“மூன்று வேளாண் சட்டங்களை பெருவாரியான விவசாயிகள் ஏற்றுக் கொண்டார்கள். சிறு பிரிவினர் மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களையும் ஏற்றுக்கொள்ள வைக்க எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் அதில் வெற்றிபெற முடியவில்லை” என்று கடந்த நவம்பர் 19, 2021 அன்று தொலைக்காட்சியில் தோன்றி கூறிய மோடி, 3 வேளாண் சட்டங்களையும் இரத்து செய்வதாக அறிவித்தார்.
3 வேளாண் சட்டங்களையும் விவசாயிகளை ஏற்றுக் கொள்ளச் செய்ய மோடி எப்படியெல்லாம் முயற்சித்தார் என்பதை விளக்கும் சில காட்சிகளை இங்கே மாதிரி படங்களாகக் கொடுத்திருக்கிறோம். இதே போன்ற எண்ணற்ற நிகழ்வுகளே மோடியின் முயற்சிகளின் அடையாளங்கள்.
நாடெங்கும் உள்ள மோடியின் அடிமைகள், இந்தச் சட்டம் பின்வாங்கப்பட்டதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கீழ்கண்ட விதத்தில் தங்களுக்கு  விவசாய சட்டங்களை ‘புரிய வைக்க’ முயற்சித்த மோடிக்கு விவசாயிகள் தங்களது வழிமுறையில் விரைவில் வர்க்கக் கோபம் என்றால் என்ன என்பதை அறியத் தருவார்கள்.

(தொடரும்)

கருத்துப்படம்