கலை என்பது கலைக்காக அல்ல, மக்களுக்காக… | தோழர் கதிரவன் | வீடியோ

ம.க.இ.க தோழர் கதிரவன் கடந்த அக்டோபர் 22 அன்று மதுரையில் நடைபெற்ற உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை !

துரையில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி ம.க.இ.க-வின் உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ம.க.இ.க தோழர் கதிரவன் அவர்கள், “கலை இலக்கியங்கள் எதேனும் ஓர் வர்க்கத்தை சார்ந்துதான் இருக்கிறது. வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கலை இங்கு இல்லை. கலை என்பதே மக்களுக்காகத்தான், கலை கலைக்கானது அல்ல. “நடுநிலை இலக்கியம்”; “நடுநிலை பத்திரிகை”; “நடுநிலை கருத்து” என்பது ஏதும் கிடையாது.
ஆளும் வர்க்கத்திற்கான இலக்கியங்களைப் போராடி முறியடிக்க வேண்டும். உப்பிட்டவரை போன்ற கலை இலக்கியங்கள் அதிகம் வெளிவரவேண்டும் என்றால் மக்களின் அவலங்களை தெரிந்து கொள்ள மக்களிடம் செல்ல வேண்டும். மக்களின் வாழ்க்கை அவலங்களை கலை இலக்கிய வடிவில் செம்மையாக வெளிப்படுத்த வேண்டும் என்றால் புரட்சியகர இயங்கங்களில் இருந்தால் மட்டுமே முடியும்.
கூலி தொழிலாளர்களிடம் சாதி பாகுப்பாட்டையும், பெண் அடிமைத்தனத்தையும் பரப்புகிறார்கள். அனைத்து உழைக்கும் மக்களுக்கான விடுதலை என்பது போராட்டத்தின் மூலமாகத்தான் நிகழும். அப்போராட்டத்தை தட்டியெழுப்ப கலை இலக்கியத்தை பயன்படுத்துவோம்” என்பதை உணர்த்தி உரையாற்றினார்.
தோழரின் உரையை காணொலி வடிவில் பதிவு செய்கிறோம்.

 

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க