்து கொள்ளலாம்.
இதைப்பற்றி என்னைப்போலவே சுதந்திர பத்திரிகையாளராக இயங்கும் கீதா சேஸு தன்னுடைய ‘Behind Bars: Arrest and Detention of Journalists in India 2010-20’ என்கிற கட்டுரையில் தொகுத்து இருக்கிறார். அவருக்கு நன்றி.
படிக்க :
மோடியை விமர்சித்ததால் இந்தியா டுடே பத்திரிகையாளர் பணிநீக்கம் !
பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடும் 37 தலைவர்களில் ஒருவர் மோடி !
  • கடந்த ஓராண்டில் மட்டுமே 154 பத்திரிகையாளர்கள் மத்திய அரசால் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது கடந்த பத்தாண்டுகளின் ஒட்டுமொத்த எண்ணிகையில் 40 சதவிகிதம்.
  • வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து பணியாற்றிய எட்டு பத்திரிக்கையாளர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறது அரசு. இதுபோக அவர்களை கைது செய்து, மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப முடியாத அளவுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
  • பத்திரிகையாளர்கள் மீது அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைத்தார்கள் என்கிற அடிப்படையில் தீவிரவாத நோக்கம் கொண்டவர்கள் என்று வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஒரு பத்திரிகையாளருக்கு ஆயள்தண்டனை கூட வாங்கித்தரப்பட்டிருக்கிறது.
  • கருத்து சொன்னார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக Defamation வழக்குகள் தனிநபர்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும், பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து பதியப்பட்டு வந்துள்ளன. இந்த எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.
  • ஒரே ஆண்டில் மிக அதிகமான இன்டர்நெட் ஷட்டவுன்களை செய்த பெருமை பாஜக அரசுக்கே உண்டு. 64 முறை இணையத்தை முடக்கி கருத்துரிமையை தகவல்களை அறியும் உரிமையையும் பறித்திருக்கிறது பாஜக அரசு. காஷ்மீரில் 2019 ஆகஸ்டிலிருந்து இன்றுவரை இணையவசதி முழுமையாக கிடைக்காமல்தான் இருக்கிறது.
  • கடந்த ஐந்தாண்டுகளில் பத்திரிகையாளர்கள் மீதான நேரடியான வன்முறை தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இந்த எண்ணிக்கை 198. இதில் வெறும் மூன்று வழக்குகள் மட்டும்தான் தீர்ப்பு வரை சென்றுள்ளது. மற்ற எல்லாமே இன்னமும் நிலுவையில்தான் உள்ளன.
  • 56 பத்திரிகையாளர்கள் கடந்த பத்தாண்டுகளில் செய்தி வெளியிட்டமைக்காக சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறார்கள். பிரஷாந்த் கனோஜியா 80 நாட்கள் சிறையில் இருந்தார். காரணம் ராமர் கோயில் பற்றி ஒரு ட்விட் பண்ணினார் என்பதற்காக.
  • இவைபோக விவசாயிகள் போராட்டத்தை கவர் பண்ண சென்ற எட்டு பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர். இப்போதும் வழக்குள் நிலுவையில் உள்ளன.
  • கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே மாதத்தில் (jan-2021) மட்டுமே 12 journos மத்திய அரசால் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் மூன்று பேர் மீது தேச துரோக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆறு பேர் தங்களுடைய சமூக வலைதளப் பதிவுகளுக்காக Non Bailable வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.
  • கடந்த ஏழு ஆண்டுகளில் கௌரி லங்கேஷ் உள்ளிட்ட 16 பத்திரிகையாளர்கள் தங்களுடைய செய்திகளுக்காக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
  • 2016-ல் Freedom of speech index-ல் 133-வது(180 நாடுகளில்) இடத்தில் இருந்த இந்தியா 2020-ல் 142 இடத்திற்கு பின்தங்கி இருக்கிறது. 2021-லும் அதே இடத்தில் நீடிக்கிறது. இந்தியாவின் கருத்துரிமை கடந்த ஐந்தாண்டுகளில் பெரிய சரிவை சந்தித்திருப்பதையே இது காட்டுகிறது.
  • Reporters Without borders (French: Reporters sans frontières – RSF) அமைப்பு பத்திரிகையாளர்களுக்கு அபாயகாரமான நாடு இந்தியா என்று குறிப்பிடுகிறது.
இதுதான் கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல். இதுதான் ஆபத்தான போக்கு. இதற்கு எதிராகத்தான் நம் குரல் ஒலிக்க வேண்டுமே தவிர… தனிநபர் தாக்குதல்களை மேடை போட்டு செய்கிறவன்களுக்கும், கொலை மிரட்டல் விடுகிறவன்களுக்கும், பொய்ப் பரப்பி மதவெறியை தூண்டிவிட்டு மக்களிடையே கலவரத்தை தூண்டுகிறவன்களுக்கும் அல்ல.

முகநூலில் : Athisha Vinod
disclaimer