மதுரையில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி ம.க.இ.க-வின் உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் வழக்கறிஞர் தோழர் லஜபதிராய் அவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் வாழ்நிலை பற்றியும், பெண் தொழிலாளர்களுக்கான கூலியில் பாகுபாடுகள் நீடிப்பது பற்றியும், அனைத்தும் கார்ப்பரேட்மயப் படுத்தப்படுவது பற்றியும் எடுத்துரைத்து, இவ்விசயங்களை உப்பிட்டவரை ஆவணப்படம் தன்னளவில் மக்களுக்குக் கடத்த முயற்சித்திருப்பதை சுட்டிக்காட்டி வாழ்த்திப் பேசினார். அவரது கருத்துரையை காணொலி வடிவில் வழங்குகிறோம்.