என் வீட்டில் உப்பு இப்போது சிவப்பு நிறமாக தெரிகிறது … | தோழர் ஸ்ரீரசா | வீடியோ
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை சார்ந்த தோழர் ஸ்ரீரசா கடந்த அக்டோபர் 22 அன்று மதுரையில் நடைபெற்ற உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை !
மதுரையில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி ம.க.இ.க-வின் உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தோழர் ஸ்ரீரசா அவர்கள், உப்பளத்தொழிலாளர்களின் வாழ்க்கை அவலத்தை இந்த ஆவணப்படம் சிறப்பாக பதிவு செய்திருப்பதாகக் கூறினார். மேலும், இது போன்ற உழைக்கும் மக்களின் அவலங்களை வெளிகொண்டுவரும் ஆவணப்படங்களை எடுப்பது என்பது ஒரு புரட்சிகர இயக்கத்திற்கு மிகவும் அவசியம் என்பதை உணர்த்தி உரையாற்றினார். தோழரின் உரையை காணொலி வடிவில் பதிவு செய்கிறோம்.